என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கண்டெய்னருக்குள் சோதனை செய்தபோது ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டு பிடித்ததனர்.
- ரவியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கர்நாடகா மாநிலத்திலிருந்து இரும்பு பீரோ மற்றும் கட்டில் ஏற்றி கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி வந்தது. பெருந்துறை போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கண்டெய்னருக்குள் சோதனை செய்தபோது ரகசிய அறை இருந்ததை போலீசார் கண்டு பிடித்ததனர். ரகசிய அறையை திறந்து சோதனை செய்தபோது அதில் 745 கிலோ கிராம் எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
பின்னர் லாரி டிரைவரை பிடித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கென்னாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி (30) என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரவியை கைது செய்து கண்டெய்னரில் ரகசிய அறையில் இருந்த புகையிலை மற்றும் குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரவியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் விவாகரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கட்டுக்கடங்காத காளையை போல துள்ளிக்குதித்து எகிறி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பெரிய அளவில் உயர்வு என்பது எப்போதாவது ஒரு நாள் இருக்கும்.
ஆனால் சமீப நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் விலை மாற்றம் கண்டு, சவரனுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. நேற்று இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தங்கம் விலை ஏற்றம் கண்டது.
இப்படியாக விலை ஏறிச்சென்றால், தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ? என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவி வருகிறது. இனிவரும் நாட்களிலும் விலை ஏற்றம் இருந்தாலும், அவ்வப்போது விலை சற்று குறையும் என்றே சொல்லப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அதன்படி நேற்று காலையில் கிராமுக்கு ரூ.370-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 960-ம் உயர்ந்து இருந்தது.
பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.280-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 240-ம் அதிகரித்தது. ஆக ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.650-ம், சவரனுக்கு ரூ.5 ஆயிரத்து 200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது.
இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை நேற்று பதிவு செய்துவிட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 ஆயிரத்து 330-ம், சவரனுக்கு ரூ.18 ஆயிரத்து 640-ம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கும் பார் வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,880
27-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
26-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,200
25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-1-2026- ஒரு கிராம் ரூ.400
27-1-2026- ஒரு கிராம் ரூ.387
26-1-2026- ஒரு கிராம் ரூ.375
25-1-2026- ஒரு கிராம் ரூ.365
24-1-2026- ஒரு கிராம் ரூ.365
- இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும்.
- மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் அரச மரமும், வேப்ப மரமும் அடுத்தடுத்து, ஒன்றாக வளர்ந்துள்ளது.
கடந்த 20 ஆண்டு காலமாக இந்த மரங்கள் உள்ளன. இந்நிலையில் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும், அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க பக்தர்கள் முடிவு செய்தனர்.
இதற்கு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு நேற்று அரச, வேப்ப மரங்களுக்கு திருமண வைபோகம் நடந்தது. இதையொட்டி 2 மரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
அதனைதொடர்ந்து அரச மரம் ஆணாகவும், வேப்ப மரம் பெண்ணாகவும் கருதப்பட்டு, 2 மரங்களுக்கும் பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேம்பு மரத்திற்கு தாலி அணிவிக்கப்பட்டது. அதன் பின் விஷேச தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.
இந்த விநோத வழிபாட்டில் மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், 'அரச மரம் ஆண் மரம் ஆகும். அது போல வேப்ப மரம் பெண் மரமாகும்.
இவ்விரு மரங்களும் ஒன்றாக வளர்வதை பார்ப்பது அரிதாகும். ஆனால் மூலைக்கரைப்பட்டி செல்வவிநாயகர் கோவிலில் 2 மரங்களும் ஒன்றாகவே வளர்ந்து வருவது அதிசயமாகும்.
இவ்வாறு வளரும் மரங்களில் தெய்வாம்சம் பொருந்தி இருக்கும். இறைவன் மரங்களில் குடியிருந்து வேண்டிய வரங்களை அருளுவார் என்பது எங்களது நம்பிக்கை.
அதிலும் மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது விஷேசமாகும். இதனை காண்போர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும். திருமண காட்சியை கண்டு வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்றனர்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு முற்றிலுமாக குறைந்தது.
- காவிரி ஆற்றில் தொடர்ந்து 5-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு முற்றிலுமாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இந்தநிலையில் காவிரி ஆற்றில் தொடர்ந்து 5-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக நீடிக்கிறது.
இருப்பினும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகள் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.
- மாணவர்களை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடந்துள்ளன.
சென்னை:
சாதி பாகுபாட்டை களைய பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
சாதிய பாகுபாடுகளை களையும் வகையில் UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகள் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி நிறுவனங்களில் குறிப்பாக SC, ST மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகின்றன. தென்னிந்தியா, காஷ்மீர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் மற்றும் சித்ரவதைகள் நடந்துள்ளன. இந்த சூழலில், சமத்துவ பாதுகாப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
மாணவர் இறப்புகளைத் தடுப்பது, பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக இருந்தால், இந்த விதிமுறைகள் வலுப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையில் திருத்தப்பட்டு, உண்மையான பொறுப்புணர்வுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
- ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதல் நாளான 20-ந்தேதி கவர்னர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
அவர்களுக்கு கடந்த 24-ந்தேதி பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைத்தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டசபை அலுவல்கள் தள்ளிவைக்கப்பட்டன.
தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.
தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இல்லாதபட்சத்தில் பிப்ரவரி 3-ம் வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் அவையை நடத்தி முடிக்கலாமா? என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னை வெள்ள பாதிப்பில் சிக்கிக்கொள்ளும்.
