என் மலர்
உலகம்
- இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது 240-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.
- ஏழு நாள் போர் நிறுத்தம் மூலமாக சுமார் 90 பேர் மீட்கப்பட்டனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து 1,200 பேரை கொலை செய்தனர். துப்பாக்கியால் சுட்டு கொடூரமான வகையில் தாக்குதல் நடத்தினர். குழந்தைகள் முதல் முதியோர் வரை 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் 46 நாட்கள் தாக்குதலுக்குப் பிறகு பிணைக்கைதிகளை மீட்க போர் நிறுத்தம் ஏற்பட்டது.
சுமார் ஏழு நாட்கள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
ஏறக்குறைய வடக்கு காசாவை தடம் தெரியாத வகையில் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ்க்கு எதிரான போர் இறுதி கட்டத்தை எட்டியதாக தெரிவித்துள்ளது.
தாக்குதலை அதிகப்படுத்தி பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆனால், பிணைக்கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மூன்று முதியோரின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மூன்று முதியோர்களும் தாடியுடன் சற்று உடல் மெலிந்து காணப்படுகின்றனர்.
இந்த வீடியோ வெளியான நிலையில், "முதியோருக்கு எதிரான கொடுமை" என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. "இது ஒரு கிரிமினல், பயங்கரவாத வீடியோ" எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த மூன்று பேரும் 79 வயதான பெரி, 80 வயதான யோரம் மெட்ஸ்கெர், 84 வயதான அமிராம் கூப்பர் எனத் தெரியவந்துள்ளது.
மூன்று பேரில் நடுவில் அமர்ந்து இருக்கும் பெரி "மிகவும் கடினமான சூழ்நிலையில் உடல் ஆராக்கியம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எந்தவித நிபந்தனையும் இன்றி எங்களை மீட்க வேண்டும்" என இஸ்ரேலிடம் கெஞ்சுவது போன்று அந்த வீடியோவில் உள்ளது.
ஹமாஸ் தாக்குதலின்போது பெர், கிப்பட்ஸ் நிர் ஓஜ் எனற இடத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். தனது மனைவி சோபாவிற்கு பின்னால் மறைந்திருக்க ஹமாஸ் பயங்கரவாதிகளை விரட்ட முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்த மனைவியை காப்பாற்ற, அவர் ஹமாஸிடம் சிக்கிக் கொண்டார்.
மெட்ஜ்கெரின் மருமகள் வீடியோவை பார்த்து ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்தேன். எனது மாமனார் உயிருடன் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அவர் தற்போது தாடியுடன், உடல் எடை குறைந்து இருக்கும் நிலையை பார்க்கும்போது அதிர்ச்சியடைந்தேன்.
- 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன.
- 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது. கான்சு மாகாணத்தில் 100 பேர் உயிரிழந்ததாகவும், கிங்காய் மாகாணத்தில் 11 பேரும் உயிரிழந்ததாக சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கான்சு மாகாணத்தில் 96 பேரும், கிங்காய் மாகாணத்தில் 124 பேரும் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன.
இந்த நிலநடுக்கம் கான்சு மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதனால் கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளது.
- ஜிம் நண்பர்கள் அர்னால்டை தங்கள் கொண்டாட்டங்களில் இணைத்து கொள்வார்கள்
- என்னை போல் பலரும் பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன் என்றார் அர்னால்ட்
1965ல் ஜோ கோல்ட் (Joe Gold) எனும் தொழில்முறை உடற்பயிற்சியாளர் தொடங்கிய கோல்ட்'ஸ் ஜிம் (Gold's Gym) தொடர் உடற்பயிற்சி கூடம் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.
இங்கு உடற்பயிற்சி பயின்றவர்களில் முன்னாள் கலிபோர்னியா கவர்னரும், ஹாலிவுட் முன்னணி ஹீரோவுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) ஒருவர்.
ஆஸ்திரியா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த அர்னால்ட், ஹீரோவாக பிரபலமடையும் முன்பு போதுமான வருவாய் இல்லாமல் இருந்த போது கோல்ட்'ஸ் ஜிம் நண்பர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது தங்களின் கொண்டாட்டத்தில் அர்னால்டையும் இணைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
இதை மறக்காத அர்னால்ட் கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகருக்கு அருகே உள்ள பாயில் ஹைட்ஸ் (Boyle Heights) பகுதியில் ஹாலென்பெக் யூத் சென்டர் (Hollenbeck Youth Center) எனும் சமூக நல கூடத்தில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தனது செயல் குறித்து அவர் தெரிவித்ததாவது:
நான் அமெரிக்கா வந்த போது ஜிம் நண்பர்கள் என்னிடம் கனிவுடன் நடந்து கொண்டனர். எனக்கு பல பரிசுகளை அளித்தார்கள். அயல்நாட்டை சேர்ந்தவனாக கருதாமல் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்தினர். அழகான கிறிஸ்துமஸ் மரம் செய்து வைத்திருப்பார்கள். அந்த நினைவுகள் மிக இனிமையானவை. அந்த மகிழ்ச்சியை நான் பலருக்கும் மீண்டும் வழங்க நினைக்கிறேன். அதனால்தான் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த செயலை தவறாமல் கடைபிடிக்கிறேன். எனக்கு இது மிகுந்த மனநிறைவை தருகிறது. இதன் மூலம் பலரும் இதே போன்று பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அர்னால்ட் கூறினார்.
