என் மலர்
புதுச்சேரி
- கவுதமியை பொறுத்தவரை பந்தா இல்லாமல் பணியாற்றுபவர்.
- கவுதமி கஷ்டப்படுகிறார், துன்பப்படுகிறார், நீதி கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் விளையாட்டு துறையில் சிறப்பிடம் பெறுபவர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உள்ள போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.
நடிகை கவுதமியின் சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் அரசியலில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
அரசியலில் பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். கவுதமியை பொறுத்தவரை பந்தா இல்லாமல் பணியாற்றுபவர்.
அவர் பிரச்சனை தீர்க்கப்பட்டு இருக்கலாம். என்னிடம் அவரது பிரச்சனை வரவில்லை. அவர் கஷ்டப்படுகிறார், துன்பப்படுகிறார், நீதி கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது.
தெரிந்திருந்தால் உதவி செய்து இருப்பேன். கரு அழகப்பனை எனக்கு தெரியாது. அவர் கோவில் கோவிலாக செல்வார். என்னை வந்து பார்த்தார். அதைத் தவிர வேறு இணைப்பு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.
- அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளவர் சிவசங்கரன்.
இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ளது. சிவசங்கரன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை அமலாக்கதுறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.
அதற்கு சிவசங்கரன் எம்.எல்.ஏ. தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.
அந்த நபர் சிவசங்கரனிடம், போனில் பேசிய அமலாக்கதுறை அதிகாரி நான் தான் என கூறி வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சிவசங்கரன், அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அந்த நபர் அடையாள அட்டையை கையில் கொண்டு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிவசங்கரன் எம்.எல்.ஏ., உங்களின் உயர் அதிகாரிகளிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு அவர், உயர் அதிகாரிகள் பேசமாட்டார்கள் என தெரிவித்தார். இதனால் அந்த ஆசாமி மீது சிவசங்கரன் எம்.எல்.ஏ.வுக்கு சந்தேகம் எழுந்தது உடனே ரெட்டியார்பாளையம் போலீசுக்கும், அவரின் அலுவலக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் போலீசாரும், சிவசங்கரன் எம்.எல்.ஏ.வின் அலுவலக ஊழியர்களும் வீட்டிற்கு வந்தனர். அதையடுத்து அந்த நபரிடம், போலீசாரும், ஊழியர்களும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
அதையடுத்து அவர்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்தனர். இதில் பயந்து போன அந்த நபர் தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.
பின்னர் அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் வடக்குப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நபர், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (வயது 35) என்பது தெரியவந்தது. வரதராஜன் ஆழ்வாரும், அவரது மனைவியும் வீட்டில் முறுக்கு, சோமாஸ் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தது.
அதாவது சிவசங்கர் எம்.எல்.ஏ. வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்திடம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வைத்திய நாதனிடம் பணபரி வர்த்தனை மோசடி (மணி லாண்டரி) புகார் வந்ததாகவும் கூறி, அதனை மறைக்கவும் உயர் அதிகாரிகளை சரிகட்டவும் 2 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தர பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறி பணம் தர மறுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை அமலாக்கதுறை அதிகாரி என கூறி பேசியதும் தெரியவந்தது.
போலீசின் பிடியில் சிக்கியுள்ள திருவொற்றியூரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் கூகுலில் எம்.எல்.ஏ., எம்.பி.களின் செல் நெம்பரை எடுத்து தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இதுபோல் திருமாவளவன் எம்.பி. உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.க்களை செல்போனில் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என்று பேசியதும் தெரிய வந்தது.
அதோடு வரதராஜன் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் தமிழக அமைச்சர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட ஏராளமான போட்டோக்கள் இருந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதராஜன் ஆழ்வார் 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் புதுவைக்கு வந்து, உருளையன்பேட்டையில் ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
புதுவையில் இதுபோல் வேறு யாரிடமும் அமலாக்கதுறை அதிகாரி எனக்கூறி பணம் பறித்துள்ளாரா? இதில் அவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவசங்கர் எம்.எல்.ஏ. அளித்த புகாரின்பேரில் வரதராஜன் ஆழ்வார் மீது அரசு ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:
வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
அதிலும் தொடர் விடுமுறை நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.
அதிலும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலில் சிக்கும் வாகனங்களால் வார விடுமுறை நாட்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் விபத்து சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அவசர சிகிக்சை பிரிவில் 25 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் கூடுதலாக சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விடுமுறை நாட்களில் புதுவைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் மக்களும் அதிக அளவு கொண்டாட்டத்தில் போதையுடன் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுகிறது.
