என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துப்பிரச்சனை சுமூகமாக முடியும்
    X

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துப்பிரச்சனை சுமூகமாக முடியும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்புக் கொஞ்சம் குறையலாம்.

    ரிஷபம்

    வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்திக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

    மிதுனம்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    கடகம்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.

    சிம்மம்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    கன்னி

    தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    துலாம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    விருச்சிகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஈர்க்கும்.

    தனுசு

    எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்துப்பிரச்சனை சுமூகமாக முடியும்.

    மகரம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

    கும்பம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் மாறும்.

    மீனம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.

    Next Story
    ×