என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அரசு அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார்
    • டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.

    இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய  அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இது அரசியளிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

     

    இந்நிலையில் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதானி வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரியோன் பீஸ் [breon peace] [53 வயது] தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

    அதானி விவகாரத்தில் இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.

    கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்.

     

    இந்நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி அதுவும் அதானி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை கையாண்ட நீதிபதி திடீர் பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 2021 முதல் அவர் நியூயார்க்கில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். 

    • விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கினர்.
    • இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.

    விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் , வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தெரிவித்துள்ளது.

    அடுத்தாண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.
    • இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும்.

    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

    டிவிட்டரின் பெயரை எக்ஸ்[X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். வீடியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.

     

    இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேங் இடுகைகள் தேவையில்லாதது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    எக்ஸ் தளத்தில் பதிவுகளில் அது தொடர்புடைய ஹேஸ்டேக் களை இடுவதும், அது டிரண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது, மேலும் இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும். இந்நிலையில் எலான் மஸ்க் அது தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

     

    எக்ஸ் இல் ஹேஸ்டேக் போடலாமா வேண்டாமா என்ற பயனர் ஒருவரின் கேள்விக்கு கோர்ட் சாட்பாட் அளித்த பதிலை பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இனி சிஸ்டத்துக்கு ஹேஸ்டேக்குகள் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் அவை பார்க்க அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தளத்தில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறிந்துகொல்வதற்கு வேறு ஏதும் வழியை எக்ஸ் தளம் உருவாகியிருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே மஸ்க் இவ்வாறு கூறியுள்ளார் என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர். 

    • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
    • இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து சொந்த ஊருக்கு திரும்புவார்.

    வாஷிங்டன்:

    மருத்துவத் துறையில் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை பரிசோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சீறுநீரகம் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.

    இந்த நிலையில் 3-வது நபராக அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

    இந்த ஆபரேசனை பன்றியின் சிறுநீரகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அலபாமா பல்கலைக்கழக டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர்.

    அதன்பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


    இதற்கிடையே பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட டோவானா லூனி உடல்நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில பரிசோதனைகளுக்காக அவர் தற்காலிகமாக மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து அவரது சொந்த ஊருக்கு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம் அல்லது இதயம் பொருத்தப்பட்ட 4 பேரும் இரண்டு மாதங்களுக்குள் உயிரிழந்தனர். ஆனால் லூனியின் உடல்நிலையில் வேறு பாதிப்பு இல்லை எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும்.
    • ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை.

    அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் பதவியேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வரி விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்தியா சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இதனால் அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    "அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், அவர்களுக்கு அதே அளவு வரி விதிக்கிறோம். அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கிறோம். அனைத்து விதங்களிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கின்றனர், ஆனால் நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை," என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய டிரம்ப், "பரஸ்பரம் என்ற சொல் மிக முக்கியமானது. இந்தியா எங்களுக்கு 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால், நாங்களும் அதுபோல் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றோமா? அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் அவர்கள் 100 மற்றும் 200 வசூலிக்கின்றனர்."

    "இந்தியா, பிரேசில் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அவர்கள் எங்களுக்கு கட்டணம் விதிக்கின்றனர், அது பரவாயில்லை, ஆனால் நாங்களும் அவர்களுக்கு அதே கட்டணத்தை வசூலிக்க போகிறோம்," என்று தெரிவித்தார்.

    • துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவனும் அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப மாணவர் ஜோடி ஒன்று துடிப்பாக நடனமாடி அசத்தினர்.
    • வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பில் பான்-இந்தியா படமாக வெளியாகி வரவேற்பு பெற்ற சினிமா தேவரா. இதில் சுட்டமல்லே என்ற பாடலுக்கு கதாநாயகன், நாயகி இருவரும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தனர். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு 'ரீல்ஸ்' வீடியோ ஆடி கொண்டாடினர்.

    இந்தநிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி விழா நடந்தது. அப்போது அங்கு பட்டம் படித்து வரும் இந்திய மாணவர்கள் சுட்டமல்லே பாடலுக்கு நடனமாடினர். அந்த பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப மாணவர் ஜோடி ஒன்று துடிப்பாக நடனமாடி அசத்தினர். சக மாணவர்கள் கரகோஷத்தை எழுப்பி இதனை வெகுவாக ரசித்தனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி 1¼ கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.



    • எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார்.
    • டுவிட்டர் பெயரை எக்ஸ் என்று எலான் மஸ்க் மாற்றம் செய்தார்.

    டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.

    இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

    எலான் மஸ்க்கின் எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அண்மையில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியது. இதன்மூலம் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

    • 5 கிராமி விருதுகளைப் பெற்று இருக்கிறார்.
    • உசேன் இசை உலகில் பெரும் புகழ்பெற்றவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

    அமெரிக்கா:

    பிரபல தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் (வயது 73). ரத்த அழுத்த பிரச்சனையால் உடல் நிலை குறைவு ஏற்பட்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்ட்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜாகிர் உசேன் மரணம் அடைந்தார்.

    மும்பையில் மார்ச் 9, 1951-ல் பிறந்த ஜாகிர் உசேன் இசை உலகில் பெரும் புகழ்பெற்றவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

    உஸ்தாத் ஜாகிர் உசேன் 1988-ல் பத்மஸ்ரீ, 2002-ல் பத்ம பூஷன் மற்றும் 2023ல் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றார். அவர் 2009-ல் தற்கால உலக இசை ஆல்பம் பிரிவில் கிராமி விருதையும் வென்றார்.

    மேலும், இவர் 5 கிராமி விருதுகளைப் பெற்று இருக்கிறார். இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த 66-வது கிராமி விருதுகள் விழாவில் கூட 3 விருதுகளைப் பெற்றார்.

    தி பீட்டில்ஸ் உட்பட பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.


    ஜாகிர் உசேன் ஒரு புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர், அவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா கான் அவரது காலத்தில் பிரபலமான தபேலா கலைஞர் ஆவார். தந்தையிடம் தபேலா வாசிக்கும் கலையை கற்றுக்கொண்டார்.

    உஸ்தாத் ஜாகிர் உசேன் 7 வயதில் கச்சேரிகளில் தபேலா வாசிக்கத் தொடங்கினார்.

    தனது ஆரம்பக் கல்வியை மாஹிமில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் முடித்த ஜாகிர் உசேன், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஜாகிர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் பெற்றார்.

    சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஜாகிர் உசேன், வெறும் 11 வயதில் அமெரிக்காவில் தனது முதல் கச்சேரியை வெற்றிகரமாக நடத்தினார். தந்தையுடன் அவர் அந்த இசைக் கச்சேரியை நடத்தி இருந்தார்.

    அதில் தனக்குச் சம்பளமாக 5 ரூபாய் வழங்கப்பட்டதாகப் பின்னர் ஒரு நேர்காணலில் நினைவு கூர்ந்தார். வாழ்க்கையில் தான் பெற்ற அந்த 5 ரூபாய்தான் மிக மதிப்புமிக்க சம்பாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    அவர் 1991-ல் பிளானட் டிரம்மிற்காக டிரம்மர் மிக்கி ஹார்ட்டுடன் இணைந்து பணியாற்றினார். இது கிராமி விருதை வென்றது.

    பிந்தைய ஆண்டுகளில், ஜாகிர் உசேன் பல படங்களின் ஒலிப்பதிவுகளில் பங்களித்தார். ஜாகீர் உசேன் 1991-ல் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். அட்லாண்டாவில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு இசையமைத்த குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.

    2016-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கு அனைத்து நட்சத்திர உலகளாவிய கச்சேரியில் பங்கேற்க அழைக்கப்பட்ட முதல் இந்திய இசைக்கலைஞர் ஆவார்.

    ஆரம்ப நாட்களில் ஜாகிர் உசேனுக்கு கடுமையான நிதி நெருக்கடிகள் இருந்தன. இதனால் வேறு வேலை செய்யச் சொல்லிக் கூட பலரும் அறிவுறுத்தினர். இருப்பினும், அதை எல்லாம் தாண்டி இசைத் துறைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

    பொருளாதார சிக்கல் காரணமாக ஆரம்பக் காலத்தில் பல நாட்கள் அவர் ரயிலிலேயே பயணித்தார். அப்போது சில நேரம் அவருக்கு இருக்கை கூட கிடைக்காது. அப்போதெல்லாம் செய்தித்தாளை விரித்து தரையிலேயே கூட படுத்துத் தூங்குவாராம். ஆனால், அப்போதும் தனது தபேலாவின் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்து கொள்வாராம்.

