என் மலர்
விளையாட்டு
- 6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா?
- இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-4ம் நிலை வீரரான ஜோகோவிச் ( செர்பியா ) மோதுகிறார்கள்.
6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 22 வயதான அவர் தற்போது தான் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். கடந்த ஆண்டு அல்காரஸ் பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 8-வது தடவையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார்.
38 வயதான ஜோகோவிச் 25-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.
24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் இருக்கும் சாதனையாளரான அவர், கடைசியாக 2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த கிராண்ட்சிலாமும் பெறவில்லை.
5 கிராண்ட் சிலாம் போட்டிக்கு பிறகு ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் 38-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.
இன்று பிற்பகல் நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 தடவை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்)-ஐந்தாவது வரிசையில் உள்ள எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள்.
சபலென்கா 5-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறார். ரைபகினா முதல் கிராண்ட் சிலாம் பட்டத்துக்கு காத்திருக்கிறார்.
- சூப்பர் சிக்ஸ் சுற்று நாளையுடன் முடிகிறது.
- பாகிஸ்தான் வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும்.
16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
இதில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. கடந்த 23-ந்தேதி 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளி யேற்றப்பட்டது. 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன.
குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.
குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பது நாளை தெரியும்.
சூப்பர் சிக்ஸ் சுற்று நாளையுடன் முடிகிறது. புல வாயோவில் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவில் 2-வதாக அரை இறுதிக்கு நுழையும் அணி எது என்பது தெரியவரும்.
இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தான் வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும். பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சமபுள்ளியை பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும். பாகிஸ் தானை விட இந்தியா ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது.
ஆயுஸ் மாத்ரே தலைமையிலான அணி பாகிஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரில் தோல்வியை தழுவவில்லை. 'லீக்' சுற்றில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வங்காள தேசத்தை 18 ரன் வித்தியா சத்திலும், நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் 'சூப்பர் 8' சுற்றில் ஜிம்பாப் வேயை 204 ரன் வித்தியா சத்திலும் தோற்கடித்தது.
பாகிஸ்தான் அணி 'லீக்' சுற்றில் ஸ்காட்லாந்து (6 விக் கெட்), ஜிம்பாப்வே (8 விக் கெட்) வென்றது. இங்கிலாந்திடம் 36 ரன்னில் தோற்றது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் நியூசி லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
- டெஸ்ட் போட்டி என்று வரும்போது, இந்தியா மாற்றத்தின் பாதையில் இருக்கும் அணிதான்.
- எதிர்காலத்தில் இந்தியாவுக்கு கடினமாக இருக்கப் போகிறது.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 எனக் கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 2-1 எனவும், டி20 தொடரை 3-1 எனவும் இந்தியா கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஒருநாள் கிரிக்கெட் ஓ.கே.தான். ஆனால், டெஸ்டில் அவருக்கு அழுத்தம்தான் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பவுமா கூறியதாவது:-
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு நட்சத்திர வீரர்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி எப்படி விளையாடியது என்று நீங்கள் பார்த்தீர்கள். அதுவேளையில் டெஸ்ட் போட்டியில் அவர்கள் இல்லை. டெஸ்ட் போட்டி என்று வரும்போது, இந்தியா மாற்றத்தின் பாதையில் இருக்கும் அணிதான்.
இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது தோளில் ஏராளமான அழுத்தத்தை கொண்டுள்ளார். அவர் அந்த அழுத்தத்தை சமாளித்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான அவகாசத்தை பெற்றுக்கொள்வதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். என்னுடைய பார்வையில் ஒயிட் பால் கிரிக்கெட் பெர்பார்மன்ஸ் அவருக்கு உதவியாக இருக்கலாம்.
ஒருநாள் போட்டியில் ஆட்டத்திறன் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் வழக்கமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுப்புகளை எடுத்துக் கொள்வார்கள். ஆகவே, கவுதம் கம்பீர் அவருடைய நிலையில் ஓ.கே. என நான் நினைக்கிறேன். எனினும், டெஸ்ட் கிரிக்கெட் பார்வையில், எதிர்காலத்தில் இந்தியாவுக்கு கடினமாக இருக்கப் போகிறது.
இவ்வாறு பவுமா தெரிவித்தார்.
- ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ரவி பிஷ்னோய் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். எனவே, இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவது முக்கியமானதாகும்.
கடந்த போட்டியில் சிறுகாயம் (Niggle) காரணமாக இஷான் கிஷன் விளையாடவில்லை. இவர் இன்றைய போட்டியிால் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோதுல் முதல் போட்டியின்போது கைவிரலில் காயம் ஏற்பட்ட அக்சர் படேல் மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தெரிகிறது.
அல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது. இதனால் இருவரும் அணியில் இணைந்தால் ரவி பிஷ்னோய் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்றால், திலக் வர்மா அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது.
- வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளது.
- வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான், இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை வருகிற 7-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டு நாடுகளும் இணைந்துதான் தொடரை நடத்துகின்றன.
ஆனால், வங்கதேசம் இந்தியாவில் பாதுகாப்பை காரணம் காட்டி விளையாட மறுத்தது. இலங்கையில் குரூப் லீக் போட்டிகளை நடத்த வேண்டுகோள் விடுத்தது. ஆனால், ஐசிசி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.
வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகுவதா? அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை இது தொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய கிரிக்கெட் செயலாளர் பண்டுலா திசநாயகே கூறுகையில் "இலங்கை பிராந்திய மோதல்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க விரும்புகிறது. இந்த பிரச்சினை இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையிலானது. நாங்கள் தொடர்ந்து நடுநிலை வகிப்பவராக இருந்து கொண்டிருக்கிறோம். இவைகள் அனைத்தும் எங்களுடைய நட்பு நாடுகள். எந்தவொரு மற்ற நாடுகளும் இலங்கையில் தொடரை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி இலங்கையில் நடைபெற இருக்கிறது.
- முதலில் ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களில் சுருண்டது.
- சவுராஷ்டிரா சார்பில் ஜெயதேவ் உனத்கட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
சண்டிகர்:
ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டி சண்டிகரில் நடந்து வருகிறது. இங்கு சவுராஷ்டிரா, சண்டிகர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற சவுராஷ்டிரா பவுலிங் தேர்வ்ய் செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களில் சுருண்டது.
சவுராஷ்டிரா அணி சார்பில் ஜெயதேவ் உனத்கட் 4 விக்கெட்டும், சேட்டன் சகாரியா, சிராக் ஜானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிர அணி முதல் இன்னிங்சில் 106.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 453 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
போனஸ் புள்ளியுடன் வெற்றிபெற வேண்டும் என்பதால் அந்த அணி சீக்கிரம் டிக்ளேர் செய்துள்ளது. சிறப்பாக ஆடிய ஹர்விக் தேசாய் இரட்டை சதம் கடந்து அசத்தினார்.
தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்த ஹர்விக் தேசாய் 200 ரன்னுடன் (305 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்)அவுட் ஆகாமல் இருந்தார்.
ஜெய் கோஹில் 98 ரன்னும், அர்பித் வசவதா 96 ரன்னும் எடுத்து அவுட்டாகி சதத்தை தவறவிட்டனர்.
இதையடுத்து, 317 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய சண்டிகர் அணி 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அல்காரஸ் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அதிக நேரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிக்கு சொந்தக்காரர் என்ற சாதனை படைத்தார்.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு நுழைந்ததன் மூலம் அனைத்து கிராண்ட்சிலாம் போட்டிகளின் இறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் 33 ஆண்டுக்கு முன் ஜிம் கொரியர் படைத்திருந்த சாதனையை அல்காரஸ் தகர்த்தார்.
அனைத்து கிராண்ட்சிலாம் போட்டிகளின் இறுதிக்குள் நுழைந்த இளம் வீரர் என கடந்த ஆண்டு சின்னர் படைத்த சாதனையையும் அல்காரஸ் முறியடித்துள்ளார்.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி தோல்வி அடைந்தார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி, சீனாவின் சூ ஜுவான் சென் உடன் மோதினார்.
இதில் சீனா வீராங்கனை 21-11, 21-17 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்தியாவின் தருண் மன்னேபல்லி தொடரில் இருந்து வெளியேறினார்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 16.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 11 ரன் வித்தியாசத்தில் வென்றது.
பல்லேகலே:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்
தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 16.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 37 ரன்னும், பதும் நிசங்கா 23 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், சாம் கர்ரன் தலா 3 விக்கெட்டும், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 46 ரன்னில் அவுட்டானார். டாம் பெண்டன் 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 15 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 46 ரன்னும், ஜார்ஜியா வேர்ஹாம் 44 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி 5-வது வெற்றியைப் பதிவுசெய்து எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.
ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 48 பந்தில் 82 ரன் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.
குஜராத் அணி சார்பில் சோபியா டிவைன், ஜார்ஜியா வேர்ஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பெற்றுள்ளது.
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாத், தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாத் 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான இஷாராணி பரூக் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- முதல் மற்றும் 3-வது செட்டை சின்னர் கைப்பற்றினார்.
- கடைசி இரண்டு செட்டுகளையும் ஜோகோவிச் எளிதாக கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா ஓபனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதியில் ஸ்வெரேவை கடும் போராட்டத்திற்குப் பின் 5.30 மணி நேரம் தாக்குப்பிடித்து அல்காரஸ் வீழ்த்தினார்.
2-வது அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்- இத்தாலி வீரரும் 2025 சாம்பியனுமான சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் ஜோகோவிச் முதல் செட்டை 3-6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

3-வது செட்டில் சின்னர் கை ஓங்கியது. அவர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றினார். ஆனால 4-வது செட்டை 6-4 எனவும், 5-வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 4 மணி நேரமும் 9 நிமிடங்களும் தேவைப்பட்டது.






