என் மலர்
அமெரிக்கா
- சட்டவிரோத குடிபெயர்த்தோரை கண்டறிய செயல்படும் ஐசிஇ(ICE) நடத்திய குடிவரவு சோதனைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் தெருவில் கூடினர்
- நாளொன்றுக்கு குறைந்தது 3,000 ICE கைதுகளை இலக்காக நிர்ணயித்த டிரம்ப் தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
இந்நிலையில் அமெரிக்காவில் குடிவரவு சோதனை நடவடிக்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டாவது நாளாகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அங்கு 2,000 ராணுவ வீரர்களைக் குவிக்க டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சனிக்கிழமையும் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பரமவுண்ட் நகரில் மத்திய படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்தன.
சட்டவிரோத குடிபெயர்த்தோரை கண்டறிய செயல்படும் ஐசிஇ(ICE) நடத்திய குடிவரவு சோதனைகளை எதிர்த்து நூற்றுக்கணக்கானோர் தெருவில் கூடினர். கூட்டத்தைக் கலைக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
வெள்ளிக்கிழமை நடந்த குடிவரவு நடவடிக்கையில் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் குறைந்தது 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சுமார் 1,000 போராட்டக்காரர்கள் அரசு கட்டடம் வெளியே கூடி, சொத்துக்களைச் சேதப்படுத்தியதுடன், வாகன டயர்களைக் கிழித்து, அதிகாரிகளைத் தாக்கியதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.

பதிவில்லாத புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வெளியேற்றுவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியே இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நடவடிக்கை. இதற்கிடையே நாளொன்றுக்கு குறைந்தது 3,000 ICE கைதுகளை இலக்காக நிர்ணயித்த டிரம்ப் தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிலளித்த அதிபர் டிரம்ப், "கலிபோர்னியாவின் கவர்னர் கேவின் நியூசமும், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரண் பாஸும் தங்கள் வேலையைச் செய்ய முடியாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு கலவரங்கள் மற்றும் கொள்ளையர்கள் பிரச்சனையைச் சரியான முறையில் தீர்க்கும்!" என்று காட்டமாகப் பதிவிட்டார்.

நடந்து வரும் போராட்டங்களை "அமெரிக்காவின் சட்டங்கள் மற்றும் இறையாண்மைக்கு எதிரான கிளர்ச்சி" என்று வெள்ளை மாளிகையின் துணைத் தலைமைப் பணியாளர் ஸ்டீபன் மில்லர் கண்டித்தார்.
- "நான் ஒரு நாள் பிரபலமாவேன், நீங்களே பாருங்கள்" என்று ரென்னா என்னிடம் அடிக்கடி கூறுவாள்.
- தங்கள் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர கூடாது என்றும் ரென்னாவின் தாய் எச்சரித்தார்.
அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் வைரலான 'டஸ்டிங்' சவாலை முயற்சித்த 19 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் அரிசோனாவைச் சேர்ந்த ரென்னா ஓ'ரூர்க். சமூக ஊடகங்களில் அதிக பார்வையாளர்களைப் பெறுவதற்காக 'டஸ்டிங்' மற்றும் 'குரோமிங்' என்றும் அழைக்கப்படும் இந்த சவாலை ரென்னா முயற்சித்தார்.
டஸ்டிங் என்பது கணினி கீபோர்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரேயை உள்ளிழுத்து சுவாசிக்கும் ஒரு சவாலாகும்.
ரென்னா தனது பெற்றோருக்குத் தெரியாமல் ஆன்லைனில் ஏரோசல் கீபோர்டு கிளீனரை ஆர்டர் செய்து இந்த சவாலை முயற்சித்துள்ளார். ஸ்ப்ரேயை சுவாசித்த ரென்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 1 வாரம் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