பணம், புகழ், பதவி மற்றும் உலகெங்கும் ரசிகர்கள் என அனைத்தையும் பெற முடிந்த நிலையிலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு நற்செயலை தொடர்ந்து செய்து வரும் அர்னால்டின் உதவும் மனப்பான்மை சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறது.
- இனி சுவீடனில் தங்க விரும்புபவர்கள் அங்கு வேலை தேடி கொள்ள வேண்டும்
- சுவீடிஷ் மொழியில் தேர்வு பெற்றாக வேண்டும் என்கிறது புதிய நடைமுறை
ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் எல்லைகளை தாண்டி செல்ல ஒரே விசா முறையான ஷென்கன் விசா (Schengen Visa) நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் (Sweden) நாடும் அங்கீகரித்து வந்தது.
சுற்றுலா தவிர, சுவீடனில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும், அங்கு தங்கி பணியாற்றவும் பல நாடுகளிலிருந்து அங்கு மக்கள் செல்கின்றனர். ஆனால், தற்போது சுவீடன் அரசாங்கம் தங்கள் நாட்டில் குடி புக நினைக்கும் அனைத்து அயல்நாட்டினருக்கும் புதிய சட்டதிட்டங்களை வகுக்க உள்ளது.
சுவீடனின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அறிவித்திருப்பதாவது:
சுவீடனில் தங்க விரும்புபவர்கள் இங்கு தாங்களாகவே வேலையை தேடி கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரும் அரசாங்க உதவி இல்லாமல் தங்களை தேவைகளை தாங்களே பார்த்து கொள்ள முடியும். சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூக குறியீடுகளை குறித்த புரிதல் இருக்க வேண்டும் என்பதும் இனி கட்டாயம். சுவீடன் நாட்டு மொழியான சுவீடிஷ் (Swedish) மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர். அதற்காக ஒரு தேர்வு நடத்தப்படும். இங்கு தங்கி பணியாற்ற விரும்புபவர்கள் ஒவ்வொருவரின் "சமுதாய புரிதல்" குறித்து ஒரு ஆய்வாளரின் அறிக்கை பெறப்படும். இங்கு கல்வி கற்று, பிறகு வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சுவீடனுக்கு அனவைரையும் வரவேற்கிறோம். ஆனால், எங்கள் சட்டதிட்டங்கள் இனி இதுதான். சுவீடிஷ் மொழியை கற்று எங்கள் சமூகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து படித்து புரிதல் கொண்டவர்கள் மட்டுமே இங்கு வர வேண்டும்" என சுவீடனின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜோகன் பெர்சன் (Johan Pehrson) தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன், ஃபாஸ்ட் டிராக் (fast track) எனப்படும் "விரைவு பரிசீலனை" முறையில் வழங்கப்பட்டு வந்த விசா வழங்கலை சுவீடன் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு புகை மிகவும் ஆபத்தானது.
- புகை கண்களிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்தும்.
