என் மலர்
Recap 2024
- கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார்.
- உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை.
இதையடுத்து செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் உட்பட 40 பேர் மீது 2016-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன் அனுப்பியது. அதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூன் 13-ந்தேதி செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுத்த நாளே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஜாமின் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தொடர்ந்தார். அவருக்கு நீதிமன்றக் காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி செந்தில் பாலாஜி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
15 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்.26-ந்தேதி செந்தில் பாலாஜியை உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி விடுதலையாகி வெளியே வந்தார்.
- கடந்த 2008-ம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’, 2014-ம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கினார்.
- தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் தனது முத்திரையை பதித்தார்.
அனைவராலும் மறக்க முடியாத நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து காலமனார். 57 வயதான மாரிமுத்து டப்பிங் பணிக்காக சென்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
நடிப்பால் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்த மாரிமுத்து தேனி மாவட்டம் வருஷநாடு பசுமலைத்தேரி கிராமத்தில் 1967-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி பிறந்தார். இவர் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தனது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்துள்ளார். வாய்ப்புகளை தேடி ஆரம்பத்தில் ஓட்டலில் பணிபுரிந்த இவர் இலக்கியத்தின் மீது இருந்த ஆர்வத்தின் மூலம் பாடலாசிரியர் வைரமுத்து உடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் ராஜ்கிரனுடன் 'அரண்மனைக்கிளி', 'எல்லாமே என் ராசாதான்' படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

மேலும் மணிரத்தினம், சீமான், எஸ் ஜே சூர்யா, வசந்த் உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்', 2014-ம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கினார்.
இவ்விரு படங்களால் ஒரு இயக்குனராக பெரிய அளவில் வளர முடியவில்லை என்றாலும், தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் தனது முத்திரையை பதித்தார். முதன் முதலில் இயக்குனர் மிஷ்கினின் 'யுத்தம் செய்' படத்தில் மாரிமுத்து நடிகராக அறிமுகமானார். அதேபோல 'வாலி', 'ஆரோகணம்', 'நிமிர்ந்து நில்', 'கொம்பன்', 'மருது', 'கத்தி சண்டை', 'தமிழில் பரியேறும் பெருமாள்', 'கார்பன்', 'எமன்', 'வீரமே வாகை சூடும்' போன்ற படங்களில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு 'எதிர்நீச்சல்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த தொடர் தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த தொடரில் அவரின் தனித்துவமான நடிப்பு திறமை, அவருக்கு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது. தொடரில் வரும் எம்மா ஏய் அந்த வசனத்தின் மூலம் மிகவும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். மேலும், இந்த வருடம் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்', கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன்2' ஆகிய படங்களில் மாரிமுத்து நடித்து இருந்தார்.
இதனிடையே தான், செப்டம்பர் மாதம் 8-ந்தேதி காலையில் சாலிகிராமத்தில் டப்பிங் பணிக்காக சென்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர்.
- சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் கொல்லப்பட்டார்
இட ஒதுக்கீடும் மாணவர்கள் போராட்டமும்
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். எனவே இட ஒதுக்கீடு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு
இருப்பினும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை மோசமான நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை என போற்றப்பட முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா 2009 முதல் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த நிலையில் அவரது 16 ஆண்டுகால ஆட்சி வெறும் 3 மாதகால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது.


இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர். வங்கதேச பிரச்சனையால் அங்கிருந்து சாறை சாரையாக மக்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதும், நிலைமையை சமாளிக்க அங்கு குவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவங்களும் அரங்கேறின.
முகமது யூனுஸ்
ஷேக் ஹசீனாவால் அடக்குமுறையை சந்தித்த பலர் அவரது ரகசிய சிறையான கண்ணாடிகளின் வீட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக முகமது யூனுஸ் என்ற 84 வயது முதியவர் சிறையில் இருந்து விடுதலையானார். இவர் ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிகான நோபல் பரிசை பெற்றவர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் உருவானது.

