search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anpahagan"

    • அன்பழகன் ஆவேசம்
    • காங்கிரஸ் மேலிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமியை பார்ப்பதையே தவிர்த்து வருகிறது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. செயல்வீரர்கள்- வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் 100 அடி சாலையில் உள்ள சன்வே ஓட்டலில் இன்று நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில ஜெ.பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    ஆதி என்ற ராமசாமி, ராசு என்ற வரதன், காந்தி, கேசவன், மருது என்ற மருதமலையப்பன், பிரதீப், செல்வகுமார், தேன்மொழி, சாந்தா, வனஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் லயன் சுரேஷ், நடராஜன், வடிவேலு, ஜெய்சங்கர், மணிவண்ணன், ரவிக்குமார், சேகர், சிதம்பரம், சுரேஷ், முத்துராஜூலு, பாலா, கவுரி, உமா தேவி, வேம்பு, பவானி ஆகியோர் வரவேற்புரையாற்றி னார்கள்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற நாம் திட்டமிட்டு களப்பணி ஆற்ற வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை தொய்வில்லாமல் செய்து முடிக்க வேண்டும்.

    நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கூடிய தொகுதியாக முதலியார்பேட்டை தொகுதி இருந்தது.

    இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாஸ்கர் 2 முறை வெற்றி பெற்ற தொகுதி ஆகும்.

    புதுச்சேரி மாநிலத்திலேயே அதிக அளவில் அ.தி.மு.க. தொண்டர்களை கொண்ட தொகுதி ஆகும். வெற்றி பெற்றுவிடுவோம் என்ற தொண்டர்களின் அலட்சிய செயல்பாட்டினால் நாம் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தேர்தலில் சிறு அலட்சியம் கூட நமது வெற்றியை பாதித்து விடும். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

    ஒரு ஓட்டு கூட வெற்றிக்கான ஓட்டு என்பதை நினைவில் கொண்டு கட்சி பணியை உத்வேகத்துடன் நடத்த வேண்டும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை தி.மு.க.விடம் முழுமையாக அடமானம் வைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நெல்லித்தோப்பு, வில்லியனூர், காலாப்பட்டு, பாகூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாமல் தி.மு.க. போட்டியிட வாய்ப்பளித்து தி.மு.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் முதல்-அமைச்சர் நாராயணசாமி காரணமாக இருந்தார். இதனால் காங்கிரஸ் மேலிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமியை பார்ப்பதையே தவிர்த்து வருகிறது.

    தி.மு.க. சார்பில் தற்போது 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அது உண்மையான எதிர்கட்சி யாக செயல்படவில்லை. அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா தான் செய்யும் வியாபாரத்திற்காக ஒட்டுமொத்த தி.மு.க.வையும், புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜனதா கூட்டணி அரசிடம் அடமானம் வைத்துவிட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி,காந்தி குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், முன்னாள் மாநில மாணவரணி பொருளாளர் பார்த்தசாரதி, மாநில இலக்கிய அணி பொருளாளர் குணா, தொகுதி செயலாளர், ராஜா, நடேசன், கிருஷ்ணன், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் , பாலன், சிவராமராஜா, ராஜராஜன், முதலியார்பேட்டை தொகுதி மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் முதலியார்பேட்டை தொகுதி செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

    • இந்திய ஜனநாயகம் காப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? மன்னர் ஆட்சியா? என தெரியவில்லை.
    • எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் கட்சி அலுவலகத்தில் நடந்தது

    மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தரன். கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது:-

    பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு அமலாக்கதுறை செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்தது சரி என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இதன்மூலம் இந்திய ஜனநாயகம் காப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? மன்னர் ஆட்சியா? என தெரியவில்லை.

