என் மலர்
உலகம்
- அரசுமுறை பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
- அங்கு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.
ஜெனீவா:
அரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.
சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.சி-814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மந்திரி ஜெய்சங்கர் அளித்த பதிலளித்து கூறியதாவது:
இந்த வெப் தொடரை இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் என் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
1984-ம் ஆண்டிலும் ஒரு விமான கடத்தல் நடந்தது. இண்டியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தை காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் துபாய்க்கு கடத்தினர்.
அப்போது இளம் அதிகாரியாக இருந்த நான் இந்திய வெளியுறவு துறையின் கையாளும் குழுவில் ஒருவனாக இருந்தேன். மொபைல் போனில் என் அம்மாவை அழைத்து, 'விமானத்தை கடத்தியுள்ளனர். என்னால் வீட்டுக்கு வரமுடியாது' என கூறினேன்.
அதன்பின், கடத்தப்பட்ட விமானத்தில், என் தந்தையும் இருப்பதைக் கண்டுபிடித்தேன். இது ஒரு பெரிய கதை.
இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒருபுறம் கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்தேன். மறுபுறம், விமானக் கடத்தல் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தேன் என தெரிவித்தார்.
- ரோம் திரும்பும் விமானத்தில் போப் பிரான்சிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இருவரும் வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றார்.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், சிங்கப்பூர் சென்றுவிட்டு ரோம் திரும்பும் விமானத்தில் போப் பிரான்சிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் அமெரிக்க தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் ஆகிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் வாழ்க்கைக்கு எதிரானவர்கள்.
புலம்பெயர்ந்தோரை துரத்துகிறவராக இருந்தாலும் சரி, அல்லது குழந்தைகளைக் கொல்பவராக இருந்தாலும் சரி. இரண்டும் வாழ்க்கைக்கு எதிரானது.
இரண்டு தீமைகளில் குறைவானதை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு தீமைகளில் குறைவானவர் யார்? அந்தப் பெண்மணி அல்லது அந்த ஜென்டில்மேன் எனக்குத் தெரியாது.
அமெரிக்க கத்தோலிக்க வாக்காளர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து வாக்களிக்கச் செல்வதற்கு முன் அந்த முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
- ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படை 2011, மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றது.
- ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவித்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 3,000 கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடியது.
10 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் 2011, மே 2-ம் தேதி சுட்டுக்கொன்றனர்.
ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹம்சா பின்லேடன் 2019-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தி மிர்ரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் உள்ளான் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு ராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
2021 ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் கைப்பற்றியபோது பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றனர்.
அவனது கட்டளையின் கீழ், அல்-கொய்தா மீண்டும் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது.
ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்-கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
- 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் குரங்கம்மை பாதித்து உயிரிழந்தனர். தொடர்ந்து பரவி வருவது மற்றும் உயிரிழப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரியவர்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் இதர நாடுகளில் குரங்கம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கையில் முக்கிய படி என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
பவேரியன் நார்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை கவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்கள் மட்டுமே வாங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு உற்பத்தியாளர் மட்டுமே இருப்பதால் தடுப்பூசி இருப்பு குறைவாகவே இருக்கிறது.
நன்கொடையாளர்கள் தடுப்பூசியை கொள்முதல் செய்து உடனடியாக தேவைப்படும் பகுதியில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் அதானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கி இருப்பதை அடுத்து, இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
எனினும், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்.
- எலான் மஸ்கின் மகள் வில்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்தார். இதையடுத்து, டெய்லர் ஸ்விஃப்ட்டின் இன்ஸ்டா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் வென்றுவிட்டீர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன், அதோடு உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்" என்று பதிவிட்டார்.
எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வரிசையில், எலான் மஸ்கின் மகள் வில்சன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்த பதிவில் அவர், "நானும் அந்த பதிவை பார்த்தேன். அதில் நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை. இது மிகவும் வெளிப்படையானது, என்பதை நீங்கள் பார்க்கவில்லை என்றால், நீங்கள் பிரச்சனையின் ஒரு அங்கமாக இருக்கின்றீர்கள். மக்கள் உங்களிடம் அப்படி பேசுவதை அனுமதிக்க வேண்டாம். இது அருவருப்பாக உள்ளது."
"கமலா ஹாரிஸ்-ஐ டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரிப்பதற்கு இதை விட சிறந்த சமயம் எதுவும் இருக்க முடியாது. தேர்தலில் ஸ்விஃப்டீஸ் வாக்களிப்பதை காண காத்திருக்கிறேன். நீலத்திற்கு ஓட்டுப்போடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- முதல் பிரிக்ஸ் மாநாடானது 2009 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று ரஷியாவின் ஏகட்ரின்பர்க் [Yekaterinburg] நகரில் வைத்து நடந்தது.