ஆனால் வங்கதேசத்தின் மறு உருவாக்கம் முற்றிலும் மகிழ்ச்சியானதாக அமைந்துவிடவில்லை. இஸ்லாமிய பெரும்பாண்மை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.
சிறுபான்மையினர் மீதான வன்முறை
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும் இதற்கு கண்டனம் கூறுவதை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்தற்கான சுவடுகள் எதுவும் இல்லை. சிறுபான்மையினரின் [இந்துக்களின்] வழிபாடு தளங்கள் குறிவைக்கப்பட்டன. அக்டோபர் தொடக்கத்தில் துர்கா பூஜை முதல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. இந்துக்கள் பரவி வாழும் இடங்களில் இன்றைய தேதியும் பதற்றமான சூழலே நிலவுகிறது.
சிறுபான்மையினரின் மீதான வெறுப்பு வெகு மக்கள் இடையே பரப்படுவதும், பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளாக தங்களை வரையறுத்துக்கொள்ள்ளும் மத அடிப்படைவாத அமைப்புகளும் இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமாக அமைகின்றன.


இதற்கு எதிராக இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தாமலும் இல்லை. அப்படி இந்துக்களை போராட்டங்களுக்கு தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த மதகுரு சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

தற்போது அவருக்காக எந்த வக்கீலும் ஆஜராக முன்வராத நிலையில் அவரது ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் குறிவைக்கப்படுவதற்கு இந்தியாவும் சர்வதேச நாடுகளும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளன.
ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பதே வங்கதேச இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதையே வலியறுத்தி உள்ளார்.
- பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.
- அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தலா இரண்டு முறை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக கருதப்படும் மூன்று வீரர்களில் ஒருவராக ரபேல் நடால் திகழ்ந்தார். பெடரர் மற்றும் ஜோகோவிச் ஆகியோருடன் இணைந்து தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார்.
கிராண்ட்ஸ்லாம்
இடது கை பழக்கம் கொண்ட நடால் ஏடிபி தரவரிசையில் 209 வாரங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தவர். ஐந்து முறை முதல் இடத்தை வகித்துள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். குறிப்பாக பிரெஞ்ச் ஓபனை மட்டும் 14 முறை வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அதிகமுறை வென்றவராக இருந்த பெடரர் (20) சாதனையை முறியடித்தார். தற்போது ஜோகோவிச் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். நடால் 22 கிராண்ட்ஸ்லாம் இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
கடந்த 2010-ல் பிரெஞ்ச ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய மூன்றையும் தனது 24 வயதில் வென்றார். 2008-ல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்றார். 24 வயதில் (மிகவும் இளம் வயதில்) மூன்று மாறுபட்ட மைதானங்களில் (Courts) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.
2005-ல் பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்தார். 2022-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்றதன் மூலம் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தலா இரண்டு முறை வென்ற வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
ஐந்து செட்களை கொண்ட 391 போட்டிகளில் 345 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். சராசரி 88.23 சதவீதம் ஆகும்.
ஒற்றையர் சாம்பியன் பட்டம்
ஏடிபி ஒற்றையர் பிரிவில் 36 மாஸ்டர்ஸ் டைட்டில், ஒலிம்பிக் மெடல் உள்பட 92 பதக்கங்கள் வென்றுள்ளார். இதில் 63 டைட்டில் Clay Courts-ல் வென்றதாகும். செம்மண் தரையில் (Clay Courts) முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
20 வருடங்கள் டென்னிசில் சிறந்த வீரராக திகழ்ந்தார். 20 வயதிற்குள் தரவரிசையில் 2-வது இடம் மற்றும் 16 ஏடிபி டூர் டைட்டில் வென்று அசத்தியவர்.
ஆஸ்திரேலிய ஓபன்
ஆஸ்திரேலிய ஓபனை 2009 மற்றும் 2022 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன்
பிரெஞ்ச் ஓபனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022 ஆகிய 14 முறை வென்றுள்ளார். இதில் இரண்டு முறை தொடர்ந்து 4 முறையும், ஒரு முறை தொடர்ந்து ஐந்து முறையும் வென்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபனில் மூன்று முறை (2012, 2014, 2022) ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளார். 2006 முதல் 2008 வரை தொடர்ந்து மூன்று முறை ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார். 2011-ம் ஆண்டும் ரோஜர் பெடரரை வீழ்த்தியுள்ளார்.
விம்பிள்டன்
விம்பிள்டன் ஓபனை 2008 மற்றும் 2010 ஆகிய இரண்டு முறை வென்றுள்ளார்.