இதில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இரவு மட்டுமே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இதில் பெரும்பாலானோர் மறுநாள் காலையில் சென்று விடுவார்கள். இது ஒவ்வொரு வாரமும் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது
ஆனாலும் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பார்கள் என தெரிவித்தனர். இருப்பினும் நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
- காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் புதுவை -திண்டிவனம் நெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- திண்டிவனம் ரோட்டில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
சென்னை கிழக்கு தாம்பரம் சிவஞானம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபிநாத் (வயது 31). இவரது மனைவி சாந்தா பிரீத்தி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையத்தில் சாந்தா பிரீத்தி மருந்து கடை நடத்தி வருகிறார்.
குடும்பத்துடன் இதே பகுதியில் அவர்கள் வசித்து வந்தனர். கோபிநாத் மரக்காணம் தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வங்கி கிளையில் வேலை பார்த்தார். அப்போது அங்கு பணிபுரிந்த வங்கி அலுவலரான மதுரா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மதுராவுக்கு ஏற்கனவே சுரேஷ் என்ற முந்திரி வியாபாரியுடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கோபிநாத்-மதுரா இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
கள்ளக்காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட சாந்தா பிரீத்தி, கணவர் கோபிநாத்தை கண்டித்துள்ளார். அதையும் மீறி மதுராவுடன் கோபிநாத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மதுரா மேலாளராக பதவி உயர்வு பெற்று புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கிளைக்கு மாறுதலானார்.
புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகரில் தங்கியிருந்தார். 2 பேருமே புதுச்சேரியில் தங்கியிருந்ததால் முன்பை விட அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இருவரும் மரக்காணம் வழியாக திண்டிவனம் ரோடு பகுதிக்கு சென்று அங்கிருந்து புதுவைக்கு காரில் திரும்பி வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் உருவாகி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் காரில் இருந்த ஸ்கூருட்ரைவரால் மதுராவின் கழுத்தில் குத்தியுள்ளார். மேலும் முகத்திலும் கீறியுள்ளார்.
இதில் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
அதன்பின் காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் புதுவை -திண்டிவனம் நெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் விழுப்புரம் போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் வந்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் கோபிநாத், மதுரா இருவரையும் வேறு கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருவரது செல்போன்களுக்கு தொடர்பு கொண்ட எண்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் மதுராவின் செல்போனுக்கு ஏராளமான போன் கால்கள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோபி நாத்தை காணவில்லை என்று 2 நாட்களுக்கு முன் புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிநாத், மதுரா இருவரும் காரில் வருவதை அறிந்த கும்பல் ஒன்று மதுராவை கொலை செய்து விட்டு கோபிநாத்தை அந்த வழியாக செல்லும் வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய தூண்டியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திண்டிவனம் ரோட்டில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோபிநாத் தற்கொலை செய்வதற்காக பாய்ந்த வாகனம் அடையாளம் தெரிந்து அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினால் முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விளக்கம்
- புதுவை அரசின் முதல்-அமை ச்சர் மற்றும் ஆட்சியாளர்களை தரைக்குறை வாகபேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்க ள் கூட்டம் கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளதா?
என்று கேள்வி எழுப்பி உள்ளார். அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள், அவர்கள் மீதான குறை பாடுகள் தெரிவிக்கவே எம்எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததின் பேரிலே கூட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக புதுவை தலைமை செ யலர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் ஆகியோரை அழை த்து எம்.எல்.ஏ.க்க ள் கூறிய புகார்கள் குறித்து விசாரித்தோம்.
மேலும் 2 அரசு செ யலர்களும் 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் கடிதம் அனுப்பி உள்ளேன். அதற்கான உரிய பதில் அளிக்க வில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி யில் நாராயணசாமியின் நிலை என்ன ? அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார். நான் சபாநாயகர் பொறுப்பில் சரியான செயல்பட்டு வருகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை அரசின் முதல்-அமை ச்சர் மற்றும் ஆட்சியாளர்களை தரைக்குறை வாகபேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.
சந்திரபிரியங்காவின் செ யல்பாடுகள் கடந்த 6 மாத காலமாக சரியில்லை என்ற காரணத்தால் முதல்-அமைச்சர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதற்கிடையே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னரும் சந்திரபிரியங்கா தனது ராஜினாமா என்ற பெ யரில் ஒரு கடிதத்தை முதல்-அமைச்சரிடம் மட்டுமின்றி ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்திற்கு நேரடியாக அனுப்பினார்.
