என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 கிரிக்கெட் போட்டியில் உலகின் தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர்தான் என டாம் மூடி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டாம் மூடியிடம் ரசிகர்கள் ‘டுவிட்டர்’ வாயிலாக பல கேள்விகளை கேட்டனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்ட போது, ‘‘இது கடினமான கேள்வி. ஆனால் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோரின் பெயர்களை சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன்’’ என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ், பிடித்தமான கேப்டன் டோனி என்று மற்றொரு கேள்விக்கு பதிலை பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட்டில் மனம் கவர்ந்த வீரர் விராட் கோலி, பிடித்தமான பீல்டர் ரவீந்திர ஜடேஜா என்றும் கூறினார்.

    கொரோனாவால் போட்டிகள் நடத்த முடியாமல் போனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் தாக்குதலில் இருந்து விளையாட்டு உலகமும் தப்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது. இங்கிலாந்திலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உள்ளது.

    இங்கிலாந்தில் பிரபலமான கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 12-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. அது மே 28-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் 7 சுற்றுகளை இழக்க வேண்டி உள்ளது. தற்போதைய நிலைமையை பார்த்தால் இந்த ஆண்டுக்கான கவுன்ட்டி போட்டி ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது.

    இலங்கைக்கு சென்றிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி கொரோனா பீதியால் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அங்கிருந்து தாயகம் திரும்பி விட்டது. ஜூன் 4-ந்தேதி உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியும் தொடங்க சாத்தியமில்லை. நிதியின்றி தவிக்கும் கவுன்ட்டி மற்றும் கிளப் அணிகளுக்கு உதவிட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரூ.580 கோடி ஒதுக்கியுள்ளது.

    மற்றொரு பக்கம் சிக்கன நடவடிக்கையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக கிரிக்கெட் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை அடுத்த 3 மாதங்களுக்கு 25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களின் சம்பளத்திலும் ‘கைவைக்க’ திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன், தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவர் டோனி அரிஷிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘கொரோனா பரவலால் விளையாட்டு உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டிலும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சீசனில் கவுண்டி மற்றும் சர்வதேசம் உள்ளிட்ட எந்த போட்டியையும் இங்கிலாந்தில் நடத்த முடியாத நிலை நீடித்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படக்கூடும். அதே சமயம் தற்போது பாதுகாப்புதான் முதலில் முக்கியம். கிரிக்கெட் எல்லாம் 2-ம் பட்சம்தான்.

    கிரிக்கெட் வாரிய பணியாளர்களின் ஊதியத்தை ஏற்கனவே குறைக்க முடிவு செய்து விட்டோம். இதேபோல் ஏப்ரல், மே மாதத்திற்கு வீரர்களுக்கான சம்பளத்தில் 20 சதவீதத்தை குறைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளோம். இந்த இக்கட்டான சூழலில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இவற்றில் இருந்து மீள முடியும்’ என்று கூறியுள்ளார்.

    இந்த கடிதத்துக்கு வீரர்களின் தரப்பில் இன்னும் பதில் அனுப்பப்படவில்லை.
    கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களை தூக்கில் போட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான 62 வயது ஜாவித் மியாண்டட் தனது யூடியூப் சேனலில் பேசுகையில் கூறியதாவது:

    ‘கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்‘ உள்பட எத்தகைய சூதாட்டத்திலும் ஈடுபட்டு அணிக்கோ, நாட்டுக்கோ அவப்பெயர் ஏற்படுத்தும் வீரர்கள் மீது எனக்கு எந்தவித அனுதாபமும் கிடையாது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை தூக்கில் போட வேண்டும். ஏனெனில் இதுவும் ஒருவரை கொலை செய்வது போன்ற குற்றம் தான். 

    எனவே இதற்கான தண்டனை கொலை குற்றவாளிகளுக்கு அளிக்கப்படுவது போல் இருக்க வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்து முன்னுதாரணத்தை உருவாக்கினால், எந்தவொரு வீரரும் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.

    சூதாட்டம் என்பது எங்களது மத கொள்கைக்கு (இஸ்லாம்) எதிரான விஷயமாகும். மத போதனைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவறு இழைக்கிறது. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை மீண்டும் விளையாட அனுமதிப்பவர்கள் தங்களது செயலை நினைத்து வெட்கப்பட வேண்டும்.

