என் மலர்
இந்தியா
- 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
- தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார்.
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகபந்தன் கூட்டணி 17 இடங்களில் வென்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் எம்எல்ஏவாகவும் ஆகி கவனம் பெற்று வருகிறார். 84,915 வாக்குகள் பெற்ற இவர் எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
- பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகபந்தன் கூட்டணி 17 இடங்களில் வென்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த வெற்றியால் நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.
இதில் அமித் ஷா, ஜே.பி நட்டா, பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய மோடி, "நாம் மக்களின் சேவகர்கள். நாம் நம் கடின உழைப்பால் மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் மக்களின் இதயங்களை நாம் திருடி விட்டோம். அதனால்தான் ஒட்டுமொத்த பீகாரும் மீண்டும் ஒருமுறை என்டிஏ அரசை தேர்ந்தெடுத்துள்ளது.
நான் பீகார் தேர்தல்களில் காட்டு ராஜ்ஜியம் மற்றும் அராஜக ஆட்சி பற்றிப் பேசியபோது, ஆர்ஜேடி கட்சி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அது காங்கிரஸின் மனதை நோகடித்தது.
இன்று நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், 'காட்டு ராஜ்ஜியம்' ஒருபோதும் பீகாருக்குத் திரும்பி வராது. பீகார் மக்கள் விக்சித் (வளர்ந்த) பீகாருக்காக வாக்களித்துள்ளனர்.
பீகாரில் சில கட்சிகள் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் முஸ்லீம் - யாதவ் பார்முலா ஒன்றை உருவாக்கியிருந்தன. ஆனால், இன்றைய வெற்றி ஒரு புதிய நேர்மறையான மஹிளா(பெண்கள்) மற்றும் இளைஞர்கள் பார்முலாவை உறுதி செய்துள்ளது.
இன்று, பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
இதில் ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த இளைஞர்கள் அடங்குவர். அவர்களுடைய ஆசைகள், அவர்களுடைய கனவுகள், காட்டு ராஜ்யம் செய்தவர்களின் பழைய வகுப்புவாத முஸ்லீம் - யாதவ் பார்முலாவை முழுவதுமாகத் தகர்த்துவிட்டன.
மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள நுவாபடா பகுதி மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
இது என்டிஏ-வுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கான வெற்றி இது. இந்தத் தேர்தல், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நான் தேர்தல் ஆணையம், நமது பாதுகாப்புப் படைகள் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய பீகார் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது.
பீகார் தேர்தல்கள் மற்றொரு விஷயத்தையும் நிரூபித்துள்ளன. இப்போது, நாட்டின் வாக்காளர்கள், குறிப்பாக நமது இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர்.
இன்றைய வெற்றி ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். பீகார் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, எங்கள் தோள்களில் இன்னும் பெரிய பொறுப்பைச் சுமத்தியுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பீகார் அதிவேகத்தில் முன்னேறும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
பீகாரில் புதிய தொழில்கள் நிறுவப்படும். பீகார் இளைஞர்கள் பீகாருக்குள்ளேயே வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் அயராது உழைப்போம். பீகாருக்கு முதலீடுகள் வரும். இந்த முதலீடுகள் அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும்.
பீகாரில் சுற்றுலாத் துறை விரிவடையும். பீகாரின் புதிய ஆற்றலை உலகம் காணும். நமது புனித யாத்திரை ஸ்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நமது வரலாற்று பாரம்பரியங்கள் புத்துயிர் பெறும்.
இன்று நான் நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகத்திலிருந்தும் வரும் முதலீட்டாளர்களுக்குச் சொல்கிறேன், பீகார் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளது.
நாடு முழுவதிலும் மற்றும் உலகத்திலும் வாழும் பீகாரைச் சேர்ந்த பிள்ளைகளிடம் நான் சொல்கிறேன், பீகாரில் முதலீடு செய்வதற்கு இதுவே மிகவும் பொருத்தமான நேரம்" என்று தெரிவித்துள்ளார்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார்.
- 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இதற்கிடையே ஆர்ஜேடியின் கோட்டையாகக் கருதப்படும் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் இறுதிக் கட்டம் வரை நடந்த பரபரப்பான போட்டியில், ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தன் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் சுமார் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார். கடைசி கட்டம் வரை பரபரப்பான போட்டியைக் கண்ட ரகோபூர், இறுதியாக தேஜஸ்வி யாதவை வெற்றியாளராக முடிசூட்டியது.
முன்னதாக, இந்த சட்டமன்றத் தொகுதியை அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தாய் ராப்ரி தேவி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
அதன் பிறகு, தேஜஸ்வி யாதவ் 2015 முதல் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த முறை பாஜக தனது வேட்பாளராக சதீஷ் குமார் யாதவை நிறுத்தியது. முன்னதாக 2010 ஆம் ஆண்டு ஜேடியு வேட்பாளராகப் போட்டியிட்ட சதீஷ் குமார் யாதவ், ராப்ரி தேவியை தோற்கடித்திருந்தார்.
- பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
- ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களின் ஆணையை நாம் ஏற்க வேண்டும். பின்னடைவுக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.
நான் பீகாருக்கு செல்லவில்லை. யார் வாக்களிக்கவில்லை, ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது என்று எனக்குத் தெரியாது. நான் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன்" என்று தெரிவித்தார்.
பீகார் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, சித்தராமையா, "அவர்கள் இங்கேயும் வாக்கு திருட்டு செய்திருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.
- 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியை கண்டது கிடையாது.
- முதன்முறையாக இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலின்போது, பல்வேறு மாவட்டங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்றது. அதன்வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதி உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாகும். இங்கு 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியே கண்டதில்லை. இதனால் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிர் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
- ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் மிகப்பெரிய தோல்விக்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மற்றும் பாஜக தான் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய தேர்தல் சதி என்றும், பாஜக அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் மோசடியைச் செய்ததாகவும் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.
