என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
பெர்த் மைதானத்தில் இரண்டு நாளில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி இதுதான். இதனால் இந்த பிட்ச் பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளானது.
இதனால் ஐசிசி பிட்ச்-ன் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி ஆய்வு செய்ததில் பிட்ச் மதிப்பு நன்றாக உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டை போட்டி நடுவர் ரஞ்சன் மதுகல்லே வழங்கினார்.
ஐசிசி பிட்ச் மதிப்பீடு அமைப்பில், பிட்ச்சுகளை 'மிகச் சிறந்தது' (Very Good), 'நல்லது' (Good), 'சராசரி' (Average), 'திருப்திகரமற்றது' (Unsatisfactory) என வகைப்படுத்துகிறது.
இதில் ஐ.சி.சியின் நான்கு வகை பிட்ச் மதிப்பீட்டு முறையின்படி, 'மிகவும் நல்லது' என்பது அவர்களின் மிக உயர்ந்த மதிப்பீடாகும். மேலும் இரண்டு நாள் நடந்த போட்டியின் போது பிட்ச் நல்ல கேரி, வரையறுக்கப்பட்ட சீம், ஸ்விங் மற்றும் சரியான பவுன்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தது என்பதைக் குறிக்கிறது.
- மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
- தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும்.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்த மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார். இதனால் கம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வி.வி.எஸ். லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் இப்போதைக்கு நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
இப்போதைய சூழ்நிலையில் கம்பீருக்கு மாற்றாக வேறு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை. அவர் அணியை மறுசீரமைப்பு செய்தவர். கம்பீரின் ஒப்பந்தம் 2027 உலக கோப்பை வரை இருக்கிறது.
தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் அணி தேர்வு குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
- ஒரு வருடத்தில் 2-வது முறையாக இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் 0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் அதில் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் கம்பீர் டவுன் டவுன் என கோஷமிட்டனர். அதனை கம்பீர் கண்டுகொள்ளவில்லை.
இதனை பார்த்த இந்திய வீரர் சிராஜ் அப்படியெல்லாம் கோஷமிட வேண்டாம் என்பது போல வாயில் விரல் வைத்து சைகை காட்டினார். தொடர்ந்து அனைவரையும் அமைதி காக்கவும் அவர் வேண்டி கொண்டார். இதில் ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
- ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.15 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்கவைத்த வீராங்கனைகளுக்கான ஊதியம் கழிக்கப்படும். ஒரு வீராங்கனையை மட்டுமே தக்க வைத்த உ.பி. வாரியர்சிடம் அதிகபட்சமாக 14½ கோடி கையிருப்பு உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.5.70 கோடி, குஜராத் ஜெயன்ட்ஸ் 9 கோடி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ரூ.5¾ கோடி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரூ.6.15 கோடி இருப்பு வைத்துள்ளன.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது. தீப்தி ஷர்மாவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தக்க வைத்த வீராங்கனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு சலுகையாக ஆர்.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏலத்தில், தங்களது முந்தைய அணியில் ஆடிய வீராங்கனைகளை வாங்குவதற்கு ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தும் போது முன்னுரிமை அளிக்கப்படும். உ.பி. வாரியர்ஸ் அதிகபட்சமாக 4 ஆர்.டி.எம். கார்டு வைத்துள்ளது. 5 வீராங்கனைகளை முழுமையாக வைத்துக்கொண்ட டெல்லி, மும்பை அணிகளுக்கு ஆர்.டி.எம். இல்லை.
- சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
- ஐதராபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்:
சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த போட்டியில் சர்வீசஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய குஜராத் அணி 12.3 ஓவரில் வெற்றி இலக்கை விரட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் உர்வில் படேல் 37 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர் ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய போட்டியில் 31 பந்தில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிவேக சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே 28 பந்தில் அவர் சதமடித்து அந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மாவுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது 31 பந்துகளில் சதமடித்து 2வது இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்தில் உர்வில் படேல் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் விளையாடிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 2ல் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது
- இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேசமயம் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக இந்திய அணி ஹோமில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில், சொந்த மண்ணில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்தது குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் காட்டமாக பேசி வீடியோவெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இந்தியாவிற்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் ஜாலியாக இருப்பார்கள். கடந்த 12 மாதங்களில் இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி உள்ளது. இந்தியாவில் விளையாடிய கடைசி 3 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 2ல் ஒயிட் வாஷ் ஆகி உள்ளது
இது இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலகட்டத்தில் உள்ளோம். உடனடியாக கஷ்டமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன பிரச்சனை உள்ளது. இந்திய வீரர்களின் தரம் குறைவாக உள்ளதா? ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்களா? வேகம், ஸ்பின் இரண்டிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழக்கிறார்கள்.
இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள். நிதிஷ் குமார் ரெட்டி இந்தாண்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் மொத்தமாகவே 14 ஓவர்களை மட்டும்தான் வீசி உள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் 7 பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். இந்திய அணியால் இன்னமும் சிறப்பாக விளையாட முடியும். திடீரென எப்படி இந்த அளவிற்கு சரிவு ஏற்படும்" என்று பேசியுள்ளார்.
WTC டெஸ்ட் தொடரில் 65 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் இந்தியாவின் 3 ஆம் வரிசை பேட்ஸ்மேனின் முதல் இன்னிங்சின் சராசரி 26 ஆகும். இது 2 ஆவது மோசமான உலக சாதனையாகும்.
ஆகவே இந்திய அணியின் 3 ஆம் வரிசை வீரர் யார் என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். வாஷிங்டன் சுந்தர் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 3 ஆம் வரிசையில் இறங்கினார். கவுகாத்தி டெஸ்டில் சாய் சுதர்சன் 3 ஆம் வரிசையில் இறங்கினார். இது இந்தியாவிற்கு உதவியதா?
