என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • 4-வது மிகப்பெரிய நிலவு யுரோப்பா என்று அழைக்கப்படுகிறது.
    • யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.

    பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் வியாழன் கிரகத்தின் நிலவுக்கு விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா அனுப்பியுள்ளது. சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் (ஜுபிட்டர்) கிரகத்தை 95 நிலவுகள் சுற்றி வருகின்றன.


    இதில் 4-வது மிகப்பெரிய நிலவு யுரோப்பா என்று அழைக்கப்படுகிறது. யுரோப்பா நிலவில் 15 முதல் 25 கி.மீ. தடிமன் கொண்ட பனிக்கட்டி படலம் உள்ளது.

    இந்த படலத்திற்கு அடியில் மிகப்பெரிய உப்புத் தண்ணீர் கடல் உள்ளது. அந்த தண்ணீரில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.

    சுமார் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 62 கோடியே 82 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து 2030-ம் ஆண்டு யுரோப்பாவின் சுற்றுப் பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதுமையை பொருட்படுத்தாமல் கமலாவுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் கிளிண்டன் ஈடுபட்டு வருகிறார்.
    • ஜீன்ஸுடன் உள்ளே நுழைத்த அவரை உணவக பணியாளர்கள் உட்பட யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

    நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டிரம்ப் களமிறங்கியுள்ளார். இரண்டு பக்கமும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் கமலாவுக்கு ஆதரவாக முக்கிய மாகாணங்களில் பிரச்சாரம் செய்வதற்காக ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்கு தற்போது வயது 78. முதுமையை பொருட்படுத்தாமல் கமலாவுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் கிளிண்டன் ஈடுபட்டு வருகிறார்.

     

    அந்த வகையில் ஜார்ஜியா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கிளிண்டன் மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்குச் சென்றுள்ளார். USA மேல் சட்டை அணிந்துகொண்டு ஜீன்ஸுடன் உள்ளே நுழைத்த அவரை உணவக பணியாளர்கள் உட்பட யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. குறிப்பாக உணவு ஆர்டர் செய்யும் கவுன்டரில் நின்றிருந்த பெண்மணி ஒன்றும் புரியாமல் விழித்துள்ளார்.

    கிளிண்டன் அந்த பெண்மணிக்கு கை கொடுக்க தனது கையை நீட்டினார். சிறிது நேரம் கழித்து வந்திருப்பது பில் கிளிண்டன் என்று அனைவரும் உணர்ந்தனர். அந்த பெண்மணியும் கிளிண்டனை கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

    அந்த இடமே சற்று நேரம் சிரிப்பலையில் ஆழ்நத்து. பின்னர் கிளிண்டனுடன் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு காலத்தில் உலகிலேயே சக்தி வாய்ந்த நபராக இருந்த பில் கிளிண்டன் தற்போது யாருக்கும் அடையாளம் கூட தெரியாமல் போனது மனிதர்களை விட காலமே சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதாக அமைத்துள்ளது. 

    • துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கைதானவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட டிரம்ப், வாக்காளர்களிடையே உரையாற்றினார்.

    டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டா ஏற்றப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டதை ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதுப்படுத்தி இருக்கிறது.

    துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்திருப்பதாகவும், சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் போது டிரம்ப், பேரணியில் கலந்து கொண்ட யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    "கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற போதிலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்று எஃப்.பி.ஐ. மற்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

    • இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை நடத்தியது.
    • இஸ்ரேல் வான்பாதுகாப்பை ஊக்குவிக்க அமெரிக்க ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    காசாவுக்கு எதிரான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது.

    லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது.

    இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    ஈரான் நாட்டின் தளபதி உள்ளிட்ட முக்கிய நபர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை நடத்தியது.

