என் மலர்
கிரிக்கெட் (Cricket)

4வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு
- இரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கியது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும், லார்ட்சில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்றன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் கருண் நாயர், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சாய் சுதர்சன், அனில் கம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்குர் இடம்பிடித்துள்ளனர்.






