என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அடுத்த மாதம் 7ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அடுத்த மாதம் 7ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரட்டை வெண்கல பதக்கம் வென்றார்.
    • மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார் .

    இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதலில் இரட்டைப் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் 2-வது இன்னிங்சில் 8 ரன்களை சேர்த்தார்.
    • இதன்மூலம் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்தை ரூட் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் 325 ரன்களைச் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

    அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதனால் இலங்கை அணிக்கு 219 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையிலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காராவின் வாழ்நாள் சாதனையை தகர்த்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

    அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 8 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6-வது வீரர் எனும் சங்கக்காராவின் சாதனையை முறியடித்துள்ளார். சங்கக்காரா 12,400 ரன்களுடன் 6-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஜோ ரூட், 12,402 ரன்களைக் குவித்து 6=ம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

    • ஏழாவது நிமிடத்தில் சிரியா முதல் கோலை பதிவு செய்தது.
    • கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது.

    ஐதராபாத்தில் நடந்த 2024 இன்டர்காண்டினென்டல் கோப்பையின் இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் சிரியாவிடம் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், கோல் வித்தியாசத்தில் மொரீஷியஸை பின்னுக்குத் தள்ளி, போட்டியில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தது.

    ஏழாவது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலை விட்டுக் கொடுத்தது. இரண்டாவது பாதியில் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஆட்டத்திற்கு எதிராக இரண்டாவது கோல் அடித்தது சிரியா. 96-வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடிக்கப்பட்டது.

    கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இன்டர்காண்டினென்டல் கோப்பையை சிரியா முதல் முறையாக வென்றுள்ளது.

    • இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம்.
    • அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் பாகிஸ்தானைப் போன்று இந்திய அணியை தோற்கடிப்போம் என்று வங்கதேச அணி வீரர் சோரிபுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாகும். அப்படிப்பட்ட பலம் பொருந்திய அணியை நாங்கள் சிறப்பாக எதிர் கொண்டால் மொத்த உலகமும் எங்களை திரும்பிப் பார்க்கும். எனவே இந்தியாவில் எங்களது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதற்காக நாங்கள் கடினமாக பயிற்சி செய்து வருகிறோம்.

    மேலும், பாகிஸ்தானில் எங்களுக்கு நல்ல தொடராக அமைந்தது. இதனால் நாங்கள் இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.

    என்று சோரிபுல் கூறினார். 

    • ஒவ்வொரு நாடும் ஆண்டுக்கு 6 முதல் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுகின்றன.
    • 20 ஓவர் போட்டிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    கொழும்பு:

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் முத்தையா முரளிதரன்.இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீரரான அவர் 133 டெஸ்டில் விளையாடி 800 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    அவருக்கு அடுத்தப்படியாக வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட், ஆண்டர்சன் (இங்கிலாந்து) 704 விக்கெட்டும், கும்ப்ளே (இந்தியா) 619 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    தற்போதுள்ள வீரர்களில் 36 வயதான நாதன்லயன் (ஆஸ்திரேலியா) 530 விக்கெட்டும், தமிழகத்தை சேர்ந்த வீரர் 37 வயதான ஆர்.அஸ்வின் 516 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    இந்த நிலையில் எனது 800 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டி பற்றி நான் கவலைப்படுகிறேன். ஒவ்வொரு நாடும் ஆண்டுக்கு 6 முதல் 7 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடலாம். ஆனால் மற்ற நாடுகளில் இருக்கும் ரசிகர்கள் அதை அதிகம் விரும்பி பார்ப்பதில்லை. இதனால் டெஸ்ட் போட்டிகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

    எனது 800 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க இயலாது. மிகவும் கடினமானது. ஏனென்றால் 20 ஓவர் போட்டிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் நாங்கள் 20 ஆண்டுகளாக விளையாடினோம். ஆனால் தற்போது விளையாடும் ஆண்டு மிகவும் குறைந்துள்ளது.

    இவ்வாறு முரளிதரன் கூறியுள்ளார்.

