என் மலர்
நீங்கள் தேடியது "ஏய்டன் மார்க்ரம்"
- இந்த போட்டியில் 2 இன்னிங்சுகளையும் சேர்த்து மொத்தமாக 9 கேட்சுகளை மார்க்ரம் பிடித்துள்ளார்.
- 2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 8 கேட்சுகளை ரகானே பிடித்திருந்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் 2 இன்னிங்சுகளையும் சேர்த்து மொத்தமாக 9 கேட்சுகளை தென் ஆப்பிரிக்கா வீரர் ஏய்டன் மார்க்ரம் பிடித்துள்ளார். இதன்மூலம் ஒருடெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த ஃபீல்டர் என்ற 10 ஆண்டு கால ரகானேவின் சாதனையை மார்க்ரம் முறியடித்தார்.
2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 8 கேட்சுகளை ரகானே பிடித்திருந்தார். அதற்கு முன்பு கிரேக் சேப்பல் 1974-ம் ஆண்டு 7 கேட்சுகளை பிடித்திருந்தார். அவரது சாதனையை 40 ஆண்டுகளுக்கு பிறகு ரகானே முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும்.
- மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டி கடைசி ஓவரின், கடைசி பந்துவரை திரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.
ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை தொடர்களில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா அணி அசத்தியது. இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா வெற்றி வாய்ப்பை இந்தியாவிடம் பறிக் கொடுத்தது.
உலகக் கோப்பை தோல்வியை தொடர்ந்து போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் ஏய்டன் மார்க்ரம் கூறும் போது, "மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும். வலிக்கிறது. ஆனால் பந்துவீச்சாளர்கள் மற்றும் மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்."
"நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். அவர்களை எங்களால் அடிக்க முடிந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். எனினும், கிரிக்கெட் எனும் தலைசிறந்த போட்டியின் சூழல் இன்று எங்களுக்கானதாக அமையவில்லை."
"நாங்கள் ஏராளமான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை அது முடியாமல் தான் இருந்தது. போட்டியின் போது நாங்கள் சவுகரியமான நிலைக்கு வரவேயில்லை. எங்கள் மீது ஸ்கோர் போர்டு அழுத்தம் இருந்தது. அந்த வகையில், இந்த இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நாங்கள் என்பதை உணர முடியும்."
"இந்த முடிவு நல்ல முறையில் அமையும் என்று நம்புகிறேன். கடுமையான போட்டி அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம், எங்களது திறமையை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவோம் என்று நம்புகிறேன், என்று தெரிவித்தார்.






