என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- 176 பந்தில் சதம் அடித்தார்.
- சதம் அடித்த அடுத்த பந்தில் அவுட் ஆனார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3ஆவது நாளான இன்றைய ஆட்டத்தில் கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மதிய உணவு இடைவேளையின்போது 98 ரன்கள் எடுத்திருந்தார்.
மதிய உணவு இடைவேளை முடிவடைந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும், ஆர்ச்சர் வீசிய 67ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார். 176 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் விளாசினர். அடுத்த ஓவரை பஷீர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் 100 ரன்னோடு வெளியேறினார்.
இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசியுள்ளார். இந்த சதத்துடன் புகழ்வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.
- ரிஷப் பண்ட் 74 ரன்கள் விளாசினார்.
- கே.எல். ராகுல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் மந்தமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். நேரம் செல்ல செல்ல ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். ரிஷப் பண்ட் 86 பந்தில் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடியை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் பல்வேறு யுக்திகளை மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கே.எல். ராகுல் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.
உணவு இடைவேளை வரை விக்கெட்டை இருவரும் காப்பாற்றிக் கொள்வார்கள் என நினைத்த நிலையில் பஷீர் விசிய ஓவரில் கஷ்டப்பட்டு ஒரு ரன் எடுக்க முயற்சி செய்ய ரிஷப் பண்ட் ரன்அவுட் ஆனார். அவர் 112 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார். அத்துடன் 3ஆவது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. கே.எல். ராகுல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கே.எல். ராகுல் சதம் அடித்து நீண்ட நேரம் விளையாடி ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஒத்துழைப்பு கொடுத்தால் முதல் இன்னிங்சில் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
- லீட்ஸ், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இரு அணிகளும் அதிக ரன்கள் குவித்தன.
- ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக விமர்சனம்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே ஹெட்டிங்லே (லீட்ஸ்), பர்மிங்காம் (எட்ஜ்பாஸ்டன்) ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த இரண்டு மைதானங்களில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், ஆசிய கண்டத்தில் உள்ள ஆடுகளம் போன்று இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான ஆடுகளங்கள் முற்றிலும் நெடுஞ்சாலை போன்று இருந்தது. இதில் சுப்மன் கில்லிற்கு பந்து வீசமாட்டேன் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-
இங்கிலாந்தில் நான் சுப்மன் கில்லுக்கு பந்து வீச மாட்டேன். இது உறுதி. இந்தியா- இங்கிலாந்து போட்டியை அதிக அளவில் பார்க்கவில்லை. ஸ்கோர் போர்டு பார்த்தேன். லபுசேன், அலேக்ஸ் கேரி, ஸ்மித் போன்றோர் காலையில் எழுந்து (வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடியது), காஃபி மெஷின் அருகே அமர்ந்து போட்டியை பார்த்தனர். நான் ஸ்கோர் மட்டும் பார்த்தேன். இங்கிலாந்தில் இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச விரும்புவார்கள்?
இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார்.
சுப்மன் கில் இரண்டு போட்டிகளிலும் 585 ரன்கள் குவித்தார். இதில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்கள் அடங்கும்.
- முதல் நாளில் இந்தியா 83 ஓவர்கள் மட்டுமே வீசியது.
- 2ஆவது நாளில் இரு அணிகளும் சேர்ந்து 75 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளன.
முதல் நாளில் 83 ஓவர், 2ஆவது நாளில் 75 ஓவர் என நிர்ணயிக்கப்பட்ட 90 ஓவர்கள் வீசாததற்கு இங்கிலாந்து முன்னாள் கேப்ன்கள் மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் வாகனம் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது, 2ஆது நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் போட்டியை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீச வேண்டும். ஆனால் முதல் இன்னிங்சில் இந்தியா 83 ஓவர்கள்தான் வீசியது. 2ஆவது நாளில் இந்தயா- இங்கிலாந்து அணிகள் 75 ஓவர்கள் வீசியுள்ளளனர்.
