என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் மற்றும் 3-வது செட்டை சின்னர் கைப்பற்றினார்.
    • கடைசி இரண்டு செட்டுகளையும் ஜோகோவிச் எளிதாக கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா ஓபனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதியில் ஸ்வெரேவை கடும் போராட்டத்திற்குப் பின் 5.30 மணி நேரம் தாக்குப்பிடித்து அல்காரஸ் வீழ்த்தினார்.

    2-வது அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்- இத்தாலி வீரரும் 2025 சாம்பியனுமான சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் ஜோகோவிச் முதல் செட்டை 3-6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

    3-வது செட்டில் சின்னர் கை ஓங்கியது. அவர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றினார். ஆனால 4-வது செட்டை 6-4 எனவும், 5-வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 4 மணி நேரமும் 9 நிமிடங்களும் தேவைப்பட்டது.

    • சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெற திட்டம்.
    • ஆட்சிக் கவிழ்ப்பால் வங்கதேசம் செல்ல முடியாத நிலை ஷாகிப் அல் ஹசனுக்கு ஏற்பட்டது.

    வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஷாகிப் அல் ஹசன். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததும், இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனால் பாதுகாப்பு அச்சம் காரணமாக வங்தேசத்தில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறது.

    இந்த நிலையில் அவரை மீண்டும் அணியில் சேர்க்க வங்கதேச கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    ஒருவேளை இது வெற்றி பெற்றால், ஷாகி அல் ஹசன் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்று அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் முகமது அஷ்ரபுல் வலியுறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் அணி மார்ச் மாதம் வங்கதேசம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக ஷாகிப் அல் ஹசனை அணிக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது.

    நாங்கள் ஷகிப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம், அவரும் விளையாட ஆர்வமாக இருக்கிறார். எங்கள் திட்டப்படி எல்லாம் நடந்தால், பாகிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு முன்பே அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறோம் என பிசிபி டைரக்டர் ஆசிப் அக்பர் தெரிவித்துள்ளார்.

    ஷாகிப் அல் ஹசன் வங்கதேசத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் பாதுகாப்பு காரணமாக அவர் வங்கதேசம் செல்லவில்லை. சொந்த மண்ணில் விளையாடிய பிறகு ஓய்வு பெற ஷாகிப் அல் ஹசன் விரும்புகிறார்.

    • கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
    • கிரிக்கெட் வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் இருந்தனர்.

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    இதற்காக இரு அணி வீரர்களும் திருவனந்தபுரம் வந்தனர். இந்த நிலையில் இன்று காலை இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

    அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் இருந்தனர்.

    • வீரர்களின் தனிப்பட்ட திறமை, தற்போதைய ஃபார்ம்.
    • சமீப காலங்களில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகள் சாதகமாக உள்ளன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணி கடந்த 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் தற்போது வருகிற 7-ந்தேதி இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

    இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 4-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா என அனைவரும் ஃபார்மில் உள்ளனர். சஞ்சு சாம்சன் மட்டும் என்று தனது ஃபார்மை நிரூபிக்கவில்லை. பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அக்சர் படேல் என சிறந்து பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறுகையில் "வீரர்களின் தனிப்பட்ட திறமை, தற்போதைய ஃபார்ம், போட்டிக்கான பிட்னஸ், சமீப காலங்களில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளின் அளவு ஆகியவை அவர்களைத் தெளிவான வெற்றி வாய்ப்புள்ள அணியாக ஆக்குகின்றன. குறிப்பாக, அவர்களின் முன்னணி பேட்டிங் வரிசையையும் அவர்கள் இருக்கும் சிறப்பான ஆட்ட நிலையையும் பார்க்கும்போது இது உறுதியாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    • முதல் இரண்டு செட்களை அல்காரஸ் வென்றபின், அடுத்த இரண்டு செட்களை இழந்தார்.
    • 5.30 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் அல்காரஸ் போராடி வெற்றி பெற்றார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் 1-ம் நிலை வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த அல்காரஸும், 3-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்வெரேவும் மோதினர்.

