search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சந்திரபிரியங்கா பதவி நீக்க ஒப்புதலுக்கு காலதாமதம் ஏற்பட்டது ஏன்?
    X

    கோப்பு படம்.

    சந்திரபிரியங்கா பதவி நீக்க ஒப்புதலுக்கு காலதாமதம் ஏற்பட்டது ஏன்?

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விளக்கம்
    • புதுவை அரசின் முதல்-அமை ச்சர் மற்றும் ஆட்சியாளர்களை தரைக்குறை வாகபேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்க ள் கூட்டம் கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளதா?

    என்று கேள்வி எழுப்பி உள்ளார். அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள், அவர்கள் மீதான குறை பாடுகள் தெரிவிக்கவே எம்எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததின் பேரிலே கூட்டம் நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக புதுவை தலைமை செ யலர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் ஆகியோரை அழை த்து எம்.எல்.ஏ.க்க ள் கூறிய புகார்கள் குறித்து விசாரித்தோம்.

    மேலும் 2 அரசு செ யலர்களும் 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் கடிதம் அனுப்பி உள்ளேன். அதற்கான உரிய பதில் அளிக்க வில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    காங்கிரஸ் கட்சி யில் நாராயணசாமியின் நிலை என்ன ? அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார். நான் சபாநாயகர் பொறுப்பில் சரியான செயல்பட்டு வருகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை அரசின் முதல்-அமை ச்சர் மற்றும் ஆட்சியாளர்களை தரைக்குறை வாகபேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

    சந்திரபிரியங்காவின் செ யல்பாடுகள் கடந்த 6 மாத காலமாக சரியில்லை என்ற காரணத்தால் முதல்-அமைச்சர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதற்கிடையே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னரும் சந்திரபிரியங்கா தனது ராஜினாமா என்ற பெ யரில் ஒரு கடிதத்தை முதல்-அமைச்சரிடம் மட்டுமின்றி ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்திற்கு நேரடியாக அனுப்பினார்.

    கவர்னரின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்ட கடிதமும், சந்திரபிரியங்கா நே ரடியாக அனுப்பிய ராஜினாமா கடிதமும் மத்திய அரசுக்கு சென்றது தான் பதவி நீக்கம் ஒப்புதலுக்கு வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இதுபற்றி நானும் (சபாநாயகர்), கவர்னர் விளக்கம் அளித்தபின் தற்போது அவர் பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×