"நான் ஒரு நாள் பிரபலமாவேன், நீங்களே பாருங்கள்" என்று ரென்னா தன்னிடம் அடிக்கடி கூறுவாள்,ஆனால் அவள் இப்படித் தனது மரணத்தின் மூலம் பிரபலமாவாள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என ரென்னாவின் தந்தை கண் கலங்கி கூறுகிறார்.
இதுபோன்ற ஸ்ப்ரேக்களை வாங்க எந்த அடையாள அட்டையும் தேவையில்லை என்பதால் குழந்தைகளுக்கு கூட இது எளிதில் கிடைக்கிறது. எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தங்கள் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர கூடாது என்றும் ரென்னாவின் தாய் எச்சரித்தார்.
ரசாயனங்களை உள்ளிழுப்பது தற்காலிகமாக போதையை உணரவைக்கும் அதே வேளையில், அது விரைவாக மரணத்திற்கு வழிவகுக்கும். மரணம் பெரும்பாலும் இதய செயலிழப்பு காரணமாக ஏற்படுகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில் இதில் ஈடுபட்டார்.
- அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
அமெரிக்க அரசியலையும், உலகப் பிரபலங்களையும் உலுக்கி வரும் 'எப்ஸ்டீன் கோப்புகள்' விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
உலக பணக்காரரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் இந்தக் கோப்புகளில் இருப்பதாகவும், அதனால்தான் அவை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் எக்ஸ் தளத்தில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் இன்று (ஜூன் 7) அந்த பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், 'எப்ஸ்டீன் கோப்புகள்' குறித்த கேள்விகள் வலுத்துள்ளன.

யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

டொனால்டு டிரம்ப் உடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன்
'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.
இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், "உண்மையைச் சொல்கிறேன்... டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார். அதனால்தான் அந்த ஆவணங்கள் பொதுவில் பகிரப்படவில்லை.
இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், எதிர்காலத்தில் உண்மை வெளிவரும்" என்று நேரடியாக குற்றம்சாட்டினார். ஆனால் அந்த பதிவை அவர் நீக்கியுள்ளது மேலும் சந்தேகங்களேயே எழுப்பியுள்ளது. ஏற்கவே பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் டிரம்ப் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, எலான் மஸ்கின் இந்தக் குற்றச்சாட்டுகளை டிரம்ப் நிராகரித்துள்ளார். "மஸ்க் ஒரு பைத்தியக்காரன்" என்றும், எப்ஸ்டீனின் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். எப்ஸ்டீன் வழக்கு விசாரணைக்கு அதிகாரிகளுக்கு தான் உதவியதாகவும் டிரம்ப் கூறினார்.
- மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டார்.
- சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்தது.
எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட ஒருவருடன் தன்னால் பேச முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் செய்தியாளர் சந்திப்பில் பபேசிய டிரம்ப், தற்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், தற்போது எலோன் மஸ்க்குடன் பேசத் திட்டமிடவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் கூறியிருந்தார்.
டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் மஸ்க் வலுயுறுத்தியுள்ளார்.
- தான் உதவியிராவிட்டால் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
- சிறுமிகள் பாலியல் துஷ்ப்ரயோக நெட்வொர்க் தொடர்பான வழக்கில் டிரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.
அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை துறந்த எலான் மஸ்க், டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தான் உதவியிராவிட்டால் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரிதிநிதியாக புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?" என X தளத்தில் எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதன்மூலம் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளாரா என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.
இதற்கிடையே எப்ஸ்ட்டீன் கோப்புகள் எனப்படும், தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமிகள் பாலியல் துஷ்ப்ரயோக நெட்வொர்க் தொடர்பான வழக்கில் டிரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். டிரம்ப் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.
- டிரம்ப் தேர்தல் பிரசாரத்துக்கு எலான் மஸ்க் சுமார் 291 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நன்கொடையாக வழங்கினார்.
- பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமிகள் பாலியல் துஷ்ப்ரயோக நெட்வொர்க் தொடர்பான வழக்கில் டிரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார்.
கடந்த வருட இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று 2 வது முறையாக இந்த வருட ஜனவரியில் பதவி ஏற்றார். அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் பணக்காரருமான எலான் மஸ்க் என்று அரசியல் நோக்கர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
டிரம்ப் தேர்தல் பிரசாரத்துக்கு எலான் மஸ்க் சுமார் 291 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நன்கொடையாக வழங்கினார். முன்னதாக டிரம்ப் உடைய குடியரசு கட்சிக்கு எதிராக ஜனநாய கட்சியின் பக்கம் நின்றவர்தான் மஸ்க். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது தேர்தலின் போக்கை புரட்டிப் போட்டது.
டிரம்ப் உடைய தன்னபிக்கையை புகழ்ந்து எலான் மஸ்க் குடியரசு கட்சி பக்கம் சாய்ந்தார். டிரம்ப்பின் நெருங்கிய நண்பராவே மாறிய மஸ்க் அவருக்காக பிரச்சாரங்களில் ஈடுபட்டார். வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் முன்பிருந்தே நாள் ஒன்றுக்கு ஒரு அதிர்ஷ்டசாலிலுக்கு 1 மில்லியன் டாலர் என வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார் மஸ்க். இவை டிரம்ப் வெற்றியில் நிச்சயம் பெரும்பங்கு வகித்தன.

