என் மலர்
ஆன்மிகம்
- ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் தேர்,
- குழந்தைகள் கல்வி தொடங்க உகந்த நாள்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-16 (வியாழன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி பிற்பகல் 3.45 வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திராடம் காலை 6.52 வரை பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : நண்பகல் 12.30 முதல் 1.30 வரை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா
ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் தேர், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சூரசம்ஹாரம், விஜயதசமி, குழந்தைகள் கல்வி தொடங்க உகந்த நாள்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-பகை
கடகம்-மறதி
சிம்மம்-அச்சம்
கன்னி-நலம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-நன்மை
தனுசு- அனுகூலம்
மகரம்-நட்பு
கும்பம்-போட்டி
மீனம்-பக்தி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக முடியும்.
ரிஷபம்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நாட்டுப்பற்றுமிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுத் தேவைகள் விரைவாக நடைபெறும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மிதுனம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
ஆலய வழிபாட்டால் அமைதி கூடும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
தேசப்பற்று மிக்கவர்களால் திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
ஆதாயம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிகம்
அம்பிகை வழிபாட்டால் இன்பம் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்வர். பொருளாதார நிலை உயரும்.
தனுசு
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
மகரம்
இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். தொழில் வளர்ச் சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கும்பம்
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக செலவிடுவீர்கள்.
மீனம்
தெய்வ வழிபாட்டால் திருப்தி ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் நேர்மைக்கு பாராட்டு கிடைக்கும்.
- யட்ச ராஜன் வரத்தின் பலனால் பாண்டவர்கள் ஐவரும், தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தனர்.
- திருநங்கையாக இருந்த அர்ச்சுனன், உத்தரனுக்கு தேரோட்டியாகச் சென்றான்.
மகாபாரதத்தில் துரியோதனன், தன் தாய்மாமன் சகுனியைக் கொண்டு சூழ்ச்சி செய்து, பஞ்சபாண்டவர்களை சூதாட்டத்தில் வென்றான். இதனால் பாண்டவர்கள் ஐவரும், பன்னிரெண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞான வாசமும் செல்லும்படி நேர்ந் தது. காட்டில் 12 வருடத்தை கழித்த பாண்டவர்கள், 13-வது வருடத்தை துரியோதனிடம் செய்த ஒப்பந்தப்படி, தலைமறைவாக வாழத் திட்டமிட்டனர்.
யட்ச ராஜன் வரத்தின் பலனால் பாண்டவர்கள் ஐவரும், தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தனர். எனவே அவர்களை, உருவத்தை மாற்றிக்கொண்டு, மத்ஸ்ய தேசத்தின் அதிபதியான விராட மகாராஜாவிடம் பணியாற்றும்படி, தவும்ய மகரிஷி அனுப்பி வைத்தார். அதன்படி தருமன், கங்கன் என்ற பெயரில் சகுன - தர்ம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனாக உருமாறினான். பீமன் தனது சமையல் திறமையால், வல்லபன் என்ற பெயரில் சமையல்காரன் ஆனான். அர்ச்சுனன், ஏற்கனவே ஊர்வசியிடம் பெற்றிருந்த சாபத்தின்படி பிருஹன்னனை என்ற திருநங்கையாக மாறினான். நகுலன், தாமக்ரந்தி என்ற பெயரில் குதிரை பராமரிப்பாளனாகவும், சகாதேவன், தந்திரி பாலன் என்ற பெயரில் பசுக்களை காப்பவனாகவும் பொறுப்பேற்றனர். திரவுபதி, சைந்திரி என்ற பெயரில் ராணியின் வேலைக்காரியாக சேர்ந்தாள்.
இப்படி பாண்டவர்கள் விராட மன்னனின் அரண்மனையில் 10 மாதங்கள் தலைமறைவாக இருந்தனர். 'பாண்டவர்கள் இருக்கும் இடம் செழிப்பாக இருக்கும்' என்று பீஷ்மர் சொன்ன தகவலை வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தை தேடச் சொன்னான் துரியோதனன். ஒற்றர்களும், விராட தேசம் மிகவும் செழிப்பாக இருப்பதாக வந்து சொன்னார்கள். பாண்டவர்கள் அங்குதான் இருக்க வேண்டும் என்று கருதிய துரியோதனன், திரிகர்த்த நாட்டு அரசன் சுசர்மாவை, விராட நகரத்தை ஒரு புறத்தில் இருந்து தாக்கும்படி உத்தரவிட்டான். மற்றொரு புறத்தில் இருந்து கவுரவர்கள் படை தாக்கும் என்றும் கூறினான்.
