என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடம்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    லண்டன்:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இந்நிலையில், ஜோ ரூட், தெண்டுல்கரை சீக்கிரம் முந்தி விடுவார் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ரூட், தெண்டுல்கரின் சாதனையை நிச்சயம் முறியடிப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி நிறைய ரன்கள் குவிப்பார். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. எப்படியும் இன்னும் 6 ஆண்டு விளையாடுவார். அனேகமாக மேலும் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் எடுப்பார். 40 வயது வரை ஜோ ரூட் விளையாடும் போது டெஸ்டில் 18 ஆயிரம் ரன்கள் எடுத்து இருப்பார் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
    • இந்திய அணியினரின் சிறந்த பேட்டிங்கால் இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. அந்த டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டின் வலது கால் பாதத்தில் தாக்கியது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும், பேட்டிங் செய்ய களமிறங்கிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அவுட்டானார். காயம் காரணமாக 5-வது டெஸ்டில் இருந்து ரிஷப் விலகினார்.

    இதுபோல, இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்டில் பீல்டிங் செய்தபோது இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் இடது தோளில் காயமடைந்தார். அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் ஒற்றை கையுடன் பேட் செய்ய களமிறங்கினார்.

    ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்சின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்தன.

    இதற்கிடையே, ரிஷப் பண்ட் தனது சமூக வலைத்தளத்தில், வோக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கிய போட்டோவை பதிவு செய்து, 'எல்லாம் சரியாகி விடும். உங்கள் காயம் குணமடைய வாழ்த்துகிறேன். மீண்டும் சர்வதேச அரங்கில் ஒருநாள் சந்திப்போம், சல்யூட் என பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில், உங்கள் அன்புக்கு நன்றி. எனது பந்துவீச்சில் உங்கள் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு மன்னித்து விடுங்கள். கால் காயம் விரைவில் சரியாகும் என நம்புகிறேன் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்தார்.

    • இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.
    • 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்த், இந்தியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    இதன்மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 35 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் நாளை 5-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    நடப்பு தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மொத்தம் 754 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார்.

    இந்நிலையில், சுப்மன் கில்லுக்கு சுனில் கவாஸ்கர் 2 சிறப்பு பரிசுகளை வழங்கினார். தனது கையொப்பமிட்ட ஒரு சிறிய சிவப்பு தொப்பி மற்றும் சட்டை ஒன்றை பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், சிறப்பு. என்னுடைய இன்னொரு சாதனையையும் முறியடிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். இது என்னிடமிருந்து உங்களுக்கு சிறிய பரிசு. ஒரு சட்டை மற்றும் என்னுடைய கையொப்பமிட்ட தொப்பி. இந்தத் தொப்பியை சிலருக்கு மட்டுமே கொடுப்பேன். வாழ்த்துகள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். 2021 ஆஸ்திரேலியா காபா டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நாளன்று அணிந்திருந்த அதிர்ஷ்டமான சட்டையை மீண்டும் இப்போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் அணிந்து வருவேன் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து வெற்றி பெற 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இங்கிலாந்து நான்காம் நாள் முடிவில் 339 ரன்கள் எடுத்துள்ளது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் டக்கெட் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஒல்லி போப் 27 ரன்னில் வெளியேறினார்.

    ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதம் கடந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் 111 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 105 ரன்னில் வெளியேறினார்.

    மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.

    இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரை சதம் கடந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ஜடேஜா 19 ரன்களை எடுத்தபோது மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

    இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில் நம்பர் 6 அல்லது அதற்கு கீழான பேட்டிங் வரிசையில் ஆடிய வீரர்களில் வி.வி.எஸ்.லக்ஷ்மண் 474 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 2002-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் விளையாடிய போது விவிஎஸ் லக்ஷ்மண் இந்த சாதனையை படைத்தார்.

    தற்போது 23 ஆண்டுக்கு பின் ஜடேஜா இந்த சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 10 இன்னிங்சில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் உள்பட 516 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார்.

    • இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்து 53 ரன் எடுத்தார்.

    இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். கே எல் ராகுல் 7 ரன்னிலும், சாய் சுதர்சன் 11 ரன்னிலும் அவுட்டாகினர். ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது.

    முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த நிலையில், பென் டக்கெட் 43 ரன்னில் அவுட்டானார். ஜாக் கிராலி அரை சதம் கடந்து 64 ரன்னில் வெளியேறினார். ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • லண்டனில் மாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • மருத்துவமனை அருகே சென்றபோது அந்த பஸ்சில் தீப்பிடித்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. போர்ட்லேண்ட் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே சென்றபோது அந்த பஸ்சில் திடீரென தீப்பிடித்தது.

    இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

    முன்னதாக, பஸ்சில் இருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றினர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    மருத்துவமனை அருகே மாடி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது.
    • 3வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன், சுப்மன் கில் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

    7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங்க், அட்கின்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
    • ஆட்ட நாயகன் விருது இங்கிலாந்து கேப்டனுக்கு வழங்கப்பட்டது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் , பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினர்.

    311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடியது. கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.

    இதற்கிடையே, 3-வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.

    இந்நிலையில், நடப்பு தொடரில் சுப்மன் அடித்த 4-வது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் மாபெரும் சாதனை பட்டியலில் சர் டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் 3-வது வீரராக சுப்மன் கில் இணைந்துள்ளார். மூவரும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர்.

    • இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்தது.
    • சுப்மன் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதமடித்து அசத்தினர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடித்து அசத்திய ஜோ ரூட் 150 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடை 141 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 94 ரன்னும், ஜாக் கிராலே 84 ரன்னும், ஒல்லி போப் 71 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் 137 ரன்கள் பின் தங்கியுள்ளது.

    இந்நிலையில், இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெற்றது. 3வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 90 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய சுப்மன் கில் சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார்.

    5வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்து வீசி களைத்துப் போயினர். இருவரும் சதம் கடந்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    ×