search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் மற்றும் ரஷியா கொடி
    X
    ஒலிம்பிக் மற்றும் ரஷியா கொடி

    ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது- 4 ஆண்டு தடையை எதிர்த்து ரஷியா அப்பீல்

    சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் விதித்த 4 ஆண்டு தடையை எதிர்த்து ரஷியா அப்பீல் செய்துள்ளது.

    மாஸ்கோ:

    ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷிய விளையாட்டு நட்சத்திரங்கள் சிக்கி இருந்தனர். அந்நாட்டு அரசே இதற்கு ஆதரவாக இருந்தது தெரிய வந்தது.

    இதனால் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 15 மாதம் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2016-ம் ஆண்டு நியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியவில்லை.

    இது குறித்து விசாரணை நடத்திய உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ) ரஷியாவுக்கு 4 ஆண்டு தடை விதித்தது.

    இந்த தடையால் டோக்கியோ ஒலிம்பிக் (2020) பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் (2020), கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி (2022) ஆகியவற்றில் ரஷியா பங்கேற்க முடியாது.

    தனிப்பட்ட முறையில் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம்.

    இந்த நிலையில் சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் விதித்த 4 ஆண்டு தடையை எதிர்த்து ரஷியா அப்பீல் செய்துள்ளது.

    அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு மையம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பீல் மனு சுவிட்சர்லாந்தின் லுசானாவில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்) விரைவில் விசாரிக்கப்படும்.

    Next Story
    ×