    • மழை பெய்யாமலே முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
    • கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    நொய்டா:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கூட இல்லை. அதனால், ஆப்கானிஸ்தான அணி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவை சொந்த மண்ணாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. பிசிசிஐ அவ்வப்போது ஆப்கானிஸ்தான் ஆடும் போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி அளித்து வருகிறது. அப்படி செய்யும் உதவி சரியானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள விமர்சனத்துக்கு முக்கிய காரணம்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்ட ஆப்கானிஸ்தான் அணி பிசிசிஐ-இடம் உதவி கேட்டது. பிசிசிஐ-யும் இந்தியாவில் போட்டியை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதற்காக நொய்டா மைதானத்தை தேர்வு செய்து அளித்தது. இந்த போட்டி நடக்கவிருந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. அதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பயிற்சி செய்ய முடியாமல் தவித்தன.

    இந்த நிலையில் நேற்று முதல் நாள் போட்டி நடைபெற இருந்தது. காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால் நிச்சயமாக போட்டி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மைதானத்தின் அவுட் ஃபீல்டு பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது.

    பந்துவீச்சாளர்கள் ஓடிவந்து பந்து வீசும் பகுதிகளிலும் நிறைய மழைநீர் தேங்கி இருந்தது. அந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அவற்றை விரைவாக நீக்க முடியாமல் மைதான ஊழியர்கள் அவதிப்பட்டனர். முதல் நாள் ஆட்டத்தில் ஒரு சில ஓவர்களையாவது வீசி விடலாம் என மாலை 4 மணி வரை நடுவர்கள் முயற்சி செய்தனர்.

    ஆனால், மைதான ஊழியர்களால் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதை அடுத்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டமாவது திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    நொய்டா மைதானத்தை தேர்வு செய்த பிசிசிஐ மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நொய்டா மைதானத்தில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட நடத்தப்பட்டதில்லை. அங்கு மழை நீர் வடிகால் வசதி இல்லாதது மட்டுமின்றி, கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக பத்திரிக்கையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இந்தியாவில் சிறந்த வசதிகளை கொண்ட மைதானத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு அளித்து இருக்கலாம். அதுவே அந்த அணிக்கு செய்யும் சிறந்த உதவியாக இருக்கும்.

    இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரி கூறியதாவது:-

    இது ஒரு பெரிய குழப்பம். நாங்கள் இங்கு திரும்பி வரமாட்டோம். வீரர்களும் இங்குள்ள வசதிகளால் மகிழ்ச்சியடையவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் முன்கூட்டியே பேசினோம், எல்லாமே ஒழுங்காக இருக்கும் (ஊடக வசதிகளுடன்) என்று ஸ்டேடியம் தோழர்களால் உறுதியளிக்கப்பட்டது.

    என்று அவர் கூறினார்.

    கிரேட்டர் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மைதானத்தில், 2016 -ல் இளஞ்சிவப்பு பந்து துலீப் டிராபி போட்டி நடைபெற்றது.

    இருப்பினும், கார்ப்பரேட் போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் காரணமாக செப்டம்பர் 2017-ல் பிசிசிஐ தடை செய்தது. பிசிசிஐயுடன் இணைந்த எந்தப் போட்டியும் இங்கு நடத்தப்படவில்லை. இந்த மைதானம் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானின் சொந்த மைதானமாக செயல்பட்டது.

    "நாங்கள் இங்கு வந்ததில் இருந்து எதுவும் மாறவில்லை, இது கொஞ்சம் கூட முன்னேறவில்லை" என்று மற்றொரு ஏசிபி அதிகாரி கூறினார்.

    • ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • பெண்கள் பிரிவில் ஜெசிகா பெகுலா 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் முடிந்ததும் நேற்று புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் சின்னெர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 2-வது இடத்தில் இருந்த ஒலிம்பிக் சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் நுழைந்த ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் 3-வது சுற்றுடன் வெளியேறியதால் தரவரிசையில் சறுக்கி இருக்கிறார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்க ஓபனில் இறுதி ஆட்டத்தில் தோற்ற டெய்லர் பிரிட்ஸ் 12-ல் இருந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் இரு இடங்களில் ஸ்வியாடெக் (போலந்து), சபலென்கா (பெலாரஸ்) தொடருகிறார்கள். அதே சமயம் நடப்பு சாம்பியனாக கால்பதித்த அமெரிக்காவின் கோகோ காப் 4-வது சுற்றுடன் நடையை கட்டியதால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். அவர் 3-ல் இருந்து 6-வது இடத்துக்கு சரிந்தார். அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3 இடம் உயர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    • ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்குவார்.
    • 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரிஷப் பண்டை பார்க்கிறேன். அதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு அவர் திரும்பியதில் (வங்காளதேசத்துக்கு எதிரான தொடர் 19-ந்தேதி தொடக்கம்) ஆச்சரியமில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால், ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக விளங்குவார். அதே சமயம் அவர் குறுகிய வடிவிலான போட்டிகளில் (20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி) முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

    காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பல போட்டிகளை தவற விட்டுள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் அதற்குள் அவர் அணிக்கு திரும்ப வேண்டும். இந்த தொடரை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்திய அணிக்கு உண்மையான சவால் அளிக்கக்கூடிய போட்டியாக இது இருக்கும். அடுத்த ஆண்டு ஜூலையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு தொடர்களும் நமக்கு முக்கியமானது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, முகமது சிராஜ் இருக்கிறார்கள். ஷமியும் இணையும் போது பந்துவீச்சு மேலும் வலுவடையும். ஆகாஷ் தீப் திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசுகிறார். கவனிக்கத்தக்க ஒரு பவுலராக இருக்கிறார்.

    வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சென்று அவர்களை இரு டெஸ்டிலும் வீழ்த்தியது எளிதான விஷயமல்ல. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் இந்திய அணி முற்றிலும் வித்தியாசமானது. உள்நாடோ, வெளிநாடோ எல்லா இடத்திலும் சிறப்பாக ஆடக்கூடியது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது. எனவே வங்காளசேதம் இந்திய மண்ணில் வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் பாகிஸ்தானை அவர்களது இடத்தில் தோற்கடித்த நம்பிக்கையுடன் வருவதால் இந்த முறை வங்காளதேசத்திடம் இருந்து கடினமான போட்டியை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    26 வயதான ரிஷப் பண்ட் இதுவரை 33 டெஸ்டுகளில் விளையாடி 5 சதம் உள்பட 2,271 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.
    • லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    ஹூலுன்பியர்:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று ஜப்பானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீரர்கள் முதல் 3 நிமிடங்களுக்குள் 2 கோல் (சுக்ஜீத் சிங், அபிஷேக்) கோல் போட்டு மிரள வைத்தனர்.

    இதனால் இந்தியாவின் தாக்குதல் யுக்தியை சமாளிக்க ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்களின் கோல் மழை ஓயவில்லை. 17-வது நிமிடத்தில் சஞ்சய், 54-வது நிமிடத்தில் உத்தம்சிங், 60-வது நிமிடத்தில் மறுபடியும் சுக்ஜீத் சிங் கோல் அடித்தனர். இதற்கிடையே ஜப்பான் தரப்பில் மோட்சுமோட்டோ 41-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.

    முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் அபிஷேக் கூறுகையில், 'இது அணியின் முழுமையான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு, இலக்கை சரியாக எட்டினோம். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

    மற்றொரு ஆட்டத்தில் சீனா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பதம் பார்த்தது. பாகிஸ்தான்- தென்கொரியா இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இதே மலேசியாவை வீழ்த்தி இருந்தது நினைவு கூரத்தக்கது.

    • 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
    • இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 263 ரன்களை எடுத்தது.

    பிறகு, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் களமிறங்கிய திமுத் கருணரத்னே 8 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 39 ரன்களையும் எடுத்தனர். மறுபுறம் நிசங்கா சதம் அடிக்க, ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களை எடுத்த நிலையில், இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    போட்டி முடிவில் பதும் நிசங்கா 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சார்பில் க்ரிஸ் வோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

    • இந்த தொடர் இதுவரை சிங்கப்பூர், சீனா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.
    • 5ஆவது யூத் ஒலிம்பிக் தொடர் 2030 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

    உலக அளவில் 15 வயது முதல் 17 வயது வரையிலான இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வாக யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த தொடர் இதுவரை சிங்கப்பூர், சீனா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.

    இந்த தொடரின் 4 ஆவது எடிஷன் வருகிற 2026 ஆம் ஆண்டு செனகலில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 31 ஆம் தேதி துவங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து 5ஆவது யூத் ஒலிம்பிக் தொடர் 2030 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

    2030 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் யூத் ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முன், 2030 யூத் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    ×