WTC டெஸ்ட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. இலங்கை, நியூஸிலாந்துடன் அவே கேமில் 2 போட்டிகளும் ஆஸ்திரேலியாவுடன் ஹோமில் 5 போட்டிகளும் இந்தியா விளையாடுகிறது.
இந்தியா அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாட இன்னும் 7 மாதங்கள் உள்ளது. ஆனால் இப்போது இந்திய டெஸ்ட் அணியில் என்ன நடக்கிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாட என்ன செய்யவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- 3 முறை சாம்பியனான தமிழ்நாடு ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
- ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை ஐதராபாத், ஆமதாபாத், கொல்கத்தா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் 'எலைட்', 'பிளேட்' என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 'எலைட்' பிரிவில் களம் காணும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
நடப்பு சாம்பியன் மும்பை அணி 'ஏ' பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு 'டி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெறும்.
'பிளேட்' பிரிவில் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த பிரிவு ஆட்டங்கள் புனேயில் நடக்கின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு போட்டியில் 'எலைட்' பிரிவுக்கு ஏற்றம் பெறும். 'எலைட்' பிரிவில் கடைசி 2 இடத்தை பெறும் அணிகள் அடுத்த ஆண்டு 'பிளேட்' பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.
இந்த போட்டியில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (இருவரும் மும்பை), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), சஞ்சு சாம்சன் (கேரளா), அக்ஷர் பட்டேல் (குஜராத்), வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), ரியான் பராக் (அசாம்), வெங்கடேஷ் அய்யர் (மத்தியபிரதேசம்), தீபக் ஹூடா (ராஜஸ்தான்), ரவி பிஷ்னோய் (குஜராத்) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் விளையாடும் தமிழ்நாடு சீனியர் அணியில் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது.
- இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி இந்த 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இலங்கையில் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக முடிந்த அளவுக்கு இந்தியா போராடி வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஆச்சரியபட ஒன்றும் இல்லை.
- ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.
- பி பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த அட்டவணை சர்வதேச அணிகள் சூப்பர் 8 சுற்றில் இடம்பெற ஏதுவாக தயாரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது. இதில் 3 கத்துக்குட்டி நாடுகள் உள்ளன. இதனால் இந்த பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பி பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதிலும் பலம் வாய்ந்த அணிகளாக ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் உள்ளது.
அதேபோல் சி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், இத்தாலி இடம் பெற்றுள்ளது. இதில் பலம் வாய்ந்த அணிகளாக இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.
டி பிரிவில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. இதிலும் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்பட்டாலும் ஆப்கானிஸ்தான் இவர்களுக்கு சவால் விடும் வகையில் விளையாடும்.
இந்த 4 பிரிவிலும் எளிதான பிரிவாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்ற ஏ பிரிவு பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பி பிரிவு உள்ளது. இந்திய அணி எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வகையில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தான் அட்டவணையும் தயார் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
பலம் வாய்ந்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும் என்பதால் இப்படி அட்டவணை தயார் செய்திருக்காலம் எனவும் ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா உள்ளதால் இந்திய அணிக்கு சாதகமாக அனைத்தும் செய்வதாக உள்நாடு ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
- இந்த போட்டியில் 2 இன்னிங்சுகளையும் சேர்த்து மொத்தமாக 9 கேட்சுகளை மார்க்ரம் பிடித்துள்ளார்.
- 2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 8 கேட்சுகளை ரகானே பிடித்திருந்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் 2 இன்னிங்சுகளையும் சேர்த்து மொத்தமாக 9 கேட்சுகளை தென் ஆப்பிரிக்கா வீரர் ஏய்டன் மார்க்ரம் பிடித்துள்ளார். இதன்மூலம் ஒருடெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த ஃபீல்டர் என்ற 10 ஆண்டு கால ரகானேவின் சாதனையை மார்க்ரம் முறியடித்தார்.
2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 8 கேட்சுகளை ரகானே பிடித்திருந்தார். அதற்கு முன்பு கிரேக் சேப்பல் 1974-ம் ஆண்டு 7 கேட்சுகளை பிடித்திருந்தார். அவரது சாதனையை 40 ஆண்டுகளுக்கு பிறகு ரகானே முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்ததுள்ளது.
- சொந்த மண்ணில் இந்திய அணி 2-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்ததுள்ளது.
அதேசமயம் சொந்த மண்ணில் இந்திய அணி 2-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு கம்பீர் கூறியதாவது:-
இதை முடிவு செய்ய வேண்டியது பிசிசிஐ தான். நான் முன்பே சொன்னேன். இந்திய கிரிக்கெட் முக்கியம். நான் முக்கியமில்லை. இங்கிலாந்து மண்ணில் டெஸ்டில் நன்றாக விளையாடியபோதும், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றபோது இதே கம்பீர்தான் பயிற்சியாளராக இருந்தேன். இது கற்றுக்கொண்டிருக்கும் ஒரு அணி என கூறினார்.
- கிரிக்கெட் போட்டியை ஒரு அணியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இனி நாங்கள் தவறிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, இந்த வெற்றியால் தொடரை 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த நிலையில் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-
இது ஏமாற்றமளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இதில் எதிரணிக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் தொடரில் ஆதிக்கம் செலுத்தினர். எங்கள் மனநிலையில் நாங்கள் தெளிவாக இல்லை. எதிர்காலத்தில், நாங்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக மாறுவோம்.
கிரிக்கெட் போட்டியை ஒரு அணியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் அதைச் செய்யவில்லை. அது முழு தொடரை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது. எங்கள் சொந்த திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதை தான் இந்த தொடரிலிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம். இனி நாங்கள் தவறிலிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம் என பண்ட் கூறினார்.