    சூதாட்ட செயலில் ஈடுபடும் வீரர்கள் தங்களது சொந்த குடும்பத்துக்கோ, பெற்றோருக்கோ கூட உண்மையாக இருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படியிருந்தால் அவர்கள் ஒரு போதும் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள். ஆன்மிக ரீதியாக அவர்கள் தெளிவற்றவர்கள். மனிதநேய அடிப்படையில் இதுமாதிரியான செயல்பாடுகள் சரியானது கிடையாது. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்.

    பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இதுபோன்ற ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதும், அதனை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதும், அதன் பிறகு தங்களுக்குரிய செல்வாக்கு மற்றும் தொடர்பை பயன்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்புவதும் எளிதான விஷயமாக இருக்கிறது. வீரர்கள் தங்களது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தங்களது திறமையின் மூலம் களத்தில் சிறப்பாக செயல்பட்டு தான் பணத்தை சம்பாதிக்க வேண்டும். 

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் பலரும் பிரார்த்திக்கிறார்கள். நாட்டு மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு மன்னிப்பு அளித்து அணியில் மீண்டும் விளையாட அனுமதிப்பது சரியானதா?.

    இவ்வாறு ஜாவித் மியாண்டட் கூறியுள்ளார்.
    பிரதமர் நிவாரண நிதிக்கு மேலும் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது நேற்று அறிவித்தார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் நாடு பொருளாதார ரீதியாகவும் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது. 

    எதிர்பாராத இந்த இன்னலை தாங்க எல்லா தரப்பினரும் அரசுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று பல தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை கடந்த 1-ந் தேதி ஆக்கி இந்தியா அமைப்பு வழங்கி இருந்தது. 

    இந்த நிலையில் மேலும் ரூ.75 லட்சம் (மொத்தம் ரூ.1 கோடி) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஸ்தாக் அகமது நேற்று அறிவித்தார். செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

    இதேபோல் இந்திய கோல்ப் வீரர் அனிர்பன் லஹிரி ரூ.7 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்.

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தினமும் 10,000 பேருக்கு உணவு வழங்க தேவையான நிதியை கங்குலி அளித்துள்ளார்.

    கொல்கத்தா:

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அன்றாட கூலி தொழிலாளர்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி உதவி வருகிறார்.

    கொல்கத்தாவைச் சேர்ந்த ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தினமும் 10,000 பேருக்கு உணவு வழங்க தேவையான நிதியை அளித்துள்ளார். இதற்காக கையில் கிளவுஸ் முகத்தில் மாஸ்க் அணிந்து முழு பாதுகாப்புடன் அந்த மையத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள உணவு கூடத்தையும் அவர் பார்வையிட்டார். கங்குலி ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பேளூர் மடத்திற்கு 20,000 கிலோ அரிசியை வழங்கி இருந்தார்.

    கொரோனா வைரஸ் குறித்து கங்குலி கூறியதாவது;-

    வீட்டுக்கு உள்ளேயே இருங்கள். நோய் தடுப்பு சக்தியை பராமரியுங்கள். சமூக விலகல் என்பது புதிய ஒற்றுமை, புதிய நல்லிணக்கம் என்பதையும், கொரோனாவுக்கு எதிரான போரில் இது நமது தேசிய கடமை என்பதையும் உணர வேண்டும்.

    உலகம் முழுவதும் இது கடினமான காலகட்டம். இந்தியாவிலும் , பல்வேறு மாநிலங்களிலும் நாம் நிமிர்ந்து நின்று அதை எதிர்கொள்வோம். பிரதமர், முதல்-மந்திரிகள், சுகாதாரத்துறையினர் முயற்சி செய்கிறார்கள். போலீசார் சிறப்பாக பணியை செய்கிறார்கள்.

    ஆனால் நாம் தனிமையைத் தான் பராமரிக்க வேண்டும். உத்தரவுகளை மதித்து பாதுகாப்பாக இருப்போம். நாம் ஒன்றிணைந்து பொறுப்பாக இருந்தால் இதில் வெல்லலாம்.

