என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஸ்மித் (131), அலெக்ஸ் கேரி (156) சதம் விளாசல்.
    • இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் சாய்த்தார்.

    இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று முன்தினம் காலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆலஅவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமான், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித், அலெக்ஸ் கேரி அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்திருந்தது. ஸ்மித் 120 ரன்களுடனம், கேரி 139 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 131 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 156 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் மளமளவென சரிய 414 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான நிஷாங்கா 8 ரன்னிலும், கருணாரத்னே 14 ரன்னிலும், சண்டிமல் 12 ரன்னிலும் வெளியேறினார்.

    ஆனால் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் குசால் மெண்டிஸ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மேத்யூஸ் 72 ரன்களுடனும், மெண்டிஸ் 35 ரன்களுடனும் விளையாடி வருகிறது.

    • எஸ்.ஏ.20 இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுனும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது.
    • ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதனையடுத்து, நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் அணியும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது. கடந்த 2 டி20 லீக் தொடரிலும் வேற்று கோப்பையை கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஹாட் ட்ரிக் முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்நிலையில், எஸ்.ஏ.20 அரையிறுதிக்கும் இறுதிப்போட்டிக்கும் இடையே இருந்த இடைவெளியில் என்ன செய்தீர்கள் என்று எம்.ஐ.கேப்டவுன் அணி கேப்டன் ரஷித் கானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் தற்போது PRISON BREAK என்ற இணைய தொடரை பார்த்து வருகிறேன். சவாலான சூழல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என அதிலிருந்து கற்று வருகிறேன். ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது. அதனால், தோன்றும் விஷயங்களை கையில் எழுதி வைத்து அடுத்தடுத்த ஓவர்களில் பயன்படுத்துவேன்" என்று தெரிவித்தார். 

    • கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
    • தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால் குல் தீப் யாதவ் நீக்கப்படலாம்.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1என்ற கணக்கில் கைப்பற்றியது.

    3 ஒருநாள் போட்டி தொடரில் நாக்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நாளை (9-ந்தேதி) நடக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி முதல் போட்டியில் விளையாடவில்லை. நாளைய ஆட்டத்துக்கு உடல் தகுதி பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. கோலி இடத்தில் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

    கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதே போல கே.எல். ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் ரிஷப்பண்ட் இடம் பெறுவார்.

    ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா அக்ஷர் படேல் ஆகியோர் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளனர். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால் குல் தீப் யாதவ் நீக்கப்படலாம். வேகப்பந்தில் மாற்றம் இருக்காது.

    இங்கிலாந்து அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்து விடும் ஏற்கனவே அந்த அணி 20 ஓவர் தொடரை இழந்து விட்டது. இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 108 ஆட்டத்தில் இந்தியா 59-ல், இங்கிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணிவீரர்கள் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்) , ஜெய்ஸ் வால், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ரிஷப்பண்ட், ஹர் திக் பாண்ட்யா, அக் ஷர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் , ஹர்சித் ராணா, முகமது ஷமி, அர்ஷ் தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், லிவிங்ஸ் டன், ஜேக்கப் பெதல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோப்ரா ஆர்ச்சர், சகீப் மக்மூத், ஜேமி சுமித், ஒவர்டன், ரேகான் அகமது, அட்கின்சன், மார்க் வுட்.

    • 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த போட்டி இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் 6 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். எஸ்.ஏ.லீக் 20 ஓவர் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. அது முடிந்ததும் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்க அணியுடன் இணைவார்கள்.

    முத்தரப்பு தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக்கில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மல்லுக்கட்டுகின்றன. உள்ளூர் அணியான பாகிஸ்தானில் கேப்டன் முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பஹர் ஜமான், சல்மான் ஆஹா, கம்ரான் குலாம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில் கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், வில் யங், டேரில் மிட்செல் என திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கும் அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 61-ல் பாகிஸ்தானும், 51-ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' யில் முடிந்தது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் ஆடிய சிட்டகாங் அணி 20 ஓவரில் 194 ரன்கள் குவித்தது.
    • பர்வேஸ் ஹொசைன், கவாஜா நபே அரை சதம் அடித்தனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பார்ச்சுன் பாரிஷல், சிட்டகாங் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ச்சுன் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்டகாங் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.

