என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 27 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 80 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்களில் ஆல் அவுட்டாகி 202 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 14.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1955-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு ஆல் அவுடானதே மோசமான சாதனையக இருந்து வருகிறது.

    இதற்கடுத்த மூன்று குறைந்தபட்ச ஸ்கோரை தென் ஆப்பிரிக்க அணி பதிவுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி 1896-ம் ஆண்டு இங்கிலாந்துகு எதிராக 30 ரன்களிலும், 1924-ம் ஆண்டு 30 ரன்னிலும், 1899-ம் ஆண்டு 35 ரன்களிலும் என ஒரு இன்னிங்சில் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாக பெண் குற்றம் சாட்டினார்.
    • இதனையடுத்து யாஷ் தயாள் மீது உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

    அலகாபாத்:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். மேலும் இதுகுறித்து, அம்மாநில முதல்-அமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்தார்.

    அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அத்துடன் தன்னிடம் யாஷ் தயாளுடனான சேட்கள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இது குறித்து உத்தரபிரதேச காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து யாஷ் தயாள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69 இன் கீழ் (திருமணம் குறித்த தவறான வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்படும் பாலியல் செயல்களைப் பற்றியது) உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை இன்று நடைபெற்றது.

    இதில், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணையின் போது, நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் நீதிபதி அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஒருவரை ஐந்து வருடங்களுக்கு ஏமாற்ற முடியாது" என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டது.

    "உங்களை ஒரு நாள், 2 நாள், 3 நாள் ஏமாற்றியிருக்கலாம்... ஆனால் 5 வருடங்கள்... நீங்கள் 5 வருடங்களாக ஒரு உறவில் நுழைகிறீர்கள்... 5 வருடங்களாக ஒருவரை ஏமாற்ற முடியாது என கூறி கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது.

    இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து முன்னணி வீரரான ஷோயப் பஷீர் விலகி உள்ளார்.

    லார்ட்ஸ் டெஸ்டின் போது பஷீரின் இடது கைவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    • வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள்.
    • 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.

    ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி வரை போராடியதற்காக இந்திய அணியை சச்சின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம். ஜடேஜா, பும்ரா, சிராஜ் இறுதிவரை போராடினார்கள். நன்றாக முயற்சித்தார்கள். இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்தது. அவர்கள் விரும்பிய முடிவை ஏற்படுத்திக் கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்தியாவின் தோல்வியால் முன்னாள் கேப்டன் கங்குலி ஏமாற்றம் அடைந்து உள்ளார். அவர் கூறும் போது, "என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. ஆனால் இந்திய அணி வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிக் கிறது. வெல்ல வேண்டிய வாய்ப்பை தவறவிட்டு விட்டோம். 193 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது. ஜடேஜா கடுமையாக போராடினார்" என்றார்.

    • ஜடேஜாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்காவிட்டாலும் அவர் சிறப்பாக ஆடினார்.
    • 5 நாட்களும் போராடியதை எண்ணி பெருமை கொள்கிறோம்

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.

    ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில், "பண்ட்டின் ரன் அவுட், ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. ஜடேஜாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்காவிட்டாலும் அவர் சிறப்பாக ஆடினார்.

    வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். இலக்கு பெரிய ஸ்கோர் இல்லையென்பதால், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்திற்குள் வந்துவிடுவோம் என நினைத்தோம். 5 நாட்களும் போராடியதை எண்ணி பெருமை கொள்கிறோம்" என்று தெரிவித்தார். 

    • 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருதையும் ஸ்டார்க் வென்றார்.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் 176 ரன்கள் வித்தியாசத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது. 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், தொடர் நாயகன் விருதையும் ஸ்டார்க் வென்றார்.

    தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஸ்டார்க் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக (15 பந்துகளில்) 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்டார்க் படைத்தார். ஸ்டார்ட் வீசிய முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளையும் 3 ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    மேலும், மிட்செல் ஸ்டார்க் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். க்ளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    • தனது 2 ஆவது ஓவரை வீசிய போலண்ட் முதல் 3 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தினார்.
    • ஜஸ்டின் கிரீவ்ஸ், சமார் ஜோசப், ஓரிகன் ஆகியோரின் விக்கெட்டுகளை போலண்ட் வீழ்த்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 176 ரன்கள் வித்தியாசத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது.

    இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலண்ட் அசத்தினார். 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்திருந்த நிலையில் தனது 2 ஆவது ஓவரை வீசிய போலண்ட் முதல் 3 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தினார். ஜஸ்டின் கிரீவ்ஸ், சமார் ஜோசப், ஓரிகன் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

    இதன்மூலம் இதன் மூலம் டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 10வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை போலண்ட் பெற்றுள்ளார்.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
    • வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் 176 ரன்கள் வித்தியாசத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது. 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் வென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

    • மதிய உணவு இடைவேளைக்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது.
    • ஜடேஜா கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

    இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். மறுமுனையில் விளையாடிய கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 82 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற்ற 111 ரன்கள் தேவைப்பட்டது.

    8ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் நிதிஷ் ரெட்டி களம் இறங்கினார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் நிதிஷ் ரெட்டி (13) கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. 83 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிவடைந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் நம்பிக்கையுடன் விளையாடினர். முடிந்த அளவிற்கு பந்துகளை தடுத்து விளையாடினர். இதனால் ஓவருக்கு ஒரு ரன் என்ற அடிப்படையில் வந்தது. 62ஆது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தை பும்ரா தூக்கி அடிக்க, எளிதாக கேட்ச் பிடித்தனர். இதனால் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா 54 பந்தில் 5 ரன்கள் எடுத்தார்.

    பும்ரா ஆட்டமிழக்கும்போது இந்தியாவுக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டாக சிராஜ் களம் இறங்கினார். ஜடேஜா அரைசதம் கடந்து வெற்றிக்காக போராடினார். தேனீர் இடைவேளை வரை சிராஜ் தாக்குப்பிடித்தார். அப்போது இந்தியா 163 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 56 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர்இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பஷீர் வீசிய பந்தை சிராஜ் தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. இதனால் இந்தியா 170 ரன்னில் ஆல்அவுட் ஆகி 22 ரன்னில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து மற்றும் இந்தியா முதல் இன்னிங்சில் தலா 387 ரன்கள் சேர்த்தன. 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்கள் அடித்தது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    • ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டுகளை ஆர்ச்சர் வீழ்த்தினார்.
    • கே.எல். ராகுல் விக்கெட்டை பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

    இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். மறுமுனையில் விளையாடிய கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 82 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற்ற 111 ரன்கள் தேவைப்பட்டது.

    8ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் நிதிஷ் ரெட்டி களம் இறங்கியுள்ளார். 29 ஓவரில் முடிவில் (இந்திய நேரப்படி மாலை 4.33) இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 98 ரன்கள் தேவை.

    ஜடேஜா- நிதிஷ் ஜோடி நிலைத்து நின்று விளையாடினால் இந்தியா சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது. இல்லையென்றால் தோல்வியை சந்திக்கும்.

    • இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.

    இதனால் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக முகமது சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது.
    • 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

    ஆஸ்திரேலியா 181 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் சரிந்தன.

    ×