- ஐநாவுக்கான பிரான்சில் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான ஜீன் டேவிட் லெவிட்டே [Jean David Levitte] எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
BRICS கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும். இதில் 2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. இந்த 5 நாடுகளில் பெயரில் உள்ள முதல் எழுத்தின் சுருக்கமே BRICS. கடந்த ஜனவரி 2024 இல் எகிப்து, எத்தியோப்பியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
BRICS கூட்டமைப்பின் முக்கிய நோக்கம், அமைதியை நிலைநாட்டுவது, பாதுகாப்பு , நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதே ஆகும். முதல் பிரிக்ஸ் மாநாடானது 2009 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று ரஷியாவின் ஏகட்ரின்பர்க் [Yekaterinburg] நகரில் வைத்து நடந்தது. 16 வது பிரிக்ஸ் மாநாடானது வரும் அக்டோபர் 22 முதல் 24 வரை ரஷியாவின் காசன் [Kazan] நகரில் வைத்து நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தற்போது ரஷியா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் இந்தியாவுக்கான அழைப்பு செய்தியைத் தெரிவித்துள்ளார் அதிபர் புதின்.
Egypt, Ethiopia, Iran and the United Arab Emirates. ஸ்விட்ஸ்ர்லாந்தில் உள்ள ஜெனிவா சென்டரில் நடந்த ஐநா சபை கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் BRICS கூட்டமைப்பு ஏன் உருவானது என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது, அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்ற ஜி7 கூட்டமைப்பில் மற்ற யாரையும் அனுமதிக்காததால்தான் BRICS உருவானதாகக் கூறியுள்ளார்.
சர்வதேச பொருளாதார மற்றும் பாதுகாப்பு நல்லுறவுகளைப் பேண வளர்ச்சிப்பாதையில் இருக்கும் நாடுகளுக்குக் குழு தேவை. ஆனால் அதற்கான குழுவான ஜி7 இல் நீங்கள் யாரையும் நுழைய விடவில்லை. எனவே நாங்கள் எங்களுக்கான ஒரு குழுவை உருவாக்கினோம். நாளடைவில் அது மிகப்பெரிய ஒரு குழுவாகப் பரிணமித்துள்ளது. எல்லோரும் அந்த குழுவின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியுள்ளனர் என்று ஐநாவுக்கான பிரான்சில் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான ஜீன் டேவிட் லெவிட்டே [Jean David Levitte] எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். சமீபத்தில் இத்தாலியின் நடந்த ஜி7 மாநாட்டில் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- வடகொரிய தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
- முதன்முறையாக அணுஆயுத தயாரிப்பதற்கான பொருட்களை உருவாக்கும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வடகொரியா கடும் சவாலாக விளங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அணுஆயுதம்தான். எப்போதெல்லாம் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் போர்ப்பயிற்சி மேற்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து பதிலடி கொடுப்போம் என வடகொரியா அச்சுறுத்தும்.
அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணுஆயுதம் இருப்பதாக வடகொரியா சொல்லி வருகிறது. எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் பணிகளை இன்னும் துரிதப்படுத்துமாறு கிம் ஜாங் உன் வலியுறுத்திருந்தார். இது வழக்கம் போல் கிம் ஜாங் உன்னின் மிரட்டலாக இருக்கும் என உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் யுரேனியம் செறிவூட்டல் அதிக அளவில் உற்பத்தி செய்யும் வசதிகளை வடகொரிய அதிபர் பார்வையிடுவது போன்ற படம் வெளியாகியுள்ளது.
யுரேனியம் செறிவூட்டல் மையத்திற்கு அவர் தற்போது சென்றாரா? என்பது உறுதியாகவில்லை. என்றபோதிலும் வடகொரிய அணு ஆயுதங்களை அதிக அளவில் பெருக்குவதில் உறுதியாக உள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் முக்கியமானதாகும். இதற்கிடையே அணுஆயுத இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில், இந்த இடத்திற்கு சென்றார் என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை.
வடகொரியாவின் தற்பாகாப்பிற்கான அணுஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்பதால், யுரேனியம் செறிவூட்டலை வசதிகளை அதிகரிக்க கிம் ஜாங் உடன் வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே அந்த இடங்களுக்கு சென்றுள்ளார் எனத் தகவல் கூறப்படுகிறது.
