என் மலர்
நீங்கள் தேடியது "மன்னர் 3ம் சார்லஸ்"
- பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார்.
- இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
லண்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை மன்னர் சார்லஸ் வரவேற்றார். அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் தொடக்கி வைத்த "Ek Ped Maa Ke Naam" திட்டத்தால் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
- மன்னர் 3ம் சார்லசுக்கும், அவரது மனைவி அரசி கமிலாவிற்கும் நேற்று முடிசூட்டப்பட்டது.
- மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார்.
ஆனால் அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மன்னர் 3ம் சார்லசுக்கும், அவரது மனைவி அரசி கமிலாவிற்கும் நேற்று முடிசூட்டப்பட்டது. இந்த விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் அரசி கமிலாவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அவர்களின் முடிசூட்டு விழாவிற்கு அன்பான வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியா-இங்கிலாந்து உறவு மேலும் வலுவடையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
- இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
புதுடெல்லி:
இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இங்கிலாந்து மற்றும் இந்தியா உறவு குறித்து பிரதமர் மோடி இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகள் இடையிலான வரலாற்று தொடர்பு குறித்தும், பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையே உள்ள ஆழமான ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினர். இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நீண்டகாலமாக தன்னை ஈடுபடுத்தி, திட்டங்களை செயல்படுத்தி வரும் மன்னர் சார்லசை பாராட்டிய பிரதமர் மோடி,
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் பசுமை வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட இந்தியாவின் முன்முயற்சிகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். மன்னர் சார்லசின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரதமர் மோடி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.






