என் மலர்
Recap 2024
- அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது.
- இந்தியர்கள் தேனிலவுக்கு செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக 'பாலி' உள்ளது.
ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் 2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி 2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களில் அஜர்பைஜான் முதலிடத்தில் உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் அஜர்பைஜான் நாட்டை பற்றி அதிக அளவில் கூகுளில் தேடியுள்ளனர். அதன் விளைவாக அஜர்பைஜான் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

பாலி தீவு
இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிரபல சுற்றுலாத் தலமான 'பாலி' பிடித்துள்ளது. இந்தியர்கள் பலரும் தேனிலவுக்கு செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக 'பாலி' உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணாலி
இந்த டாப் 10 பட்டியலில் மணாலி, ஜெய்ப்பூர், அயோத்தி, காஷ்மீர், தெற்கு கோவா உள்ளிட்ட 5 இந்திய சுற்றுலா தளங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்லும் 'மணாலி' இப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. ஜெய்ப்பூர் 5-ம் இடமும், அயோத்தி 8-ம் இடமும் காஷ்மீர் 9-ம் இடமும் தெற்கு கோவா 10-ம் இடமும் பிடித்துள்ளது.

ஜெய்ப்பூர்
ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு அக்கோவிலை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் அயோத்திக்கு சென்று வருகின்றனர். அதன் விளைவாக இப்பட்டியலில் அயோத்தி இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவில்
அஜர்பைஜான், பாலிக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் கஜகஸ்தான், ஜார்ஜியா, மலேசியா உள்ளிட்ட 3 வெளிநாட்டு சுற்றுலா தளங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த டாப் 10 பட்டியலில் கஜகஸ்தான் 4-ம் இடமும் ஜார்ஜியா 6-ம் இடமும் மலேசியா 7-ம் இடமும் பிடித்துள்ளது.

மலேசியா
2024ம் ஆண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்கள்:
1. அஜர்பைஜான்
2. பாலி
3. மணாலி
4. கஜகஸ்தான்
5. ஜெய்ப்பூர்
6. ஜார்ஜியா
7. மலேசியா
8. அயோத்தி
9. காஷ்மீர்
10. தெற்கு கோவா
- டி20 உலகக் கோப்பையுடன் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20யில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
- மற்றொரு இந்திய வீரரான தவான் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
2024-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். சிலர் டி20 என ஒரு வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த வீரர்கள் யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
டீன் எல்கர்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு அறிவிப்பை தொடங்கிய வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டீன் எல்கர் உள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அனைத்து விதமான போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 86 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். 86 போட்டியில் 14 சதம் 23 அரைசதம் விளாசியுள்ளார். இவர் தலைமையில் தென் ஆப்பிரிக்கா 18 போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றியும் 8-ல் தோல்வியும் கண்டுள்ளது.
டேவிட் வார்னர்

அதே மாதத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஒருநாள் தொடரில் இருந்து 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வை அறிவித்தார்.
இவர் ஆஸ்திரேலியாவுக்காக 112 டெஸ்ட் போட்டி விளையாடி 8786 ரன்களும் 161 ஒருநாள் போட்டியில் விளையாடி 6932 ரன்களும் எடுத்துள்ளார். 2 வடிவத்திலும் சேர்த்து 48 சதம் விளாசியுள்ளார்.
கிளாசன்

ஜனவரி மாதத்தில் 3 வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிளாசன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் 2019-ம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய இவர் 4 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கவனத்தை செலுத்தி அதிரடியாக விளையாடி வருகிறார்.
நீல் வாக்னர்

நியூசிலாந்து அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர். இவரும் இந்த ஆண்டில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமாகினார். 64 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் 260 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை வென்ற அணியில் இவர் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலின் மன்ரோ

நியூசிலாந்து அணியின் தொடங்க வீரர் கொலின் மன்ரோ. இவர் கடந்த மே மாதம் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். 2020-ம் ஆண்டு டி20 அணியில் இடம் பிடித்த இவர் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 57 ஒருநாள் போட்டி ஒரு டெஸ்ட்டில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 அணியில் இவர் இடம் பிடிக்காத நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தவர் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் 2022-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லவில்லை.
அதன்பிறகு 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தான் கடைசி என அறிவித்தார். இதனையடுத்து 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி, 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக ஒரு சதம் 17 அரை சதம் விளாசியுள்ளார்.
கேதர் ஜாதவ்