    கொரொனா ஒரு அபாயகரமான வைரஸ். இதுவரை உலகம் இப்படி ஒன்றை பார்த்ததில்லை. உலகம் இனி இப்படி ஒன்றை காணாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது.

    இது தனித்துவமான விதிவிலக்கான காலகட்டமாகும். ஆகவே பொறுப்பாக இருப்போம். வீட்டுக்குள்ளேயே இருந்து ஆரோக்கியத்தை காப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் 7 ½ கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
    ரியோடிஜெனிரோ:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அலற வைத்து இருக்கிறது. இதில் தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த பிரேசில் நாடும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பவில்லை.

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் 7.60 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

    ஐ.நா.வின் குழந்தைகள் நலநிதிக்கும், பிரேசிலை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவர் நடத்தும் அறக்கட்டளைக்கும் இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது. 

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் (பிரான்ஸ்) அணிக்காக விளையாடி வரும் 28 வயதான நெய்மார் உலகளவில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்த ஆண்டுக்கான 13- வது ஐ.பி. எல்லை கடந்த 29-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி வருகிற 15-ந் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு ஐ.பி. எல். போட்டி ரத்து செய்யப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 15 -ந் தேதிக்கு பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும்.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா இது தொடர்பாக அவர் கூறியதாவது;- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது.

    மீண்டும் இயல்புநிலை திரும்பும்போது ஐ.பி.எல் தொடர் குறித்து யோசிக்கலாம். தற்போது உயிர் சேதம் ஏற்படுகிறது. இதனால் நமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் உள்ளோம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் நன்றாக இருந்தது. வலைப்பயிற்சியில் டோனி சிறப்பாக பேட்டிங் செய்தார். 3 மணி நேரம் பேட்டிங் செய்த அவர் இளம் வீரர் போல் துடிப்புடன் காணப்பட்டார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ல் உலக கோப்பை வென்றதை கொண்டாடி வருகிறோம். இறுதிப்போட்டியில் ஜாகீர்கான் பந்துவீச்சு, காம்பீர், டோனியின் பேட் டிங், யுவராஜ் சிங்கின் ஆல் ரவுண்டர் செயல்பாடு கை கொடுத்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கொரோனா தடுப்பு பனி நிவாரணத்திற்கு ரெய்னா ரூ.52 லட்சம் நிதி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 71 லட்சத்து 14 ஆயிரத்தை நிதி உதவியாக அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கு அவர்கள் தாராளமாக உதவி செய்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யு மான கவுதம் காம்பீர் தனது 2 வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கி உள்ளார்.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 71 லட்சத்து 14 ஆயிரத்தை நிதி உதவியாக அளித்துள்ளது.

    அனைத்து மாநில ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகள் அளித்த ஆதரவுடன் இந்த நிதி உதவியை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கி உள்ளது.


    கொரோனா வைரசை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், வீடுகளில் அகல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏற்றவேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சோனிப்பட்:

    கொரோனா வைரசை ஒழிக்க ஒன்றுபடும் வகையில் நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளில் மின் விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதற்கு பல விளையாட்டு நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இது தொடர்பாக கூறியதாவது;-

    வீடுகளில் மின் விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏற்றவேண்டும் என்று நமது பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பிரதமர் மோடி


    கடந்த 22-ந் தேதி மக்கள் ஊரடங்கை அனைவரும் ஒருங்கிணைந்து பின்பற்றியது போல் இதையும் கடைபிடிக்க வேண்டும். எனது குடும்பத்துடன் இணைந்து விளக்கு ஏற்ற உள்ளேன். நீங்களும் இதை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அரியானாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். மேலும் உலக சாம்பியன் போட்டியில் 3 பதக்கம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டேபிள் டென்னிஸ் வீரர் ஹர்மீத் தேசாய் கூறும்போது, ‘கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் பிரதமர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அனைவரும் ஒன்றிணைவோம்.  நாளை அகல் விளக்கு ஏற்றி நமது ஒற்றுமை வெளிப்படுத்துவோம்‘ என்றார்.

    கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான இரண்டு பேட்ஸ்மேன்கள் டோனி, டிவில்லியர்ஸ் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனுடன் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ஜாலியாக கலந்துரையாடினார். அப்போது பீட்டர்சன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது:

    கேள்வி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்னும் ஏன் ஒரு ஐ.பி.எல். கோப்பையை கூட வெல்லவில்லை?

