என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • நவம்பர் 5 நடக்க உள்ள அமரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
    • நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.

    இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா சீனாவை விட அதிக வரிவிதிப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 நடக்க உள்ள அமரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் அதற்கான பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

    அதன்படி டெட்ராய்ட் நகருக்கு பிரசாரம் சென்ற டிரம்ப் பேசியதாவது, நமது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்குச் சீனா 200 சதவீதம் வரை வரி விதிக்கிறது, பிரேசிலும் அதிக வரி விதிக்கிறது.

    இந்தியா, சீனாவை விட அதிக வரி விதிக்கிறது, அதுவும் சிரித்துக்கொண்டே.. இந்தியா- அமரிக்கா இடையே சிறந்த உறவு இருந்தும், அதுவும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கும் இருந்தும் அவர்கள் அதிக இறக்குமதி வரியை விதிக்கின்றனர்.

    நான் தேர்தலில் வென்றால் [அமெரிக்க பொருட்களுக்கு] அதிக இறக்குமதி வரி விதிக்கும் அதுபோன்ற நாடுகளுக்கு நிகராக அந்நாட்டிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை உயர்த்துவேன் என்று பேசியுள்ளார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

    மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழை பெய்தது.

    அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடந்தபோது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தது.

    இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன.

    புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த புயலால் ஏற்பட்ட தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால், அவர் முற்றிலும் மாறிவிடுவார்.
    • பிரதமர் மோடி சிறந்தவர், அருமையான மனிதர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டார். இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

    2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது.


    மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது. அவர் என்னுடைய நண்பர். வெளிப்புற தோற்றத்தில் அவர் உங்களது தந்தையை போன்று காணப்படுபவர். அவர் அன்பானவர்.

    ஆனால் இந்தியாவை யாராவது அச்சுறுத்தினால், அவர் முற்றிலும் மாறிவிடுவார். இந்தியாவை சிலர் அச்சுறுத்தி கொண்டிருந்த போது, நான் உதவி செய்கிறேன் என நான் மோடியிடம் கூறினேன். அதற்கு மோடி, நான் பார்த்து கொள்கிறேன். தேவையானவற்றை நானே பார்த்து கொள்கிறேன். அவர்களை நூற்றாண்டுகளாக நாங்கள் தோற்கடித்து வருகிறோம் என கூறினார். பிரதமர் மோடி சிறந்தவர், அருமையான மனிதர்.

    தேவைப்படும்போது, எதிரியை நாடு எதிர்கொள்ள வேண்டிய ஒரு கடின சூழலில் ஒரு தலைவராகவும் இருக்க கூடியவர் என்றார்.

    மேலும் 2019-ம் ஆண்டு டெக்சாசின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வின் போது பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்த டிரம்ப், அந்த அரங்கம் நிரம்பிருந்தது. அங்கிருந்தவர்கள் மோடிக்காக ஆரவாரம் செய்வதைப் பார்ப்பது அழகாக இருந்தது என்றார்.

    • அவருடைய பார்வை என்னைத் தூண்டியது.
    • இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார்.

    பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை தனது இரங்கல் செய்தியில் "கூகுளில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசி சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய பார்வை என்னைத் தூண்டியது. அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் மரபை விட்டுச் செல்கிறார்.

    இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • மதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது
    • பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து குழந்தைகள் பாடத்தைக் கவனிக்கின்றனர்.

    அமெரிக்காவில் சேர்ந்த கணக்கு ஆசிரியை மாணவர்கள் கழிவறை செல்ல இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க போனஸ் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவித்த சம்பவம் கண்டனத்தைக் குவித்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த இந்த கொடுமை குறித்து அங்கு பயின்று வந்த சிறுமியின் தாய் சமூக வளைத்ததில் பதிவிட்டதை அடுத்து இந்த விவகாரம் வைரலாகி வருகிறது.

    மதிப்பெண்களைத் தேடி ஓடும் ரேசாக இந்தியா உட்பட உலகம் முழுமைக்கும் கல்வியானது தரம் தாழ்ந்து கிடக்கிறது. அந்த வகையில் சிறுவர்கள் மதிப்பெண்களே முக்கியம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டதால் அந்தமதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது. 