வெற்றிக்கு பின் அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் அரசு செயல்திறன் துறை என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு மஸ்க்கை தலைவராகினார். இந்த துறை அரசின் தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அவரை குறைக்க ஆலோசனை வழங்கியது.
அதன் ஆலோசனையின் பேரில் உலக அமைப்புகளுக்கான பல்வேறு நிதி நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான அமெரிக்க அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு டிரம்ப் உடைய மூளையாக செயல்பட்ட எலான் மஸ்க் சமீக காலமாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார். திடீரென அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை துறந்தார். தற்போது டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

முக்கியாமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் விமர்சித்துள்ளார். செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் கூறுகிறார்.
வளர்ந்த கன்று மார்பில் பாய்வது போல் தன்னை விமர்சித்த மஸ்க்குக்கு எதிராக அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் நேற்று டெஸ்லா பங்குகள் 14 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, சந்தை மதிப்பில் சுமார் 150 பில்லியன் டாலர்களை இழந்தன.
இதற்கிடையே எப்ஸ்ட்டீன் கோப்புகள் எனப்படும், தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமிகள் பாலியல் துஷ்ப்ரயோக நெட்வொர்க் தொடர்பான வழக்கில் டிரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். டிரம்ப் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.
- பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டார்.
- டிரம்ப் வரி விதிப்புக்கு எதிராக சீனாவும் வரி விதித்தது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சீனாவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டொலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். டிரம்ப் 2ஆவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் ஜி ஜின்பிங் உடன் முதன்முறையாக பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், டொனால்டு டிரம்ப் தங்களுக்கு நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் டொனால்டு டிரம்பும், ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள எதிர்மறையான நடவடிக்கைகளைத் திரும்பப் பெற டிரம்பிடம் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
- தேச பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
- அமெரிக்காவுக்குள் 7 நாட்டினருக்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிர தமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், மியான்மர் , சாட், காங்கோ, இகுவடோரியல் கினியா, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்கு வர அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த தடை உத்தரவு வருகிற 9-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பயணத் தடையை அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டார்.
அதில் அவர் கூறும்போது, கொலராடோவில் நடந்த சமீபத்திய தாக்குதல், முறையாக சரிபார்க்கப்படாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினரின் தீவிர ஆபத்துகளை விளக்குகிறது. இதனால் பல நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளேன். வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது என்றார்.
மேலும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகேல் ஜாக்சன் கூறும் போது, அமெரிக்காவுக்கு மிக அதிகமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நாடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த வகையில் 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
நமக்கு பிரச்சினையை விளைவிக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களிடம் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பேன் என்று நான் வாக்குறுதி அளித்து இருந்தேன். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன் என்றார்.
இதற்கிடையே ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர் விசாக்களை கட்டுப்படுத்தும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
- புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு அவர் கடத்தி வந்துள்ளார்.
- இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனர் காஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியான் என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவரது காதலரும் சீனாவில் ஆராய்ச்சியாளருமான ஜூன்யோங் லியு, தனது காதலியை பார்க்க அமெரிக்காவுக்கு வந்து உள்ளார்.
