search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கால்பந்து"

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
    • மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது.

    கார்டிப்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வர ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடுகிறது. மற்ற நாடுகள் தகுதி சுற்று மூலமே முன்னேறி இருந்தன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 3 நாடுகள் தகுதி பெற வேண்டி இருந்தது.

    இந்த நிலையில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வேல்ஸ் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கார்டிப் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது.

    மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் காரெத் பாலே இந்த கோலை அடித்தார். 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இதற்கு 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது. வேல்ஸ் அணி 'பி' பிரிவில் இருக்கிறது. இங்கி லாந்து, அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் 2 நாடுகள் தகுதி பெற வேண்டி உள்ளது.

    • கடந்த உலக கோப்பையை விட 16 நாடுகள் கூடுதலாகும்.
    • உலக கோப்பையில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    கிசாலி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கோப்பை கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலக கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது.

    23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஜுன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கோப்பையை விட 16 நாடுகள் கூடுதலாகும். கத்தார் உலக கோப்பை 32 அணிகள் பங்கேற்றன.

    உலக கோப்பையில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.

    தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலக கோப்பையைவிட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கோப்பையில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

    • வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பியூனஸ் அயர்ஸ்:

    கத்தாரில் நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

    தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.


    இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேசிய வரலாற்று நினைவு சின்ன வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். மேலே இருந்து பார்க்கும் போது இது மக்கள் கூட்டம் தானா என சந்தேகம் படும் அளவில் இருந்தது.


    கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் வரவேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர்.
    • கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

    கொச்சி:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. நேற்று முன்தினம் இறுதிப் போட்டி நடைபெற்றது.

    இதில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா அணி ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

    உலக கோப்பை போட்டியையொட்டி உலகம் முழுவதும் கால்பந்து ஜுரம் கடந்த ஒரு மாதமாக பரவி இருந்தது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் உலக கோப்பை போட்டியை ரசித்தனர். தங்களுக்கு விருப்பமான அணி வீரர்களின் ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இந்தியாவை பொறுத்தவரை அர்ஜென்டினாவுக்கும், மெஸ்சிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா வெற்றியை வெகுவாக கொண்டாடினார்கள்.

    கேரளாவில்தான் அதிக அளவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை ரசித்தனர். மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பிரமாண்ட திரையில் உலக கால்பந்து போட்டியை பார்த்தனர்.

    இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்த தினத்தில் கேரள ஜோடி ஒன்று அர்ஜென்டினா, பிரான்ஸ் வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.

    கொச்சியைச் சேர்ந்த சச்சின்-அதிரா ஜோடிதான் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சச்சின் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகர். அதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்வேயின் தீவிர ஆதரவாளர். இதனால் இருவரும் திருமணத்துக்கான புதிய ஆடைகளின் மேல் கால்பந்து வீரர்களின் ஜெர்சியை அணிந்து மணம் புரிந்து கொண்டனர்.

    அவர்களது திருமண தேதி டிசம்பர் 18 என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் உலக கோப்பை இறுதிப் போட்டி நடந்ததால் மணமக்கள் மெஸ்சி, எம்பாப்வே டி ஷர்டுடன் திருமண கோலத்தில் இருந்தனர்.

    மெஸ்சிக்கு கேரளாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றால் 1000 பேருக்கு இலவச பிரியாணி வழங்கப்படும் என்று திருச்சூரில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் முதலில் வந்த ஆயிரம் பேருக்கு பிரியாணியை இலவசமாக வழங்கினார்.

    *** மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்வே (பிரான்ஸ்) ஜெர்சியுடன் திருமணம் செய்த கேரள ஜோடியை படத்தில் காணலாம்.

    • அவர் இந்த ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • 35 வயதான பென்ஜிமா கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார்.

    சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஜிமா ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். பாரீஸ், பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி முன்கள வீரர்களில் ஒருவரான கரீம் பென்ஜிமா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

    35 வயதான பென்ஜிமா கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் கடைசி நேரத்தில் அணியின் இருந்து விலகினார்.