அமெரிக்க ஓபன்
அமெரிக்க ஓபனை 2010, 2013, 2017 மற்றும் 2019 என நான்கு முறை வென்றுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு
38 வயதாகிய ரபேல் நடால் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற டேவிஸ் கோப்பை காலிறுதி போட்டியுடன் ஓய்வு பெற்றார். தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
2004, 2008, 2009, 2011, 2019 ஆகிய டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் அணிக்காக வென்றுள்ளார். ஆனால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டை பிரிவில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது.
- இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.
- ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு லிங்கா , யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்கி வந்தார். மேலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருவரும் கவனம் பெற்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரியப்போவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

இருவரும் பரஸ்பரத்துடன் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இதனால் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் தனுஷை சமாதானம் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

இதனை தொடர்ந்து, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 27-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நவம்பர் மாதம் 27-ந்தேதி நீதிபதி சுபாதேவி வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில், 'நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி நடைபெற்ற இவர்களது திருமண பதிவு ரத்து செய்யப்படுகிறது' என கூறினார். இந்த தீர்ப்பின் மூலம் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்தது.
- அங்கு இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்து அசத்தியது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10 ஆண்டுக்குப் பிறகு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை ஒரு அணியாகவும், பா.ஜ.க. மற்றொரு அணியாகவும், கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் களம் கண்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஜம்முவில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்வதால் அவர்களின் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் அப்படியே பா.ஜ.க.வுக்கு விழுந்தது. மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 29 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 8 இடங்களிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதேபோல, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் பகுதியில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மொத்தமுள்ள 47 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. இந்தியா கூட்டணி 41 இடங்களில் வெற்றிபெற்றது.
ஆக, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், பா.ஜ.க. 29 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
காஷ்மீரைப் பொறுத்த அளவில் தேசிய மாநாடு கட்சிக்குத்தான் பெரிய வெற்றியாகும்.
ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு பிறகு மிகச்சிறப்பான முறையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது உலகளவிலும், தேசிய அளவிலும் அதிக கவனம் பெற்றது.
- 2024 ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளனர்.
- தல் இடத்தை பிடித்து இருப்பது கல்கி 2898 ஏடி திரைப்படமாகும்.
என்னென்ன திரைப்படங்கள் எப்படி இருக்கு? அதில் யார் நடித்துள்ளார்?. எப்போ வெளியாகிறது? மற்றும் திரைப்படங்கள் பார்த்த மக்கள் அவர்களின் கருத்துகளை பதிவு செய்யும் என பல அம்சங்களை கொண்ட இணையத்தளம் தான் ஐம்டிபி {IMDB}. உலகில் உள்ள பெரும்பாலான திரைப்படங்களுக்கு ஒரு மூவி டேட்டா பேஸ் ஆக செயல்ப்படும் தளமும் இதுவே. வருடா வருடம் அந்த ஆண்டின் சிறந்த மற்றும் பிரபலமான திரைப்படங்கள் பட்டியலை வெளியிடுவது இவர்களின் வழக்கம். அப்படி 2024 ஆம் ஆண்டின் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளனர்.
அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம்.
இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது அமர் கௌஷிக் இயக்கத்தில் வெளியான ஸ்ரீ 2 திரைப்படம் . இப்படத்தில் ஷ்ராதா கபூர், ராஜ்குமார் ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 800 கோடி ரூபாய் க்கு மேல் வசூலித்தது.

