என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த 2 தொடரில் இருந்தும் முதுகு வலி காயம் காரணமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். மேலும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பெரிய அடியாக உள்ளது.

    • இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றை எட்டியது.
    • இதே பிரிவில் ஜப்பான்-சீனா அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    ராஜ்கிர்:

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.

    4-வது நாளான நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் 'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் தென்கொரியா 5-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.

    இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 15-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை ஊதிதள்ளியது. மலேசிய அணியில் 6 பேர் கோல் போட்டனர். இவர்களில் அகிமுல்லா அனார் 5 கோலும், அஷ்ரன் ஹம்சானி 4 கோலும், நோர்ஷியாபிக் சுமாந்திரி 3 கோலும் அடித்ததும் அடங்கும். மலேசியா அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்தது. சீன தைபேவுக்கு 3-வது தோல்வியாகும்.

    லீக் சுற்று முடிவில் 'பி' பிரிவில் மலேசியா (9 புள்ளி) முதலிடமும், தென்கொரியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. வங்கதேசம் (3 புள்ளி), சீன தைபே (0) 3-வது மற்றும் கடைசி இடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

    'ஏ' பிரிவில் நடந்த இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, கஜகஸ்தானை சந்தித்தது. ஒரு தலைபட்சமாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணியினர் கோல் மழையால் ரசிகர்களை குஷிப்படுத்தினர். ஆனால் எதிரணியால் கடைசி வரை ஒரு பந்தை கூட வலைக்குள் திருப்ப முடியவில்லை.

    முடிவில் இந்தியா 15-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை பந்தாடி தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றது. இந்திய அணியில் அபிஷேக் (4), சுக்ஜீத் சிங் (3), ஜூக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (தலா 2), அமித் ரோஹிதாஸ், ரஜிந்தர் சிங், சஞ்சய், தில்பிரீத் சிங் (தலா 1) கோல் போட்டனர். இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றை எட்டியது.

    முன்னதாக இதே பிரிவில் ஜப்பான்-சீனா அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. தொடக்கத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த சீனா தனது தாக்குதல் ஆட்ட வேகத்தை அதிகரித்து சரிவில் இருந்து மீண்டு டிரா செய்தது.

    சீனா, ஜப்பான் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், கோல் வித்தியாசம் அடிப்படையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளிய சீனா 2-வது இடத்தை வசப்படுத்தி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது. 3-வது இடம் பெற்ற ஜப்பான், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட கஜகஸ்தான் (0) அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தன.

    இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். சூப்பர் 4 சுற்று ஆட்டம் நாளை தொடங்குகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன மோதுகிறது.

    • சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் கஜகஸ்தானை சேர்ந்த 23-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர் கொண்டார்.

    இதில் சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 21 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    மற்ற 4-வது சுற்று ஆட்டங்களில் 8-வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாவுர் ( ஆஸ்திரேலியா), 10-ம் நிலை வீரர் லாரென்சோ முசெட்டி ( இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதியில் நுழைந்தனர்.

    15-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார். கனடாவை சேர்ந்த 25-ம் நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 7-5, 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை சந்தித்தார். இதில் ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 4 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், 3-வது வரிசையில் உள்ள வருமான கோகோ கவூப் ( அமெரிக்கா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். 23-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான் ) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான கவூப்பை வீழ்த்தினார்.

    8-ம் நிலை வீராங்கனை அமண்டா அனிஸ்மோவாவும் ( அமெரிக்கா) கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் ஸ்வியாடெக்குடன் மோதுகிறார்.

    • இதற்கு முன்பு டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
    • 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ரசீத் கான் படைத்தார்.

    இதற்கு முன்பு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியை 165 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 166 விக்கெட்டுகள் வீழ்த்தி ரசீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 150 விக்கெட்டுகளுடன் இஸ் சோதி 3-ம் இடமும் 149 விக்கெட்டுகளுடன் ஷாகிப் அல் ஹசன் 4-ம் இடமும் 142 விக்கெட்டுகளுடன் முஸ்தபிசுர் ரகுமான் 5-ம் இடத்திலும் உள்ளனர். 

    • 65 சர்வதேச டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் விளையாடியுள்ளார்.
    • டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

    இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.

    2027 ஒருநாள் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக என தெரிவித்துள்ளார்.

    65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது.
    • அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் 'பளார்' விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலின் போது, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் இந்த வீடியோவை சுயநல நோக்கங்களுடன் லலித் மோடி வெளியிட்டதாக ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். அது 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். மக்கள் அதனை மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

    நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. தவறுகள் நடந்தன. அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் பலமுறை கூறியிருக்கிறேன்.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    • சிறுவனுக்கு வீரர் வழங்கிய தொப்பியை பறித்த சிஇஓ.
    • சமூக வலைத்தளத்தில் விமர்சன கருத்துகள் எழுந்ததால் வினோத விளக்கம்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் போலந்து நாட்டைச் சேர்ந்த கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக் விளையாடிய ஆட்டத்தை, போலந்து நாட்டின் ட்ரோக்ப்ருக் நிறுவனத்தின் சிஇஓ பியோட்ர் ஸ்செரேக் உள்பட பலர் பார்த்து ரசித்தனர்.

