என் மலர்
ரஷ்யா
- உக்ரைன்- ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
உக்ரைன்- ரஷியா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு இடையிலும் உக்ரைன் - ரஷியா மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 3 ஆண்டுகளை கடந்து போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுடன் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
போரில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் ராணுவ வீரர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தயார் என்று புதின் தெரிவித்துள்ளார்.
- ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை ரஷிய அதிபர் புதின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
திங்களன்று மாஸ்கோவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு புதினின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
"எந்த தூண்டுதலும் அடிப்படையும் இல்லாமல் ஈரான் மீதான தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் புதின் கூறினார். மேலும் ஈரானுடனான மோதலில் மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள சக்திகளின் ஈடுபாடு உலகை ஒரு பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்கிறது" புதின் எச்சரித்தார்.
மேலும், "ஈரானிய மக்களுக்கு உதவ ரஷ்யாவின் முயற்சிகள் தொடரும். ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது தற்போதைய சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கவும், பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை நடத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று புதின் தெரிவித்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சர்வதேச நெறிமுறைகளை மீறி, ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.
- ரஷியா வரலாற்று ரீதியாக ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஆதரித்து வருகிறது.
- ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா என்ன சாதித்தது.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்க தயாராக இருப்பதாக ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக தங்கள் சொந்த அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன. ரஷியா வரலாற்று ரீதியாக ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஆதரித்து வருகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா என்ன சாதித்தது" என்று பதிவிட்டுள்ளார்.
- 2011இல் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த அணுசக்தி விபத்தை குறிப்பிட்டார்.
- இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் பாணி பேரழிவிற்கு வழிவகுக்கும்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தது பதட்டங்களை அதிகரித்தது.
இந்நிலையில் மாஸ்கோவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த கடினமான சூழ்நிலைகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தவிர்க்குமாறு வாஷிங்டனை நாங்கள் வலுவாக எச்சரிக்கிறோம்.
இது உண்மையிலேயே எதிர்பாராத எதிர்மறை விளைவுகளைக் கொண்ட மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.
முன்னதாக, ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் உலகம் ஒரு பெரிய பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று ஜகரோவா கவலை தெரிவித்தார்.
2011இல் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த அணுசக்தி விபத்தை குறிப்பிட்ட ஜகரோவா, ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் பாணி பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ரஷிய அணுசக்தி தலைவர் எச்சரித்துள்ளார். புஷேர் அணுமின் நிலையத்தை ரஷியாவே கட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஈரான் பிரச்சனை தொடர்பாக தொலைபேசியில் பேசினார்.
மேலும் இஸ்ரேல் - ஈரான் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி மூலம் மத்தியஸ்தம் செய்ய புதின் முன்வந்தார். ஆனால் டிரம்ப் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "முதலில் ரஷியாவில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கவும்" என்று டிரம்ப் புதினிடம் கூறியதாக கூறப்படுகிறது.
- உக்ரைன் தரப்பிலிருந்து 78 ரஷிய வீரர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக மெடின்ஸ்கி கூறினார்.
- ரஷியாவுடனான மற்றொரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திரும்பப் பெற்றது.
போரில் உயிரிழந்த 6,060உக்ரைனிய வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டதற்கு ஈடாக, ரஷியாவுக்கு, உக்ரைன் தரப்பிலிருந்து 78 ரஷிய வீரர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக மெடின்ஸ்கி கூறினார்.
போர் கைதிகள் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கடுமையான காயமடைந்த வீரர்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும், மெடின்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 13 அன்று, உக்ரைன் ஏற்கனவே 1,200 உயிரிழந்த வீரர்களின் உடல்களை ரஷியாவுடனான மற்றொரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திரும்பப் பெற்றது.
இந்த மாத தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ரஷியா-உக்ரைன் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட முடிவின் படி உடல்கள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது
- அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது.
மாஸ்கோ:
இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் தங்கள் நாட்டிற்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது. இதனால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையை தடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்துவிட்டால் தங்கள் நாட்டின் இருப்புக்கு ஆபத்து என கருதிவரும் இஸ்ரேல் நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அவர்களின் உரையாடலில் மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலை குறித்து விவாதித்தனர்.