அப்படி விராட நகரத்தை தாக்கிய சுசர்மாவை எதிர்ப்பதற்காக, தருமர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் சென்றார் விராட மன்னன். அவர்கள் அந்தப் படையை விரட்டி அடித்தனர். துரியோதனன் முதலானவர்கள் விராட நகரத்தின் வடக்கு பக்கத்தில் இருந்து போரிட வந்தனர். அவர்களை எதிர்க்க விராட மன்னனின் மகன் உத்தரம் படையெடுத்துச் சென்றான்.
அப்போது திருநங்கையாக இருந்த அர்ச்சுனன், உத்தரனுக்கு தேரோட்டியாகச் சென்றான்.
துரியோதனனின் படையைக் கண்டு உத்தரன் பயந்து ஓட முயன்றான். ஆனால் அவனைத் தடுத்த அர்ச்சுனன், நீ தேரை செலுத்து, நான் அவர்களோடு யுத்தம் செய்கிறேன்' என்றான். பின்னர் அங்கிருந்த வன்னி மரத்தின் அருகே சென்று, மரத்தின் அடியில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து வந்து துரியோதன படையுடன் போரிட்டு வெற்றி யும் பெற்றான், அர்ச்சுனன். அந்த தினம் 'ஆயுத பூஜை' என்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் ஆயுதங்கள், நாம் வேலை செய்வதற்கான கருவிகளை பூஜிப்பது நன்மை தரும். மறுநாள் விஜயதசமி அன்று வன்னி மரத்தை பூஜிப்பதும், விஷ்ணு பகவானை தியானிப்பதும், லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். மேலும் பெருமாள் கோவில்களில் வன்னி மரத்தில் பானம் போடும் நிகழ்வு நடக்கும்.
விஜயதசமி நாளில் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியாக முடியும் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரையும் ஒருசேர வழிபட்டால் வளமான வாழ்வு அமையும். அன்னை, மகிஷாசுரன் என்ற தீமையை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதை போன்று, நம் மனதில் உள்ள கோபம், தீய எண்ணம், பொறாமை, பேராசை போன்றவை அழிந்து நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.
- மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான்.
- பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான்.
விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, 'விஜயதசமி' என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.
'விஜய்' என்றால் வெற்றி என்றும், 'தசம்' என்றால் பத்து என்றும் பொருள். அன்னை, மகிஷாசுரனுடன் 9 நாள் போரிட்டு, 10-வது நாள் பெற்ற வெற்றியே விஜயதசமி ஆகும்.
முன்பொரு காலத்தில் தனு என்ற அசுரன் இருந்தான். அவனுக்கு மிகவும் பலசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும், தங்களுக்கு மிக சக்தி வாய்ந்த புத்திரர்கள் வேண்டும் என்பதற்காக கடும் தவம் புரிந்தனர்.
கரம்பன் என்பவன் அன்ன ஆகாரம் இன்றி நீரில் நின்று தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.
ரம்பன் என்பவன் யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான்.
தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.
அவனின் தவத்தில் மகிழ்ந்த அக்னி தேவன், அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.
உடனே ரம்பன், 'எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்' என்றான். அதற்கு அக்னி தேவன், "நீ எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறாயோ, அந்த பெண்ணிடம் உனக்கு புத்திரன் பிறப்பான்" என்று வரம் கொடுத்தார்.
இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையைப் பார்த்த உடன், அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தைப் பிறந்தது.
எருமைத் தலையும், மனித உடலுமாக பிறந்த அந்தப் பிள்ளை 'மகிஷாசுரன்' என்று அழைக்கப்பட்டான். (இது மகிஷாசுரன் பிறப்பு பற்றி புராணங்கள் கூறும் பல கதைகளில் ஒன்று).
மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், "மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். அதனால் வேறு வரம் கேள்" என்றார்.
அதற்கு அவன், "தேவர்களாலும், பூதங்களாலும், ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது" என்றான்.
பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.
மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும், தாம்ரன் என்பவன் தனாதிபதியாகவும் இருந்தனர். அஸிலோமா, பிடாலன், பாஷ்களன், கால பந்தகன், உதர்க்கன், திரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் இருந்தனர். அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் அஞ்சனம் என்ற மலையில் மாஹிஷம் என்ற மிக அழகிய பட்டினத்தை நிர்மாணித்தான். தேவர்களை மிரட்டி, தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.
மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.
புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.
இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள்.
தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து, மகிஷாசுரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த அன்னை, 'மகிஷாசுர மர்த்தினி' என்று அழைக்கப்பட்டாள்.
எந்த இடத்தில் மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் 'தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வரவு திருப்தி தரும். நினைத்தது நிறைவேறும். சொந்த பந்தங்களின் வாழ்த்துகள் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
மிதுனம்
தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சனைகள் உருவாகலாம்.