3- வது இடத்தை பிடித்து இருப்பது நித்திலன் சுவாகிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் . இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் தற்பொழுது சீன மொழியில் வெளியிட்டு அங்கும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

4 மற்றும் 5- வது இடத்தை பிடித்து இருப்பது அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடித்த சைத்தான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ஃபைட்டர் திரைப்படமாகும்.

6- வது இடத்தை பிடித்து இருப்பது சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ்.
பூல் புல்லய்யா 7- வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தி மொழியில் ராகவ் ஜுயல் நடிப்பில் வெளியான கில் திரைப்படம் 8- வது இடத்தை பிடித்துள்ளது.
சிங்கம் அகேயின் திரைப்படம் 9-வது இடத்தை பிடித்துள்ளது.
கிரன் ராவ் நடித்த லாபடா லேடீஸ் திரைப்படம் 10-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த 10 இடங்களில் 7 இந்தி திரைப்படமும், 1 தமிழ் , 1 மலையாளம் மற்றும் 1 தெலுங்கு திரைப்படம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
- சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது இல்லை.
தமிழ்நாடு மாநில ஆளுநராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆளுநர் ஆர்.என் ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில் தற்போது இந்திய அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மையே தேவையற்றது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.
தமிழ்நாடு பல்கலைக்கழங்களின் வேந்தரான ஆளுநருக்கும் உயர்கல்வித்துறைக்கும் இடையே அவ்வப்போது வெளிப்படையாகவே பிரச்சனை வெடித்தது. உயர்கல்வி துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது நடந்த சர்ச்சைகளே இதற்கு உதாரணம். அப்போது ஆளுநர் பங்கேற்ற விழாக்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த சம்பவமும் நிகழ்ந்தன.
தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர், சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்று கூறினார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'இந்தி மாத' நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம் பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது பாடியவர்களின் கவனக்குறைவால் நடந்த தவறு என விளக்கம் அளிக்கப்பட்டது.

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டு பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது," என்று கூறினார்.
இதற்கு பதில் தரும் விதமாக சபாநாயகர் அப்பாவு, "ஆளுநர் ரவி இதுபோன்ற தர்க்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை என்று கூறினார்.
இவ்வாறாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், ஆளுநர் ரவியை திரும்ப பெறக்கோரி கூட்டணிக் கட்சிகளோடு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது தி.மு.க. அரசு.
- ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம், 24 ஆண்டு கால பிஜூ ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக். இவர் தனது தந்தையின் மறைவுக்கு பின் பிஜூ ஜனதா தளம் கட்சியைத் தொடங்கி கடந்த 2000-ம் ஆண்டு ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்து முதல் மந்திரியாக பதவியேற்றார்.
அதன்பின் தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒடிசா மாநிலத்தில் 5 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டமாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.
ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க, பிஜூ ஜனதா தளம் தனித்தனியாக களம் இறங்கின.
நவீன் பட்நாயக் தனது செயலாளராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டினை பிஜூ ஜனதா தளம் கட்சியில் சேர்த்ததுடன், அவரை பிரசார தளபதியாக்கி தேர்தலைச் சந்தித்தார்.

இந்த வியூகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது பா.ஜ.க. ஒடிசா மண்ணை வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு தாரை வார்ப்பதா என கேள்வி எழுப்பியது.
மேலும், புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவியை பிரசாரத்தில் முன்னிலை படுத்தியது பா.ஜ.க. இந்த விவகாரமும் விசுவரூபம் எடுத்தது.
இதற்கிடையே, ஒடிசாவில் வெளியான சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பிஜூ ஜனதா தளத்துக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. தொடக்கம் முதலே பிஜூ ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்தது. பா.ஜ.க. வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றனர்.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. 78 இடங்களை கைப்பற்றி அசத்தியது. பிஜூ ஜனதா தளம் 51 இடமும், காங்கிரஸ் 14 இடமும், மற்றவர்கள் 4 இடமும் பெற்றனர். இதன்மூலம் ஒடிசாவில் நவீன்பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட நவீன் பட்நாயக் தனது பாரம்பரிய ஹின்ஜிலி தொகுதியில் வென்ற நிலையில், கன்தாபன்சி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லட்சுமண் பாகிடம் தோல்வி அடைந்தார்.
ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
நவீன் பட்நாயக் 2000 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை சட்டசபை தேர்தலில் வென்று முதல் மந்திரியாக இருந்துள்ளார்.
- பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் முதலிடத்தில் உள்ளார்.
- 10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார்.
2024 முடிவடைந்து புதிய ஆண்டு (2025) விரைவில் பிறக்க உள்ள நிலையில், 2024-ம் ஆண்டு உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் 2 இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.
இந்த பட்டியலில் முதல் வீரராக பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையான இமானே கெலிஃப் என்பவர் உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

