என் மலர்tooltip icon

    உலகம்

    • காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
    • ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர். எகிப்து எல்லையில் உள்ள அந்த நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ரபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.


    மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் மேலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாசை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் ரபா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.


    ஏற்கனவே வீடுகளை இழந்து உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை கிடைக்காமல் தவித்து வரும் காசா மக்களுக்கு ரபா மீதான தாக்குதல் திட்டம் மேலும் துன்பத்தை கொடுக்கும்.

    தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அடி சுஹ்ரி கூறும்போது, காசாவில் இனப்படுகொலை குற்றங்களை அதிக அளவில் நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    • சுரங்கபாதையின் மேற்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக வாலிபர் குனிந்தும், நிமிர்ந்தும் செல்வது போன்று காட்சிகள் உள்ளது.
    • வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சில வாலிபர்கள் பொது இடங்களில் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதில் சில வீடியோக்கள் விபரீதமாக உள்ளது. அதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    அதில், வங்காளதேசத்தில் ஒரு வாலிபர் ஓடும் ரெயிலில் மேற்கூரையில் நின்றவாறு சாகசம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரெயிலின் மேற்கூரையில் அந்த வாலிபர் ஆபத்தான முறையில் நிற்கிறார். அப்போது ரெயில் ஒரு சுரங்கபாதை வழியாக செல்கிறது. அந்த சுரங்கபாதையின் மேற்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக வாலிபர் குனிந்தும், நிமிர்ந்தும் செல்வது போன்று காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும்.
    • சிங்கப்பூர், ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பள அதிகரிப்பு இருக்கும் என்கிறது ஆய்வு.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்த புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அமைப்பு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், புளூம்பெர்க் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சீனப் பொருளாதாரம் மந்தமாகியுள்ள நிலையில், நிறுவனங்கள் இந்தியப் பொருளியல் வளர்ச்சியைச் சாதகமாக்கிக்கொள்ள முனைந்திருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது.

    இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் சிங்கப்பூர், ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பள அதிகரிப்பு இருக்கும் என்கிறது.

    சிங்கப்பூர், ஹாங்காங் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் முதலீட்டாளர்கள் அதிகப் பொருள்களை வாங்குகின்றனர்.

    இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளம் ஹாங்காங் ஊழியர்களைவிட 4.5 சதவீதம் அதிகம். சிங்கப்பூர் ஊழியர்களைவிட அது 7.7 சதவீதம் அதிகம் என கூறுகிறது.

    உயர் பதவிகளுக்கான ஊழியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாலும் தொழில்நுட்பம், தொழிலில் ஏற்படக்கூடிய இடையூறுகளை மதிப்பிடுதல் போன்ற பிரிவுகளில் திறனாளர் பற்றாக்குறையாலும் இந்தியாவில் சம்பளம் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது.
    • பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.

    உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் "சூப்பர் ஹெவி" எனப்படும் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது.

    33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 394-அடி உயரம் கொண்டது. இந்த ராக்கெட் சோதனை இரண்டு முறை தோல்வியில் முடிந்தது. அதில் ஏற்பட்ட தவறுகள் சரிசெய்யப்பட்டன.

    இந்த நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் தெற்கு டெக்சாசின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதை நேரலையில் 35 லட்சம் பேர் பார்த்தனர். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்தது. பின்னர் பூமிக்கு திரும்பி வந்து இந்தியப் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டது.

    ஆனால் மீண்டும் வளி மண்டலத்தில் நுழைந்த போது ராக்கெட் திடீரென்று தொடர்பை இழந்தது. இறுதி இலக்கை அடைவதற்கு முன்பே தொடர்பை இழந்தது. கீழ்-நிலை பூஸ்டர் வெற்றிகரமாக நீரில் தரையிறங்குவதில் தோல்வி்யடைந்தது.

    இருந்தபோதிலும் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப்பின் மூன்றாவது ஏவுகணை சோதனையில் அதன் பல நோக்கங்களை பூர்த்தி செய்ய முடிந்ததாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

    • இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
    • அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்

    இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, "குடியுரிமை திருத்த சட்டத்தின் அறிவிப்பைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.

    இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்" என்றார்.

    பா.ஜனதா அரசால் கடந்த 2019-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிஏஏ மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். 4 வருடங்கள், 3 மாதங்கள் கழித்து கடந்த வாரம் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆதாயத்திற்காக பா.ஜனதா தற்போது அமல்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநிலங்கள் இந்த இதை செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளது.

    ஆனால் சிஏஏ முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. விண்ணப்பிக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை. ஒருபோதும் சிஏஏ திரும்ப பெறப்படாது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • 11.23 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருப்பதாக ரஷிய மத்திய தேர்தல் கமிட்டி தெரிவித்துள்ளது.
    • தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

    ரஷியாவில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கியது. அங்கு முதல்முறையாக அதிபர் தேர்தல் 3 நாட்கள் தேர்தல் நடத்தப்படுகிறது. 17-ந்தேதி வரை நடக்கும் தேர்தலில் 11.23 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருப்பதாக ரஷிய மத்திய தேர்தல் கமிட்டி தெரிவித்துள்ளது.

    தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. சில இடங்களில் வீடுகளுக்கே சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் முறை முதல் முறையாக நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது.