    * முன்னணி வீரர்கள் இருவரும் மோதியதால் ஆட்டத்தில அனல் பறந்தது. முதல் செட்டை 6-4 என அல்காரஸ் எளிதாக கைப்பற்றினார்.

    * 2-வது செட்டில் ஸ்வெரேவ் கடும் சவால் விடுத்தார். இதனால் போட்டி டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் அல்காரஸ் 7(7)-6(3) எனக் கைப்பற்றினார்.

    * 3-வது செட்டை கைப்பற்றினால் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடலாம் என்ற நோக்கத்தில் அல்காரஸ் களம் இறங்கினார். ஆனால், ஸ்வெரேவ் அதற்கு கடும் பதிலடி கொடுத்தார். 3-வது செட்டும் டை-பிரேக் வரை சென்றது. இந்த முறை ஸ்வெரேவ் 7(7)-6(3) எனக் கைப்பற்றினார்.

    * அதோடு 4-வது செட்டிலும் இருவரும் மல்லுக்கட்டினர். இதனால் இந்த செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியாக ஸ்வெரேவ் இந்த செட்டையும் 7(7)-6(4) எனக் கைப்பற்றி போட்டியை நீட்டித்தார்.

    * இருவரும் தலா இரண்டு செட்களை கைப்பற்றிய நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் களம் இறங்கினர்.

    * 5-வது செட்டை அல்காரஸ் சர்வீஸ் உடன் தொடங்கினார். முதல் கேமில் அல்காரஸ் சர்வீஸை முறியடித்து ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.

    * ஸ்வெரேவ் 2-வது கேமில் சிறப்பாக சர்வீஸ் செய்து அதை கைப்பற்றினார். இதனால் ஸ்வெரேவ் 2-0 என முன்னிலை வகித்தார்.

    * 3-வது கேமில் அல்காரஸ் சிறப்பாக சர்வீஸ் செய்து அதை தனதாக்கினார். இதனால் அல்காரஸ் 1-2 என பின்தங்கியிருந்தார்.

    * 4-வது கேமில் ஸ்வெரேவ் சர்வீஸ் செய்தார். இதை ஸ்வெரேவ் கஷ்டப்பட்டு தனதாக்கினார். இதனால் 3-1 ஸ்வெரேவ் முன்னிலைப் பெற்றார்.

    * 4-வது கேமில் அல்காரஸ் சர்வீஸ் செய்தார். இந்த கேம் ஏஸ் வரை சென்றது. இறுதியில் அல்காரஸ் தனதாக்கினார். இதனால் 2-3 என பின்தங்கினார்.

    * 6-வது கேமில் ஸ்வெரேவ் சர்வீஸ் செய்தார். இதை ஸ்வேரேவ் தனதாக்க 4-2 முன்னிலைப் பெற்றார்.

    * 7-வது கேமை அல்காரஸ் 40-15 என எளிதாக தனதாக்கினார். இதனால் அல்காரஸ் 3-4 என பின்தங்கியிருந்தார்.

    * 8-வது கேமை ஸ்வெரேவ் சர்வீஸ் உடன் தொடங்கினார். இதை ஏஸ் வரை சென்றாலும் ஸ்வெரேவ் அட்டகாசமாக தனதாக்கினார். இதனால் 5-3 என ஸ்வெரேவ் முன்னிலைப் பெற்றார்.

    * அடுத்த இரண்டு செட்களில் ஒன்றை கைப்பற்றினால் 5-வது செட்டை ஸ்வெரேவ் கைப்பற்றிவிடுவார் என்ற நிலை இருந்தது.

    * 9-வது கேம்மை அல்காரஸ் சர்வீஸ் உடன் தொடங்கினார். இதை அவர் தனதாக்க 4-5 என பின்தங்கினார்.

    * 10-வது கேமை ஸ்வெரேவ் தொடங்கினார். இதை தனதாக்கினால் 5-வது மற்றும் கடைசி செட்டை கைப்பற்றி வெற்றி வாகை சூடிவிடலாம் என்ற நிலை இருந்து.