அப்போது அவர் புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளார். இந்த நோய்க்கிருமியை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த திட்டமிட்டு இருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கிருமி விவசாய பயங்கரவாத ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புசேரியம் கிராமினேரமின் நச்சுகள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.
இதுகுறித்து எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் கூறியதாவது:-
யுன்கிங் ஜியான் என்பவர் தான் பணிபுரியும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக புசாரியம் கிராமிநேரம் என்ற ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தி உள்ளார். இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கோடிக் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திவிடும். ஜியானின் காதலன் சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அங்கு அவர் இந்த நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார்.
முதலில் குற்றச்சாட்டை மறுத்த அவர் பின்னர் அமெரிக்காவுக்கு நோய்க் கிருமியை கடத்தியதை ஒப்புக்கொண்டார். யுன்கிங் ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்துள்ளார். அவர் இந்த நோய்க்கிருமி குறித்த ஆராய்ச்சிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்ற ஆதாரங்கள் உள்ளன என்றார்.
சீன ஆராய்ச்சியாளர்கள் மீது சதித்திட்டம், அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், தவறான கருத்துக்களை வெளியிட்டது மற்றும் விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள
- ஸ்பெல்லிங் பீ இறுதிப் போட்டியில் 8 பேர் பங்கேற்றனர்.
- இதில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
வாஷிங்டன்:
உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ எனப்படும் சொற்களைச் சரியாக உச்சரிக்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்பெல்லிங் பீ போட்டியின் நூற்றாண்டு விழா.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் தகுதிச்சுற்றுக்கு 243 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2025 இறுதிப்போட்டி நடந்தது.
இந்தப் போட்டியின் இறுதியில் டெக்சாசைச் சேர்ந்த இந்திய வம்சாவளியின் 13 வயது மாணவர் பைசான் ஜகி சாம்பியன் பட்டம் வென்றார்.
வெற்றி பெற்ற பைசான் ஜகிக்கு 50,000 டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பைசான் ஜகி கடந்தாண்டு நடந்த போட்டியில், சிறிய தவறால் சாம்பியன் பட்டத்தை இழந்து இரண்டாம் இடம் பிடித்தார்.
- காசாவைத் தாக்க ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான எல்பிட் சிஸ்டம்ஸுடன் எம்ஐடி கூட்டணி வைத்துள்ளது.
- மேகாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து அனுப்பப்பட்டனர்.
பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒடுக்கும் முயற்சியை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்திய மாணவி ஒருவர் இஸ்ரேலுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார்.
புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி, பாலஸ்தீனத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், PG வகுப்பு தலைவரான மேகா வெமுரி, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்துடன் தொடர்ந்து உறவுகளைக் கொண்டுள்ளதை KANDITHAAR .
அவர் கூறியதாவது, "இஸ்ரேல் பாலஸ்தீனத்தை பூமியிலிருந்து துடைத்தெறிய முயற்சிக்கிறது. எம்ஐடி அதன் ஒரு பகுதியாக இருப்பது வெட்கக்கேடானது. நாங்கள் பட்டம் பெற்று எங்கள் வாழ்க்கையைத் தொடரத் தயாராகி வரும் நிலையில், காசாவில் எந்தப் பல்கலைக்கழகமும் இல்லாத சூழல் உருவாகி உள்ளது.
காசாவைத் தாக்க ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான எல்பிட் சிஸ்டம்ஸுடனான எம்ஐடியின் கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் அழுத்தம் கொடுத்தோம்.
எம்ஐடி ஆராய்ச்சி உறவுகளைக் கொண்ட ஒரே வெளிநாட்டு இராணுவம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மட்டுமே" என்று அவர் சுட்டிக்காட்டினார். அவரின் உரைக்கு மாணவர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் எல்பிட்டின் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பாலஸ்தீனத்தை ஆதரித்து MIT பற்றி மேகா கூறிய கருத்துக்களால் பல்கலைக்கழக வேந்தர் மெலிசா நோபல்ஸ் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. மேகாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுநாள் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தடை விதிப்பதாக மெகா வேமூரிக்கு நிர்வாகம் சார்பில் இமெயில் அனுப்பப்பட்டது.
- பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்
- உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம். இது அமெரிக்காவில் இரும்பு தொழிலை மேலும் பாதுகாக்கும்.
இன்று இங்குள்ள ஆண்களும் பெண்களும் அமெரிக்காவை சக்திவாய்ந்ததாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள். இப்போது, இறுதியாக உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.






