என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • MI நியூயார்க் அணியில் அதிகபட்சமாக டீகாக் 77 ரன்கள் அடித்தார்
    • வாஷிங்டன் அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 70 ரன்கள் அடித்தார்

    MLC டி20 தொடரின் இறுதிப்போட்டியில் MI நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய MI நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டீகாக் 77 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    கடைசி ஒவரில் வாஷிங்டன் அணி வெற்றி பெற 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், MI நியூயார்க் பவுலர் ருஷி உகர்கர் அந்த ஓவரில் 1 விக்கெட் எடுத்து 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். 

    • இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய பவுலர்கள் எதிரணி வீரர்களை 12 முறை கிளீன் போல்டாக்கி (முதல் இன்னிங்சில் 5, இரண்டாவது இன்னிங்சில் 7) மிரள வைத்திருக்கிறார்கள்.

    ஒரு டெஸ்டில் இந்திய பவுலர்கள் அதிக முறை போல்டு முறையில் விக்கெட் வீழ்த்திய டெஸ்டாக இது மாறியிருக்கிறது.

    இதற்கு முன் அதிகபட்சமாக 10 முறை ஸ்டம்பை தகர்த்து இருந்தனர். இதேபோல், 1955-ம் ஆண்டுக்கு பிறகு அதிகம் பேரை போல்டாக்கிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    • இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் தலா 44 ரன்களில் வெளியேறினர்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதம் கடந்து 100 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 74 ரன்னிலும், ஜடேஜா அரை சதம் கடந்து 72 ரன்னில் வெளியேறினார். நிதிஷ்குமார் 30 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்திய அணி துல்லியமாக பந்து வீசியது. ஜோ ரூட் 40 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 33 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கருண் நாயர் 14 ரன்னும் சுப்மன் கில் 6 ரன்னும், ஆகாஷ் தீப் ஒரு ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    நான்காம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா வெற்றி பெற 135 ரன்னும், இங்கிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டும் தேவைப்படுவதால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 15.1 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.

    தம்புல்லா:

    வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது. முதல் டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 76 ரன்னில் அவுட்டானார். ஷமிம் ஹொசைன் 48 ரன்னும், தவ்ஹித் ஹிருடோய் 31 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் பினுரா பெர்னாண்டோ 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 32 ரன்னும், டாசன் ஷனகா 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இலங்கை அணி 15.2 ஓவரில் 94 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேசம் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமனிலை செய்தது.

    வங்காளதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், மொஹமது சைபுதின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது லிட்டன் தாசுக்கு அளிக்கப்பட்டது.

    • இந்தியாவும் 387 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை சமன் செய்தது.
    • இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்தது. இந்தியாவும் 387 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை சமன் செய்தது.

    இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸ் அளவு ஆடவில்லை. பென் டக்கெட் (12), ஆலி போப் (4), ஜாக் கிராலி (22), ஹாரி புரூக் (23) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

    ஜோ ரூட் (40) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (33) சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.

    இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்தை 192 ரன்களுக்குள் சுருட்டினர். எனவே இந்தியாவிற்கு 193 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
    • ஷமர் ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

    ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்துள்ளது.

    3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் ஏற்கனேவே ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன் குவித்தது. டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் ஸ்கோர் சமநிலையில் இருப்பது இது 9-வது முறையாகும். இந்தியாவுக்கு 3-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1958-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுடனும் (222 ரன்), 1986-ம் ஆண்டு இங்கிலாந்து டனும் (390 ரன்) முதல் இன்னிங்சிலும் ஸ்கோர் சமநிலையாக இருந்தது.

    இந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து 5-வது இன்னிங்சில் 350 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. முதல் டெஸ்டில் 471 மற்றும் 364 ரன்னும் 2-வது டெஸ்டில் 587 மற்றும் 427 ரன்னும் குவித்தது. லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 387 ரன் எடுத்தது. இங்கிலாந்தில் இந்தியாவுக்கு 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு தொடரில் 5 இன்னிங்சில் தொடர்ந்து 350 ரன்னுக்கு மேல் எடுத்து இருந்தது.

    • நேற்றைய நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்தார்.
    • பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார்.

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.

    இதனிடையே நேற்றைய நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார். போட்டியின் கடைசி நிமிடங்களில் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்து 3 ஆம் நாளில் பேட்டிங் செய்யாமல் தவிர்க்க கிராலி வேண்டுமென்றே பிசியோவை கூப்பிடுவதாக சுப்மன் கில் கோபமடைந்தார். ரிட்டையர்ட் அவுட் முறையில் கிராலி வெளியேறுவதாக கில் சைகை செய்து கிண்டல் செய்தார். இதனால் கிராலி - கில் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட பென் டக்கெட் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. 

    • ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
    • விவியன் ரிச்சர்ட்ஸ் 34 சிக்சர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

    ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    மூன்றாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கே.எல். ராகுல்-ரிஷப் பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்னில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

    இந்நிலையில், ரிஷப் பண்ட் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அவர் அடித்துள்ளார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸ் மொத்தம் 34 சிக்சர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு அணிகள் மோதிய ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற்றது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    லண்டன்:

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகளில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 75 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் சார்லி டீன் 3 விக்கெட்டும், சோபி எக்கல்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில், சோபியா டங்க்ளே 46 ரன்னில் அவுட்டானார். டேனில் வியாட் ஹாட்ஜ் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். பவுசியர் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். டாமி பியூமாண்ட் 30 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஆனாலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ராகுல் சதமடிக்க, ரிஷப் பண்ட், ஜடேஜா அரை சதம் கடந்தனர்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் தலா 44 ரன்களில் வெளியேறினர்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார். கே எல் ராகுல் சதம் கடந்து அசத்தினார்.

    4வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப் பண்ட் 74 ரன்னில் அவுட்டானார். சதம் கடந்த நிலையில் கே.எல்.ராகுல் அவுட்டானார்.

    ரவீந்திர ஜடேஜாவுடன் நிதிஷ்குமார் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா அரை சதம் கடந்து 72 ரன்னில் வெளியேறினார். நிதிஷ்குமார் 30 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சேவாக் 90 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
    • ரோகித் சர்மா 88 சிக்சர்கள் அடித்துள்ளார். அதை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல்- ரிஷப் பண்ட் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.

    ரிஷப் பண்ட் ஸ்கோரி 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். 2 சிக்சர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். சேவாக் 90 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். எம்.எஸ். டோனி 78 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இன்னும் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய பேட்டர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.

    ×