என் மலர்
விளையாட்டு
- ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- 2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
வருகிற 10-ந் தேதி வரை இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்று உள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
4-வது நாளான இன்று பிற்பகலில் மதுரையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள ஜெர்மனி-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-0 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் கனடாவை 7-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் கனடாவை (4-3) வென்றது. அடுத்து தென் ஆப்பிரிக்காவிடம் (1-2) தோற்றது.
2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டிகளில் 'சி' பிரிவில் உள்ள நியூசிலாந்து-ஜப்பான் (மாலை 5.45 மணி), அர்ஜென்டினா-சீனா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.
அர்ஜென்டினா, நியூசிலாந்து, அணிகள் 1 வெற்றி, 1 டிராவுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஜப்பான் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. சீனா 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
இந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதியில் நுழைய அர்ஜென்டினா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி ஆட் டத்திலும் வெற்றி பெறும் போது இரு அணிகளும் தலா 7 புள்ளிகளை பெறும் கோல்கள் அடிப்படையில் முடிவு நிர்ணயம் செய்யப் படும்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி தனது 52-வது சதத்தை பதிவு செய்தார்.
- ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) விராட் கோலி முந்தினார்.
ராஞ்சி:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52-வது சதத்தை (306-வது போட்டி) பதிவு செய்தார்.
இதன் மூலம் ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) அவர் முந்தினார்.
டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். அவரை 37 வயதான விராட் கோலி ஏற்கனவே முந்தி இருந்தார். ஒரு நாள் போட்டியில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா, டெண்டுல்கரா? என்ற விவாதம் எழுந்து உள்ளது.
இது குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-
விராட் கோலியுடன் ஆடியவர்களும் அவருக்கு எதிராக விளையாடியவர்களும் அவர் ஒருநாள் போட்டியில் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
ரிக்கிபாண்டிங்கும் அவரை ஒருநாள் போட்டியின் எல்லா கட்டத்திலும் ஒரு சிறந்த வீரர் என்று மதிப்பிட்டார். ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது மிகவும் கடினமானது. நீங்கள் டெண்டுல்கரை கடந்து செல்லும் போது இந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள்.
- சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும்.
கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். தோல்விக்கு அவர் கூறிய விளக்கமும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தற்போதைக்கு கம்பீரை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவிடம் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கம்பீர் உணர்ச்சிவசப்படும் நபர் என்பதால் அவர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியின் தோல்வி தர்மசங்கடமானதும், கடினமானதுமானது. தலைமையைப் பொறுத்தவரை கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். இத்தகைய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல.
இப்படிக் கூறும்போது, திரைக்குப் பின்னால் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று சொல்வதாக ஆகாது. சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். கம்பீருக்கு பயிற்சியாளராகும் அனுபவம் உள்ளது.
கம்பீர் குறித்த கேள்வி கடினமானது. தென் ஆப்பிரிக்க அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய பயிற்சியாளரான சுக்ரியுடன் நான் பணியாற்றியதில்லை. காம்பீர், ரியான் டென் டஸ்கேட், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் இந்திய ஓய்வறையில் நான் இருந்ததில்லை. வெளியில் பார்க்க இது ஒரு வலுவான கூட்டணி போல் தெரிகிறது.
ஆனால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் வெவ்வேறு விதமாகவே தெரிப்பார். முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் தலைமையின் கீழ் நான் விளையாட விரும்புவேன். அவரும் கம்பீர் போலத்தான். முன்னாள் வீரர்களின் அனுபவம் நமக்கு உதவும், சில வீரர்கள் அதனால் சவுகரியமாக உணர்வார்கள். அது அவர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும். ஆனால் மற்ற சிலருக்கு அது உத்வேகமாக இருக்காது. எப்படியிருந்தாலும் உணர்ச்சிவசப்படும் நபர் பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல" என்று கூறினார்.
- ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சில் 232 சிக்சரும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்சரும் தெறிக்க விட்டுள்ளார்.
