search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடிக்க போராடும் வீரர்கள்
    X
    கோல் அடிக்க போராடும் வீரர்கள்

    ஐஎஸ்எல் கால்பந்து - கேரளா, நார்த் ஈஸ்ட் அணிகளிடையிலான ஆட்டம் சமனானது

    கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, கேரளா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
    கொச்சி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கேரளா மாநிலம் கொச்சியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் கேரளா அணியின் பர்தோலோமியூ ஆக்பெச்செ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என கேரளா முன்னிலை வகித்தது. 

    இரண்டாவது பாதியில் நார்த் ஈஸ்ட் அணியின் அசாமோ கியான் 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலைக்கு வந்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

    இதன்மூலம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தான் ஆடிய 10 போட்டிகளில் 1 வெற்றி, 4 தோல்வி மற்றும் 5 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
    Next Story
    ×