மேலும், உக்ரைனுடனான பேச்சுவார்த்தை குறித்தும் அவர்கள் உரையாடினர்.
- இரு நாட்டுத் தலைவர்களும் பேசியது குறித்து புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் விளக்கமளித்தார்.
- தொலைபேசி உரையாடல் சுமார் 70 நிமிடங்கள் நீடித்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தானில் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து மே 7 இல் பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் மே 9 சண்டை நிருத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இரு நாட்டுக்கு இடையே ஆன சண்டையை வர்த்தகத்தை வைத்து பேசி தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதுவரை சுமார் 11 முறை அவர் இவ்வாறு கூறிவிட்டார். ஆனால் இந்தியா அதை மறுத்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் பேசியுள்ளார். இதற்கிடையே இரு நாட்டுத் தலைவர்களும் பேசியது குறித்து புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், "இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் 70 நிமிடங்கள் நீடித்தது. ரஷியா - உக்ரைன் மோதலில் தொடங்கியது இந்த உரையாடல். பேச்சுவார்த்தையை முறியடிக்க உக்ரைன் முயற்சித்து வருகிறது.
அப்போது மத்திய கிழக்கு நாடுகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர். அடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் குறித்தும் பேசப்பட்டது. அதிபர் டிரம்பின் தனிப்பட்ட தலையீட்டால் இந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.
- சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை இன்று நடத்தியிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளை (ஜூன் 2) இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
'ஆபரேஷன் ஸ்பைடர் வெப் ' (பாவுடின்) என்ற பெயரில், உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) இந்த மெகா நடவடிக்கையை மிகவும் ரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக பெலாயா (கிழக்கு சைபீரியா), பின்லாந்துக்கு அருகிலுள்ள ஆர்க்டிக்கில் உள்ள ஒலென்யா மற்றும் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட பல முக்கிய ரஷிய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக உக்ரேனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்ட ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 அணுகுண்டு குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்ரிட்னி கிராமத்தில் உள்ள தங்கள் ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்தப் பிராந்தியத்தின் ரஷிய ஆளுநரே உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், டிரோன்கள் ஏவுவதற்காக குறிப்பிட்ட நேரங்களில் லாரிகளின் கூரைகள் தொலைவிலிருந்து திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஷியாவைப் போல விரிவான ஏவுகணை இருப்புக்கள் இல்லாத உக்ரைன், முக்கிய ஆயுதமாக டிரோன்களையே அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச மாநாட்டில் லாவ்ரோ பங்கேற்றார்.
- ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புகிறோம்.
ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவதாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு எதிரான சதியில் இந்தியாவை ஈடுபடுத்த நேட்டோ கூட்டணி வெளிப்படையாக முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
ரஷியாவில் நடைபெற்ற யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச மாநாட்டில் லாவ்ரோ பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது, "முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவ் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புகிறோம்.
இந்தக் கூட்டணி மூன்று நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் 20க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளது.
எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. எனவே, கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான நேரம் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.
- பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டார்.
- இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
புதினின் ஹெலிகாப்டர் பாதையில் உக்ரைனால் ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம், ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிபர் ஹெலிகாப்ட்டர் தொடரணி வானில் பறந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து ரஷிய பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
- அபுதாபி சென்றடைந்த இந்திய எம்.பி.க்கள் குழு, அங்கு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை சந்தித்து பேசினர்.
- ஜப்பான் சென்றடைந்த சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர், ஜப்பான் வெளியுறவு மந்திரி தகேஷி இவாயாவைச் சந்தித்தது பேசினர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த சண்டை ஆகியவை குறித்து விளக்குவதற்காக உலகில் உள்ள 33 நாடுகளுக்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர் ஜப்பான் புறப்பட்டு சென்றனர். சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழுவினர் ஐக்கிய அமீரகத்துக்கு சென்றனர்.