- ரோகித் சர்மா 100-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க முடியாத ஒரே பவுலராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் உள்ளார்.
ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்சர் பறக்க விட்டார். இதையும் சேர்த்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்தது.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் விரட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக இச்சாதனை பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி (351 சிக்சர்) வசம் இருந்தது. அவரை ரோகித் சர்மா நேற்று முந்தினார்.
38 வயதான ரோகித் சர்மா இதுவரை 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உள்பட 11,427 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 352 சிக்சரும், 1,071 பவுண்டரிகளும் அடங்கும்.
•ரோகித் சர்மா அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 93 சிக்சர் விளாசியுள்ளார். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர் தான்.
• ஓராண்டில் அதிக சிக்சர் எடுத்தவர் என்ற சிறப்பும் அவரிடமே (2023-ம் ஆண்டில் 67 சிக்சர்) உள்ளது.
• உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராகவும் (54 சிக்சர்) வலம் வருகிறார்.
•இதுவரை 150 பவுலர்களின் பந்தில் சிக்சர் அடித்திருக்கிறார். அவர் 100-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்து சிக்சர் அடிக்க முடியாத ஒரே பவுலர் வெஸ்ட் இண்டீசின் மர்லன் சாமுவேல்ஸ் ஆவார். இனியும் அடிக்கமுடியாது. ஏனென்றால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

வேகப்பந்து வீச்சில் 232 சிக்சரும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்சரும் தெறிக்க விட்டுள்ளார்.
•ஒரு நாள் போட்டியில் 1971-ம் ஆண்டு முதல் முறையாக சிக்சர் அடிக்கப்பட்டது. ரோகித் சர்மாவுக்கு முன்பாக அதிக சிக்சர் அடித்த சாதனை மொத்தம் 18 வீரர்களிடம் மாறியிருக்கிறது. கடைசியாக அப்ரிடியிடம் இச்சாதனை 2010-ம் ஆண்டில் சென்றது. அவர் சிக்சர் மன்னர் அரியணையில் 5,641 நாட்கள் இருந்தார்.
இனி ரோகித் சர்மா 'சிக்சர் கிங்'காக தொடருவார். இப்போது விளையாடும் வீரர்களில் ரோகித் சர்மாவை தவிர்த்து பார்த்தால், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (182 சிக்சர்), இந்தியாவின் விராட் கோலி (159 சிக்சர்) மட்டுமே 150-க்கும் அதிகமாக சிக்சர் அடித்துள்ளனர். எனவே ரோகித் சர்மாவின் சாதனையை தகர்ப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
- 20-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது.
- அரேபியா தரப்பில் முகமது அலி அப்துர் ரகுமான் 24 புள்ளிகளும், இந்தியா சார்பில் குர்பாஸ் சிங் சந்து 19 புள்ளிகளும் எடுத்தனர்.
சென்னை:
20-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி 2027-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. இதில் ஆசிய-ஓசியானா மண்டலத்திற்கான தகுதி சுற்றின் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி (டி பிரிவு) சவுதிஅரேபியாவை எதிர்கொண்டது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சவுதி அரேபியா 81-57 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
அரேபியா தரப்பில் முகமது அலி அப்துர் ரகுமான் 24 புள்ளிகளும், இந்தியா சார்பில் குர்பாஸ் சிங் சந்து 19 புள்ளிகளும் எடுத்தனர். ஏற்கனவே அவர்களது இடத்தில் நடந்த ஆட்டத்திலும் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்து பிப்ரவரி 27-ந்தேதி கத்தாரை சந்திக்கிறது.
- இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 17 ரன்களில் தோல்வியடைந்தது.
- தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் எக்ஸ்டிரா வகையில் 14 வைடு உள்பட 23 ரன்களை வாரி வழங்கியது.
ராஞ்சி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.
அதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அரங்கேறியது.
'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம், இரவு பனியின் தாக்கத்தை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் மனம் தளரவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியிலும் இடைவிடாது ரன்வேட்டை நடத்தினர். டோனி டி ஜோர்ஜி (39 ரன்), டிவால்ட் பிரேவிஸ் (37 ரன்), மார்கோ யான்சென் (70 ரன், 39 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன், 80 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவர்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.