தோட்டங்களின் நகரம் என்று அழைக்கப்படும் லாகூரில் காற்றின் தரம் படிப்படியாக குறைந்து வருகிறது. லாகூர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் காற்று மாசுபாட்டின் பிரச்சனை படிப்படியாக வளர்ந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் பஞ்சாபில் ஐந்து நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் உள்ள லாகூர் 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக மோசமான காற்றைக் கொண்ட நகரமாக மாற 10 இடங்களுக்கு மேல் உயர்ந்துள்ளது என்று சுவிஸ் ஏர் பியூரிஃபையர்ஸ் தயாரிப்பாளரின் வருடாந்திர உலகளாவிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கடலோர நகரமான கராச்சி போன்ற பிற முக்கிய பாகிஸ்தான் நகரங்களின் நிலைமை மிகவும் சிறப்பாக இல்லை. லாகூரின் நிலைமை உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர வழிகாட்டுதல்களை விட 40 மடங்கு உயர்ந்திருக்கிறது. தோட்டத்தின் நகரத்தில் முன்னோடியில்லாத புகை ஊடுருவும் கூற்றுகளின் சங்கமத்திலிருந்து வருகிறது. காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் 128,000 பாகிஸ்தானியர்கள் இறக்கின்றனர் என்று 2019 ஆம் ஆண்டில் உடல்நலம் மற்றும் மாசுபாடு குறித்த உலகளாவிய கூட்டணி மதிப்பிடப்பட்டுள்ளது
லாகூர் மற்றும் பஞ்சாபைச் சுற்றியுள்ள மாகாணத்தில் காற்று மாசுபாட்டில் 40% தாக்கத்தை ஏற்படுத்தும் அதிக அளவு சல்பர் வாயு கொண்ட வாகனங்கள் இன்னும் அதிகம் உள்ளன. அதிக குடியிருப்பாளர்களுக்கு வழிவகுக்கும் வகையில் அதன் மரங்கள் 70% குறைக்கப்பட்டுள்ளன. லாகூரில் கிடைக்கும் கலப்படமற்ற எரிபொருளின் வடிவம் கூட குறைந்த தரம் வாய்ந்தது. டயர் எரிப்பில் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வரும் தொழில்களால் கூடுதலாக 25% லாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள வளர்ந்து வரும் நகரங்களில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆராய்ச்சியாளர்களைக் கண்டறிந்தது என்னவென்றால்,லாகூர் பள்ளி மாணவர்களில் அதிக அளவு காற்று மாசுபாட்டிற்கு ஆளானவர்களில் கணிசமாக அதிக அளவு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் வருகிறது என்கிறார்கள். லாகூர், பாகிஸ்தானின் மற்ற பகுதிகளைப் போலவே, புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைக்க வேண்டும்.
"லாகூரில் உள்ள புகை அளவியல் மற்றும் மானுடவியல் கூறுகளின் சங்கமத்தால் ஏற்படுகிறது" என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வள குழுவின் உறுப்பினர் சலீம் அலி கூறினார்.
மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு புகை மிகவும் ஆபத்தானது. இது கண்பார்வையை குறைக்கிறது, சுவாசத்தை கடினமாக்குகிறது, மேலும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கிறது. புகை கண்களிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் விளைவாக கடுமையான இருமல், ஆஸ்துமா ஏற்படுகிறது. ஆஸ்துமா அதிகரிப்புகள், ஒவ்வாமை, கண் தொற்று, சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் மற்றும் முன்கூட்டிய மரணத்திற்கு வழிவகுக்கும் இருதய நோயியல் போன்ற அபாயகரமான சுகாதார பிரச்சனைககளுக்கு புகை காரணமாகும்.
காற்று மாசுபாடு என்பது மரணத்திற்கான முன்னணி ஆபத்து கூறுகளில் ஒன்றாகும். ஆனால் அதன் தாக்கங்கள் மேலும் மேலும் செல்கின்றன. இது உலகளாவிய நோய் சுமைக்கு முக்கிய காரணமாகும்.
- பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் சந்திப்பில் ரிஷி சுனக், எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றனர்
- ஐரோப்பிய கலாச்சாரம் மதிக்கும் கோட்பாடுகளும், அளிக்கும் உரிமைகளும் உயர்வானவை என்றார் மெலோனி
மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பல ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் வாக்குகளை ஈர்க்க இதை ஒரு விவாத பொருளாக சில தலைவர்கள் முன்னெடுத்தனர்.
சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க அந்நாடுகளின் தலைவர்கள் பல கட்டமாக சந்தித்து வருகின்றனர்.
அகதிகள் நுழைவதை கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், Giorgio Meloni) தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜியோர்ஜியோ மெலோனி (உரையாற்றினார். இதில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது உரையில் மெலோனி தெரிவித்ததாவது:
நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவுதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சவுதி அரேபியா நாட்டில் மத கோட்பாடுகளை கை விடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா (Sharia) சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும் மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்து இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. நான் ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு மெலோனி கூறினார்.
கடந்த 2022 அக்டோபர் முதல் ஐரோப்பியாவின் முக்கிய நாடான இத்தாலியில், பிரதமராக பதவி வகிக்கும் ஜியோர்ஜியா மெலோனி (46), தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை 1993 வெடிகுண்டு மற்றும் 2008 தாக்குதல் சம்பவங்களில் தாவூத்திற்கு தொடர்புண்டு
- தாவூத்தின் சகோதரி மகள், அவர் கராச்சியில் வசிப்பதை உறுதிப்படுத்தினார்
இந்தியாவில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா, மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இவரை பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. "இன்டர்போல்" (Interpol) எனப்படும் சர்வதேச காவல்துறையால் உலகெங்கும் "சிகப்பு அலர்ட்" தேடுதல் அறிவிப்பு விடப்பட்டிருக்கும் தாவூத்தின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பா (Lashkar-e-Taiba) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் பல நாசவேலைகளை நடத்தியவர், தாவூத்.