இந்த ஆண்டு ஜூன் மாதம் கேதர் ஜாதவ் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் கடைசியாக 2020-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 73 ஒருநாள் போட்டி, 9 டி20 போட்டியில் விளையாடியுள்ள இவர், 2 சதம், 6 அரை சதம் விளாசியுள்ளார். 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்டர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஆல் ரவுண்டரான ஜடேஜா ஆகியோர் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையுடன் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர்.
விராட் கோலி இந்திய அணிக்காக 125 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம் 38 அரைசதம் விளாசியுள்ளார். ரோகித் சர்மா 159 டி20 போட்டிகளில் விளையாடி 5 சதம் 32 அரைசதம் விளாசியுள்ளார். ஜடேஜா 74 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டும் 515 ரன்களும் எடுத்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியின் மிகவும் வயதான வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்(42). இவர் 2009-ல் டி20யிலும் 2015 ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த இவர் இவர் இந்த ஆண்டு மே மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இவர் 3-வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட்டில் 704 விக்கெட்டும் ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டும் டி20 18 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ஷிகர் தவான்

இந்திய அணியின் தொடங்க வீரர் ஷிகர் தவான். இடதுகை பேட்டரான இவர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.
இவர் 2013-ம் ஆண்டு இந்திய அணி ஐசிசி சாம்பியன் டிராபியை வெல்ல உதவினார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷிகர் தவான் ஆவார். இதுமட்டுமல்லாமல் 2014 ஆசிய கோப்பை, 2015 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் இந்தியாவின் அதிக ரன்கள் குவித்த வீரர் ஷிகர் தவான்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட் (2315 ரன்கள்), 167 ஒருநாள் போட்டி (6793 ரன்கள்), 68 டி20 போட்டிகளில் (1759 ரன்கள்) விளையாடி உள்ளார். மொத்தமாக 24 சதம், 55 அரை சதம் விளாசியுள்ளார்.
இவர் 2022-ம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.
டேவிட் மலான்

ஐசிசி தரவரிசையின் முன்னாள் நம்பர் ஒன் டி20 பேட்டர் இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் மலான். இவர் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களில் (ஜாஸ் பட்லர்) இவரும் ஒருவர். இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 8 சதம், 32 அரை சதம் விளாசியுள்ளார்.
மொயின் அலி

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 37 வயதான அலி கடைசியாக வெற்றி பெற்ற இரண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான வீரராக இருந்தவர்.
இவர் இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 6678 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதம் விளாசியுள்ளார். 366 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ஷகிப் அல் ஹசன்

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்தார்.
டி20-யில் 13 அரைசதம் உள்பட 2251 ரன்களும் 149 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட்டில் 4000 ரன்களும் 240 விக்கெட்டும் இவர் வீழ்த்தியுள்ளார்.
மஹ்முதுல்லாஹ்

வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லாஹ். இவர் 2021-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருடன் ஓய்வை அறிவித்தார். வங்கதேச அணியில் டி20 போட்டிகள் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தில் உள்ளார். இவர் 141 டி20 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களும் 40 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் இன்னும் ஓய்வை அறிவிக்காமல் உள்ளார்.
மேத்யூ வேட்

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011-ல் அறிமுகமான வேட், ஆஸ்திரேலியாவுக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்டில் 1613 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்களும், டி20-யில் 1202 ரன்களும் எடுத்துள்ளார். 2021-ல் ஆஸ்திரேலியாவின் முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல இவர் முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
விருத்திமான் சகா

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் விருத்திமான் சகா நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2024-25 ரஞ்சி டிராபி சீசனின் முடிவில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.
சகா 2010 முதல் 2021 வரை 40 டெஸ்ட் மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். டெஸ்ட்டில் மூன்று சதங்களுடன் 1353 ரன்களை எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் பேட்டிங் செய்த ஐந்து போட்டிகளிலும் சேர்ந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தியாவுக்கான அவரது கடைசி போட்டி 2021-ல் நியூசிலாந்திற்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
சித்தார்த் கவுல்

