என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் தடை பட்டது. பல மாதங்களுக்கு பின் விளையாடிய விராட் கோலி டக் அவுட்டும் ரோகித் சர்மா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமானார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அவரிடம் தொப்பியைக் கொடுத்து அணிக்கு வரவேற்றார்.
இதேபோல் ஆஸ்திரேலிய அணியில் மிச்சேல் ஓவன், மேத்யூ ரென்சா ஆகியோரும் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்கள்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது தடைபட்டுள்ளது
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார்.
அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ரன்னில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 8.1 ஓவரில் 25 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது.
4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யருடன் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 25 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப் பட்டது. அதாவது ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.
இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மீண்டும் மழையால் தடை பட்டது. பல மாதங்களுக்கு பின் விளையாடிய விராட் கோலி, ரோகித் சர்மா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்தது.
- வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணியும், அதேநேரத்தில் அரையிறுதியை உறுதிப்படுத்த இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டும்.
இந்தூர்:
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இந்தூரில் இன்று நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்து தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. முந்தைய ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 330 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியை அதற்குள் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது. 6-வது சிறப்பு பந்து வீச்சாளரை சேர்க்காதது இந்திய அணிக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி அதிகரிப்பதுடன் அரையிறுதி வாய்ப்பும் சிக்கலாகும்.
இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீல் தியோல், ரிச்சா கோஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்சிடம் இருந்து இன்னும் கணிசமான பங்களிப்பு வரவில்லை. பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, கிரந்தி கவுட், சினே ரணா, ஸ்ரீ சரனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி தனது முதல் 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை அணிகளை வரிசையாக பதம் பார்த்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டத்தில் 78 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து மழையால் தோல்வியில் இருந்து தப்பியது. இங்கிலாந்து இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அரையிறுதியை உறுதி செய்து விடும்.
இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் கேப்டன் நாட் சிவெர், ஹீதர் நைட், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், லின்ட்சே சுமித்தும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணியும், அதேநேரத்தில் அரையிறுதியை உறுதிப்படுத்த இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 79 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 41-ல் இங்கிலாந்தும், 36-ல் இந்தியாவும் வென்றுள்ளன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி, ரேணுகா சிங்.
இங்கிலாந்து: அமே ஜோன்ஸ், டாமி பீமோன்ட், ஹீதர் நைட், நாட் சிவெர் (கேப்டன்) சோபியா டங்லி, எம்மா லாம்ப், அலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன், லின்ட்சே சுமித், லாரென் பெல்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் கோழைகள்.
- 'விளையாட்டிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்' என்பது அரசை ஆதரிப்பவர்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்றொடர்.
நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) எடுத்த நடவடிக்கையும் இந்தியாவில் பேசுபொருளாகி உள்ளது.
நவம்பர் மாதம் பாகிஸ்தானுடனான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட போதும் இந்திய அணி துபாயில் பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடியிருந்தது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா அணி மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி ஆபிகானிஸ்தானிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அரசும் விளையாட்டை விட நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் அப்பாவிகளின் இரத்தத்தை குடித்து வளர்ந்து வருகிறது. அவர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்கும் கோழைகள். பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்ய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு சிறப்பானது. பிசிசிஐ மற்றும் இந்திய அரசு விளையாட்டுகளை விட நாட்டை முன்னுரிமைப்படுத்துவது குறித்து அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார்.
மற்றொரு பதிவில், பிரியங்கா சதுர்வேதி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒற்றுமையாக இலங்கை அணியும் தொடரிலிருந்து விலகும் என்று நம்புகிறேன். 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. பிசிசிஐ போலல்லாமல், மற்ற ஆசிய நாட்டு கிரிக்கட் வாரியங்கள் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்கும் என்று நம்புகிறேன்.
எனது கருத்துக்கள் அரசியலைப் பற்றியது அல்ல, இழந்த உயிர்களைப் பற்றியது. 'விளையாட்டிலிருந்து அரசியலை விலக்கி வைக்க வேண்டும்' என்பது அரசாங்கத்தையும் பிசிசிஐயையும் ஆதரிப்பவர்கள் எளிதில் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர். ஆனால் அரசியலை விலக்கி வைப்பது பற்றியது அல்ல, பயங்கரவாதத்தை விலக்கி வைப்பது பற்றியது" என்று சுட்டிக்காட்டினார்.
- ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.
- பல மாதங்களுக்கு பின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோகித் சர்மா இன்று களமிறங்குகின்றனர்.
பெர்த்:
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.
பல மாதங்களுக்கு பின் இந்திய அணியில் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட உள்ளனர். இதனால் இந்திய அணி மேலும் வலுப்பெற்று காணப்படுகிறது.
தற்போதைய கேப்டன் சுப்மன் கில் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் தனது திறமையை வௌிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்குவார்கள் என்றும், விராட் கோலி 3-வது வீரராகவும், அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சில் முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்கும், சுழலில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு பெரிய பலமாகத் திகழ்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உத்தேச இந்திய அணியின் விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், நிதிஷ்குமார், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா.
உத்தேச ஆஸ்திரேலிய அணியின் விவரம்:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கூப்பர் கனோலி, நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குனெமான், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்.
- பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்துக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ. நிற்கும். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு டி20 போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகி உள்ளது.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கொழும்பு:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இதன் 19-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக 46 ஓவராகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் 25 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை நீண்ட நேரம் நீடித்ததால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மற்ற 2 இடங்களுக்கு இங்கிலாந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- மழையால் ஆட்டம் 36 ஓவராக குறைக்கப்பட்டது.
- 25 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
50 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடைபெறுகிறது.
கொழும்பில் இன்று பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
ஆட்டத்தின்போது மழை அவ்வப்போது குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் 36 ஓவராக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது, மீண்டும் மழை குறுக்கீடு செய்தது.
அதன்பின் மழை நிற்கவில்லை. 9.41 மணிக்கு மழை நின்றால் 20 ஓவர் போட்டியாக நடத்தலாம் என நடுவர்கள் அறிவித்தனர். ஆனால், மழை நிற்கவில்லை. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் 4-ல் வெற்றி, ஒரு போட்டியில் முடிவு இல்லை. இதன்மூலம் 9 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்ற 8 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 4 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவு இல்லை. இதன்மூலம் 7 புள்ளிகள் மூலம் இங்கிலாந்து 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 4 போட்டிகளில் தலா இரண்டு வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளன.
- முதலில் விளையாடிய வங்கதேசம் 207 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
- வங்கதேச பந்து வீச்சாளர் ஹொசைன் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. தவ்ஹித் ஹிரோடி அரைசதமும், மெஹிதுல் இஸ்லாம் அங்கோன் 46 ரன்களும், ஷான்டோ 32 ரன்களும் அடிக்க வங்கதேசம் 49.4 ஓவரில் 207 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் அலிக் அதானஸ் 27 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் 39 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 133 ரன்னில் சுருண்டு, 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரிஷாத் ஹொசைன் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.
2ஆவது போட்டி வருகிற 21ஆம் தேதி நடக்கிறது.
- ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் பெரிய ஜாம்பவான்கள்.
- விராட் கோலியை போன்ற சிறந்த சேஸிங் வீரர் இல்லை.
இந்தியா 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி, ரோகித் சர்மா மற்றும் விராட் கொலி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:-
கிரிக்கெட் பயணத்தின்போது ரோகித் சர்மா, விராட் கோலிக்கு எதிராக அதிக அளவில் விளையாடும் பாக்கியம் கிடைத்தது. ஒருநாள் போட்டியில் இரண்டு பேரும் ஜாம்பவான்கள். விராட் கோலியை போன்ற சிறந்த சேஸிங் வீரர் இல்லை. நீங்கள் டிக்கெட் விற்பனையை பார்த்திருப்பீர்கள். ஏராளமான மக்கள் மைதானத்திற்கு வருகை தந்து, அவர்களை பார்க்க விரும்புகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான போட்டிகளுக்கான மைதானங்கள் நிரம்பியுள்ளதை பார்க்கும்போது, இது எங்களுடைய குரூப்பிற்கு சிறந்த அனுபவமாக இருக்கப் போகிறது.
இந்த தொடர் அதிக ஸ்கோர் கொண்டதாக இருக்கப் போகிறது என்று நம்புகிறென். ஆனால், இரண்டு அணிகளுக்கும் முதல் 10 ஓவர் சவாலானதாக இருக்கும். வெற்றியும், தோல்வியும் அதை பொறுத்து அமையலாம்.
- பில் சால்ட் (3), பட்லர் (29), ஜேக்கப் பெத்தேல் (15), ஹாரி ப்ரூக் (20) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
- சாம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுவதற்கான இங்கிலாந்து சென்றுள்ளது.
முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பில் சால்ட் (3), பட்லர் (29), ஜேக்கப் பெத்தேல் (15), ஹாரி ப்ரூக் (20) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சாம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 49 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் நியூசிலாந்து பேட்டிங் செய்ய இருந்தது. திடீரென கனமழை பெய்தது. மழை நிற்க நீண்ட நேரம் ஆனது. பின்னர் மைதானம் விளையாட முடியாத வகையில் சேதம் அடைந்திருந்ததால், போட்டி கைவிடப்படுவதாக நடுவர் அறிவித்தார். இதனால் முதல் போட்டி வெற்றித் தோல்வியின்றி கைவிடப்பட்டது. 2ஆவது போட்டி நாளைமறுதினம் இதேமைதானத்தில் நடக்கிறது.
- பாகிஸ்தான் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்துள்ளது.
- இந்தியாவைப் போல நாங்களும் பாகிஸ்தான் உடன் கைகுலுக்க மாட்டோம்.
இஸ்லாமாபாத்:
கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலையீட்டால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்தியாவைப் போல நாங்களும் பாகிஸ்தான் உடன் கைகுலுக்க மாட்டோம் என ஆப்கான் முன்னாள் கேப்டன் கரீம் சாதிக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்கள் குழந்தைகள் ஏழை வீடுகளிலிருந்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்களைக் கொல்வதன் மூலம், பாகிஸ்தான் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் உலகை ஒன்றிணைக்க உழைக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான், கிரிக்கெட்டையே அழிக்க விரும்புகிறது. இவை எதுவும் எங்களுடைய கிரிக்கெட்டை நிறுத்தாது. இந்தியாவைப் போல நாங்களும் பாகிஸ்தான் உடன் கைகுலுக்க மாட்டோம்.
என கூறினார்.