இதனால் ஆட்டம் எந்த பக்கம் போகும் என்பதை கணிக்க முடியாததால் கடைசி வரை துளியும் பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்றது. இறுதிகட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ஆல்-ரவுண்டர் கார்பின் பாஷ் இந்திய பவுலர்களை மிரள விட்டார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து விச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்காத கார்பின் பாஷ் (67 ரன், 51 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அடுத்த பந்தை தூக்கியடித்தார். அதை ரோகித் சர்மா லாவகமாக கேட்ச் செய்தார்.
இதனால் தென்ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி தோல்விக்கு முக்கிய பங்கு வகித்த எக்ஸ்டிரா ரன்கள். அதன்படி தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் எக்ஸ்டிரா வகையில் 14 வைடு உள்பட 23 ரன்களை வாரி வழங்கியது. ஆனால் இந்தியா எக்ஸ்டிராவாக வெறும் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அதாவது தென்ஆப்பிரிக்கா 17 ரன்களை கூடுதலாக வழங்கியிருந்தது. கடைசியில் அதே 17 ரன் வித்தியாசத்தில் தான் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
- இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.
- இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த திரில்லிங்கான ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 16-21, 21-8, 20-22 என்ற செட் கணக்கில் ஜாசன் குனவானிடம் (ஹாங்காங்) போராடி தோற்றார். இதில் கடைசி செட்டில் 20-20 என்று வரை சமனிலை நீடித்தது. இறுதியில் கடைசி இரு புள்ளிகளை தனதாக்கி குனவான் வெற்றிக்கனியை பறித்தார். இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடங்கள் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹினா அகேச்சி (ஜப்பான்) 21-16, 21-14 என்ற நேர் செட்டில் நேஸ்லிஹான் அரினை (துருக்கி) வீழ்த்தி மகுடம் சூடினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் திரிசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காகோ ஒசாவா- மை தனாபே ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. திரிசா- காயத்ரி ஜோடிக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
- UAE புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 30 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அபுதாபி டி 10 லீக் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் மற்றும் பொல்லார்ட் தலைமையிலான UAE புல்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த UAE புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 30 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் மட்டுமே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
30 பந்துகளில் 98 ரன்களை குவித்த டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார்.
- இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 52-வது சதமாகும்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 52-வது சதமாகும்.
இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெத்தியூ ப்ரீட்ஸ்கி 72 ரன்னும் மார்கோ யான்சன் 70 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய கார்பின் போஸ் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 49.2 ஓவர்களில் தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது சர்வதேச போட்டிகளில் அவர் பெறும் 70வது ஆட்ட நாயகன் விருதாகும்.
அதிக ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் சச்சின் (76) முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 2 ஆம் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
- ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மர்க்ரம் ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.
2வது ஓவரிலேயே ரியான் ரிக்கெல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். ரியான் ரிக்கெல்டனுக்கு பிறகு அடுத்து வந்த குயிண்டன் டிகாக், 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் இல்லாமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
4வது ஓவரில் ஏய்டன் மர்க்ரம் 7 ரன்களுடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து வந்த டோனி டி ஸோர்ஸி மற்றும் ப்ரீட்ஸ்கி ஜோடி நிலைத்து நின்று விளையாடி பங்காளி ஆட்டத்தில் 66 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து மெத்தியூ ப்ரீட்ஸ்கி நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். மார்கோ யான்செனும் அரைசதம் கடந்தார். ஆட்டத்தின் இறுதியில் பாஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆனால் 49.2 ஓவர்களில் ஹர்ஷித் ரானா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகவே கடைசி விக்கெட்டையும் இழந்து, தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
- 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
விராட் கோலி இன்று அடித்த சதத்துடன் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
முன்னதாக சச்சின் மற்றும் டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தலா 5 சதங்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அதனை விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
- ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
- தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.