    போட்டியில் கமில் அட்ரியன் மஜ்க்ர்சாக் வெற்றி பெற்றதும், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கினார். அப்போது தான் அணிந்திருந்த தொப்பியில் சிறுவன் ஒருவனுக்கு வீரர் தன்னுடைய கையெழுத்திட்டு வழங்குவார். சிறுவன் தொப்பியை பெறுவதற்குள் அருகில் நிற்கும் ஸ்செரேக் அதை பறித்து விடுவார். அத்துடன், அருகில் இருக்கும் தன்னுடைய பார்ட்னரின் பையில் வைத்து விடுவார்.

    அந்த சிறுவன் ஏக்கத்துடன் தொப்பி பறிபோனதை பார்ப்பான். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஒரு நிறுவனத்தின் சிஇஓ இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா? என நெட்டிசன்கன் அவரை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர்.

    இந்த நிலையில் ஸ்செரேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தொபியை வைத்து உலகளாவிய மோசடியை உருவாக்க வேண்டாம். ஆட்சேபைனக்குரிய வகையில் கருத்து பதிவிட்டவர்கள் மீது வழக்கு தொடுப்பேன்" எனக் கூறியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
    • இதில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

    இதில் முதலில் பாட்னா அணி ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் உ.பி.யோத்தாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் 34- 31 என்ற கணக்கில் வெற்றி த்ரில் வெற்றி பெற்றது.

    உ.பி.யோத்தாஸ் தரப்பில் ககன் கவுடா 7 புள்ளிகளை கைப்பற்றினார்.

    • 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது.
    • 16 வருடத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு டெல்லியில் நடத்தப்பட இருக்கிறது.

    பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த வருடம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    2025 சாம்பியன்ஷிப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

    16 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது. 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

    • தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
    • இந்த போட்டிக்கான இரு அணி பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

    அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சோனி பெக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மறுபக்கம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் பெரிதளவில் எந்த மாற்றும் இன்றி, ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய அதே லெவனுடன் களமிறங்குகிறது.

    தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன்:

    ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரெவிஸ், வியான் முல்டர், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

    இங்கிலாந்து பிளேயிங் லெவன்:

    ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சோனி பேக்கர்.

    • நீங்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை யாரும் சொல்ல முடியாது.
    • ஒருவேளை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் விரும்பும் நேரத்தில் விடைபெறும் போது பேர்வெல் கிடைக்கலாம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. இவர்கள் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர்.

    அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜோடியாக ஓய்வு பெற்றனர். சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய அவர்கள் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்கள்.

    அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதற்காக அவர்கள் பல வருடங்கள் கழித்து 2025 ரஞ்சிக்கோப்பையில் விளையாடித் தயாரானார்கள். ஆனால் அப்போது அவர்களை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் கழற்றி விட முடிவெடுத்தார்கள்.

    அதை அறிந்த கேப்டனாகவே ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களில் விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்ததாக அவர்கள் 2027 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறார்கள்.

    ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடருடன் அவர்களை கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்க பிசிசிஐ முயற்சித்து வருவதாக செய்திகள் காணப்படுகின்றன.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட், ரோகித் பேர்வெல் பெறாமலேயே ஓய்வு பெற்றது ஏமாற்றமானது என்று இளம் இந்திய வீரர் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் ஜோடியாக ஓய்வு பெற்றது உண்மையில் ஆச்சரியமானது. ஏனெனில் அவர்கள் களத்தில் விளையாடி ஓய்வு பெறுவதையே நீங்கள் பார்க்க விரும்புவீர்கள். அவர்களைப் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் களத்தில் விளையாடி விடை பெறுவதைப் பார்ப்பது உங்களுக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும்.

    என்னுடைய பார்வையில் இந்தியாவுக்காக அவர்கள் ஆற்றியப் பங்கை யாராலும் நெருங்கக் கூட முடியாது. எனவே அவர்களுக்கு நல்ல ஃபேர்வெல் கிடைக்க வேண்டும். ஒருவேளை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் விரும்பும் நேரத்தில் விடைபெறும் போது பேர்வெல் கிடைக்கலாம்.

    நீங்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை யாரும் சொல்ல முடியாது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் திடீரென ஓய்வு பெற்றது அதிர்வைப் போல் இருந்தது. ஏனெனில் திடீரென அவர்களுடைய இடத்தை யாரால் நிரப்ப முடியும்? என்பது போல் நீங்கள் உணர்கிறீர்கள்.

    என்று பிஷ்னோய் கூறினார்.

    • ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
    • எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன். இவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் (டெஸ்ட் மற்றும் முதல்-தர கிரிக்கெட்) இருந்து காலவரையற்ற இடைவெளி எடுப்பதாக அறிவித்துள்ளார்.

    அவர், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் (ஆஸ்திரேலியாவில்) விளையாட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எல்லா வடிவங்களிலும் முழு அர்ப்பணிப்பு சாத்தியமில்லை. எனவே ஒயிட்-பால் கிரிக்கெட்டில் எனது திறனை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்கள் (முதுகு, கால்) காரணமாக உடல் முழுமையை பராமரிக்க இந்த இடைவெளி தேவைப்பட்டது.

    என ஜேமி ஓவர்டன் கூறினார்.


    ×