    இந்நிலையில், ஈரான் நாட்டின் ராக்கெட் தாக்குதலில் இருந்து கூட்டணி நாடான இஸ்ரேலைப் பாதுகாக்க உதவியாக, அதிக உயரத்தில் ராக்கெட்டுகளை அழிக்கும்திறன் பெற்ற நவீன சாதனம் ஒன்றை அமெரிக்கா வழங்கவுள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு துறை மந்திரி லாய்ட் ஆஸ்டின் இதனை வழங்கினார். இதேபோன்று, இஸ்ரேல் வான்பாதுகாப்பை ஊக்குவிக்க உதவியாக அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.
    • ஹாரிஸ் லேசான கிட்டப்பார்வை கொண்டவர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் (வயது 59), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் (வயது 78) போட்டியிடுகிறார்கள். அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இரு வேட்பாளர்களும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கமலா ஹாரிஸ் தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கையை கமலா ஹாரிசின் டாக்டர் ஜோசுவா சிம்மன்ஸ் அளித்துள்ளார். அதில், கமலா ஹாரிஸ் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார். கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதுடன், உயர்ந்த பதவியை வகிக்க தேவையான மன நிலையுடன் உள்ளார். அவர் புகையிலை மற்றும் ஆல்கஹாலை பயன்படுத்துவதில்லை. அவருக்கு ஒவ்வாமை பாதிப்பு உள்ளது. மூன்று ஆண்டுகளாக ஒவ்வாமை நோய் எதிர்ப்பு சிகிச்சையில் இருக்கிறார்.

    ஹாரிஸ் லேசான கிட்டப்பார்வை கொண்டவர். இதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்து உள்ளார். அவருக்கு 3 வயதாக இருந்தபோது வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய், நுரையீரல் நோய், நரம்பியல் கோளாறுகள், புற்றுநோய் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிரம்ப் தனது உடல்நிலை குறித்த விரிவான தகவல்களை வெளியிட மறுத்து வரும் நிலையில் கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். கமலா ஹாரிசுக்கு முன்பு தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவருக்கு வயது ஆகிவிட்டதாக டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் தனது மருத்துவ அறிக்கையை வெளியிட்டு உள்ளதால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    • நவம்பர் 5 நடக்க உள்ள அமரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
    • நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.

    இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா சீனாவை விட அதிக வரிவிதிப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 நடக்க உள்ள அமரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

    அதன்படி டெட்ராய்ட் நகருக்கு பிரசாரம் சென்ற டிரம்ப் பேசியதாவது, நமது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்குச் சீனா 200 சதவீதம் வரை வரி விதிக்கிறது, பிரேசிலும் அதிக வரி விதிக்கிறது.

    இந்தியா, சீனாவை விட அதிக வரி விதிக்கிறது, அதுவும் சிரித்துக்கொண்டே.. இந்தியா- அமரிக்கா இடையே சிறந்த உறவு இருந்தும், அதுவும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.

    நான் தேர்தலில் வென்றால் [அமெரிக்க பொருட்களுக்கு] அதிக இறக்குமதி வரி விதிக்கும் அதுபோன்ற நாடுகளுக்கு நிகராக அந்நாட்டிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை உயர்த்துவேன் என்று பேசியுள்ளார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

    மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழை பெய்தது.

    அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடந்தபோது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தது.

    இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

    புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த புயலால் ஏற்பட்ட தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால், அவர் முற்றிலும் மாறிவிடுவார்.
    • பிரதமர் மோடி சிறந்தவர், அருமையான மனிதர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டார். இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

    2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது.


    மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது. அவர் என்னுடைய நண்பர். வெளிப்புற தோற்றத்தில் அவர் உங்களது தந்தையை போன்று காணப்படுபவர். அவர் அன்பானவர்.

    ஆனால் இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால், அவர் முற்றிலும் மாறிவிடுவார். இந்தியாவை சிலர் அச்சுறுத்தி கொண்டிருந்த போது, நான் உதவி செய்கிறேன் என நான் மோடியிடம் கூறினேன். அதற்கு மோடி, நான் பார்த்து கொள்கிறேன். தேவையானவற்றை நானே பார்த்து கொள்கிறேன். அவர்களை நூற்றாண்டுகளாக நாங்கள் தோற்கடித்து வருகிறோம் என கூறினார். பிரதமர் மோடி சிறந்தவர், அருமையான மனிதர்.