யுரேனியம் செறிவூட்டல் முதல் அணுஆயுதம் தயாரிப்பது வரை கிம் ஜாங் உன்னுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
யுரேனியம் செறிவூட்டலுக்கான புதிய வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டும். இது அணுஆயுதம் தயாரிப்பதற்கான பொருட்களை உற்பத்தியை செய்வதில் மேலும் வலுவடையச் செய்யும், அணுஆயுத பொருட்களை தயாரிப்பதில் தங்களுடைய நீண்ட காலம் இலக்கை நிர்ணயம் செய்வது அவசியம் என்பதை கிம் ஜாங் உன் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
2006-ம் ஆண்டு முதன்முறையாக வடகொரிய அணுஆயுத சோதனை மேற்கொண்டது. அப்போது ஐ.நா. வடகொரியாவுக்கு தடைவிதித்தது. அதன்பின் முதன்முறையாக யுரேனியம் செறிவூட்டல் வசதியை வடகொரியா தற்போது வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த இந்த படத்தை பதிவிட்டிருக்கலாம். வரவிருக்கும் அமெரிக்க அரசு வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக்குவது சாத்தியமற்றது என்பதை உணர வைக்க இப்படி செய்திருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களிடம் அணுஆயுதம் உள்ளது என்பதை மற்ற நாடுகளில் அறிந்து கொள்வதற்கான தகவலாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
- அர்னால்டு, சல்வெஸ்டர் ஸ்டாலோனால் ஈர்க்கப்பட்டு பாடிபில்டராக மாறியுள்ளார்.
- ஒருநாளைக்கு ஏழு முறை சாப்பிடுவார், அதில் இரண்டரை கிலோ இறைச்சி அடங்கும் என கூறப்படுகிறது.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக். 36 வயதான இவர் சிறந்த பாடிபில்டர் ஆவார். தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்டார்.
ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கோமா நிலைக்கு செல்லப்பட்டார். நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது.
இது தொடர்பாக அவரது மனைவி அன்னா கூறுகையில் "அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், மார்பில் கையை வைத்து நன்றாக அழுத்தி முதலுவதி செய்தேன், ஆம்புலன்ஸ் வரும்வரை அவ்வாறு செய்தேன். இலியா உடல்நலம் பெற வேண்டும் என எல்லா நேரத்திலும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவருடன் எல்லா நாட்களும் செலவழித்தேன். இரண்டு நாட்களுக்கு அவருடைய இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது. ஆனால், அவருடைய மூளை செயலிழந்ததாக டாக்டர்கள் பயங்கரமான செய்தியை என்னிடம் தெரிவித்தனர்" என்றார்.

மேலும், "இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பலர் எனக்கு உதவியும் ஆதரவையும் வழங்க தயாராக உள்ளனர் என்று கூறியது, நான் இந்த உலகத்தில் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது" என்றார்.
ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர் தினந்தோறும் 16,500 கலோரிகள் என்ற அளவிற்கு ஒருநாளைக்கு ஏழு முறை சாப்பிடுவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 2.5 கிலோ இறைச்சி மற்றும் 108 சுஷி (ஜப்பான் உணவு வகை) சாப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
6 அடி ஒரு இன்ச் உயர்ம் கொண்ட இவர் 154 கொடை கொண்டவராக இருந்தார். இவரது மார்பளவு 61 இன்ச் ஆகும்.
இவர் பள்ளிக்கூடம் படிக்கும்போது 70 கிலோ எடை இருந்தாகவும், புஷ்-அப் அவரால் எடுக்க முடியாது எனவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. பின்னர் அர்னால்டு, சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு பாடிபில்டராக ஆவதற்கு கடுயைமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
- ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்
- பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார்.
உக்ரைன் போரும் இந்தியாவும்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவால் உதவ முடியும் என அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட மேற்கு நாடுகள் கூறி வரும் நிலையில் மோடியின் ரஷிய பயணம் மற்றும் அதன்பின்னான உக்ரைன் பயணம் சர்வதேச கவனம் பெற்றது. ரஷியாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமே என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி ரஷியா உடனான போர் நிறுத்தம் குறித்தும் இந்தியா- உக்ரைன் வர்த்தக உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய மாநாடு பணிகள் தொடர்பாக நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அஜித் தோவல் தூது
மேலும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார். மோடி உக்ரைன் சென்று சரியாக இரண்டரை வாரங்கள் கழிந்து ரஷியா சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் புதினை சந்தித்து கைகுலுக்கி பேசுகையில், பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அவரது உக்ரைன் பயணம் குறித்தும், அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்தும் உங்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார். எனவே உங்களை சந்தித்து இதுபற்றி விளக்கமாக கூற என்னை தனிப்பட்ட முறையில் பிரதமர் [மோடி] அனுப்பி வைத்துள்ளார் என்று பேசியுள்ளார். அதிபர் புதின் மற்றும் அஜித் தோவல் சந்திப்பின்போது இருவரும் தனியே உரையாடியுள்ளனர். அப்போது உக்ரைன் போரை நிறுத்துவதற்காக மோடியின் அமைதி திட்டத்தை அஜித் தோவல் புதினிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரமாகும் போர்
இதற்கிடையே அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் புதினின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மோடி உக்ரைன் சென்று திரும்பிய சில நாட்களிலேயே ரஷியா- உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைய தொடங்கியது. இருவரும் மாறி மாறி டிரோன்கள் மூலமும் ராக்கெட்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறனர். உக்ரைன் தலைங்கர் கீவில் மின்சார கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா பெரிய அளவில் தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தத்க்து.
