என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
    • ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது.

    முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து, ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்ட்டானது.

    311 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய நான்காம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், இந்திய கேப்டன் சுப்மன் கில் நடப்பு தொடரில் இதுவரை 3 சதம், ஒரு அரை சதம் உள்பட 697 ரன்கள் சேர்த்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த விராட் கோலியை (2016-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 655 ரன்) பின்னுக்குத் தள்ளினார்.

    1978-79-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்ததே இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்சமாகும். அவரது சாதனையும் சுப்மன் கில் தகர்த்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்கள் குவித்தது.
    • பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 141 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடை 141 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 94 ரன்னும், ஜாக் கிராலே 84 ரன்னும், ஒல்லி போப் 71 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

    அடுத்து கே.எல்.ராகுலுடன் கேப்டன் சுப்மன் கில் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 137 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    இறுதி நாளில் இந்திய அணி நிதானமாக ஆடி போட்டியை டிரா செய்ய முனையும். இங்கிலாந்து இந்தியாவின் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முனையும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 544 ரன்கள் குவித்தது.
    • ஜோ ரூட் சிறப்பாக ஆடி 150 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பென் டக்கெட் 94 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஒல்லி போப் அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 3 ரன்னில் அவுட்டானார்.

    5வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தது. அரை சதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னில் ரிட்டயர் ஹர்ட் ஆனார். சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களைக் குவித்துள்ளது. இதன்மூலம் 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கம்போஜ், பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • கிரிக்கெட் வெறும் ஒரு விளையாட்டு அல்ல, மாறாக அது ஒரு உணர்வும்கூட.
    • இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். அதன்பின் அவருடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டார்.

    இதுதொடர்பாக, அவர் கூறுகையில், நம் இரு நாடுகளுக்கும் கிரிக்கெட் என்பது வெறும் ஒரு விளையாட்டு அல்ல, மாறாக அது ஒரு உணர்வும்கூட. நமது உறவுகளுக்கு அது மிகப்பெரிய உருவகமுமாக உள்ளது. சில நேரங்களில் ஒரு 'ஸ்விங்' மற்றும் ஒரு 'மிஸ்' இருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் நேராக (ஸ்ட்ரெயிட் பேட்) விளையாடுகிறோம். அதிக ரன்கள், உறுதியான கூட்டணியை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் இந்த ஒப்பீடு செய்தியாளர் சந்திப்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    முன்னதாக, பங்கிங்காம் தெரு கிரிக்கெட் கிளப் வீரர்களுடன் மோடி மற்றும் ஸ்டார்மர் இருவரும் கலந்துரையாடினர்.

    பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் எடுத்தனர்.

    இந்திய அணியின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஆனாலும், காயத்தைப் பொருட்படுத்தாத ரிஷப் பண்ட் களமிறங்கி 2 சிக்சர் உட்பட 54 ரன்கள் அடித்து அசத்தினார்.

    இந்நிலையில், இந்த இன்னிங்சில் அடித்த அரைசதத்தையும் சேர்த்து ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் இதுவரை 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் (8 அரைசதங்கள்) வாழ்நாள் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    • பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார்.
    • இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

    லண்டன்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்நிலையில், சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை மன்னர் சார்லஸ் வரவேற்றார். அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.

    சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் தொடக்கி வைத்த "Ek Ped Maa Ke Naam" திட்டத்தால் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், கே.எல்.ராகுல் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 83 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் காலில் அடிபட்டு வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 27 ரன்னில் அவுட்டானார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர்.

    இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால் ரன்ரேட் 5க்கும் அதிகமாக இருந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பென் டக்கெட் 94 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா, கம்போஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
    • வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும்.

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும். வர்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் அதிக பலன் கிடைக்கும். பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
    • ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும் அவுட்டாகினர்.
    • கவாஸ்கரின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது..

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 49.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    அதாவது, வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த 2வது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்குமுன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது அவரது சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

    • இரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கியது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும், லார்ட்சில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்றன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் கருண் நாயர், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சாய் சுதர்சன், அனில் கம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்குர் இடம்பிடித்துள்ளனர்.

    • 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.
    • நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.

    பிரிட்டன் போக்குவரத்து நிறுவனமான கே.என்.பி லாஜிஸ்டிக்ஸ் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.

    இந்த நிறுவனம் சுமார் 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.

    இந்நிலையில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது நிறுவனக் கணக்கிற்கு பலவீனமான கடவுச்சொல்லை அமைத்தபோது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

    அகிரா என்ற சைபர் கும்பல் இந்தக் கடவுச்சொல்லை எளிதாக யூகித்து நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.

    அதன் பிறகு, ஊழியர்கள் பயன்படுத்த முடியாத வகையில் நிறுவனத்தின் அனைத்து தரவையும் முடக்கினர். இந்தத் தரவை மீண்டும் அணுக, அவர்களிடம் பணம் கேட்கப்பட்டது.

    ஆனால் நிறுவனம், கொடுக்க போதுமான பணம் இல்லாததால் நிறுவனம் இறுதியில் மூடப்பட்டது. அதன் 700 ஊழியர்கள் வேலை இழந்தனர்.

    பிரிட்டனில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.   

    ×