மேலும், பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR விளையாட்டை மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் தொடங்கி வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு வர முடியாது.
ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை மீண்டும் விளையாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
CCTV போல நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவின் நோக்கங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மோசடி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- பாஜக 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று வெற்றி, நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் அரசாங்கங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கையின் முத்திரை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முகம்.
- பீகாரில் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர்.
பீகார் தேர்தலில் 200 தொகுதிகளில் முன்னிலை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி முகம்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில் நிதிஷ்குமாரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் நிதிஷ்குமார், சிராக் பஸ்வான், ஜித்தன் ராம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகாரில் மேற்கொண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மக்கள் வெற்றியை கொடுத்துள்ளனர் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
- மொகமா தொகுதியில் வாக்கு சேகரித்த ஜன் சுராஜ் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்டார்.
- விசாரணையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. கொலை வழக்கு பதியப்பட்டாலும் ஆனந்த் குமார் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
- பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- நிதிஷ் குமார் கட்சி கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு இடங்களை பிடிக்க இருக்கிறது.
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார்.
இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று பெற்றி, முற்போக்கு நிர்வாகத்தை தொடர்ந்து பீகார அரசால் கொடுக்க முடியும். மற்றும் பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத்தின் மீதான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
நிதிஷ் குமார் மற்றும் வெற்றி பெற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பவன் கல்யாண் "பீகார் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
- களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை
- காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மதிய நிலவரப்படி முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணி அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
அதேநேரம் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் தருவாயில் உள்ளது.
குறிப்பாக 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மதியம் 1 மணி நிலவரப்படி, 4-5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை தேர்தல் படுதோல்வியாக அமைந்துள்ளது.
வாக்காளர் அதிகார யாத்திரை, வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள், வாக்காளர் பட்டியல் திருத்த எதிர்ப்பு என பல விஷயங்களை பீகாரில் ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் முன்னெடுத்தபோதும் அது அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
வாக்கு திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் களத்தில் சிறிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
இந்த விவகாரங்கள் எடுபடவில்லை என்று களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
அதுவும் ராகுல் காந்தி மக்கள் அதிகார பயணம் மூலம் பிரசாரம் மேற்கொண்ட அனைத்து தொகுத்திகளிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி காட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

காங்கிரசின் இந்த தோல்வி குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். குறிப்பாக கட்சித் தலைவர்கள் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) மற்றும் சிறுபான்மையினர் நோக்கி தனது கவனத்தை திருப்பி கையில் எடுத்த சமூக நீதிக் கொள்கை காங்கிரசின் பாரம்பரியமான உயர் வகுப்பு வாக்குகளை மேலும் விலக்கி உள்ளது.
பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) பிரிவினர், மற்றும் பீகார் பெண்களின் வாக்குகளும் காங்கிரசுக்கு கிடைக்காதது, அம்மக்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் கண்கவர் திட்டங்களில் திருப்தியடைந்ததையே காட்டுகிறது.
பாஜக, ஜேடியு மற்றும் லோக் ஜனசக்தி கட்சி போன்ற என்டிஏ கூட்டணி கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு தாவிய பலரை உடனடியாக வேட்பாளராக்கியது கட்சிக்கு பின்னடைவைவாக அமைந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ஒருபுறம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐ கடுமையாக எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், அதனுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு சீட் வழங்கியது காங்கிரஸின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியது என கூறப்படுகிறது.
அதேநேரம் பிரசார களத்தை பொறுத்தவரை ராகுலும் தேஜஸ்வியும் ஒரே மேடையில் ஓரிரு முறை மட்டுமே தோன்றினர். இது இரண்டு கட்சியின் இணக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

அதேநேரம் மாநிலத்தின் நீண்ட கால முதல்வரான நிதிஷ் குமார் மற்றும் ஸ்திரமான தேசியா தலைமை பிம்பம் கொண்ட பிரதமர் மோடி பீகார் மக்களுக்கு பாதுகாப்பான தேர்வாக அமைத்துள்ளனர்.
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பிரமாண்டமான திட்டங்களை தேஜஸ்வி அறிவித்தபோதும் அவற்றின் சாத்தியம் குறித்த சந்தேகங்களும் நிலவின.
ஆர்ஜேடிக்கு இந்த தேர்தல் மாநில அளவில் தோல்வியை தந்திருந்தாலும், தேசிய கட்சியான காங்கிரசுக்கு இந்த ஒற்றை இலக்க வெற்றி முன்னெப்போதும் இல்லாத பின்னடைவியாகவே பார்க்கப்படுகிறது.
மொத்ததில் காங்கிரஸ் தலைவர்கள் பல பல சிக்கல்களை அடையாளம் கண்டாலும், இந்த படுதோல்வி யாரும் எதிர்ப்பாராத அடியாகவே அமைந்துள்ளது.
- அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார்.
- லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
தெவங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம். போண்டலபள்ளியை சேர்ந்த ஒருவர், ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார்.
இதற்காக நேற்று தளம் அமைக்கும் பணி நடந்தது.தொழிலாளர்கள் சிமெண்டு கலவை கொண்டு தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தளம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு தொழிலாளர்களுக்கு ஆட்டு கறி குழம்பு பரிமாறப்பட்டது.அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமணய்யா (வயது 65) என்பவரை சாப்பிட அழைத்தனர்.
அப்போது லட்சுமணய்யா மது போதையில் இருந்தார். அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார். அது அவரது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமணய்யா மூச்சுக் குழாயில் ஆட்டுக்கறி துண்டு சிக்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