    2007-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான பென்ஜிமா 97 போட்டிகளில் ஆடி 37 கோல்கள் அடித்துள்ளார். அவர் இந்த ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் முறையாக டி.வி. பார்வையாளர்களை கடந்து இந்தியாவில் புதிய சாதனை
    • இந்தியாவில் முதல் முறையாக டெலிவிஷனில் பார்த்தவர்களை விட டிஜிட்டல் மூலம் அதிக அளவில் பார்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எங்கு பார்த்தாலும் அதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது

    கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த இறுதிப் போட்டியை உலகம் முழுவதும் மொத்தம் சுமார் 150 கோடி பேர் வரை பார்த்து இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 டெலிவிஷன் சேனலிலும், ஜியோ சினிமா தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இறுதிப் போட்டியை இந்தியாவில் 11 கோடி பேர் டிஜிட்டல் வழியில் பார்த்துள்ளனர். இது புதிய சாதனையாகும்.

    இந்தியாவில் முதல் முறையாக டெலிவிஷனில் பார்த்தவர்களை விட டிஜிட்டல் மூலம் அதிக அளவில் பார்த்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா தளத்தில் இந்த ஆட்டத்தை 3.2 கோடி கண்டு களித்துள்ளனர்.

    ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா என இரண்டிலும் சேர்த்து 4 கோடி நிமிடங்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பார்க்கப்பட்டுள்ளது.

    • தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    உலக கோப்பை இறுதி போட்டியில் பிரான்ஸ் தோற்றதால் அந்நாட்டில் சோகம் நிலவியது. தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனதால் பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த தோல்வியால் ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    அதே நேரத்தில் தங்கள் நாட்டு வீரர்கள் ஆட்டம் சிறப்பாக இருந்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் பலர் தெரிவித்தனர்.

    • கேரளாவின் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்டனர்.
    • மோதலை தடுக்க சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் போதெல்லாம் கேரளாவில் அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகளின் ரசிகர்கள் குழுவாக பிரிந்து தங்கள் ஆதரவு அணிகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, கட்-அவுட் அமைப்பது என கேரளாவையே களைகட்ட வைப்பார்கள்.

    அந்த வகையில் இப்போது நடந்த உலக கோப்பை போட்டிக்காக கோட்டயம், திருவனந்தபுரம் பகுதிகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் கட் அவுட்வைத்து அசத்தினர். இதற்கு போட்டியாக பிரேசில் வீரர் நெய்மருக்கும் ஆள் உயர கட்-அவுட் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி போட்டியில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இதனை கேரளாவில் உள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

    ஒரு கட்டத்தில் இந்த உற்சாகம் வன்முறையாக வெடித்தது.நள்ளிரவு 12.30 மணி அளவில் கேரளாவின் கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்டனர்.

    இதில் கால்பந்து ரசிகர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மோதலை தடுக்க சென்ற போலீசாரும் தாக்கப்பட்டனர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.
    • மம்முட்டி, மோகன்லால் புகைப்படம் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தார் நாட்டில் நேற்று இரவு நடந்தது. அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.

    அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேற்று நேரடியாக பார்த்துள்ளனர். இது சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.
    • உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.messi, world cup football, மெஸ்சி, உலக கோப்பை கால்பந்து

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி பல்வேறு சாதனைகளை புரிந்து புதிய வரலாறு படைத்தார்.

    அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி உலகின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.

    அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது. மெஸ்சியின் உலக கோப்பை கனவு நேற்று நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது.

    35 வயாதான மெஸ்சி கடந்த ஆண்டு கோபா அமெரிக்க கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தற்போது உலக கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். மரடோனாவை போலவே மெஸ்சியும் அர்ஜென்டினாவை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.

    இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 4 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

    மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.

    இதன் மூலம் அவர் புதிய சாதனை புரிந்துள்ளார். எந்த ஒரு வீரரும் உலக கோப்பையில் அனைத்து நிலைகளிலும் கோல் அடித்தது இல்லை.

    இதன் மூலம் உலக கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது மெஸ்சிக்கு கிடைத்தது. அவர் ஏற்கனவே 2014 உலக கோப்பையிலும் தங்க பந்து விருதை பெற்று இருந்தார். அந்த உலக கோப்பையில் அர்ஜென்டினா இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது.

    உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.

    மெஸ்சி ஒட்டு மொத்த உலக கோப்பைகளிலும் சேர்த்து 13 கோல்கள் அடித்துள்ளார். 26 ஆட்டத்தில் அவர் இந்த கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலேவை முந்தி 4-வது இடத்தை பிடித்தார். பீலே 12 கோல்கள் அடித்துள்ளார்.

    குளூஸ் (ஜெர்மனி) 16 கோல்களுடன் முதல் இடத்திலும், ரொனால்டோ (பிரேசில்) 15 கோல்களுடன் 2-வது இடத்திலும், ஜெரார்டு முல்லா (மேற்கு ஜெர்மன்) 14 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரான்சை சேர்ந்த பாண்டைனுடன் இணைந்து மெஸ்சி 4-வது இடத்தில் உள்ளார். இருவரும் தலா 13 கோல்கள் அடித்துள்ளனர்.

    உலக கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்தார். அவர் 26 ஆட்டத்தில் ஆடி லோத்தர் மேத்யூசை (ஜெர்மனி) முந்தினார். மேத்யூஸ் 25 ஆட்டங்களில் விளையாடியதே சாதனையாக இருந்தது.

    உலக கோப்பையில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற சாதனையும் மெஸ்சி படைத்தார். அவர் மொத்தம் 2, 217 நிமிடங்கள் விளையாடி உள்ளார். இத்தாலியை சேர்ந்த பாலோ மால்டினி உலக கோப்பையில் 2,194 நிமிடங்கள் ஆடியதே சாதனையாக இருந்தது. மெஸ்சி தற்போது அவரை முந்தியுள்ளார்.

    உலக கோப்பையை வென்றதன் மூலம் மெஸ்சி கால்பந்தில் அனைத்து காலக்கட்டத்திலும் தான் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் கோப்பையை கைப்பற்றி சரியான பதிலடி கொடுத்து விட்டார்.

    • அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கிறது.
    • 2026 ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 1930 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை நடைபெறவில்லை.

    கத்தாரில் நேற்று முடிவடைந்த 22-வது உலக கோப்பையை அர்ஜென்டினா கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தியது.

    அடுத்த உலக கோப்பை போட்டியை வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா , மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. முதல் தடவையாக 3 நாடுகள் போட்டியை நடத்த உள்ளது. 2026 ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .

    இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கூடுதலாக 16 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். எஞ்சிய 45 அணிகளும் தகுதி போட்டிகள் மூலம் தகுதி பெறும்.

    மொத்தம் உள்ள 48 நாடுகளும் 16 பிரிவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெறும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் நாக் அவுட் சுற்றான 2-வது ரவுண்டுக்கு முன்னேறும். 32 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதைத்தொடர்ந்து 3-வது சுற்று, கால்இறுதி , அரை இறுதி, இறுதிப்போட்டி நடைபெறும். மொத்தம் 80 ஆட்டங்கள் 16 நகரங்களில் நடத்தப்படுகிறது. ஆனாலும் இந்த போட்டி முறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    மெக்சிகோவில் 3-வது முறையாக உலக கோப்பை நடக்கிறது. இதற்கு முன்பு 1970, 1986-ல் நடந்தது. இதன் மூலம் உலக கோப்பையை 3-வது தடவையாக நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை பெறுகிறது. அமெரிக்காவில் இதற்கு முன்பு 1994-ல் நடந்தது. கனடாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

    1954 முதல் 1978 வரை 16 நாடுகள் பங்கேற்றன. 1982-ல் 24 நாடுகளாக உயர்த்தப்பட்டன. 1998-ல் நாடுகள் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கப்பட்டது. இனி வரும் உலக கோப்பை போட்டியில் நாடுகள் எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
    • மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்றது. தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி பெற்றது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.

    இதில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 14 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 தோல்வி, 4 டிராவுடன் 25 புள்ளிகள் பெற்றது.

    கோஸ்டாரிகா 6-வது முறையாகவும், தொடர்ந்து 3-வது முறையாகவும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அப்பிரிவில் வடஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.

    ×