2-வது இடத்தில் முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் உள்ளார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பினார். ஆனால் அந்த போட்டியில் தோல்வியை தழுவினார். போட்டிக்கு முன்னர் எதிராளியை கண்ணத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3-வது இடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் லமின் யமால் உள்ளார். 17 வயதில் கோல் அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை யமால் முறியடித்தார். இவர் கோல் அடித்து கொண்டாடிய போது ரசிகர்களால் இனவெறி தாக்குதல் நடத்தினர். யுரோ கோப்பையை வென்ற அணியில் இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4-வது இடத்தில் அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் உள்ளார். இவர் பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'புளோர்' பிரிவு பைனலில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் சிமோன் பைல்ஸ் வென்ற 11-வது பதக்கம் இதுவாகும். இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார்.
5-வது இடத்தில் மைக்கெல் டைசன் உடன் குத்துச்சண்டையில் மோதிய ஜேக் பால் (27) உள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஆவார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார்.

இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார். மைக் டைசனுக்கு எதிரான போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் டைசனை வீழ்த்தினார்.
6-வது இடத்தில் ஸ்பெயினின் கால்பந்து வீரர் நிகோ வில்லியம்ஸ் உள்ளார். இவர் லமைன் யமலுடன் இணைந்து, யூரோ 2024-ல் சிறப்பான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்தார்.

ஜெர்மனியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றபோது, இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு வில்லியம்ஸ் முக்கியமான கோல்களை அடித்தார்.
7-வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதிலும் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா உள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மாற்றியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது நட்சத்திர ஆல்ரவுண்டராக கவனத்தை ஈர்த்தார்.
8-வது இடத்தில் அமெரிக்க கோல்ப் வீரர் ஸ்காட்டி ஷெஃப்லர் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு உலகின் அதிக ஊதியம் பெறும் கோல்ஃப் வீரர்களில் முதலிடத்தில் இருந்தார்.பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கோல்ஃப் தனிநபர் ஸ்ட்ரோக் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்.

9-வது இடத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷஷாங்க் சிங் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த நட்சத்திரமாக உருவெடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் பெயர் குழப்பத்தில் அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சகர்களை தனது பேட்டிங்கின் மூலம் வாயடைக்க வைத்தார்.

அவரது பஞ்சாப் அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக மாற்றியது. ஐபிஎல்லில் அவர் முக்கியத்துவம் பெறுவது அந்த ஆண்டின் மிகவும் ஆச்சரியமான கதைகளில் ஒன்றாகும்.
10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார். 2024-ம் ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்றார், இது கால்பந்து உலகில் விவாதத்தையும் சர்ச்சையையும் தூண்டியது. ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர் இந்த மரியாதைக்கு தகுதியானவர் என்று பலர் கூறினர். இதனால் ரியல் மாட்ரிட் பலோன் டி'ஓர் விழாவை புறக்கணித்தது.