இந்த நிலையில் மெதுவாக பந்து வீசியதற்காக மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் வாகன் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆதர்டன் கூறுகையில் "இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 110ஆவது ஓவரின்போது சுப்மன் கில் முதுகில் வலி ஏற்பட்டதாக சிகிச்சை மேற்கொண்டார். நடுவர்கள் இதனால் நீண்ட நேரம் போட்டியை நிறுத்தினர். அதற்குப் பதிலாக மைதானத்தில் இருந்து வெளியேறுமாறு கூறி, போட்டி தொடர்ந்து நடைபெற அனுமதித்திருக்க வேண்டும்.
லேசான காயம், பந்து மாற்றுதல், பவுலர்கள் ஜம்ப் செய்யும் க்ரீஸ் பகுதி சேதம், பேட்ஸ்மேன்கள் நிற்கும் இடத்தை சரிசெய்தல் போன்றவற்றிற்காக போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்த பிரச்சினையால் நடுவர்கள் கட்டுப்பாட்டை இழந்தனர்" என்றார்.
மைக்கேல் வாகன் கூறுகையில் "அபராதம் வேலை செய்யாது என நினைக்கிறேன். விளையாடும் வீரர்கள் ரொம்ப பணக்காரர்கள் என நினைக்கிறேன். பணம் அவர்களை பாதிக்கும் என நினைக்கவில்லை.
சிறிது காலமாக இந்த பிரச்சினை இருக்கிறது. இங்கு கடும் வெயில் என்று எனக்குத் தெரியும். சில காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், 5ஆவது நாள் என்று வரும்போது, 90 ஓவர்கள் வீச வேண்டும்" என்றார்.
- நாங்கள் எங்களுக்கு தந்த பந்தை வைத்து விளையாடினோம்.
- அதை எங்களால் மாற்ற முடியாது. அதற்காக சண்டையிடவும் முடியாது.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
3ஆவது போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த மைதானத்தில் பந்து வீசும்போது இந்திய அணி வீரர்கள் பந்து அடிக்கடி தனது வடிவத்தை (Shape) இழந்து விடுகிறது, பந்தை மாற்றித் தரும்படி நடுவரிடம் அடிக்கடி முறையிட்டனர்.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளின்போதும் இதே பிரச்சனை இருந்தது. ரிஷப் பண்ட் கோபமாக நடுவர் முன்னே பந்தை கோபத்தில் வீசினார்.
இந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவிடம் செய்தியாளர்கள் Dukes பந்து அடிக்கடி மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பும்ரா பதில் அளித்ததாவது:-
பந்தின் வடிவம் மாறியது. உண்மையிலேயே என்னால் பந்தை கட்டுக்கோப்புடன் வீசமுடியவில்லை. நான் பணத்தை இழக்க விரும்பவில்லை. ஏனென்றால், நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டு, அதிக ஓவர்கள் விளையாடினே். ஆகவே, எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை.
இருந்த போதிலும், நாங்கள் எங்களுக்கு தந்த பந்தை வைத்து விளையாடினோம். அதை எங்களால் மாற்ற முடியாது. அதற்காக சண்டையிடவும் முடியாது. சில நேரங்களில் அது நம் வழியில் செல்லும். சில நேரங்களில் மோசமான பந்தை பெறுவோம். அப்படித்தான் நடக்கும்.
இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.
- இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடக்கிறது
- டி20 உலககோப்பைக்கு கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது. தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இத்தாலி முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. இன்னும் 5 நாடுகள் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.
- கபில்தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது.
- தற்போது கபில்தேவின் வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித், கார்ஸ் அரை சதம் கடந்தனர்.
இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா - 13 முறை 5 விக்கெட், கபில் தேவ் - 12 முறை விக்கெட், அனில் கும்ப்ளே - 10 முறை 5 விக்கெட் எடுத்துள்ளனர்.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது.