- நிபுணர் குழு அறிக்கையை வெளியிடவேண்டும்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் உவகை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விதுபாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து 2023-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்க பரந்தூர் தகுந்த இடமா என்பதை கண்டறிந்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ். தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்த குழுவின் நீரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கை இதுவரை பொதுமக்கள் முன்பு வெளியிடப்படவில்லை. சாத்தியக்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது.
பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதி குறித்து பல வல்லுநர்களை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினோம். அதில், 26.5 சதவீதம் நீர்நிலைகளாக இருக்கிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் அறிக்கையில் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சென்னை வெள்ள பாதிப்பில் சிக்கிக்கொள்ளும். போதுமான நீரியல் ஆய்வுகள் இல்லாமல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, தமிழ்நாடு அரசு அனுமதிகள் வழங்குவதையும், நிலப்பயன்பாடு மாற்றத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். நிபுணர் குழு அறிக்கையை வெளியிடவேண்டும். மாற்றுவழிகள் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மயிலை பாலாஜி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
முடிச்சூர்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், PTC அடுக்குமாடி குடியிருப்புகள், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்கா ரோடு, நடுவீரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
செம்பியம்: கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கேகேஆர் எஸ்டேட், மிக்டிக் காலனி, கேகேஆர் நகர், கல்கத்தா கடை, விஓசி தெரு, நவின் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் தெரு, உடையார் தோட்டம், டி.வி.கே. தெரு.
முகப்பேர்: முகப்பேர் கிழக்கு, பன்னீர் நகர், திருவள்ளுவர் நகர், ஸ்பார்டன் நகர் மற்றும் அவென்யூ, கார்டன் அவென்யூ, மகிழ்ச்சி காலனி, கோல்டன் பிளாட் மற்றும் காலனி, மேற்கு முனை காலனி, சீனிவாசா நகர், சத்யா நகர், ஆபிசர் காலனி, இளங்கோ நகர், மூர்த்தி நகர், குமரன் நகர், டிவிஎஸ் காலனி மற்றும் அவென்யூ, கலெக்டர் நகர், ரெடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், கிருஷ்ணா நகர்.
மாத்தூர்: சின்னசாமி நகர், எம்எம்டிஏ மெயின் ரோடு, ஓமக்குளம் தெரு, சக்தி நகர், நேரு நகர், பெருமாள் கோவில் தெரு, டெலிகாம் நகர், பெரிய மாத்தூர், புதுநகர், மஞ்சம்பாக்கம் அசிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை.
பள்ளிக்கரணை: கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மயிலை பாலாஜி நகர், பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, ஆதிபுரீவரர், NIOT, பவானியம்மன் கோவில், கிருஷ்ணா நகர், மணிமேகலை நகர், குபேரன் நகர், ராம் நகர்.
பல்லாவரம்: பாலமுருகன் நகர், ரோஸ் நகர், அம்பாள் நகர், சுபம் நகர், பெருமாள் நகர், பல்லவ கார்டன், தேன்மொழி நகர், பூபதி நகர், சௌந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், கீழ்க்கட்டளை பேருந்து நிலையம், இங்கிலீஷ் எலெக்ட்ரிக் நகர், 200 அடி ரேடியல் சாலை, ரோஸ் நகர், எம்.கே.நகர், கணபதி நகர், ஈச்சங்காடு சிக்னல், இன்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், S. கொளத்தூர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், அன்பு நகர், Self Help இண்டஸ்ட்ரீஸ்.
புழல்: சேந்திரம்பாக்கம், தீயபாக்கம், கொசப்பூர், தியாக விவதாசி நகர், கானம் பாளையம், வெங்கடேஸ்வரா நகர், ஏவி டைல்ஸ், பெரியார் நகர், நாகாத்தம்மன் கோவில்.
- 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- சென்னை கோயம்பேட்டில் இருந்து தலா 60 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
வார இறுதி விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தைப்பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 360 பேருந்துகள், நாளை மறுநாள் 485 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து தலா 60 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
- இந்தக் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சக புலம்பெயர் தொழிலாளர்களான சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாக்கூர் மற்றும் விகாஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்.
சென்னை தரமணியில் கௌரவ் குமார் என்ற பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி, குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை விவகாரம் தொடர்பாக சிகந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட பீகாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பரவி வரும் பொய் செய்திகளை நம்பவேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அவர்கள் மீதான வெறுப்புணர்வே இந்தக் கொலைக்குக் காரணம் என்றும் ஒரு சில சமூக வலைதளப் பதிவுகள் தவறான பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. இது மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் நோக்கில் பரப்பப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கௌரவ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்தது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சக புலம்பெயர் தொழிலாளர்களான சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாக்கூர் மற்றும் விகாஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குள் இருந்த தனிப்பட்ட விரோதம் இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர். தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடந்த மோதலை, மாநிலத்தின் பாதுகாப்போடு தொடர்புபடுத்திப் பேசுவது முற்றிலும் தவறானது.
சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் வெறுப்புணர்வைத் தூண்டுவது சட்டப்படி குற்றமாகும்.
எந்தவொரு செய்தியையும் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை ஆராயுங்கள். பொய் செய்திகளைத் தவிப்போம்! வெறுப்புணர்வை வேரறுப்போம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கினார்.
தமிழக அரசு சார்பில் "உலகம் உங்கள் கையில்" என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல இன்று இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிந்துஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உறுப்பினர் ரத்னகுமார், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ரவிசங்கர், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் மாணவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டார்.