    இவர்களுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகுந்துவார்கள். எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில இணை செயலாளர் கணேசன், துணை தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், நகர தலைவர்கள் செல்வகுமார், சிவா, கணேஷ், தொகுதி செயலா ளர்கள் பொன்னுசாமி, பாஸ்கர், கருணாநிதி, ராஜா, சிவகுமார், ஆறுமுகம், கிருஷ்ணன், கமல்தாஸ், வேலவன், கோபால், குணசேகரன், சண்முகதாஸ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ரெஸ்டோபார் என்று சொல்லி பொதுமக்களுக்கு தொல்லையும், கலாச்சார சீரழிவையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
    • டூரிஸ்ட் லைசன்ஸ் என்ற பெயரில் கடந்த தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 55 லைசன்சும் தற்போதைய அரசில் சுமார் 95 லைசன்சும் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இயங்கும் 8 மது ஆலையில் உற்பத்தி செய்யும் மதுவையும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் 800-க்கும் மேற்பட்ட பிராண்டு வகைகளையும் அரசே கொள்முதல் செய்து அதற்காக தனி கார்பரேஷன் அமைத்து சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.

    1989-ம் ஆண்டு பிறகு எந்த தனியாருக்கும் சில்லரை மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. டூரிஸ்ட் லைசன்ஸ் என்ற பெயரில் கடந்த தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 55 லைசன்சும் தற்போதைய அரசில் சுமார் 95 லைசன்சும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த டூரிஸ்ட் லைசன்ஸ் பெற 15 ஏ.சி. ரூம் மற்றும் 300 சதுர அடி ஹால் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் தற்போது இதுபோன்ற வசதிகள் இல்லாதவ ர்களுக்கும் டூரிஸ்ட் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை தான் ரெஸ்டோபார் என்று சொல்லி பொதுமக்களுக்கு தொல்லையும், கலாச்சார சீரழிவையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    ரெஸ்டோ பார் என்ற பெயரில் இதுவரை லைசன்ஸ் வழங்காத சூழ்நிலையில் அதனை மக்களிடம் கலால்துறை தெளிவுபடுத்தவில்லை.புதியதாக 100 சில்லரை லைசன்சுகளை ஏலம் விட்டால் குறைந்த்து ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் வரும் அதையும் அரசு செய்யவில்லை.

    கள்ளுக்கடை, சாராயக்கடை ஏலம் விடுவது போன்று மதுபான விற்பனை உரிமத்தையும் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விட்டால் தற்போது உள்ளதை விட பல மடங்கு வருவாய் வரும். அதையும் அரசு செய்யவில்லை.

    மக்களுக்கு தொல்லை கொடுக்கும் டூரிஸ்ட் பாரை ரத்து செய்துவிட்டு சில்லறை மது பார் அனுமதி வழங்கலாம் முதல்-அமைச்சரிடம் துறையின் அதிகாரிகள் சரியான விபரத்தை எடுத்துக் கூறாததால் அரசின் வருமானம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

    கலால்துறை சார்பில் பீர் பஸ்சுக்கு அனுமதி கொடுக்கபப்பட்டுள்ளதா.? யார் கொடுத்தது. இதுகுறித்து அரசும், கலால் துறையும் உரிய விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை அருகே அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் பிரம்மன் சதுக்கம் எதிரே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரி பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்கினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் பிரம்மன் சதுக்கம் எதிரே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரி பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்கினார். மாநில துணைத் தலைவர் ராஜாராம், நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணை செயலாளர் கணேசன், சேரன், நாகமணி அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாபுசாமி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், தொகுதி அவை தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன், தட்சிணாமூர்த்தி, தொகுதி பொருளாளர் மஞ்சினி, வார்டு செயலாளர் ஜெயக்குமார், சிவரவி, ரங்கநாதன், செங்கேனி, குமரன், குப்புசாமி, ரமேஷ் ,கோபி, மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் ராஜா செய்திருந்தார்.

    • தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் போடாமல் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது காலத்தை கடந்து சென்றார்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை எடுத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி ஒருமுறை கூட முழுமையான பட்ஜெட் போடாமல் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது காலத்தை கடந்து சென்றார்.

    நாராயணசாமி தலைமையிலான அரசு புதுவை மாநிலத்தின் இருண்ட ஆட்சி காலமாகும். தேர்தலில் போட்டியிடாமல் பதுங்கிக் கொண்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும், பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்த எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் பொய்யான பல கருத்துக்களை எடுத்துக் கூறுவதும் தகுதியற்ற செயலாகும்.

    பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்த பணம் எங்கிருந்து வரும் என ஒரு சிறு பிள்ளைத்தனமான கேள்வியை நாராயணசாமி கேட்கின்றார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நலத்திட்ட உதவிகள் என்பது சுமார் ரூ 300 கோடி அளவில் தான் வரும். ரூ 300 கோடி என்பது மொத்த பட்ஜெட்டில் 3 சதவீதம் தான்,

    மொத்த பட்ஜெட்டில் எப்பொழுதும் 100 சதவீதத்தை எந்த அரசாலும் செலவு செய்ய முடியாது. பல துறைகளில் 5 முதல் 10 சதவீதம் குறைவாக செலவு செய்யக்கூடிய பணத்தை திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட்டில் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும்.அப்படியே இல்லை என்றாலும் கலால் துறையில் சாதாரண வரி விதிப்பின் மூலம் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை பாராட்டு மனம் இல்லாமல் மக்களிடம் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவலை எடுத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி சட்டமன்றத் தேர்தல் என ஒரு போர் வரும் போது முன்னின்று தளபதியாக சண்டை போட வேண்டியவர் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடி காங்கிரஸ் கட்சியை புதுவையில் காணாமல் செய்துவிட்டார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் மீது உண்மையில் அக்கறை இருக்குமேயானால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் நாராயணசாமி போட்டியிட தயாரா ? அப்படி அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது. இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    பேட்டியின் போது கிழக்கு மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார்,மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடைக்கால பொதுசெயலாளரை பழனிசாமியை சந்தித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
    • புதுவை மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையொட்டி புதுவை மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடைக்கால பொதுசெயலாளரை பழனிசாமியை சந்தித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

    அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு மாநில செயலாளர் அன்பழகன் வெள்ளி வேல் மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .

    இந்த சந்திப்பின் போது புதுவை மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, எம்.ஏ.கே.கருணாநிதி, குமுதன், காந்தி, நகர செயலாளர்கள் அன்பழகன் உடையார், சித்தானந்தம், மேற்கு மாநில எம். ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, தொகுதி செயலாளர்கள் சம்பத், கமல்தாஸ், வேலவன், முன்னாள் மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

    • புதுவை முதல் -அமைச்சர் ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் கவர்னரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்துகிறார் என தமிழக முதல்-அமைச்சர் பேசியது நாகரீகற்ற விமர்சனம்.
    • காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை முதல் -அமைச்சர் ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் கவர்னரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்துகிறார் என தமிழக முதல்-அமைச்சர் பேசியது நாகரீகற்ற விமர்சனம். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    துணைநிலை ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தமிழக முதல்-அமைச்சர் தெரிந்து பேச வேண்டும். எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்டையை கிழித்துக் கொண்டு கவர்னரிடம் முறையிட்டவர்தான் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின். ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைபாடு, ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைபாடா?

    தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா கூறியதை விமர்சித்த முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தற்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறும் போது அது அவர்களது விருப்பம் என மழுப்புகிறார். தன்னுடைய சுயநலத்திற்காக காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக ஸ்டாலினிடம் அடமானம் வைத்து விட்டார்.

    காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு குறைந்த அளவில் இழப்பீடு வழங்கப்பட்டு பிரச்சினை மூடி மறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலாளர்கள் பயம் கலந்த பீதியுடன் பணி செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கவர்னர், முதல்-அமைச்சர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அந்த தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட வேண்டும்

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் பாண்டுரங்கன் 2-ம் ஆண்டு நினைவு நாள் அரியாங்குப்பத்தில் அனுசரிக்கப்பட்டது.
    • ஏழை, எளியோர் 500 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் பாண்டுரங்கன் 2-ம் ஆண்டு நினைவு நாள் அரியாங்குப்பத்தில் அனுசரிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஏழை, எளியோர் 500 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர் ராஜாராமன், நகர செயலாளர்கள், அன்பழக உடையார், சித்தானந்தம் துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயசேரன், நாகமணி, குமுதன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×