அபுதாபி சென்றடைந்த இந்திய எம்.பி.க்கள் குழு, அங்கு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை சந்தித்து பேசினர். அப்போது பயங்கரவாதத்தையும், அதன் மற்ற வடிவங்களையும் எதிர்த்துப் போராடும் இந்தியாவின் உறுதிப்பாட்டை விளக்கி கூறினர். மேலும் இந்தியா-அமீரகம் இடையேயான நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்தும் பேசியதாக அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அந்த நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள், உள்துறை மற்றும் வெளியுறவுக் குழுவின் தலைவர் டாக்டர் அலி அல்னுவைமியையும், கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினர் அகமது மிர் கூரியையும் சந்தித்து பேசினர்.
இது தொடர்பாக ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. தனது எக்ஸ் பதிவில், 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியாவின் தீர்க்கமான வெற்றியை நாங்கள் பெருமையுடன் பகிர்ந்து கொண்டோம், மேலும் பாகிஸ்தானிலிருந்து வெளிப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எடுத்துரைத்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபால் ஜப்பான் சென்றடைந்த சஞ்சய் ஜா தலைமையிலான குழுவினர், ஜப்பான் வெளியுறவு மந்திரி தகேஷி இவாயாவைச் சந்தித்தது பேசினர். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கினர். அப்போது ஜப்பான் மந்திரி தகேஷி, இந்தியாவின் நிதானத்துக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
ஜப்பானின் முன்னாள் பிரதமரும் ஜப்பான்-இந்திய சங்கத்தின் தலைவருமான யோஷிஹைட் சுகா, டோக்கியோவில் உள்ள முன்னணி ஜப்பானிய சிந்தனையாளர்கள், ஜப்பானின் தேசிய பாதுகாப்புக்கான பிரதிநிதிகள் சபைக் குழுவின் தலைவரான தகாஷி எண்டோ ஆகியோரை இந்திய குழு சந்தித்து பேசியது.
இதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றனர். ரஷியா சென்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு இன்று ரஷிய மந்திரிகள், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். இந்த சந்திப்பின்போது ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவு உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறுவார்கள்.
நாளை ஸ்லோவேனியாவுக்குச் செல்வதற்கு முன்பு, இந்த குழுவினர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.
- உக்ரைன் திடீரென ரஷியா நாட்டிற்குள் நுழைந்து பல பகுதிகளை பிடித்தது.
- உக்ரைன் படைகளை விரட்ட ரஷியா கடுமையாக சண்டையிட்டது.
ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது படையெடுத்தது. இரு நாட்டின் எல்லைகளில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான இடங்களை ரஷியா கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் (பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்) உதவியுடன் ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது. சில இடங்களில் ரஷியா பின்வாங்கியது.
பின்னர் தரைவழி தாக்குதலை குறைத்துக் கொண்ட ரஷியா, உக்ரைன் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நுழைந்தது. அப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நகரங்களை கைப்பற்றியது. இது ரஷியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2ஆவது உலகப் போருக்குப்பின் ரஷியா நிலப்பரப்பில் அடுத்த நாட்டின் ராணுவம் நுழைவது இதுவே முதல்முறையாகும். இதனால் உக்ரைன் படைகளை விரட்டியடிக்க ரஷியா ராணுவம் கடுமையாக சண்டையிட்டது.
கடந்த 26ஆம் தேதி, குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படைகள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டது என ரஷிய ராணுவம் தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இதை மறுத்தனர்.
இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் குர்ஸ்க் பிராந்தியம் சென்றதாக, ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
குர்ஸ்க் அணுஆயுத நிலையம்-2 கட்டப்பட்டு வருகிறது. இதை புதின் பார்வையிட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட தன்னார்வலர்களுடன் ரகசியமாக பூட்டிய அறையில் ஆலோசனை நடத்தியுள்ளார். அத்துடன் பொறுப்பு கவனர் அலேக்சாண்டர் கின்ஸ்டெய்ன் உடனும் பேசியுள்ளார்.
உக்ரைன் ஆக்கிரமிப்பால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்யப்படும் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு முழுவதும் 159 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன ராணுவத்தை பின்வாங்க செய்ய, ரஷியாவுக்கு ஆதரவாக 12 ஆயிரம் வீரர்களை வடகொரியா அனுப்பியதாக உக்ரைன், அமெரிக்கா மற்றும் தென்கொரிய குற்றம்சாடடியது. பின்னர் வீரர்கள் அனுப்பப்பட்டதாக வடகொரியா ஒப்புக்கொண்டது.






