என் மலர்
ஐக்கிய அரபு அமீரகம்
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் 39 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில், 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் 69 ரன்னும், ஹசன் நவாஸ் 56 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் ஆசிப் கான் தனியாக போராடினார். அதிரடியாக ஆடிய அவர் 35 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட77 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ஹசல் அலி 3 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி சந்திக்கிறது.
- இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் சந்திக்கிறது.
மும்பை:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி துபாயில் சந்திக்கிறது. பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19-ம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி ஆசிய கோப்பை போட்டிகள் மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) தொடங்குவதாக இருந்தன. அந்த நேரத்தில் அங்கு அதிகப்படியான வெப்பம் இருப்பது வழக்கம் என்பதால் வீரர்கள் பெரிய சிரமத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே, இதை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய நேரத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
- சம்பத்தப்பட்ட நபர் மீது கடை உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரினார்.
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ரிவ்யூவால் தனது கடையின் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரிய நிலையிலும், கடை உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
- முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
- 3வது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
வங்கதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன.
இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்களை எடுத்தது. ஜாக்கர் அலி 41 ரன்னும், தன்ஜித் ஹசன் 40 ரன்னும் எடுத்தனர்.
யு.ஏ.இ. சார்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டும், மைதுல்லா கான், சாகிர் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அலிஷான் ஷராபு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் யு.ஏ.இ. அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது அலிஷான் ஷராபுவுக்கும், தொடர் நாயகன் விருது முகமது வசீமுக்கும் வழங்கப்பட்டது.
- விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனி விமானம் மூலம் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளார்.
அங்கு, சர்வதேச விமான நிலையத்தில் டிரம்பிற்கு அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்பு அளித்தார்.
முன்னதாக அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழங்க முப்படை ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதில் இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது.
பிறகு நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் இருதரப்பு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டிரம்ப் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
- புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
அமீரக எரிசக்தி அமைச்சகத்தின் எரிபொருள் விலைக்குழுவுக்கான கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்காக அரசு வழங்கி வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அமீரக எரிசக்தி அமைச்சகம், அமீரக எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் பேசி இந்த விலை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த மாதத்திற்கான விலை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் சூப்பர் 98 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.58 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.57 திர்ஹாமாக இருந்தது. இதில் கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது. ஸ்பெஷல் 95 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.47 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.46 திர்ஹாமாக இருந்தது. இதில் 1 பில்ஸ் விலை அதிகரித்துள்ளது.
இ-பிளஸ் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.38 திர்ஹாமில் இருந்து 2.39 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. இந்த ரக பெட்ரோலின் விலை கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது.
அதேபோல் டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலையில் 11 பில்ஸ் குறைக்கப்பட்டு நடப்பு மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.52 திர்ஹாம் ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த புதிய விலைகள் அனைத்தும் 5 சதவீத வாட் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த வரி உட்பட அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும். இந்த புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர், பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.
- பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.
புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.
ரம்ஜானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர்.
அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.
கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்களில் இந்திய நாட்டினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் பிப்ரவரி மாத இறுதியில் செயல்படுத்தப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, வருடாந்திர ரமலான் மன்னிப்புகள் நாட்டின் கருணை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
புனித மாதத்தின் மதிப்புகளுடன் இணைந்து, இந்த நடவடிக்கை மன்னிப்பு, இரக்கம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கூடுதலாக, பெருமளவிலான விடுதலை சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.
- மன்னிப்பு கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
- ஆனால், ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம்:
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷாஜாதி கான் என்ற பெண்ணுக்கு அபுதாபியில் சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டு சட்டத்தின்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் முகமது ரினாஷ் அரங்கிலொட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொருவர் முரளீதரன் பெரும்தட்டா வலப்பில். இதில், அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், முகமதுவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியர் ஒருவரை படுகொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முரளீதரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோர்ட் ஆப் கேஸ்ஸேசன் இந்த தண்டனையை உறுதிசெய்த நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்தது. இதுபற்றி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இந்திய தூதரகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்திடம் மன்னிப்பு கோரியும், கருணை காட்டும்படியும் கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டும் பலனளிக்கவில்லை. இந்த தண்டனை பற்றிய விவரங்கள் தொடர்புடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் இறுதிச்சடங்கிற்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.
- அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
- அமைதி பேச்சுவார்த்தைக்கு உகந்த இடமாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். மாஸ்கோ போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான உத்வேகம் அதிகரித்து வரும் நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் சவுதி அரேபியாவில் வைத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக தெரிவித்து இருந்தார். போர் தொடங்கியதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ரஷிய மற்றும் உக்ரேனியர்கள் அபு தாபி மற்றும் துபாய்க்கு தாயகமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுதவிர கடந்த காலங்களில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதிலும் அமீரகம் உதவியுள்ளது.
இதன் காரணமாக போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உகந்த இடமாக விளங்குகிறது. ஜெர்மனியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜெலென்ஸ்கி அபு தாபிக்கு வந்தார். விமான நிலையத்தில் அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜெலன்ஸ்கி பயணம் செய்தது இதுவே முதல் முறை ஆகும்.