1993 மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம், 2008 மும்பை தாக்குதல், புனே 2010 ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குற்றங்களில் இவர் தொடர்புடையவர்.
இந்தியாவை விட்டு தப்பி சென்ற தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்திருப்பதாக இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக குற்றம் சுமத்தி வந்தாலும், பாகிஸ்தான் அதனை மறுத்து வந்தது. ஆனால், 2023 ஜனவரி மாதம் தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பர்கரின் மகள் அலிஷா பர்கர், தாவூத் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காசி பாபா தர்காவிற்கு பின்புறம் ரஹிம் ஃபாகி எனும் பகுதிக்கு அருகே வசிப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் (NIA) இந்திய அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இருநாட்டு உறவை குலைப்பதில் தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், உடல்நிலை சீர்கெட்டதால், இரு தினங்களுக்கு முன் கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புகளுடன் தாவூத் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடலில் விஷம் செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிகிறது.
தாவூத் சிகிச்சை பெரும் தளம் முழுவதும் வேறு எந்த நோயாளியும் சேர்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு நிலவுவதாகவும் தெரிகிறது.
- சர்வதேச நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் கடும் தாக்குதல்.
- ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த மிகப்பெரிய சுரங்கபாதை கண்டுபிடிப்பு.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் மூர்க்கத்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதோடு 1000 பேரை பிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை தூக்கினால் நாங்கள் அவர்களை கைது செய்வோம். நாங்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டு பிடித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
எராஸ் எல்லைப் பகுதியில் இந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது. சிறிய வகை வாகனம் செல்லும் வகையில் மிகப்பெரியதாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்த துரங்கப்பாதை பல கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டுள்ளது. அனைத்து வகை வசதிகளும் கொண்டதாக உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- விவேக்கின் நிகர சொத்து மதிப்பு $630 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி நாடெங்கிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
சில மாநிலங்களில் டிரம்ப் மீது பதிவாகி உள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் பயணம் அமையும் என்பதால், குடியரசு கட்சியில் டிரம்பிற்கு மாற்றாக உள்ள வேட்பாளர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓஹியோ (Ohio) மாநில தொழிலதிபர் விவேக் ராமசாமி (38) தனக்கு ஆதரவு தேடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் (Connecticut) மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற யேல் (Yale) சட்ட கல்லூரியில் பட்டம் பெற்ற விவேக்கின் நிகர சொத்து மதிப்பு $630 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
மிக கடுமையாக பிரசாரம் செய்து, அமெரிக்கா சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ள தன் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆழமாக விவரித்து நாடெங்கிலும் விவேக் பயணம் செய்து வருகிறார்.
சனிக்கிழமையுடன் நிறைவடைந்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பிரசார கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார் விவேக் ராம்சாமி. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் மற்ற எந்த வேட்பாளர்களையும் விட விவேக்கின் பிரசார நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் 38 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் விவேக்.
ஓய்வின்றி உழைக்கும் அவருக்கு சக்தியாக விளங்குவது எது என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விவேக், "நாட்டை குறித்து அக்கறையுடன் என் பிரசாரங்களுக்கு வந்து என் பேச்சை கேட்க காத்திருக்கும் மக்களின் சக்திதான் எனக்கு ஊக்க சக்தி.
மக்களிடமிருந்து விலகி செல்லாமல் பிரசாரம் செய்வதுதான் எந்த மக்களுக்கு பிரதிநிதியாக விரும்புகிறோமோ அவர்களுக்கு பொறுப்பாக இருப்பதை உணர்த்தும் வழி. தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் உணர்வை புரிந்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை.
அதிர்ஷ்டம் எனும் சொல்லிற்கான எழுத்துக்கள், "உ, ழை, ப், பு" என என் பெற்றோர் கூறிய அறிவுரைதான் எனக்கு கல்வியிலும், பணியிலும், தொழிலிலும், அரசியலிலும் பயனளித்து வருகிறது. " என விவேக் தெரிவித்தார்.
விவேக்கின் நீண்ட நாள் நண்பர்கள், நாளில் 16 மணி நேரம் வரை உழைக்க தயங்காத விவேக், ஓய்வெடுப்பதற்காக தனியே நேரம் ஒதுக்கியதே இல்லை என அவரது உழைக்கும் திறன் குறித்து தெரிவிக்கின்றனர்.