கவர்னரின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்ட கடிதமும், சந்திரபிரியங்கா நே ரடியாக அனுப்பிய ராஜினாமா கடிதமும் மத்திய அரசுக்கு சென்றது தான் பதவி நீக்கம் ஒப்புதலுக்கு வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இதுபற்றி நானும் (சபாநாயகர்), கவர்னர் விளக்கம் அளித்தபின் தற்போது அவர் பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போக்குவரத்து நெரிசல்
- புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
புதுச்சேரி:
சுற்றுலா தலமான புதுவைக்கு வார இறுதிநாட்கள் மற்றும் தொடர் விடுமுறைநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்தநிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை (ஆயுதபூஜை), செவ்வாய்க்கிழமை (விஜயதசமி) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். குறிப்பாக சென்னை- பெங்களூரில் ஏராளமான உள்ள சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
இதனால் புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும் ரெஸ்டோ பார், மதுபார்களில் மதுப்பிரியர்கள் கூட்டம் களைகட்டுகிறது.
இந்த நிலையில் நாளை ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்கள் வாங்க இன்று காலை முதல் புதுவை பெரிய மார்க்கெட் மற்றும் கடை வீதிகளுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். புதுவை நகரின் அனைத்து வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
அவர்கள் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் திண்டாடினர்.
மேலும் இன்று (ஞாயிற்றுகிழமை) சன்டே மார்க்கெட் என்பதால் பொருட்கள் வாங்க புதுவை யை சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்ததால் புதுவை நகரம் முழுவதுேம மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
குறிப்பாக ரங்க பிள்ளை வீதி, பாரதி வீதி, காந்தி வீதி, கொசக்கடை தெரு ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசலால் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது.
போக்குவரத்து போலீசார் ஆங்காங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
- அன்பழகன் ஆவேசம்
- காங்கிரஸ் மேலிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமியை பார்ப்பதையே தவிர்த்து வருகிறது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. செயல்வீரர்கள்- வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் 100 அடி சாலையில் உள்ள சன்வே ஓட்டலில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில ஜெ.பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் தலைமை தாங்கினார்.
ஆதி என்ற ராமசாமி, ராசு என்ற வரதன், காந்தி, கேசவன், மருது என்ற மருதமலையப்பன், பிரதீப், செல்வகுமார், தேன்மொழி, சாந்தா, வனஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் லயன் சுரேஷ், நடராஜன், வடிவேலு, ஜெய்சங்கர், மணிவண்ணன், ரவிக்குமார், சேகர், சிதம்பரம், சுரேஷ், முத்துராஜூலு, பாலா, கவுரி, உமா தேவி, வேம்பு, பவானி ஆகியோர் வரவேற்புரையாற்றி னார்கள்.
கூட்டத்தில் அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
புதுவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற நாம் திட்டமிட்டு களப்பணி ஆற்ற வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொய்வில்லாமல் செய்து முடிக்க வேண்டும்.
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கூடிய தொகுதியாக முதலியார்பேட்டை தொகுதி இருந்தது.
இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாஸ்கர் 2 முறை வெற்றி பெற்ற தொகுதி ஆகும்.
புதுச்சேரி மாநிலத்திலேயே அதிக அளவில் அ.தி.மு.க. தொண்டர்களை கொண்ட தொகுதி ஆகும். வெற்றி பெற்றுவிடுவோம் என்ற தொண்டர்களின் அலட்சிய செயல்பாட்டினால் நாம் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தேர்தலில் சிறு அலட்சியம் கூட நமது வெற்றியை பாதித்து விடும். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.
ஒரு ஓட்டு கூட வெற்றிக்கான ஓட்டு என்பதை நினைவில் கொண்டு கட்சி பணியை உத்வேகத்துடன் நடத்த வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை தி.மு.க.விடம் முழுமையாக அடமானம் வைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நெல்லித்தோப்பு, வில்லியனூர், காலாப்பட்டு, பாகூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாமல் தி.மு.க. போட்டியிட வாய்ப்பளித்து தி.மு.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் முதல்-அமைச்சர் நாராயணசாமி காரணமாக இருந்தார். இதனால் காங்கிரஸ் மேலிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமியை பார்ப்பதையே தவிர்த்து வருகிறது.