கடகம்
நிதி நிலை உயரும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். ஆரோக்கியத் தொல்லை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் கூடும். குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் முதலீடு செய்யும் சிந்தனை உருவாகும்.
துலாம்
யோகமான நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். இட மாற்றம், வருமானம் திருப்தி தரும்.
விருச்சிகம்
காரிய வெற்றிக்கு கலைவாணியை வழிபட வேண்டிய நாள். புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.
மகரம்
சந்தோஷம் அதிகரிக்க சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள். ரொக்கத்தால் வந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நட்பால் நன்மை உண்டு.
மீனம்
ஆயுத பூஜையில் ஆர்வம் காட்டும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ரதோற்சவம்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-15 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி பிற்பகல் 3.33 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : உத்திராடம் (முழுவதும்)
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை. மகாநவமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ரதோற்சவம். ஏனாதி நாயனார் குரு பூஜை. மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.
கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-நலம்
மிதுனம்-சுகம்
கடகம்-வாழ்வு
சிம்மம்-பொறுமை
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- உயர்வு
விருச்சிகம்-புகழ்
தனுசு- ஆதரவு
மகரம்-உற்சாகம்
கும்பம்-சாந்தம்
மீனம்-உதவி
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 9-வது நாளான இன்று நிலக்கடலை சுண்டல், சாம்பார் சாதம், பால் கொழுக்கட்டை செய்து சித்திதாத்ரி தேவிக்கு படைக்கலாம்.
முதலில், நிலக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
நிலக்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை - 1 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
நிலக்கடலையை 1 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை அல்லது மென்மையாகும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இப்போது வேகவைத்த நிலக்கடலை, உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
சுவையான நிலக்கடலை சுண்டல் தயார்.
இந்த சுண்டலை நவராத்திரி மட்டுமின்றி, எப்போது வேண்டுமானாலும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு
தேவையான காய்கறிகள் (உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை)
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
புளி
உப்பு
தாளிப்புக்கான பொருட்கள் (கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்)

செய்முறை
முதலில் துவரம்பருப்பை தேவையான அளவு தண்ணீரில், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு சேர்க்காமல், தேவையான காய்கறிகள் மற்றும் தக்காளி சேர்த்து வேகவைத்து, பிறகு புளி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறி, சாம்பார் கொதிக்கவும்.
பின்னர் தாளிப்புக்கு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
இறுதியில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.
பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
பால் - 2 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு
தேங்காய் பால் - ½ கப் (விரும்பினால்)
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், திராட்சை) - அலங்கரிக்க

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து மென்மையான மாவாக தயார் செய்து கொள்ளவும்.
தயார் செய்த மாவிலிருந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பால் கொதித்ததும், அதில் சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கவும். இனிப்பு கலவை நன்கு கொதித்ததும், உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை மெதுவாக சேர்த்து நன்கு கிளறவும்.
கொழுக்கட்டைகள் வெந்து, பால் சற்று கெட்டியானதும், உலர் பழங்களால் அலங்கரித்து பரிமாறலாம்.
- 2-ந்தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கடந்த 23-ந்தேதி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது.
இதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள், மதியம் அன்னதானம், மாலை 3 மணிக்கு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி வலது கையில் காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக மற்றும் பஜார் வீதிகளில் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இதனால் திரும்பிய திசைகளில் எல்லாம் தசரா பக்தர்களாக தெரிகிறது.
கடந்த 28-ந்தேதி முதல் தசரா குழுவினர் மேளம், தாரை தப்பட்டை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் டிஸ்கோவுடன் வந்து காப்பு கட்ட தொடங்கினர். மறுநாள் ஊர் பெயரோடு அமைந்த தசரா குழுவினர் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடந்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் அம்மன் பெயரில் வசூல் செய்த பணத்தை 10-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காணிக்கையை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். இதற்கு பக்தர்களுக்கு வசதியாக கோவிலை சுற்றி தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
விழாவின் முக்கிய நாளான வருகிற 2 மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 500-க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மருத்துவ துறை, மின்சார துறை, வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் 2 நாள் இங்கு முகாமிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.
2-ந் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு பூஜையூடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை பின்தொடந்து செல்வார்கள். சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் கடற்கரையில் அம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு கடற்கரை மேடையிலும் தொடர்ந்து 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
3-ந் தேதிஅதிகாலை பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
2-ந் தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் டிரோன் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்ப வசதிகளுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும்.
- சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று அன்னை பராசக்தி சாமுண்டியாக வழிபாடு செய்யப்படுகிறாள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். தர்மத்தை நிலைநாட்டுபவள். நம்மை காத்து அருளக்கூடியவள்.