இந்திய பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல். 34 வயதான பஞ்சாப் கிரிக்கெட் வீரர், இந்தியாவிற்கு வெளியே உள்ள மற்ற லீக்குகளிலும், இந்தியாவில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான டி20 லீக்குகளிலும் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கவுல் 2018 முதல் 2019 வரை இந்தியாவுக்காக மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத அவர் டி20-யில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவர்களை தவிர சௌரப் திவாரி (இந்தியா), வருண் ஆரோன் (இந்தியா), பரிந்தர் ஸ்ரான் (இந்தியா), சித்தார்த் கவுல் (இந்தியா), டேவிட் வைஸ் (தென்னாப்பிரிக்கா), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் (நெதர்லாந்து), ஷானன் கேப்ரியல் (வெஸ்ட் இண்டீஸ்), வில் புகோவ்ஸ்கி (ஆஸ்திரேலியா), டி20-யில் மட்டும் பிரையன் மசாபா (உகாண்டா) ஆகிய வீரர்களும் இந்த ஆண்டில் ஓய்வை அறிவித்துள்ளனர்.
- இந்தியாவில் 2024 கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
- புரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் ஆகியவை அதிகம் தேடப்பட்டுள்ளன
ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த ஆண்டு டாப் 10 கூகுள் தேடல்கள் என்னென்ன என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2024 கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஐபிஎல், டி20 உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் 2024 ஆகியவற்றை விட 2024 ஆம் ஆண்டிற்கான ட்ரெண்டிங் தேடல்களாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில் , புரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் துலீப் டிராபி போன்ற உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்டுள்ளன.
கோபா அமெரிக்கா - யுஇஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவை இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட மற்ற விளையாட்டு நிகழ்வுகள் ஆகும்.
அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல், பல மாநிலத் தேர்தல்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற சொற்கள் அதிகம் தேடப்பட்டள்ளன.

2024-ல் அதிகம் தேடப்பட்ட நபர்களில், வினேஷ் போகத் , பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போன்ற அரசியல்வாதிகள் முன்னணியில் உள்ளனர்.

2024 இல் Google இல் அதிகம் தேடப்பட்ட முதல் 10:
1) இந்தியன் பிரீமியர் லீக்
2) டி20 உலகக் கோப்பை
3) பாரதிய ஜனதா கட்சி
4) தேர்தல் முடிவுகள் 2024
5) ஒலிம்பிக் 2024
6) அதிக வெப்பம்
7) ரத்தன் டாடா
8) இந்திய தேசிய காங்கிரஸ்
9) புரோ கபடி லீக்
10) இந்தியன் சூப்பர் லீக்
- சூர்யா 45-ல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளார்.
- சாய் அபயங்கர் தமிழ் திரையுலகில் முன்னணி பாடகர்களான பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி தம்பதியின் மகன் ஆவார்.
2024-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தாண்டு பொதுமக்களால் அதிகம் விரும்பப்பட்டு கூகுளில் தேடப்பட்டவை குறித்த பட்டியலில் 10 இடங்கள் குறித்து வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டு இந்திய அளவில் கூகுளில் முணுமுணுத்து தேடப்பட்ட (Hum to Search) பாடல்களின் பட்டியலின் முதல் 10 இடங்களில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் 'கட்சி சேர' பாடல் 4-ம் இடத்திலும், 'ஆச கூட' பாடல் 9-ம் இடத்திலும் இடம்பெற்று உள்ளது.
உலக அளவில் கூகுளில் முணுமுணுத்து தேடப்பட்ட பாடல்களின் பட்டியலில் 'கட்சி சேர' பாடல் 10-ம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள 20 வயதான சாய் அபயங்கர் கட்சி சேர மற்றும் ஆசை கூட என இரண்டு ஆல்பம் பாடல்களை பாடி இணையத்தில் வெளியிட்டார். இந்த பாடல்கள் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 45-ல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளார்.
முன்னதாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் அபயங்கர் தமிழ் திரையுலகில் முன்னணி பாடகர்களான பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி தம்பதியின் மகன் ஆவார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3வது முறை ஆட்சி அமைத்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதையடுத்து முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்று இருந்தது. இதில், தமிழகத்தில் 40 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றி இருந்தது.

ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரின் நிதிஷ்குமார் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவியை வகித்தவர் என்ற நேருவின் ஹாட்ரிக் சாதனையை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் என்ற சிறப்பும் மோடிக்கு உள்ளது.
- தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
- வயநாடு நிலச்சரிவு சோகத்தால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்துசெய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய சோகத்தால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டத்தை ரத்துசெய்து மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