     

    'எனது மகளின் கணக்கு ஆசிரியை ஒரு வினோதமான டாய்லட் பாலிசி வைத்திருக்கிறார். அதன்படி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளியில் குழந்தைகளை பாத்ரூம் போக அவர் அனுமதிக்கிறார், அதன்படி பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து பாடத்தைக் கவனிக்கும் குழந்தைகளுக்கு அவர்அகாடெமிக் பாயிண்ட்ஸ் எனப்படும் குழந்தைகள் படிக்கும் தரத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை போனசாக வழங்குகிறார்' என்று தனது சமுக வலைத்தள பதிவில் சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் இதுகுறித்து பிரின்சிபலுக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பியதற்கு தனது மகள் தன்னிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு அவ்விஷயம் நார்மலைஸ் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    பிரைவசி கருதி தனது மகளின் வயதையும் பள்ளி பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    • நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது
    • லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்

    அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அதிபர் ஜோ பைடன் தடுமாற்றத்தில் இருப்பது விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகி கமலாவை வேட்பாளராக அறிவித்தார்.

    இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலாவுக்கு அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி எதிர் வேட்பாளர் டிரம்பை விட ஆதரவு சற்று அதிகமாவே உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகிறன. சியானா கல்லூரி மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய தேசிய கருத்துக்கணிப்பில் ஹாரிஸ் 49 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை ஆதரவு பெற்று டிரம்பை விட முன்னிலையில் உள்ளார்.

    சமீபத்தில் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது. தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா, லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து தொகுப்பாளர் ஸ்டெப்பான் கால்பெர்ட்டுடன் விவாதித்துள்ளார்.

    அந்த நிகழ்ச்சியில் போது மில்லர் ஹை லைப் என்ற பீர் பானம் கமலாவுக்கு வழங்கப்பட்டது. கடைசியாக பேஸ் பால் போட்டியின் பொது குடித்தது என கூறியவரே அந்த டின் கேன் பாட்டிலைக் கையில் எடுத்த கமலா லாவகாக உடைத்து சீர்ஸ் சொல்லி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார்.
    • ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த நசீர் அகமத் தவ்ஹெடி (வயது 27) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு வந்தார். ஓக்லஹோமா நகரில் வசித்து வந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்த மாதம் நடக்கும் தேர்தல் நாளில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார். ஏ.கே.47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார். மேலும் மனைவி மற்றும் குழந்தையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார் என்றனர்.

    • அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும்.
    • புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.

    மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும்.

    அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    டாம்பா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவினரை நஸ்ரல்லாவோடு சேர்த்து கொன்றிருக்கிறோம் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்
    • இஸ்ரேல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவை தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது

    ஹிஸ்புல்லா கொலை

    ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவ்வமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் தற்போது அடுத்த தலைவராக ஆக இருந்த வரையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    மேலும் ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவினரை நஸ்ரல்லாவோடு சேர்த்து கொன்றிருக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார் . இதற்கிடையே கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஒரே இரவில் சரமாரியாக ஏவியது மத்திய கிழக்கு முழுமைக்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அன்டோனியோ குட்ரஸ்

    இந்நிலையில் லெபனானில் முழு தீவிரமான போர் உருவாக உள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் வைத்து நேற்றைய தினம் பேசிய அவர், மத்திய கிழக்கு சூழல் எந்நேரமும் வெடிக்காதிருக்கும் வெடிபொருள் நிரம்பிய பீப்பாய்யை தாற்காலிகமாக தடுத்து வைத்திருப்பது போன்றது, இந்த பிரச்சனை இவ்வாறு பெரிதாகப் பரவும் என்று பல மாதங்களாக நான் எச்சரித்தேன்.

    தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு முனையில்[பாலஸ்தீனம்] விஷயங்கள் கொதித்துக்கொண்டிருக்கிறது. லெபனான் மீதான தாக்குதல் மொத்த பகுதிகளையும் அச்சுறுத்தலில் தள்ளியுள்ளது. கடந்த சில நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே புளூ லைனில் [லெபனான் - இஸ்ரேல் எல்லை] சண்டை நடந்துள்ளது.

    இது ஐநா பாதுகாப்பு அமைப்பின் உடன்படிக்கைகள் 1701 மற்றும் 1559 ஐ மீறிய செயலாகும். தலைநகர் பெய்ரூட் உட்பட லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 1500 பேர் வரை பலியாகியுள்ளனர். லெபனான் தரவுகளின்படி 10 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதில் 3 லட்சம் பேர் சிரியாவுக்குகள் சென்றுள்ளனர்.