சாமுண்டியை வழிபட கலர் கோலமாவினால் ஆயுதம் கோலம் போட வேண்டும். 77 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். பஞ்சு திரி 56 போட்டு எள் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும். தாமரை மல்லிகை பூக்கள் மற்றும் மரிக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.
"கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே! நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும் ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்."
என பாடி துதிக்க வேண்டும்.
சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது. எனவே சாமுண்டியை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நிவர்த்தியாகும். உள்ளுணர்வு மேம்படும், மன தைரியத்துடன் பணிகளை மேற்கொள்ளும் திறன் கிடைக்கும். பேச்சுக்கலை மேம்படும். எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் உறுதியான சக்தி தருவாள். மக்களை கவரும் ஆற்றலைத் தருவாள்.
- இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
- வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான நவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை வழிபடுவது அவசியம் என்று நம்பப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடாமல் நவராத்திரி முழுமையடையாது என்றும் கூறப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடுவது என்பது துர்கா தேவியின் ஆசிகளை நேரடியாகப் பெறுவதாகும்.
ஒவ்வொரு நவராத்திரியின் அஷ்டமி மற்றும் நவமி பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. சிலர் அஷ்டமி அன்று கன்னியா பூஜை செய்கிறார்கள், மற்றவர்கள் அதை நவமி அன்று செய்கிறார்கள். இந்த வருடம், அஷ்டமி இன்றும், நவமி நாளை என வருகின்றன.
கன்னியா பூஜையின் போது பல நேரங்களில், மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் ஒன்பது நாள் விரதம் தோல்வியடைகிறது. இதனால் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்...
கன்னியா பூஜையின் போது என்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்...
1. கன்னியா பூஜை யின் போது வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நீங்கள் என்ன பரிசு கொடுத்தாலும், கருப்பு நிறத்தைத் தவிர்க்க வேண்டும். கருப்பு நிறப் பொருட்களைப் பரிசளிப்பது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பரிசுகளை வழங்கும்போது நாம் பெரும்பாலும் இதை கவனிக்காமல் விடுகிறோம். இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
2. கன்னியா பூஜைக்குப் பிறகு மக்கள் பெரும்பாலும் எஃகு கிண்ணங்கள் அல்லது தட்டுகளை பரிசளிப்பார்கள். மத நம்பிக்கைகளின்படி இதுவும் பொருத்தமானதல்ல. நீங்கள் பரிசளிக்க வேண்டியிருந்தால், எஃகுக்குப் பதிலாக மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களை வழங்க வேண்டும்.
3. இரும்புப் பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கன்னியா பூஜையின் போது அவ்வாறு செய்வது சனி தோஷத்தைத் தரும். பரிசுகளை வாங்கும்போது இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.
4. கன்னியா பூஜைக்குப் பிறகு பரிசுகளை வழங்கும்போது, தவறுதலாக கூட, தோல் கொண்ட எந்தப் பொருளையும் கொடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
- மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் சிவபூஜை செய்தருளல்.
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
இந்த வார விசேஷங்கள்
30-ந் தேதி (செவ்வாய்)
* துர்க்காஷ்டமி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் திருக்கல்யாணம், இரவு புஷ்பக விமானத்தில் பவனி.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்துடன் காட்சி.
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்கார காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
1-ந் தேதி (புதன்)
* சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
* திருப்பதி பெருமாள் ரத உற்சவம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்துடன் காட்சி.
* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் சிவபூஜை செய்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
2-ந் தேதி (வியாழன்)
* விஜயதசமி.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா.
* மதுரை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு விடும் காட்சி.
* திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.
3-ந் தேதி (வெள்ளி)
* சர்வ ஏகாதசி.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சப்தாவர்ணம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
4-ந் தேதி (சனி)
* சனிப் பிரதோஷம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தெப்ப உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிறப்பு அபிஷேகம்
* மேல்நோக்கு நாள்
5-ந் தேதி (ஞாயிறு)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி கருடன் வாகனத்திலும் திருவீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (திங்கள்)
* பவுர்ணமி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று சித்திதாத்ரி தேவி வணங்கப்படுகிறாள். துர்கா தேவியின் 9வது அம்சமான சித்திதாத்ரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.
மந்திரங்கள்:
ஓம் தேவி ஸித்திதாத்ர்யை நமஃ.
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸித்திதாத்ர்யை நமஃ.
இந்த நாள் பக்தர்களுக்கு வெற்றிகளையும், செல்வத்தையும், செழிப்பையும் தரக்கூடியதாகக் கருதப்படுகிறது.






