search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரகானே
    X
    ரகானே

    லாக்டவுன் நேரத்தில் மனவலிமை மிகமிக முக்கியமானது: ரகானே சொல்கிறார்

    21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் இந்த நேரத்தில் ஒவ்வொருவருக்கும் மனவலிமை மிகமிக முக்கியமானது என ரகானே தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இத்தனை நாள் உத்தரவை இந்தியா ஏறக்குறைய சந்தித்ததே கிடையாது. இதனால் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்க மக்கள் சிரமப்படுகிறார்கள்.

    அதேவேளையில் வீட்டிற்குள்ளேயே இருக்கும் மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இந்நிலையில் இந்த இக்கட்டான நிலையில் மனவலிமை மிகமிக முக்கியமானது என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இந்த லாக்டவுன் நேரத்தின்போது மனவலிமை மிகமிக முக்கியமானது. மனநலம் தொடர்புக்காக ஆலோசனை வழங்க உதவி எண் ஏற்பாடு செய்திருக்கும் மகாராஷ்டிரா அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×