என் மலர்
விளையாட்டு
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 46 ரன்களே முன்னிலைப் பெற்றிருந்ததால், சர்வீசஸ் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் எளிதில் சேசிங் செய்தது.
10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி படுதோல்வியை சந்தித்ததை முன்னாள் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
மும்பை அணியைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினர்.
அதன்பின் இந்திய அணி வரும் ஐந்தாம் தேதி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. சுமார் இரண்டு வார விடுமுறை இருந்தும் 25-ந்தேதி தொடங்கிய ரஞ்சி டிராபியை நிராகித்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த மும்பை கிரிக்கெட் சங்கம் ‘‘இது மும்பை கிரிக்கெட்டிற்கு துரதிருஷ்டவசமானது. நாங்கள் இருவரிடமும் பேசினோம். அப்போது பிசிசிஐ எங்களை ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளது என்று கூறினார்கள்.
எனினும், நாங்கள் தேர்வுக்குழுவினருடன் பேசி உறுதி செய்தபோது, நாங்கள் அதுபோன்ற இந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றனர். அப்படியென்றால் அவர்களை ஓய்வு எடுக்கச் சொன்னது யார்?. இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோவா? அல்லது டிரைனரா? அல்லது அவர்களே ஓய்வு எடுக்க முடிவு செய்தனரா? பிசிசிஐ பின்புறத்தில் இருந்து இப்படி செய்கிறார்களா?.
தேர்வாளர்கள் உள்பட மும்பை கிரிக்கெட் சங்கம் இதை விரும்பவில்லை. அடுத்த உயர்மட்டக்குழுவில் இதுகுறித்து உறுதியாக விவாதிப்போம். முதல்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படலாம்’’ என விளக்கம் அளித்துள்ளது.
என்றாலும் அந்த அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இரண்டு போட்டிகளின் நான்கு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கினார்.

நீல் வாக்னர் 46-வது டெஸ்டில் 200-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் விரைவாக 200 விக்கெட்டுக்களை வீழ்த்திய 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ரிச்சார்ட் ஹெட்லீ 40 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
டிரென்ட் போல்ட் 52 டெஸ்ட் போட்டிகளிலும், டிம் சவுத்தி 56 டெஸ்ட் போட்டிகளிலும் 200-வது விக்கெட்டை தொட்டனர்.
இதற்கான புள்ளிகள் பட்டியலில் இந்தியா 7 போட்டிகளில் (3 தொடர்) வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இருந்து ஆஸ்திரேலியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியதால் 120 புள்ளிகள் கிடைத்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் 80 புள்ளிகள் கிடைத்துள்ளது.
இதன்மூலம் ஆஸ்திரேலியா 256 புள்ளிகள் பெற்றுள்ளது. சிட்னியில் நடக்க இருக்கும் கடைசி போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தினால் 306 புள்ளிகள் பெற்றுவிடும். அப்போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் 64 புள்ளிகள் மட்டுமே இடைவெளி இருக்கும்.
இந்தியா பிப்ரவரி மாதம் நியூசிலாந்து சென்று இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா வங்காளதேசம் சென்று இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை இழந்தால் முதல் இடத்தை இழக்க நேரிடும்.
அடுத்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆன பீட்டர் சிடில் 67 டெஸ்டில் விளையாடி 221 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் விளையாடினார்.
இந்த போட்டிக்குப்பின் இந்தியா அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறது. இலங்கை தொடருக்கு முன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என வீரர்களுக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு கிடைத்தது.
இதை பயன்படுத்தி இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சுவிட்சர்லாந்து சென்று விடுமுறையை கொண்டாடினர். இருவரும் பனிப்படர்ந்த மலைப்பகுதியில் நின்று எடுத்த போட்டோவை விராட் கோலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மாஸ்கோ:
ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷிய விளையாட்டு நட்சத்திரங்கள் சிக்கி இருந்தனர். அந்நாட்டு அரசே இதற்கு ஆதரவாக இருந்தது தெரிய வந்தது.
இதனால் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 15 மாதம் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2016-ம் ஆண்டு நியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியவில்லை.
இது குறித்து விசாரணை நடத்திய உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ) ரஷியாவுக்கு 4 ஆண்டு தடை விதித்தது.
இந்த தடையால் டோக்கியோ ஒலிம்பிக் (2020) பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் (2020), கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி (2022) ஆகியவற்றில் ரஷியா பங்கேற்க முடியாது.
தனிப்பட்ட முறையில் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம்.
இந்த நிலையில் சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் விதித்த 4 ஆண்டு தடையை எதிர்த்து ரஷியா அப்பீல் செய்துள்ளது.
அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு மையம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பீல் மனு சுவிட்சர்லாந்தின் லுசானாவில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்) விரைவில் விசாரிக்கப்படும்.