- கண்டத்தின் நில பகுதிகளை 7 நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன.
- துருவ பகுதியில் சூரிய கதிர்கள் சாய்வாக வந்து படுவதால் சூடு தெரியாது.
அபுதாபி:
நமது பூமி 23.5 டிகிரி சாய்வாண கோணத்தில் ஒரே அச்சில் சுழல்வதால் வட, தென்துருவ பகுதிகள் உருவாகின. இதில் தென் துருவ பகுதியில்தான் உலகின் 5-வது பெரிய கண்டமான அண்டார்டிகா உள்ளது. சுற்றி எங்கு பார்த்தாலும் பனிப்பாறைகள் சூழ்ந்து வெண்மையாக காணப்படும் சிக்கலான பகுதியாகும்.
தென் துருவத்தில் வாழ தகவமைப்புகளுடன் கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் மட்டுமே அங்கு வாழ முடியும். அந்த அண்டார்டிகா கண்டத்தில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த 1959-ம் ஆண்டு 12 நாடுகள் இரு உடன்படிக்கையை ஏற்படுத்தியது.
இதில் தற்போது 49 நாடுகள் இணைந்துள்ளன. இந்த பகுதியில் 28 நாடுகள் ஆங்காங்கே ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. கண்டத்தின் நில பகுதிகளை 7 நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. கோடை காலம் நிலவும் போது மொத்தம் 5 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் வந்து தங்கி இருப்பர். அண்டார்டிகா மண்ணில் கொடி நாட்டிய 13-வது நாடு இந்தியாவாகும்.
துருவ பகுதியில் சூரிய கதிர்கள் சாய்வாக வந்து படுவதால் சூடு தெரியாது. அதேபோல சூரியன் வானின் உச்சிக்கு வருவதில்லை. இதில் தற்போது அமீரக தேசிய வானிலை மையம், பல்கேரியாவின் துருவ ஆராய்ச்சி பயிற்சி மையத்துடன் இணைந்து கூட்டு அறிவியல் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.
இதில் அமீரக தேசிய வானிலை மையத்தில் பணியாற்றும் அகமது அல் காபி மற்றும் பதர் அல் அமெரி ஆகிய 2 நிபுணர்கள் பூமியின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்து தங்கள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர். இதற்காக இருவருக்கும் தீவிர பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக இருவரும் பூமியின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளனர். இந்த நிபுணர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் 2 வானிலை மற்றும் நிலநடுக்க கண்காணிப்பு மையங்கள் அமீரகம் சார்பில் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் துருவப்பகுதியில் வானிலை மாற்றங்கள் மற்றும் நிலநடுக்க செயல்பாடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்.
இது உலகின் சுற்றுச்சூழல் நிலை குறித்த புரிதலை மேம்படுத்தும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குனரும், சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பின் தலைவருமான டாக்டர் அப்துல்லா அல் மண்டூஸ் தெரிவித்துள்ளார்.
- வைட்டமின்களில் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.
- வைட்டமின் சி அல்லது டி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
துபாய்:
அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு:-
உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து வைட்டமின் ஆகும். வைட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை பெற நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். லத்தீனில் விட்டா என்றால் உயிர், அமைன் என்றால் நைட்ரஜன் மூலக்கூறுகள் என்பது பொருளாகும். மனிதர்களுக்கு தேவையான 13 ஊட்டச்சத்துக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைட்டமின்களில் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது. பி மற்றும் சி வைட்டமின் நீரில் கரையும் தன்மையுடையது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இதனை கடந்து தற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கும் வைட்டமின் குறைபாடு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டு மாத்திரை மற்றும் மருந்து வடிவங்களில் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வைட்டமின்களை செயற்கையாக அதிகப்படியான அளவில் எடுத்துக்கொள்வது மற்றும் தவறான பயன்பாடுகள் காரணமாக உடல்நலனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சிலர் வைட்டமின்களை உட்கொள்வதில் தீங்கு ஏற்படுவது இல்லை என நம்புகின்றனர். ஆனால் இது தவறு என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதேபோல் இரும்பு, துத்தநாகம் ஆகிய நுண்ணூட்ட சத்துகள் செரிமான கோளாறு, குமட்டல், வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். வைட்டமின் சி அல்லது டி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
வைட்டமின்களை சமூக ஊடகங்களில் பார்த்து நிபுணர்கள் அல்லாதவர்களின் ஆலோசனை கேட்டு உட்கொள்வது ஆபத்தானது ஆகும். ஏனெனில் இந்த பொருட்கள் எதிர்விளைவை ஏற்படுத்தும் தன்மையை பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்கு கடுமையான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகப்படியான வைட்டமின்களை உட்கொள்வது என்பது விஷமுள்ள தேனை பருகுவது போன்றது ஆகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது
- 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 49.1 ஓவர்கள் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ரிசான் ஹொசைன் 47 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 139 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதன்மூலம் 2 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வங்கதேசம் கைப்பற்றியது.
கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய வங்கதேச அணி தொடர்ச்சியாக இந்தாண்டும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.