- மீன்களை நெக்லஸ் போலவும் அணிந்துள்ளார்.
- வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியாகி 51 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.
முன்பெல்லாம் "பேஷன் ஷோ" விழாக்களில் தான் புதுமையான உடைகளை அறிமுகம் செய்வார்கள். இப்போதெல்லாம், தங்கள் கற்பனைக்கேற்ற உடைகளை, ஆர்வமுள்ள சிலரே தயாரித்து அணிந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக் அள்ளிவிடுகிறார்கள்.
அப்படி ஒரு மாடலிங் பெண், மீன்களை உடையாக்கி சமூகவலைத்தளத்தின் பார்வையை தன்பக்கம் திருப்பி உள்ளார். அவர் நூற்றுக்கணக்கான மீன்களை நூலில் கோர்த்து உடையாக அணிந்திருக்கிறார். அதை அணிந்து கொண்டு பேஷன்ஷோ மேடைக்கு பதிலாக ரோட்டில் அன்னநடை போட்டு வீடியோ பதிவு செய்துள்ளார்.
மீன்களை நெக்லஸ் போலவும் அணிந்துள்ளார். ஒரு பெரிய மீனை, நன்றாக வாயைத் திறக்க வைத்து, கைப்பைபோல மாற்றி தூக்கி வருவது வலைத்தளவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வலைத்தளப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி 51 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள், ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை பதிவிட்டனர்.
- அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
- பதவியை பயன்படுத்தி சீனாவுக்கு உளவு பார்த்ததும் இதற்கு லஞ்சமாக ரூ.41 லட்சம்வரை (50 ஆயிரம் அமெரிக்க டாலர்) மற்றும் பரிசுகளை பெற்றதும் தெரியவந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் யூக் சிங்க். சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் பிறந்து அமெரிக்கவில் குடியேறினார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் அலெக்சாண்டர் பணியில் இருந்தபோது அமெரிக்கா ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை ரகசியங்களை சீனாவுக்கு கசிய விட்டதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அலெக்சாண்டர் தன்னுடைய பதவியை பயன்படுத்தி சீனாவுக்கு உளவு பார்த்ததும் இதற்கு லஞ்சமாக ரூ.41 லட்சம்வரை (50 ஆயிரம் அமெரிக்க டாலர்) மற்றும் பரிசுகளை பெற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்த அலெக்சாண்டருக்கு அமெரிக்கா கோர்ட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
- இரவில் விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
- பாலம் உடைந்ததன் காரணமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
பெர்லின்:
கிழக்கு ஜெர்மனியின் சக்சோனி மாகாணம் டிரெஸ்டன் நகரில் எல்பே ஆறு ஓடுகிறது. பழைய டிரெஸ்டன் மற்றும் புது டிரெஸ்டன் நகரங்களை இணைக்கும் வகையில் எல்பே ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் அளவில் 'கரோலா' பாலம் கட்டப்பட்டிருந்தது.
கார்கள், கனரக வாகனங்கள் போக்குவரத்திற்காக ஒரு பகுதியும், டிராம்கள், சைக்கிள்கள் பாதசாரிகள் செல்வதற்காகவும் இந்த பாலத்தில் வசதி செய்யப்பட்டிருந்தது. நகரின் முக்கிய போக்குவரத்து அம்சமாக இந்த பாலம் விளங்குகிறது.
இந்தநிலையில் திடீரென இந்த பாலம் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியது. இரவில் இந்த விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பாலம் உடைந்ததன் காரணமாக அங்கு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் சாலை, டிராம் மட்டுமின்றி சுற்றுலா படகுகள் போக்குவரத்தும் தடைப்பட்டது.