    அவரது முதல் ஆல்பமான 'லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட்' 1973ம் ஆண்டு வெளியானது. எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதில் இருந்து இசையை உருவாக்கும் வல்லமை கொண்டவர் ஜாகிர் உசேன். வீட்டின் சமையல் அறையில் உள்ள சாதாரண பொருட்களில் இருந்தும் கூட அட்டகாசமான இசையைக் கொண்டு வருவதில் கை தேர்ந்தவர்.

    ஜாகிர் உசேன் மறைவுக்கு மத்திய அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    "உஸ்தாத் ஜாகிர் உசேனின் அசாதாரணமான தபேலா தேர்ச்சி இசை உலகில் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. அவரது கலைத்திறன் மூலம் அவரது வாழ்க்கையைத் தொட்ட அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது தாளங்கள் என்றென்றும் நம் இதயங்களில் எதிரொலிக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    • எலான் மஸ்க் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமை விளையாடி வந்தார்.
    • எலான் மஸ்க் டையப்லோ IV என்ற என்ற வீடியோ கேமின் ன்லீடர்போர்டில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

    உலக பணக்காரரான எலான் மஸ்க் டையப்லோ IV என்ற என்ற வீடியோ கேமை விளையாடி வந்தார். இந்த விளையாட்டின் லீடர்போர்டில் எலான் மஸ்க் முதலிடத்திற்கு முன்னேறினார். இதன்பிறகு அவர் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமை விளையாடி வந்தார்.

    இந்நிலையில், பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேம் விளையாடியதில் சீட்டிங் செய்ததாக கூறி உலக பணக்காரரான எலான் மஸ்க் அவ்விளையாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    'மிக வேகமாக பல செயல்களைச் செய்ததற்காக நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள்"'என்ற அந்த வீடியோ கேமின் ஸ்க்ரீன்சாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஸ்க், "சிறிய அளவில் கூட அதை நான் செய்யவில்லை" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் உசேனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

    பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று தெரிவித்திருந்தார்.

    இந்தியரான ஜாகிர் உசேன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

    மேலும், கடந்த ஒரு வாரமாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், "அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.

    • கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க 'பகல் சேமிப்பு நேரம்' என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
    • கோடைகாலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர்.

    அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பகல் சேமிப்பு நேரம் (Daylight Saving Time-DST) என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    நீண்ட கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க 'பகல் சேமிப்பு நேரம்' என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது கோடைக்காலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர். இதன் மூலம் அதிகமான பகல் நேரம் கிடைக்கும். பின்னர் கோடைகாலம் முடியும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பர்.

    இதன்படி அமெரிக்காவில் மார்ச் மாதம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை கடிகாரத்தை 1 மணிநேரம் முன்னோக்கி நகர்த்தி வைப்பார்கள். பின்னர் நவம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கடிகாரத்தில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பார்கள்.

    முதல் உலகப் போரின் போது இந்த நடைமுறை உருவானது, பின்னர் இரண்டாம் உலகப் போரில் ஆற்றலைச் சேமிப்பதற்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1966 இல் சீரான நேரச் சட்டத்துடன் மேலும் தரப்படுத்தப்பட்டது. அதே சமயம், ஹவாய் மற்றும் அரிசோனாவின் பெரும் பகுதி 'பகல் சேமிப்பு நேரம்' என்ற நடைமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் இந்த 'பகல் சேமிப்பு நேரம்' முறைக்கு அமெரிக்காவில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பகல் நேரங்களில் ஏற்படும் நேர மாறுதல்களால் தூக்கம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பகல் சேமிப்பு நேர முறையை அகற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "குடியரசுக் கட்சி பகல் சேமிப்பு நேரத்தை அகற்ற சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும். பகல் சேமிப்பு நேர முறை நமக்கு தேவையில்லை. அது சிரமமானது மற்றும் செலவு மிகுந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×