    பதில்: எங்கள் அணியில் மிகப்பெரிய வீரர்கள் உள்ளனர். நட்சத்திர வீரர்கள் இருக்கும் போது அந்த அணி மீது எப்போதும் அதிக எதிர்பார்ப்பும், கவனமும் வந்து விடுகிறது. மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறோம். சிறந்த அணியாக இருந்த போதிலும் ஒரு முறை கூட வாகை சூடவில்லை. இதே போல் மூன்று முறை பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளோம். கோப்பையை வெல்லாத வரை இவை எல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே எங்களது குறிக்கோள். அதற்கு நாங்கள் தகுதியான அணி. சில சமயம் கோப்பையை பற்றி பேசியே கூடுதல் நெருக்கடி உருவாகி விடுகிறது. எனவே நெருக்கடியை எடுத்துக் கொள்ளாமல், உற்சாகமாக விளையாட வேண்டியது முக்கியம்.

    கேள்வி: ஐ.பி.எல்.-ல் உங்களது ஜாலியான இன்னிங்ஸ் எது?

    பதில்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஒரு ஆட்டம் (2016-ம் ஆண்டு) மழையால் பாதிக்கப்பட்டு 14 அல்லது 15 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்டத்தில் களம் இறங்கி 12-வது ஓவரிலேயே சதம் (50 பந்தில் 113 ரன்) அடித்து விட்டேன். பந்தை சிறந்த முறையில் விரட்டியடித்தேன். எல்லா பந்தும் பேட்டில் சரியாக ‘கிளிக்’ ஆனது. இதில் என்னை அவர்களால் அவுட் ஆக்க முடியாது என்பது போல் உணர்ந்தேன். இப்படியொரு எண்ணம் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. எனக்கு பிடித்த மிகவும் ஜாலியான இன்னிங்சாக இதை கருதுகிறேன்.

    கேள்வி: பேட்டிங்கின் போது உங்களுக்கு பிடித்தமான இணை ஆட்டக்காரர்கள் யார்?

    விராட் கோலி - டோனி

    பதில்: இரண்டு வீரர்களுடன் இணைந்து ஆடும் போது மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து பேட்டிங் செய்திருக்கிறேன். அவர்களுடன் ஆடும் போது களத்தில் ரன் எடுக்க படுவேகமாக ஓடியிருக்கிறேன். எங்களுக்குள் தெளிவான புரிந்துணர்வு இருந்துள்ளது. அவர்கள் வேறுயாருமில்லை, ஒருவர் இந்திய வீரர் டோனி. மற்றொரு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் டிவில்லியர்ஸ். நாங்கள் பேட்டிங் செய்யும் போது அதிகமாக பேசிக்கொள்வது கூட கிடையாது. பார்வையிலேயே புரிந்து கொள்கிறோம்.

    டிவில்லியர்ஸ் - விராட் கோலி

    கேள்வி: கிரிக்கெட்டில் உங்களுக்கு எந்த வடிவிலான போட்டி பிடிக்கும்?

    பதில்: டெஸ்ட் கிரிக்கெட் தான். இதை பல தடவை சொல்வேன். என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. ரன் எடுக்காத போதிலும் ஓட்டலுக்கு திரும்பி விட்டு அடுத்த நாள் உடனடியாக போட்டிக்கு தயாராக இருக்க வேண்டும். இது தான் வாழ்க்கை. அது தான் என்னை சிறந்த மனிதராக மாற்றியது.

    கேள்வி: உங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தருணம்?

    பதில்: 2014-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர் மோசமான நாட்களாக அமைந்தது. இந்த தொடரில் நான் சோபிக்க (5 டெஸ்டில் 134 ரன்) தவறினேன். அணிக்கு என்ன தேவை என்பதை விட எனது தனிப்பட்ட ஆட்டத்தில் ரொம்ப கவனம் செலுத்தி விளையாடியதால் வந்த தடுமாற்றம் அது. என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கிய தொடர்.

    கேள்வி: நீங்கள் திடீரென சைவத்துக்கு மாறியது ஏன்?