    ஏற்கனவே கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் முழு தீவிரமான போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை நிறுத்துவதற்கான நேரமும் உள்ளது. எல்லா நாடுகளினது இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

    மேலும் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொடுங்கனவாக மாறியுள்ள அட்டூழியங்கள் இரண்டாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஐநாவின் நிவாரண உதவிகள் வழங்கும் [UNRWA] வை தடுக்க இஸ்ரேல் கொண்டுவர திட்டமிட்டிருக்கும் புதிய சட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால் இஸ்ரேல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவைதங்கள்  நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது. ஐநாவின் நிவாரண உதவிகளை தடுத்து நிறுத்தும் புதிய இரண்டு மசோதாக்கள் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    எச்சரிக்கை

    இதற்கிடையே இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

    தற்போது கிர்யாத்[Kiryat], ஷமோனா [Shmona], மெடுலா[Metula] உள்ளிட்ட பகுதிகளுடன் சேர்ந்து வடக்கு இஸ்ரேலில் துறைமுக நகரமாகி ஹைபா மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிபுல்லா 85 ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.  

    • பிரச்சாரக் கூட்டத்தில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்
    • அமரிக்க தேர்தலில் இஸ்ரேல் பிரச்சனை முக்கிய தாக்கத்தை செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஒரு வருடமாக பாலஸ்தீன நகரங்களான காசா, ராஃபா உள்ளிட்டவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி சுமார் 41, 500 பேரை கொன்று குவித்துள்ளது. மேலும் லெபனான் மீது தாக்குதல், ஈரான் பதிலடி என மத்திய கிழக்கு முழுமைக்கும் போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப், தான் மற்றும் அதிகாரத்தில் இருந்திருந்தால் அக்டோபர் 7 தாக்குதல் நடந்தே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் பிரச்சாரக் கூட்டத்தில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், இந்த நாளில் [அக்டோபர் 7] நடந்த கொடுங்கனவை நம்மால் [அமெரிக்கர்களால்] மறக்கவே முடியாது, நான் அதிபராக இருந்திருந்தால் இந்த தாக்குதல் நடந்தே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

     

    முன்னதாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் அணு சக்தி நிலையங்களை முதலில் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் இந்த விஷயத்தில் முற்றிலும் தவறாக இஸ்ரேலை வழிநடத்தி வருவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

    அமரிக்க தேர்தலில் இஸ்ரேல் பிரச்சனை முக்கிய தாக்கத்தை செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமைதி உடன்படிக்கையை ஏற்காமல் இருப்பது அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுதத்தானோ என்று ஜோ பைடனும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் மக்கள் தொகையில் சுமார் 7.5 மில்லயன் மக்கள் யூதர்கள் ஆவர். இவர்களில் வாக்குரிமை பெற்றவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே கடந்த தேர்தலில் டிரம்பை ஆதரித்தனர். 65 சதவீதம் பேர் ஆளும் ஜனநாயக கட்சிக்கே ஆதரவளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை பிரவுசிங் ஹிஸ்டரி மூலம் தெரிந்துகொண்டேன்.
    • அவரின் சாம்பலை வீட்டுத் தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன்.

    புத்தகம்

    உயிரோடு இருக்கும்போது தனக்கு துரோகம் செய்த கணவனின் சாம்பலை சாப்பிட்டதாக கனேடிய எழுத்தாளர் தனது சுயசரிதையில் எழுதியுள்ள சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் கனேடிய எழுத்தாளர் ஜெசிகா வைட் [Jessica Waite] இறந்த பாஸ்டர்ட்ஸ்கான ஒரு விதவையின் வழிகாட்டி [A Widow's Guide to Dead Bastards] என்ற பெயரில் எழுதியுள்ள அவரது memoir வகை சுயசரிதை நினைவுக் குறிப்பு புத்தகம் சமீபத்தில் வெளியானது.

     

    அதில் தனது கணவன் சீன் வைட் [Sean Waite] தன்னை ஏமாற்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது, அதை தான் கண்டுபிடித்தது, அவர் கடந்த 2015 இல் இறந்தபிறகு நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டில் டெக்சாஸ்-கு வேலை நிமித்தமாக சென்ற கணவர் உயிரிழந்தார்.

     பிரவுசிங் ஹிஸ்டரி

    அவரது உடல் எங்கிருக்கிறது என்பது பற்றி கேட்க ஹவுஸ்டன்[Houston] நகர மருத்துவமனையில் அலைபேசி எண்ணை பற்றி தேடுவதற்காக எனது கணவரின் ஐ- பாட் -ஐ எடுத்துக் பார்த்தேன். ஹவுஸ்டன் என்று தேடியதும் அவரது பிரவுசிங் ஹிஸ்டரியில் ஹவுஸ்தண் எஸ்கார்ட்ஸ் [escorts][பாலியல் துணைகள்] பற்றி எக்கச்சக்கமான விசயங்கள் இருந்தது.