    இன்று தொடங்கிய தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் வாக்குசாவடி மையங்களுக்கு ஆர்வமுடன் சென்று தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். சில இடங்களில் வாக்குபெட்டிகள் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஓட்டுபதிவு நடந்தது. மேலும் போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

    தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நிகிலை கரிடோனோவின் கம்யூனிஸ்டு கட்சி, லியோநிட் ஸ்லட்ஸ்கியின் தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, விளாடிஸ்லா தவன்கோவின் புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

    ஆனால் புதினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை என்பதால் அவர் 5-வது முறையாக அதிபராக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. புதினுக்கு எதிரான தலைவர்கள் சிறைகளிலோ, வெளிநாடுகளிலோ இருப்பதாலும், உக்ரைன் போர் மற்றும் துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் ஆயுதக் கிளர்ச்சிக்கு இடையிலும் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

    அவரை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த அதிபர் தேர்தலில் (2018-ம் ஆண்டு ) புதின் 76.7 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரள மாநிலத்தில் உள்ள ரஷிய சிறப்பு தூதரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
    • 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.

    பாலஸ்தீனத்தின் பிரதமராக முகமது இப்ராஹிம் ஷ்டய்யே இருந்து வந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தனது பொருளாதார ஆலோசகரான முகமது முஸ்தபாவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் (West Bank) பாலஸ்தீன அதிகாரிகத்திற்கு உட்பட பகுதியில் புதிய அரசை உருவாக்குவதில் இவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்.

    முகமது முஸ்தபா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் சுதந்திர செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

    பொருளாதார விவகாரத்திற்கான துணை பிரதமராக பணியாற்றியுள்ளார். பாலஸ்தீன முதலீடு நிதி குழுவில் பணியாற்றியுள்ளார். உலக வங்கியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.

    குவைத் அரசுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். சவுதி அரேபியாவின் இறையாண்மை சொத்து நிதி, பொது முதலீட்டு நிதி ஆகியற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.

    • காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
    • போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர். 

    இதேபோல் கடைசி நகராக, ரபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரபா நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால் பசி பட்டினியால் வாடுகின்றனர். மக்களுக்கு ஐ.நா. அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இங்கும் கடும் நெரிசல் காணப்படுகிறது.

    இந்நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • திருப்பதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர்.

    இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

    • 2020-ல் டொனால்டு டிரம்ப் டிக்டிக் செயலிக்கு தடை விதிக்க முயற்சி மேற்கொண்டார்.
    • தற்போது 352 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியுள்ளது.

    உலக அளவில் பொழுது போக்கிற்கான செயலில்களில் பெரும்பாலானவை சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் செயலிகள் ஆகும். அதில் ஒன்றுதான் டிக்டிக் செயலி. இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance). இந்த நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு செயலிகளும் பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே முறைகேடாக தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நடைமுறை சாத்தியமான உளவு நடவடிக்கை என சில நாடுகள் குற்றம்சாட்டின. மேலும் இது நாட்டிற்கு அச்சுறுத்தல் எனவும் தெரிவித்தன.

    இதனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கடந்த 2020-ல் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. அமெரிக்காவின் சில மாநிலங்கள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. மேலும், அமெரிக்கா முழுவதும் இந்த செயலியை தடைவிதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது.

    அப்போது அமெரிக்கா சார்பில் டிக்டாக் செயலியை சீன நிறுவனம் விற்பனை செய்தால் அமெரிக்காவில் செயல்பட தடையில்லை எனத் தெரிவித்தது. ஆனால் குற்றச்சாட்டுகளை டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனம் மறுத்து வந்தது.

    அதன்பின் டிக்டாக் செயலி தடை குறித்து மிகப்பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் டிக்டாக் தடை குறித்து மீண்டும் பேச ஆரம்பித்தனர். இதனால் பாராளுமன்றத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கான மசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டது.

    அதன்படி நேற்று மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 352 பேர் வாக்களித்தனர். 65 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா சென்ட் சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்பட்டு அதிபரின் கையெழுத்திற்கான வெள்ளை அனுப்பப்படும். அதிபர் கையெழுத்திட்டதும் டிக்டாக் செயலி தடை செய்யப்படும்.

    டிக்டாக் செயலின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) டிக்டாக் செயலில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் என அந்த மசோதா குறிப்பிடுகிறது. டிக்டாக் செயலி அமெரிக்காவில் தொடந்து செயல்பட வேண்டுமென்றால் பைட்டான்ஸ் அதனை விற்பனை செய்ய வேண்டும்.

    இதற்கு முன்னதாக 2020-ல் டொனால்டு டிரம்ப் இந்த செயலிக்கு தடைவிதிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் நீதிமன்றம் தலையீடு காரணமாக அது வெற்றி பெற முடியாமல் போனது.

    • ரெயிலில் இருந்து குதித்ததில் பெண் காயம் அடைந்தார்.
    • விசாரணையில் அப்பெண் உள்பட 3 பேர் இந்தியர்கள் என்பதும் மற்றொருவர் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

    அமெரிக்காவுக்குள் மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைய பலர் முயற்சி செய்கிறார்கள். இதை தடுக்க எல்லைகளில் அமெரிக்க போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பபலோ நகரில் உள்ள சர்வதேச ரெயில் பாலத்தில் ஓடும் சரக்கு ரெயிலில் இருந்து குதித்த ஒரு பெண் உள்பட 4 பேரை அமெரிக்க எல்லை காவல் படையினர் பிடித்தனர். ரெயிலில் இருந்து குதித்ததில் பெண் காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் அப்பெண் உள்பட 3 பேர் இந்தியர்கள் என்பதும் மற்றொருவர் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் எந்த குடியுரிமை ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவர்கள் அமெரிக்காவிற்குள் ஆவணங்கள் இன்றி நுழைய முயன்றதும் தெரிய வந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10-ந்தேதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.
    • சமூக வலைதளங்களில் 'கேத் மிடில்டன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது.

    இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இதனால் கடந்த 10-ந்தேதி கேத் மிடில்டன் தனது மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.

    ஆனால் அந்த படம் டிஜிட்டல் முறையில் 'எடிட்' செய்யப்பட்டிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 'கேத் மிடில்டன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலாகி பரவியது. பலர் கேத் மிடில்டனுக்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ×