search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grandslam"

    • ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.
    • ஜோகோவிச் மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 3-1 செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    முதல் செட்டை 4-6 என இழந்த போதிலும் அடுத்த மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.

    • வெற்றியை பெற சிட்சிபாசுக்கு 3 மணி 13 நிமிடங்கள் தேவைப்பட்டது.
    • சபலென்கா அடுத்து சக நாட்டவரான தகுதி நிலை வீராங்கனை ஷியாமனோவிச்சை சந்திக்கிறார்.

    4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தொடக்க ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து) முதல் தடையை கடக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அவர் தன்னை எதிர்த்த பெல்ஜியத்தின் டேவிட் கோபினை 6-3, 5-7, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி 37 நிமிடங்களில் சாய்த்தார்.

    இதே போல் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 4-6, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் ஜிரி வெஸ்லியை (செக்குடியரசு) தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிட்சிபாசுக்கு 3 மணி 13 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    கரென் கச்சனோவ் (ரஷியா), கோகினாகிஸ் (ஆஸ்திரேலியா), ரடு அல்போட் (மால்டோவா), செபாஸ்டியன் அப்னெர் (ஆஸ்திரியா), செபாஸ்டியன் கோர்டா (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் மார்டா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சபலென்கா அடுத்து சக நாட்டவரான தகுதி நிலை வீராங்கனை ஷியாமனோவிச்சை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் நடியா போடோராஸ்கா (அர்ஜென்டினா) 6-0, 6-2 என்ற நேர் செட்டில் ஜெசிகா போன்செட்டையும் (பிரான்ஸ்), மேக்டலினா பிரெச் (போலந்து) 6-1, 6-1 என்ற நேர் செட்டில் சூவாய் ஜாங்கையும் (சீனா), பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் 6-1, 6-4 என்ற செட்டில் விக்டோரியா ஹிரன்காகோவாவையும் (சுலோவக்கியா) ஊதித்தள்ளினர். அதே சமயம் 8-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி (கிரீஸ்) 6-7 (5-7), 5-7 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் கரோலினா முச்சோவாவிடம் (செக்குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    • இன்றைய போட்டியில் சிட்சிபாசை வீழ்த்தினால் ஜோகோவிச் 22-வது கிராண்ட்சிலாமை வென்று நடாலின் சாதனையை சமன் செய்தார்.
    • இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாசை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அபாரம்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 5-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (பெ லாரஸ்)-எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதினார்கள். இதில் ஷப லென்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கிராண்ட்சிலாம் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 4-வது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா)-தர வரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதினர்.

    டென்னிஸ் போட்டியில் அதிக கிராண்ட்சிலாம் வென்றவர் ரபெல் நடால். ஸ்பெயினைச் சேர்ந்த 36 வயதான அவர் 22 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஒபனில் அவர் 2-வது சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    ஜோகோவிச் 21 கிராண்ட்சிலாமுடன் 2-வது இடத்திலும், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 20 கிராண்ட்சிலாமுடன் 3-வது இடத்திலும் இருந்தனர்.

    இன்றைய போட்டியில் சிட்சிபாசை வீழ்த்தினால் ஜோகோவிச் 22-வது கிராண்ட்சிலாமை வென்று நடாலின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலிய ஓபனை வெல்லும்போது மேலும் ஒரு சாதனையாக, அவர் 10 மற்றும் அதற்கு மேல் வென்ற 3வது நபர் என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறப்பட்டது.

    மேற்கூறியபடி, ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாசை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அபாரமாக வெற்றிப்பெற்றார்.

    ×