என் மலர்
உலகம்

இந்தியா- இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி: பிரதமர் மோடி
- இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
- வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும். வர்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் அதிக பலன் கிடைக்கும். பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