    * ஆனால் இங்கு திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்வெரேவ் சர்வீஸை அல்காரஸ் சிறப்பாக எதிர்கொண்டார். ஸ்வெரேவ் 30-40 என்ற நிலையில் சர்வீஸை முறியடித்தை கேமை தனதாக்கினார். இதனால் அல்காரஸ் 5-5 என சமன் பெற்றார்.

    * 11-வது கேம்மை அல்காரஸ் சர்வீஸ் உடன் தொடங்கினார். இதை 40-15 என எளிதாக தனதாக்க அல்காரஸ் 6-5 என முன்னிலைப் பெற்றார்.

    * 12-வது கேம்மை ஸ்வெரேவ் சர்வீஸ் உடன் தொடங்கினார். ஆனால் அல்காரஸ் அட்டகாசமாக இந்த கேம்மை கைப்பற்றினார்.

    இதனால் அல்காரஸ் 6-4, 7(7)-6(3), 6(3)-7(7), 6(4)-7(7), 7-5 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • வாஷிங்டன் சுந்தர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது காயம் ஏற்பட்டது.

    தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய ஆட்டம் மற்றும் 20 ஓவர் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

    26 வயதான வாஷிங்டன் சுந்தர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். உலகக் கோப்பை வருகிற அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. அதற்குள் அவர் உடல்தகுதி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை உடற்குதியை பெறவில்லை என்றால் மாற்று வீரர் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

    இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் இன்னும் ஓரிரு நாட்களில் பந்து வீசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பாக பந்து வீசி உடற்குதியை நிரூபித்து விட்டால் உடனடியாக அணியில் இணைவார்.

    • கேரளாவின் திக்கோடி உள்ள வீட்டில் ஸ்ரீனிவாசன் மயங்கி விழுந்துள்ளார்.
    • உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்ைட சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா. சர்வதேச தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள இவர் "இந்திய தடகளங்களின் அரசி" என்று குறிப்பிடப்படுகிறார்.

    பி.டி.உஷா தற்போது இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இவரது கணவர் ஸ்ரீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் துணை போலீஸ் சூபபிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

    பி.டி.உஷா பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்தார். ஆகவே கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே திக்கோடியில் உள்ள அவரது வீட்டில் கணவர் ஸ்ரீனிவாசன் இருந்தார். அவர் இன்று அதிகாலை திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்தார்.

    இதையடுதது அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, அவரை பரி சோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் வீடடிற்கு கொண்டு வரப்பட்டது.

    ஸ்ரீனிவாசன் இறந்தது குறித்து டெல்லியில் இருந்த பி.டி.உஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கேரளா விரைந்தார். பி.டி.உஷா-ஸ்ரீனிவாசன் தம்பதிக்கு உஜ்வல் விக்னேஷ் என்ற மகன் இருக்கிறார். அவர் டாக்டர் ஆவார்.

    • முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
    • நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது. அப்போது விமான நிலையத்தில் சஞ்சுவை இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் வழி விடுங்க.. சேட்டான தொந்தரவு பண்ணாதீங்க என சூர்யகுமார் யாதவ் கூறியபடியே சஞ்சுவை வரவேற்று செல்வார். இதனை சஞ்சு சாம்சன் சிரித்தப்படியே நடந்து செல்வார்.

    கேரளா சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 27.4 கோடி ஃபாலோவர்களைக் கொண்ட கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது.
    • இது தொடர்பாக அவரது மனைவி அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்து ரசிகர்கள் காரணத்தை கேட்டு வந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. முன்னாள் கேப்டனான அவர் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27.4 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

    இந்த நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் நள்ளிரவில் திடீரென்று முடங்கியது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ரசிகர்கள் அணுகியபோது இந்தப் பக்கம் கிடைக்கவில்லை என்று காண்பித்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் கோலியின் சகோதரர் விகாஸ் இன்ஸ்டாகிராம் கணக்கும் செயலிழக்கப்பட்டிருந்தது.

    பல மணி நேரத்துக்கு பிறகு இன்று காலை 8.30 மணிக்கு கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

    இந்த திடீர் முடக்கம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து கோலி, அவரது நிர்வாகக் குழு அல்லது இன்ஸ்டாகிராம் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கிய போது அதற்கான விளக்கத்தை அறிய ரசிகர்கள் முயன்றனர்.

    சில ரசிகர்கள் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அண்ணாவின் (கோலி) கணக்கு எங்கே போனது?" என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டனர்.

    • சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் சோபி மோலினக்ஸ் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்த தாலியா மெக்ராத் துணை கேப்டனாக தொடருகிறார்.

    சிட்னி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பிப்ரவரி 15-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் சிட்னி (பிப்.15), கான்பெர்ரா (பிப்.19), அடிலெய்டில் (பிப்.21) நடக்கிறது.

    இதன் பின்னர் ஒருநாள் (பிப்.24, 27, மார்ச் 1) மற்றும் டெஸ்ட் போட்டி (மார்ச் 6-9) அரங்கேறுகிறது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடாத ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்துகிறார். பெர்த்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் 35 வயது அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார்.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர், ஒருநாள், டெஸ்ட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் சோபி மோலினக்ஸ் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக அலிசா ஹீலி தொடருகிறார்.

    மார்ச் மாதம் நடக்கும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் இருந்து அனைத்து வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக சோபி மோலினக்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்த தாலியா மெக்ராத் துணை கேப்டனாக தொடருகிறார். சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெர் இணை துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கேப்டன் பொறுப்பை ஏற்கும் 28 வயது சோபி மோலினக்ஸ் இதுவரை 3 டெஸ்டில் ஆடி 7 விக்கெட்டும், 17 ஒருநாள் போட்டியில் 31 விக்கெட்டும், 38 இருபது ஓவர் போட்டியில் 41 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். முழங்கால் காயம் காரணமாக அவர் 2024-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை. ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் அங்கம் வகித்தார்.

    • எனது விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை.
    • மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக நெருக்கடியை உணர்ந்தேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆல்-ரவுண்டராக வலம் வந்த யுவராஜ்சிங், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த உலகக் கோப்பையின் தொடர்நாயகனாக (362 ரன் மற்றும் 15 விக்கெட்) ஜொலித்தார். அதன் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினார்.

    2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.

    இந்த நிலையில் தனது ஓய்வுக்கான காரணத்தை 7 ஆண்டுக்கு பிறகு யுவராஜ்சிங் வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் யூடியூப் சேனலில் கலந்துரையாடிய போது யுவராஜ்சிங் பேசுகையில், 'எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி பகுதியில் அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை.

    எனது விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை. தேவையான ஆதரவும், மரியாதையும் இல்லாத போது ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும்? யாருக்காக, எதை நிரூபிப்பதற்காக விளையாட வேண்டும்? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதைவிட மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக நெருக்கடியை உணர்ந்தேன். கிரிக்கெட் தான் எனது வாழ்வின் முக்கியமானதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அதுவே சுமையானது. கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த பின்னரே, அந்த சுமை விலகி பழைய நிலைக்கு திரும்பினேன் ' என்றார்.

    • செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
    • செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    கேப்டவுன்:

    நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 18-ந்தேதி இரவு மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல் அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

    முன்னதாக கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவரிடம் வாக்குவாதம் செய்த செனகல் வீரர்கள் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்தால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. சமாதானத்திற்கு பிறகு மீண்டும் களம் திரும்பிய செனகல் வாகை சூடியது. ஆனால் ஆட்டத்தின் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக கண்டித்தது.

    இந்த நிலையில் இது குறித்து விசாரித்த ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், வீரர்களின் மோசமான நடத்தைக்காக செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.

    மேலும் விளையாட்டின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு 5 ஆப்பிரிக்க போட்டிகளில் பணியாற்ற தடையும், ரூ.92 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் ஒழுங்கீன செயலுக்காக செனகல் வீரர்கள் லிமன் என்டியாயே, இஸ்மைலா சர் ஆகியோருக்கு 2 ஆப்பிரிக்க போட்டிகளிலும், மொராக்கோ கேப்டன் அச்ரப் ஹாகிமிக்கு 2 போட்டிகளிலும், இஸ்மைல் சாய்பரிக்கு 3 போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    ×