ஒல்லி போப் 44 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராலே 18 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கிறிஸ் வோக்ஸ் டக் அவுட்டானார். 271 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது.
ஜேமி ஸ்மித்துடன் பிரைடன் கார்ஸ் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேமி ஸ்மித் அரை சதம் கடந்தௌ 51 ரன்களில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கே.எல்.ராகுலுடன் கருண் நாயர் இணைந்தார். 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- ராகுல் டிராவிட் 210 கேட்ச்கள் பிடித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது.
- ஜெயவர்த்தனே 3ஆவது இடத்தில் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. கே.எல். ராகுல் நிதானமாக விளையாட, கருண் நாயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
21ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்து கருண் நாயரின் பேட்டில் உரசி கீப்பருக்கும், முதல் ஸ்லிப்பிற்கு இடையில் சென்றது. இதை முதல் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
இந்த கேட்ச் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 211ஆவது கேட்ச் ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர் (கீப்பர் அல்லாத வீரர்) என்ற சாதனையை படைத்துள்ளார்.
ராகுல் டிராவிட் 210 கேட்ச்கள் பிடித்துள்ளார். ஜெயவர்த்தனே 205 கேட்ச்களும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கல்லீஸ் தலா 200 கேட்ச்களும், பாண்டிங் 196 கேட்ச்களும் பிடித்துள்ளனர்.
- ஜோ ரூட் சதம் அடிக்க ஸ்மித் மற்றும் கார்ஸ் அரைசதம் அடித்தனர்.
- பும்ரா 5 விக்கெட் வீ்ழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவும் இடம் பிடித்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிவிரைவாக ரன்கள் குவிக்க திணறினர். ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இவர் 5 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது சிராஜ் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கே.எல். ராகுல் எளிதான கேட்சை பிடிக்க தவறினார். இந்த கேட்ச் மிஸ் இந்தியாவுக்கு பின்னர் தலைவலியாக அமைந்தது.
மறுமுனையில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் இங்கிலாந்து 271 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஸ்மித் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 350 ரன்னைக் கடந்தது.
2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஸ்மித் 51 ரன்களுடனும், கார்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 51 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித்-கார்ஸ் ஜோடி 84 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஆர்ச்சரை பும்ரா வீழ்த்தினார். இதன்மூலம் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி விக்கெட்டுக்கு பஷீர் களம் இறங்கினார். கார்ஸ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் அரைசதம் கடந்தார். இறுதியாக 56 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இந்திய அணியில் சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார்.
- நேற்று ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
- இன்றைய 2ஆவது நாளில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பும்ரா அபாரமாக பந்து வீசினார். பென் ஸ்டோக்ஸை 44 ரன்னிலும், ஜோ ரூட்டை 44 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸை டக்அவுட்டிலும் வெளியேற்றினார்.
ஜாஃப்ரா ஆர்ச்சரை (4) க்ளீன் போல்டானார். இதன்மூலம் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
- ஜோ ரூட் தனது 37ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
- ஸ்மித் 5 ரன்னில் இருக்கும்போது கே.எல். ராகுல் கேட்சை தவறவிட்டார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவுடம் இடம் பிடித்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிவிரைவாக ரன்கள் குவிக்க திணறினர். ஜோ ரூட் மட்டும நிலைத்து நின்று விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இவர் 5 ரன்கள் எடுத்திருக்கும் போது முகமது சிராஜ் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கே.எல். ராகுல் எளிதான கேட்சை பிடிக்க தவறினார். இந்த கேட்ச் மிஸ் இந்தியாவுக்கு பின்னர் தலைவலியாக அமைந்தது.
மறுமுனையில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் இங்கிலாந்து 271 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஸ்மித் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 350 ரன்னைக் கடந்தது.
2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஜோடி 17.4 ஓவரில் 82 ரன்கள் சேர்த்துள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியதும் இந்த ஜோடியை பிரித்தால் மட்டுமே இந்தியாவுக்கு சாதகமான நிலை உருவாகும்.