    பல்வேறு இடங்களில் உள்ள எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை தெரிந்துகொண்டேன். அதன்மூலம் எனது கணவன் பல் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாக இருந்ததையும் கண்டுபிடித்தேன்.

     

    எஸ்கார்ட் 

    ஆபீசில் வேலை இருக்கிறது வீட்டுக்கு வர நேரமாகும் என்று என்னுடன் கூறிவந்த அவர் அங்கு உட்கார்ந்து நூற்றுக்கணக்கில் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்த்து அதை சீரான வரிசையில் போல்டர்கள் போட்டு சேமித்து வைத்துள்ளார். எஸ்கார்ட் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கென்றே கொலோராடோவில் [Colorado] அபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தும் எனக்கு தெரியவந்தது.

    சாம்பல் 

    அவர் இறந்த துக்கம் ஒருபுறம், அவரை பற்றி தெரிந்துகொண்டதால் ஏற்பட்ட கோபமும் விரக்தியும் ஒருபுறம் என்று நான் மிகுந்த மன சஞ்சலத்தில் இருந்தேன். எனவே இறுதிச் சடங்கு முடிந்தவுடன் என்னிடம் தரப்பட்ட அவரது உடலின் சாம்பலை வீட்டுக்கு  வந்து தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன். எனது ஆத்திரம் அடங்கவில்லை. எனவே மேற்கொண்டு அந்த சாம்பலை சாப்பிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

     

    சுவை 

    மேலும் அதன் சுவை எப்படி இருந்தது என்று விலாவரியாக அந்த புத்தக்த்தில் எழுதியுள்ளார். அதாவது, கணவரின் சாம்பல் பேக்கிங் பவுடரை விட சொசொரப்பாகவும், உப்பை விட தூசியாகவும் இருந்தது. எனது நாக்குக் கீழ் சுரந்த உமிழ்நீரில் கலந்த சாம்பலை நான் விழுங்கினேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது புதிய துணையை தான் தேடிக்கொண்டாலும், உயிரிழந்த கணவரை நினைக்காத நாளில்லை என்று தேர்விற்கும் ஜெசிகா, தனது உடலில் ஒரு பாகம் காணாமல் போனது போல் உணர்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    • தலையை சற்று அசைத்ததால் அவரது காதில் குண்டு உரசி நூலிழையில் உயிர் தப்பினார்
    • "மிகவும் எளிமையான செய்தியை வழங்க இங்கு திரும்பி வந்துள்ளேன்

    அதிபர் தேர்தல் 

    உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராகக் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

     பென்சில்வேனியா துப்பாக்கிசூடு

    தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப் மீது கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. முதலாவதாக கடந்த ஜீலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பட்லர் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த டிரம்ப் மீது தாமஸ் குரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அப்போது தலையை சற்று அசைத்ததால் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காதில் குண்டு உரசி காயம் ஏற்பட்டுள்ளது.

     

    தாமஸ் குரூக்ஸ் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மற்றொரு கொலை முயற்சி நடந்தது. ஆனால் அதில் இருந்தும் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் முதல் முதலில் பென்சில்வேனியா தன்மீது துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் டிரம்ப் தற்போது மீண்டும் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார்.

     

    எலான் மஸ்க் விஜயம்

    அவரோடு தொழிலதிபர் எலான் மஸ்கும் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் இந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். வெற்றி பெற்றால் மஸ்க்குக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் தருவேன் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்த இடத்துக்கே மீண்டும் திரும்பியுள்ள டிரம்ப் அங்கு வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

     

    செய்தி 

    அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "மிகவும் எளிமையான செய்தியை வழங்க பட்லருக்கு (Butler) திரும்பி வந்துள்ளேன், நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற போகிறோம், நாம் தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்பது தான் அந்த செய்தி.

    இங்கு என்மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் என்னையும் , உருவாக இருக்கும் மிகப்பெரிய இயக்கத்தையும் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தார்" என்று பேசியுள்ளார்.

    மேலும் இந்த கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், ஜனநாயக கட்சியினர் அமெரிக்க மக்களிடம் இருந்து, பேச்சுரிமையையும், ஆயுதம் வைத்து இருப்பதற்கான உரிமையையும் பறிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

    ×