    பர்வேஸ் ஹொசைன் 78 ரன்னும், கவாஜா நபே 66 ரன்னும், கிரஹாம் கிளர்க் 44 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்ச்சுன் அணி களமிறங்கியது. கேப்டன் தமிம் இக்பால் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். கைல் மேயர்ஸ் 46 ரன்னும், ஹ்ருடோய் 32 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், பார்ச்சுன் அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் பார்ச்சுன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

    இதன்மூலம் அயர்லாந்து 2வது இன்னிங்சில் இதுவரை 76 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாக தகவல் வெளியாகியது.

    மும்பை:

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது வந்தது. இருப்பினும் ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாகவும், அதனை தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் சாம்பியன் டிராபியை இந்தியா வெல்லவில்லை எனில் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை தோனி வென்று கொடுத்துள்ளார்.
    • இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வாங்கி கொடுத்த ஒரே கேப்டன் ஆவார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டு, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

    ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை தோனி வென்று கொடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தோனியின் ஆட்டத்தை கடைசியாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்நிலையில் ராஞ்சியில் உள்ள தனது வீட்டின் வெளிப்புறச் சுவரில் சில மாற்றங்களை தோனி செய்துள்ளார். வீடு அவரது கிரிக்கெட் பயணத்திற்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவரில் அவரது ஜெர்சி நம்பரான 7 மற்றும் தோனி என பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் சித்தரிப்பும் சுவரின் வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆஸ்திரேலியா 2-ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது.
    • அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    காலே:

    இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹேட் 21, கவாஜா 36, லெபுசென் 4 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா 2-ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தற்போது வரை 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றது.
    • இந்திய அணியின் வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வைரம் பதித்த மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பிசிசிஐயின் நாமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு 'சாம்பியன்ஸ் மோதிரம்' வழங்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் பெயரும் அவர்களது ஜெர்சி நம்பரும் பொறிக்கப்பட்ட வைரம் பதித்த மோதிரத்தை பிசிசிஐ வழங்கியது. இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    • இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசியுள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஜோரூட் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.

    காலே:

    இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதே காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டீஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், எம் குஹ்னேமன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹேட் 21, கவாஜா 36, லெபுசென் 4 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஸ்மித்துக்கு இது 36-வது டெஸ்ட் சதம் ஆகும்.


    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரராக ஸ்மித் பல சாதனைகளை படைத்துள்ளார்.

    அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் (36 சதம்), ஜோரூட் (36 சதம்) ஆகியோரின் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 4 இடங்கள் முறையே சச்சின் (51), கல்லீஸ் (45), பாண்டிங் (41), சங்ககாரா (38) ஆகியோர் உள்ளனர்.

    மற்றொரு சாதனையாக ஆசியாவில் அதிக ரன்கள் விளாசிய ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஆசியாவில் பாண்டிங் 48 இன்னிங்ஸ்களில் 41.97 சராசரியுடன் 1889 ரன்கள் குவித்திருந்தார். அந்த சாதனை ஸ்மித் 42 இன்னிங்ஸ்களில் 51.08 என்ற சாராசயில் முறியடித்துள்ளார்.

    மேலும் ஆசியாவில் அதிக சதங்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற ஆலன் பார்டர் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

    ஆசியாவில் அதிக சதங்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர்கள் விவரம்:-

    ஸ்டீவன் ஸ்மித் - 7

    ஆலன் பார்டர் - 6

    கவாஜா - 5

    ரிக்கி பாண்டிங் - 5

    • முதல் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 9-ந் தேதி நடக்கிறது.

    நாக்பூர்:

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-4 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு, முந்தைய நாள் பயிற்சியின்போது வலதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் அவரால் இந்த ஆட்டத்தில் ஆட முடியவில்லை.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 9-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

    இந்த 2-வது போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த கில், விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. எனவே நிச்சயமாக அவர் 2-வது போட்டியில் விளையாடுவார். என கூறினார்.

    ×