    பதில்: 2018-ம் ஆண்டுக்கு முன்பு வரை அசைவப் பிரியராகத் தான் இருந்தேன். 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கழுத்து எலும்பில் பிரச்சினை ஏற்பட்டது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்தேன். பரிசோதனையில் எனது உடல் யூரிக் அமிலத்தை அதிகமாக உற்பத்தி செய்தது தெரியவந்தது. உடலில் அளவுக்கு அதிகமாக அமிலத்தன்மை இருந்தது. மாத்திரை சாப்பிட்டும் உடனடியாக சீராகவில்லை. எலும்பில் உள்ள கால்சியத்தை உடல் எடுத்துக் கொள்ள தொடங்கியதால் எலும்பும் பலவீனமடைந்தது. இதனால் அடுத்து நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இறைச்சி உள்ளிட்ட அசைவம் சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திக் கொண்டேன். அதற்குரிய பலன் உடனே தெரிந்தது. உடலில் யூரிக் அமிலம் பிரச்சினை தீர்ந்தது. உடலில் புதிய மாற்றத்தை உணர்ந்தேன். காலையில் எழும் போது முன்பை விட மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்ந்தேன். போட்டியில் ஆடி விட்டு சோர்வடையும் போது அதில் இருந்து விரைவாக மீள முடிகிறது. எனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு இது. சொல்லப்போனால் சைவ உணவு பழக்கத்துக்கு ஏன் முன்பே மாறவில்லை என்று நினைப்பது உண்டு.

    கேள்வி: இந்தியாவில் தற்போது எந்த மாதிரியான சூழல் உள்ளது?

    பதில்: கொரோனா தடுப்பு பணியில் எங்களது பொறுப்புணர்வு நன்றாக உள்ளது. ஒரு சில நபர்கள் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அது எப்படி நடந்தது என்பது தெரியாது. ஆனால் மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு வழிகாட்டுதல்களை கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தை கையாள்வதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    மேலும் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த கோலி, ‘கால்பந்து உலகில் லயோனல் மெஸ்சியை விட கிறிஸ்டியானா ரொனால்டோவை ரொம்ப பிடிக்கும், தாடியை மழித்து விட்டால் முகம் அழகாக இருக்காது. அதனால் தாடியை ஒரு போதும் எடுக்க மாட்டேன், 2011-ம் ஆண்டு இந்தியாவில் உலக கோப்பையை வென்றது மறக்க முடியாது தருணம், இதுவரை நான் விளையாடாத விளையாட்டுகளில் கோல்ப்பும் ஒன்று’ என்றும் அவர் கூறினார்.
    கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்குட்பட்ட மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டிருந்தது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என நிர்வாகக்குழுவுக்கு தொடர்ந்து பரிந்துரை செய்யப்பட்டது.  இதனையடுத்து போட்டியை ஒத்திவைப்பதாக பிபா அறிவித்துள்ளது. போட்டிக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    இந்திய மகளிர் அணி

    கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகளை எதிர்கொள்வதற்காக சமீபத்தில் பிபா கவுன்சிலால் நிறுவப்பட்ட  பிபா-கூட்டமைப்பு செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலக கோப்பை போட்டியை ஒத்திவைக்கும்படி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் நடைபெறவிருந்த சர்வதேச போட்டிகள் (ஜூன் 2020 வரை) மற்றும் யு-17 மற்றும் யு-20 மகளிர் உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து பிபா போட்டிகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2022 உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை குறித்து, கூட்டமைப்புகளுடன் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.
    21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் இந்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் மனவலிமை மிகமிக முக்கியமானது என ரகானே தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இத்தனை நாள் உத்தரவை இந்தியா ஏறக்குறைய சந்தித்ததே கிடையாது. இதனால் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்க மக்கள் சிரமப்படுகிறார்கள்.

    அதேவேளையில் வீட்டிற்குள்ளேயே இருக்கும் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இந்நிலையில் இந்த இக்கட்டான நிலையில் மனவலிமை மிகமிக முக்கியமானது என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இந்த லாக்டவுன் நேரத்தின்போது மனவலிமை மிகமிக முக்கியமானது. மனநலம் தொடர்புக்காக ஆலோசனை வழங்க உதவி எண் ஏற்பாடு செய்திருக்கும் மகாராஷ்டிரா அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது’’ எனத் தெரிவித்துள்ளார்.
    ×