சர்ச்சைகள் இருந்தபோதிலும், ரோட்ரியின் அருமையான விளையாட்டு , இந்த சீசனில் அவர் செயல்ப்பட்ட விதம் அவரை பலோன் டி'ஓர் வெற்றியாளராக அவரது சாதனை கவனத்தை ஈர்த்தது.
- கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் 'All Eyes on Rafah' முதலிடம்.
- Stampede என்ற வார்த்தை இப்பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்தாண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2024ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகள்:
2024ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் 'All Eyes on Rafah' முதலிடத்தை பெற்றுள்ளது. பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டிக்கும் விதமாக 'All Eyes on Rafah' என்ற இணையத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

2. Akaay
இப்பட்டியலில் பிரபல கிரிக்கெட் வீரர் கோலி - அனுஷ்கா தம்பதியின் மகன் பெயரான Akaay 2ம் இடம் பிடித்துள்ளது. அகாய் என்ற பெயருக்கு அழிவில்லாதவன் என்று அர்த்தமாகும்.

3. Cervical Cancer
கர்ப்பப்பை புற்றுநோய் (Cervical Cancer) என்ற வார்த்தை இப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
4. Tawaif
Tawaif என்ற வார்த்தை இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது. பண்டைய காலத்தில் குறிப்பாக முகலாயர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் மற்றும் பணக்காரர்கள் முன்பு நடனமாடும் பெண்களை Tawaif என்று அழைப்பர்.
5. Demure
இப்பட்டியலில் Demure என்ற வார்த்தை 5-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தைக்கு அமைதியான அடக்கமான பெண்கள் என்று அர்த்தமாகும்.
6. Pookie
Pookie என்ற வார்த்தை இப்பட்டியலில் 6-ம் இடம் பிடித்துள்ளது. தங்களுக்கு பிடித்தமான நபரை செல்லமாக அழைப்பதை Pookie என்று சொல்கிறார்கள்.

7. Stampede
Stampede என்ற வார்த்தை இப்பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தையை நாம் அடிக்கடி ஆங்கில செய்திகளில் படித்திருப்போம். பெருமளவிலான மக்கள் ஒரே இடத்தை நோக்கி ஓடுவதை Stampede என்று குறிப்பிடுகிறார்கள். உ.பி. மாநிலம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்ததை அடுத்து Stampede என்ற வார்த்தை இந்திய அளவில் ட்ரெண்டானது.
8. Moye Moye
Moye Moye என்ற வார்த்தை இப்பட்டியலில் 8-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தையை பலரும் ரீல்ஸ்களில் கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தைக்கு தனிமையில் அல்லது சோகத்தில் இருப்பது என்று அர்த்தமாகும்.
9. Consecration
Consecration என்ற வார்த்தை இப்பட்டியலில் 9-ம் இடம் பிடித்துள்ளது. ஒரு இடத்தையோ ஒரு செயலையோ இறைவனின் பெயரால் புனிதமாக்கும் செயலுக்கு Consecration என்று அர்த்தமாகும்.

10. Good Friday
Good Friday என்ற வார்த்தை இப்பட்டியலில் 10-ம் இடம் பிடித்துள்ளது. புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளாகும்.
- வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிடுகிறது.
- ‘மகாராஜா’ இந்திய சினிமாவில் மட்டுமின்றி சீனாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் அந்த ஆண்டில் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்பட்டு தேடப்பட்டவை குறித்து கூகுள் பட்டியலை வெளியிடும். உதாரணத்திற்கு அரசியலில் அதிகம் தேடப்பட்ட தலைவர், சுற்றுலா செல்ல விரும்பி தேடிய இடம் என வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிடுகிறது.
அந்த வகையில், 2024-ம் கூகுளில் இந்தியா அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் முதல் 10 இடங்களில் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன.

'ஸ்ட்ரீ 2' முதல் இடத்தையும், 'கல்கி 2898 AD', '12th Fail', 'லாபட்டா லேடீஸ்', 'ஹனுமான்' முறையே அடுத்தடுத்த இடங்களையும் 'மகாராஜா' 6-ம் இடத்தையும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' 7-ம் இடத்தையும் 'தி கோட்' 8-ம் இடத்தையும், 'சலார்', 'ஆவேஷம்' அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.


'மகாராஜா' இந்திய சினிமாவில் மட்டுமின்றி சீனாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளிமாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். 'பாகுபலி', 'கேஜிஎஃப்' வரிசையில் இந்த ஆண்டு 'மஞ்சும்மல் பாய்ஸ்' படம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்