ஓடுதல், டென்னிஸ், புஷ்-அப் (push-up) ஆகியவை விவேக் தவறாமல் செய்து வரும் உடற்பயிற்சிகள்.
- லாகூரில் பிஎம்2.5 எனும் மாசு காரணிகள் அபாய எல்லையை விட 66 மடங்கு அதிகம் உள்ளது
- அமீரக நிபுணர்கள் வானில் 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலை முன்னெடுத்தனர்
உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பாகிஸ்தான் 3-வது நாடாகவும் அந்நாட்டின் பஞ்சாப் பிராந்திய லாகூர் நகரம் முதலிடத்திலும் உள்ளது.
நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து புற்று நோயை உண்டாக்க கூடிய மாசுப்பொருட்களில் பிஎம்2.5 (PM2.5) எனும் மாசு காரணிகள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை காட்டிலும் 66 மடங்கு அதிகமாக லாகூர் நகர காற்று மண்டலத்தில் இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்தன.
தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அமில வாயுக்கள், செங்கல் சூளைகளிலிருந்து வரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வயல்வெளிகளில் வைக்கோல் எரிப்பால் கிளம்பும் புகை என பல்வேறு காரணங்களால் பஞ்சாப் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு அதிகரித்தல் தொடர்கதையாகி வருகிறது.
காற்று மாசுபடுதல் அதிகரிப்பதால் அந்நகரில் கடந்த சில வாரங்களாக பல வணிக நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டன; பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.
பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் இதனை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிட அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) முன் வந்தது. வறண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவு உண்டாக்குதல் வழக்கமான ஒன்று. சில்வர் ஐயோடைட் (silver iodide) எனும் மஞ்சள் உப்பு, அசிடோன் (acetone) எனும் ரசாயன கலவையுடன் கலக்கப்பட்டு வானில் மேகங்களில் பல முறை எரிக்கப்படும். இதன் மூலம் மழை மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு தூண்டப்படும்.
குறைந்தளவு மழைப்பொழிவு கூட காற்றில் உள்ள மாசு காரணிகளை சில நாட்களுக்கு கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதிகளவு அசுத்தமடைந்த காற்றினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் க்ளவுட் சீடிங் (cloud seeding) அல்லது ப்ளூ ஸ்கையிங் (blueskying) எனப்படும் செயற்கை மழைகளை வரவழைக்கும் ரசாயனங்களை கொண்ட உபகரணங்களுடன் விமானங்கள் அந்நகரை வலம் வந்தன.
2 விமானங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் விஞ்ஞானத்தில் தேர்ந்த ஐக்கிய அரபு நிபுணர்கள் லாகூரில் முயற்சிகளை முன்னெடுத்தனர். 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலில் ஈடுபட்டார்கள்.
இதன் பயனாக லாகூர் நகரின் 10 இடங்களில் மழைத்தூறல் விழுந்ததாகவும், 15 கிலோமீட்டர் பரப்பளவில் அதன் தாக்கம் கண்காணிக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில காபந்து முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.
காற்று மாசுபாட்டினால் ஏற்படும் எதிர்மறை உடல்நல சீர்கேடு ஓவ்வொரு மனிதனின் வாழ்நாளில் 5 வருடங்கள் குறைத்து விடும் சாத்தியக்கூறு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
- பாட்டியாவின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
- உங்களுடைய உதவி முக்கியம் வாய்ந்தது என சிர்சா கேட்டுக் கொண்டார்.
லண்டன்:
இந்தியாவை சேர்ந்த மாணவர் ஜி.எஸ்.பாட்டியா என்பவர் லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கிழக்கு லண்டனில் தங்கியிருந்த அவர் கடந்த 15-ந்தேதி முதல் மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உங்களுடைய உதவி முக்கியம் வாய்ந்தது என சிர்சா கேட்டுக் கொண்டார்.
பாட்டியாவின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்தியை மக்கள் பகிர வேண்டும் என கேட்டு கொண்டதுடன், இந்திய மாணவரை பற்றி ஏதேனும் தகவல் இருக்குமென்றால் தொடர்பு கொள்ளும்படி 2 எண்களையும் பகிர்ந்து உள்ளார். கடைசியாக கடந்த 15-ந்தேதி கிழக்கு லண்டனின் கேனரி வார்ப் பகுதியில் அவர் தென்பட்டார். அதன்பின்னர் அவரை காணவில்லை. இதனால், அவரை கண்டறியும் முயற்சியில் இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
- பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