    தேவைப்படும்போது, எதிரியை நாடு எதிர்கொள்ள வேண்டிய ஒரு கடின சூழலில் ஒரு தலைவராகவும் இருக்க கூடியவர் என்றார்.

    மேலும் 2019-ம் ஆண்டு டெக்சாசின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வின் போது பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்த டிரம்ப், அந்த அரங்கம் நிரம்பிருந்தது. அங்கிருந்தவர்கள் மோடிக்காக ஆரவாரம் செய்வதைப் பார்ப்பது அழகாக இருந்தது என்றார்.

    • அவருடைய பார்வை என்னைத் தூண்டியது.
    • இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார்.

    பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை தனது இரங்கல் செய்தியில் "கூகுளில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசி சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய பார்வை என்னைத் தூண்டியது. அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் மரபை விட்டுச் செல்கிறார்.

    இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • மதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது
    • பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து குழந்தைகள் பாடத்தைக் கவனிக்கின்றனர்.

    அமெரிக்காவில் சேர்ந்த கணக்கு ஆசிரியை மாணவர்கள் கழிவறை செல்ல இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க போனஸ் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவித்த சம்பவம் கண்டனத்தைக் குவித்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த இந்த கொடுமை குறித்து அங்கு பயின்று வந்த சிறுமியின் தாய் சமூக வளைத்ததில் பதிவிட்டதை அடுத்து இந்த விவகாரம் வைரலாகி வருகிறது.

    மதிப்பெண்களைத் தேடி ஓடும் ரேசாக இந்தியா உட்பட உலகம் முழுமைக்கும் கல்வியானது தரம் தாழ்ந்து கிடக்கிறது. அந்த வகையில் சிறுவர்கள் மதிப்பெண்களே முக்கியம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டதால் அந்தமதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது. 

     

    'எனது மகளின் கணக்கு ஆசிரியை ஒரு வினோதமான டாய்லட் பாலிசி வைத்திருக்கிறார். அதன்படி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளியில் குழந்தைகளை பாத்ரூம் போக அவர் அனுமதிக்கிறார், அதன்படி பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து பாடத்தைக் கவனிக்கும் குழந்தைகளுக்கு அவர்அகாடெமிக் பாயிண்ட்ஸ் எனப்படும் குழந்தைகள் படிக்கும் தரத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை போனசாக வழங்குகிறார்' என்று தனது சமுக வலைத்தள பதிவில் சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் இதுகுறித்து பிரின்சிபலுக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பியதற்கு தனது மகள் தன்னிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு அவ்விஷயம் நார்மலைஸ் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    பிரைவசி கருதி தனது மகளின் வயதையும் பள்ளி பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    • நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது
    • லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்

    அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அதிபர் ஜோ பைடன் தடுமாற்றத்தில் இருப்பது விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகி கமலாவை வேட்பாளராக அறிவித்தார்.

    இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலாவுக்கு அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி எதிர் வேட்பாளர் டிரம்பை விட ஆதரவு சற்று அதிகமாவே உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகிறன. சியானா கல்லூரி மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய தேசிய கருத்துக்கணிப்பில் ஹாரிஸ் 49 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை ஆதரவு பெற்று டிரம்பை விட முன்னிலையில் உள்ளார்.

    சமீபத்தில் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது. தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா, லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து தொகுப்பாளர் ஸ்டெப்பான் கால்பெர்ட்டுடன் விவாதித்துள்ளார்.

    அந்த நிகழ்ச்சியில் போது மில்லர் ஹை லைப் என்ற பீர் பானம் கமலாவுக்கு வழங்கப்பட்டது. கடைசியாக பேஸ் பால் போட்டியின் பொது குடித்தது என கூறியவரே அந்த டின் கேன் பாட்டிலைக் கையில் எடுத்த கமலா லாவகாக உடைத்து சீர்ஸ் சொல்லி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார்.
    • ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த நசீர் அகமத் தவ்ஹெடி (வயது 27) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு வந்தார். ஓக்லஹோமா நகரில் வசித்து வந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்த மாதம் நடக்கும் தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார். ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார். மேலும் மனைவி மற்றும் குழந்தையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார் என்றனர்.

    ×