search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஒலிம்பிக் சங்கம்"

    • ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
    • இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அமைத்தது.

    இதில், இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருந்தனர்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொண்டு வந்தன. 

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.

    அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம்.
    • 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்கக் கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.

    இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

    தற்காலிக குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம்.சோமையா, மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த அமைப்பு, வீரர்கள் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளின் மேற்பார்வை, வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை இக்குழு கவனிக்கும்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் கமிட்டி மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
    • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியிட்டார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி இன்று தேர்வானார். இதன்மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றுள்ளார்.

    • இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை
    • பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்தார்.

    சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காததால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வாகிறார். இதன் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெறுகிறார்.

    தலைவர், துணைத்தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும். நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியியில் உள்ளனர்.

    • இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்த கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது.
    • நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது

    புதுடெல்லி:

    சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தவும் கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கால நிர்ணயத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

    மேலும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு வாரிய கூட்டம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டதால் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை அதற்கு முன்னதாக டிசம்பர் 3-ந் தேதி நடத்தவும் ஒப்புதல் அளித்தது.

    மேலும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையில் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க வரைவு திருத்த விதிகளை தயாரித்த நீதிபதி குழு, சங்கத்தின் செயற்குழு தேர்தலை டிசம்பர் 10-ந் தேதி நடத்தலாம் என புதிய தேதியை சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரைத்தது.

    நீதிபதி நாகேஸ்வரராவ் குழுவின் பரிந்துரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திர சூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பரிந்துரையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்களுக்கு வரைவு திருத்த சட்ட நகல்களை சுற்றறிக்கையாக அனுப்புவதற்காக வழிமுறைகளையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவிப்பார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும் நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு சம்பளமாக ரூ.20 லட்சம் நிர்ணயித்து உத்தரவிட்டனர்.

    • காமன்வெல்த் பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.
    • பதக்கம் வென்றவர்களை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டினார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 22-வதுகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்  இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட மொத்தம் 61 பதக்கம் கிடைத்தது. தனிநபரில் அதிகபட்சமாக தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 4 பதக்கம் வென்றார். பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.

    காமன்வெல்த் போட்டி யில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டினார். அவர்களுடன் கலந்துரையாடி னார்.

    இதைத்தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சமும், வெண்கல பதக்கத்தை கைப்பற்றியவர்களுக்கு ரூ.7½ லட்சமும் ஊக்கத் தொகையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ஒலிம்பிக் சங்க தற்காலிக தலைவர் அனில் கண்ணா பேசியதாவது:-

    காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களை பாராட்டுகிறேன். 2026-ம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகள் இடம்பெறுவது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இந்தியா முறையிடும். 2026-ம் ஆண்டுக்கான விளையாட்டு குழுவுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×