தி.மு.க. சார்பில் தற்போது 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அது உண்மையான எதிர்கட்சி யாக செயல்படவில்லை. அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா தான் செய்யும் வியாபாரத்திற்காக ஒட்டுமொத்த தி.மு.க.வையும், புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜனதா கூட்டணி அரசிடம் அடமானம் வைத்துவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி,காந்தி குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், முன்னாள் மாநில மாணவரணி பொருளாளர் பார்த்தசாரதி, மாநில இலக்கிய அணி பொருளாளர் குணா, தொகுதி செயலாளர், ராஜா, நடேசன், கிருஷ்ணன், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் , பாலன், சிவராமராஜா, ராஜராஜன், முதலியார்பேட்டை தொகுதி மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் முதலியார்பேட்டை தொகுதி செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.
- 53 சதவீதம் பேர் ஆப்சென்ட்
- தேர்வு எழுத 2 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 299 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
புதுச்சேரி:
புதுவை பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தில் கள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று காலை 10 மணி முதல் 12 வரை நடந்தது.
புதுவையில் தாகூர் கலைக் கல்லூரி - 2, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு பள்ளி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, குளுனி பள்ளி என 7 மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வு எழுத 2 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 299 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 53 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
முன்னதாக காலை 8.30 மணி முதல் தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து, தேர்வர்கள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தகவல் தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லாத வகையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். பின்னர், ஹால்-டிக்கெட் சரிபார்க்க ப்பட்டு தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்க ப்பட்டனர். மேலும், தேர்வு கட்டுப்பாட்டாளரும், அரசு செயலருமான குமார், உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் ஜெய்சங்கர், கண்ணன் ஆகியோர் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல், போக்குவரத்து துறையில் அமலாக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற்றது.
- மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல், 75 கி.மீ வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
- புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனிடையே, தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் கடந்த 19-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுத்தது.
மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு தேஜ் அதி தீவிர புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக்கடலில் சகோத்ரா நகருக்கு 330 கி.மீ கிழக்கு-தென்மேற்கேயும், சலாலா நகருக்கு 690 கி.மீ தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா நகருக்கு 720 கி.மீ தென்கிழக்கேயும் மையம் கொண்டு ள்ளது.
இன்று மதியம் புயல் மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல் வங்ககடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு மேற்கே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது அந்தமான் தீவுகள் போரட் பிளேயருக்கு வடக்கு வடமேற்கில் சுமார் 110 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுக்கு தென்-தென்கிழக்கே ஆயிரத்து 460 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல், 75 கி.மீ வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் இது புயலாக மாற வாய்ப்புண்டு. இந்த புயலுக்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து 25-ந் தேதி அதிகாலை டின்கோனா தீவு மற்றம் சாண்ட்விப் இடையே வங்கதேச கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், மீனவர்கள் யாரும கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், புதுவையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- போலீசார் பறிமுதல் செய்தனர்
- அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
புதுச்சேரி:
பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி பலர் நூதன முறையில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க போலீசார் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி வேன் மற்றும் கார் மூலம் மணல் கடத்தப்பட்டு சித்தேரி-குருவிநத்தம் வழியாக கொண்டு செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாகூர் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தலைமையில் உதவி சப் - இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை பின் தொடர்ந்த சென்றனர்.
இதனை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைதொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தனர்.அப்போது அதில் மணல் மூட்டைகள் இருந்தன.
35-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து பாகூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கார் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்த காரை பயன்படுத்தியது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலோசனைக்கூட்டம் பாசறையின் மாநிலச்செய லாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடந்தது.
- ஏம்பலம் தொகுதி செயலாளர் சம்பத் உள்பட 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆணைப்படி காலாப்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக்கூட்டம் பாசறையின் மாநிலச்செய லாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடந்தது.
தொகுதி செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி காலாப்பட்டு தொகுதியில் பூத் கமிட்டி அமைப்பது, தொகுதி நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மகளிர் அணி சார்பில் விமலா ஸ்ரீ, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில தகவல் தொழில் நுட்ப செயலாளர் தினேஷ், ஏம்பலம் தொகுதி செயலாளர் சம்பத் உள்பட 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார்
- இலவச மார்பக புற்றுநோய் மற்றும் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புவுண்டர் ஆப் பாண்டி பேரண்டிங் ஹப் புதுவை ரிவேஜ் லேடிஸ் சர்கில் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் மற்றும் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் கோகிலாம்பாள் முன்னிலை வகித்தார். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான முதல்நிலை பரிசோதனை களை செய்தனர். மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர் ஜெயந்தி குருமூர்த்தி விளக்கி கூறினார்.






