search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maharaja"

    • அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார்.
    • பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகர் அருள்நிதி. அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது அவருக்கு, வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார் அருள்நிதி.

    அதற்கடுத்து தகராறு,டிமான்டி காலனி, ஆறாது சினம், களத்தில் சந்திப்போம் , தேஜாவு என வித்தியாசமான கதைகளில் நடித்தார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கழுவேத்தி மூர்கன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தற்பொழுது டிமாண்டி காலனி பாகம் இரண்டில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற மகாராஜா திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் அருள்நிதியை வாழ்த்தி பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிமான்டி காலனி படக்குழுவும் அருள்நிதியை வாழ்த்தி போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5.01 மணிக்கு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
    • படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது.

    மகாராஜா திரைப்படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வார அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் வார பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது மகாராஜா திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
    • இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. படம் வெற்றிகரமாக 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    மகாராஜா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    திரையரங்கில் பார்க்க தவரவிட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி படத்தை பார்க்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    அரண்மனை 4 - க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வசூலித்து வந்த மகாராஜா திரைப்படம் பிரபாசின் கல்கி298 ஏடி திரைப்படம் வெளியாகியதால் கொஞ்சம் வசூலில் மந்தம் தட்டியது. இதனால் திரைப்படம் 100 கோடியை எட்டுவதற்கு தாமதம் ஆனது.

    ஆனால் தற்பொழுது திரைப்படம் 100 கோடி வசூலில் தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு உருவான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • மகாராஜா வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிகிறது.

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு உருவான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளதால் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிகிறது.

    இந்நிலையில், தற்போது இயக்குனர் பாண்டிராஜுடன் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

    முன்னதாக, மகாராஜா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நித்திலன் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்க இருப்பதாகவும் அப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
    • அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா ’பேட் காப்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர்.

    மகாராஜா திரைப்படத்தில் அவரது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அனுராக் காஷ்யப். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

    அங்கு  ஜெயில் குறித்து கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கு விதமாக " ஆம் நான் ஜெயிலில்  இருந்திருக்கிறேன்,  யார அடிக்கக்கூடாதோ அவங்கள அடிச்சதுனால நான் ஜெயிலுக்கு போனேன், நான் தப்பான ஆள் மேல கைய வச்சிட்டேன். நான் ஒரு இரவு முழுசா ஜெயில்ல இருந்தேன். யார் அடிச்சு நான் ஜெயிலுக்கு போனேனோ அவரே தான் என்னோட வாழ்க்கை மாறுனதுக்கு முக்கியமான காரணம், அவரே தான் என்னய ஜெயில்ல இருந்து வெளில கொண்டு வந்தாரு" என்று கூறினார்.

    இவ்வாறு கூறியவுடன் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடந்தனர், மேலும் அனுராக் யார் அந்த நபர் என்ற விவரத்தை கூறவில்லை.

    தற்பொழுது அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா 'பேட் காப்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த தொடரை ஆதித்யா தத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
    • வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

    எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனெக்கென ஒரு பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சில நடிகர்களுக்குதான் உண்டு. அதேப் போல் தமிழ் சினிமாவின் வெர்சாடைல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

    சமீப காலமாக இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் திரைப்படம் பெரும்பாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இவர் மற்றப் படங்களில் வில்லனாகவோ ,மற்ற கதாப்பாத்திரத்தில் நடித்தால் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும்.

    ஆனால் இந்த கருத்தை உடைக்கும் வகையில் இவரது 50 வது திரைப்படம் அமைந்தது. சமீபத்தில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

    விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவர் ஏன் ரொமாண்டிக் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விஜய் சேதுபதி " தரமாட்டேங்குறாங்க சார், ஆனா நான் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன். நானும் அதுக்கான கதைய தேடிட்டு தான் இருக்கேன், காதல்ல என்னைக்குமே தீர்ந்தே போகாது சார், காதல் காட்சிகள் ரொம்ப ரசிக்கிறவன் சார் நான் , கேமரா முன்னாடி நடந்தாலும் சில நொடிகளே நடந்தாலும், நான் அதை நிஜம் என்று நம்புகிறேன்., அது எல்லாதுக்கும் அமைந்துடாதுள்ள சார்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் தற்பொழுது 85 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை வசூலில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். அவர் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். நல்ல கதையுடைய திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல திரைப்படத்தை பார்த்தால் அப்படக்குழுவினரை நேரில் அழைத்தோ, தொலைப்பேசியில் அழைத்தோ பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை பார்ப்பதற்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நிறைய திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    படம் வெளியாகி வெற்றிகரமாக அதன் 2 ஆம் வாரத்தில் நுழைந்துள்ளது. இப்படம் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டு தெலுங்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரண்மனை 4 - க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்து 100 கோடி ரூபாயை இன்னும் சில வாரங்களில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திட்டம் போட்டு நடித்தால் நிச்சயமாக படம் வெற்றி பெறாது.
    • உண்மையான உழைப்பை கொடுத்தோம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 50-வது படம் மகாராஜா. அனுராக் காஷ்யப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் படம் திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.32.6 கோடி வசூல் செய்துள்ளது.

    இந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியது, இந்த கதையை கேட்டவுடன் ஒரு பிரமிப்பும் நம்பிக்கையும் இருந்தது. இது எப்படி சாத்தியமாக போகிறது என்ற கேள்வி ஒவ்வொரு படத்தின் போதும் இருக்கும். கதை கேட்கும் போது கொஞ்சம் யூகிக்கலாம்.

    ஆனால் நடித்து முடித்த பிறகு எதையும் யோசிக்க முடியாது. எப்படியும் இந்த படம் ஓடி தயாரிப்பாளருக்கு போட்ட காசை எடுத்துக் கொடுத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் எனது முந்தைய படங்கள் சரியாக ஓடாததால் கட் அவுட் வைப்பவர்கள் சிலர் விஜய் சேதுபதிக்கு கட் அவுட் வைப்பதால் மக்கள் படம் பார்க்க வரவா போகிறார்கள் என்று பேசியதாக என் நண்பர் கூறினார்.

    அதை யெல்லாம் மனதில் வைத்து நிச்சயமாக இந்த படத்தில் நடிக்கவில்லை. அப்படி திட்டம் போட்டு நடித்தால் நிச்சயமாக அந்த படம் வெற்றி பெறாது. உண்மையான உழைப்பை கொடுத்தோம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
    • கடந்த வாரம் வெளியான 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், "மகாராஜா" படத்தில் விஜய் சேதுபதிக்கு முன் விஜய் ஆண்டனி நடிக்க ஆர்வம் காட்டியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


    சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அளித்த பேட்டியில், இந்த கதையை முதலில் நான் தயாரிக்க, விஜய் ஆண்டனி நடிப்பதாக இருந்தது. கதையை கேட்ட விஜய் ஆண்டனி கதாநாயனாக நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் நிதிலன் ஏற்கனவே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் முன்பணம் வாங்கிவிட்டதால் அவர்கள் தடையில்லாச் சான்றிதழ் தர மறுத்தனர். அதனால்தான் என்னால் இந்த படத்தைத் தயாரிக்க முடியவில்லை" என கூறியுள்ளார்.

    தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் இதுவரை ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் விஜய் சேதுபதி நடிக்கும் 50- வது திரைப்படமாகும்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை பார்ப்பதற்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நிறைய திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். படம் வெளியாகி 3 நாட்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.32.6 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் 3 நாட்களில் மகாராஜா திரைப்படமே அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×