பிரிட்டன் மன்னருக்கு மரக்கன்று பரிசளித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரிட்டன் மன்னருக்கு மரக்கன்று பரிசளித்த பிரதமர் மோடி
Published on

லண்டன்:

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை மன்னர் சார்லஸ் வரவேற்றார். அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.

சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் தொடக்கி வைத்த "Ek Ped Maa Ke Naam" திட்டத்தால் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com