என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதிபெற்றார்.

    இன்று நடந்த 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் தேதி நடைபெறும் அடுத்த சுற்றில் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்டியூக் உடன் மோதுகிறார்.

    • மாதத்திற்கு ஒரு போரை டிரம்ப் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
    • உலக அமைதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து– கம்போடியா, அஜர்பைஜான்–ஆர்மீனியா, ருவாண்டா–காங்கோ, செர்பியா–கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா என மாதத்திற்கு ஒரு போர் வீதம் கடந்த 6 மாதங்களில் 6 போர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

    இதனால் உலக அமைதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

    இந்நிலையில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாட்டுத் தலைவர்கள் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

    இதன் மூலம், டிரம்பை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை இப்போது ஐந்தாக உயர்ந்துள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானும் இஸ்ரேலும் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முன்மொழிந்தன. கம்போடியாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இந்த கோரிக்கையை வைத்தது.

    • அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
    • ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.

    உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் அடுத்த வாரம் ரஷிய அதிபர் புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் புதினை சந்திப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்த சந்திப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக உக்ரைன் - ரஷியா இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சில பிரதேசங்களை விட்டுக்கொடுக்க டிரம்ப் வலியறுத்த உள்ளார்.

    பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தொடங்கிய படையெடுப்பு உக்ரைனில் லட்சகணக்கான கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    போரை நிறுத்துவதற்கான முந்தைய மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இந்த சூழலில், டிரம்ப்-புதின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    2021 ஆம் ஆண்டு ஜெனீவாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் புதினுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் சந்திப்பது இதுவே முதல் முறை.   

    • இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தினார்.
    • டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பைசரன் புல்வெளி சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர்.

    பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்ததாக கூறி மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்பட்ட மோதல் 3 நாட்களுக்கு பின் மே 9 அன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில்தான் மோதலை நிறுத்தியதாக இந்தியா தெரிவித்தது.

    இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தபோது அமெரிக்கா நேரடியாக தலையிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

    சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரூபியோ, டிரம்ப் 'அமைதியின் அதிபர் '. "அதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றபோது, நாங்கள் நேரடியாக தலையிட்டோம். அதிபரால் அங்கு அமைதியை நிலைநாட்ட முடிந்தது" என்று கூறினார்.

    மேலும் கம்போடியா-தாய்லாந்து, அஜர்பைஜான்-ஆர்மீனியா மற்றும் காங்கோ-ருவாண்டாவில் ஏற்பட்ட மோதல்களுக்கு அமைதியைக் கொண்டுவந்தது அமெரிக்காதான் என்றும் ரூபியோ கூறினார்.

    மேலும் டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.  

    முன்னதாக மாதத்திற்கு ஒரு போரை நிறுத்தி வரும் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
    • வெனிசுலா அதிபரை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக அதிபராக உள்ளார்.

    அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது, கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை ரூ.219 கோடியாக உயர்த்தியது.

    இந்தத் தொகை சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ தனது பதவியில் நீடித்து வருகிறார்.

    இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை இரு மடங்காக, அதாவது ரூ.450 கோடியாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் ஜெசிகா மனெய்ரோ உடன் மோதினார்.

    இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் முதல் சுற்றோடு வெளியேறினார்.

    • இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
    • ரஷியாவிடம் இருந்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்?

    ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

    இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் இடம், ரஷியாவிடம் இருந்து சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளும் எண்ணெய் வாங்கும் போது இந்தியாவுக்கு மட்டும் வரி ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த டிரம்ப், "சில மணி நேரம்தான் ஆகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். இரண்டாம் கட்ட தடைகளையும் பார்க்கப் போகிறீர்கள்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக சீனா மீது இரண்டாம் கட்ட வரிகளை அறிவிக்க போவதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியா, சீனா, ரஷியாவை ஓரணியில் நிறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 31 மோடியின் சீனா பயணமும், விரைவில் புதின் இந்தியா வரவிருப்பதும் இதற்கு அச்சாரம் ஆகும். 

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
    • ஆனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.

    அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    • நான் மீண்டும் சொல்கிறேன். அமெரிக்காவிற்கு இந்தியா தேவை, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை.
    • இரு நாடுகளும் உண்மையான நண்பர்களாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில், இந்தியாவு, அமெரிக்காவும் நண்பர்களாக பேசுங்கள் என அமெரிக்க பாடகி மேரி மில்பென் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, மில்பென் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பல சிறு வணிகங்களும் கட்டண இழுபறியில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் உண்மையான நண்பர்களாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    நான் மீண்டும் சொல்கிறேன். அமெரிக்காவிற்கு இந்தியா தேவை, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை. நமது மூலோபாய கூட்டணியை சீர்குலைக்கும் எந்தவொரு கொள்கை திசையும் தவறான திசையாகும். தடிமனான வார்த்தைப் பரிமாற்றம் நம் அனைவரையும் தொந்தரவு செய்கிறது என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே மேரி மில்பென், இந்தியா- அமெரிக்கா உறவுக்கு மிகச்சிறந்த தலைவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய டிரம்ப் ஆட்சேபனை.
    • அமெரிக்கா யுரேனியம் இறக்குமதி செய்கிறதே? என்ற கேள்விக்கு, அது பற்றி தெரியாது என நழுவல்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் புதின் போரை நிறுத்த விரும்பவில்லை.

    இதனால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளிடம், எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்து வருகிறார். அப்படி வாங்கினால் அந்த நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.

    அனால் இந்தியா மற்றும் சீனா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன. இந்தியா அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

    இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், கூடுதலாக கணிசமான வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

    இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம், மற்ற நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என வலியுறத்துகிறீர்கள். ஆனால் அமெரிக்கா யுரேனியம், உரங்களை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு டொனால்டு டிரம்ப் "அது பற்றி ஏதும் எனக்குத் தெரியாது. அதை நான் சரிபார்க்க வேண்டும்" எனத் பதில் அளித்தார்.

    • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பான, தடையற்ற, வரலாற்றி வெற்றி மிக்க தொடராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தற்போதில் இருந்தே தயாராகுவதற்காக பணிக்குழுவை அமைத்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த குழுவின் பணி என்ன? என்பதை முழுமையாக வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.

    "பாதுகாப்பான, தடையில்லாத, வரலாற்று வெற்றி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் அமெரிக்காவிற்கு ஒரு அற்புதமான தருணமாக உருவாகி வருகிறது. இது நம்பமுடியாததாக இருக்கும். இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    2002ஆம் ஆண்டு அமெரிக்கா குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. அதன்பின் 2028 லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்த இருக்கிறது.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட சில போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    • நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
    • விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக விபத்து ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்தது.

    அமெரிக்காவின் வடக்கு அரிசோனாவில் உள்ள நவஜோ நேசனில் மருத்துவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மருத்துவமனையை சேர்ந்தவர்கள், நோயாளி ஒருவரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    பீச்கிராஃப் 300 வகையைச் சேர்ந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது. அப்போது எதிர்பாராத வகையில் விமானம் விபத்துக்குள்ளானது.

    "விபத்து குறித்து அறிந்ததும் மனம் உடைந்தேன். இவர்கள் (மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள்) மற்றவர்களைக் காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்" என நவஜோ நேசன் தலைவர் தெரிவித்துள்ளார்.

    ×