என் மலர்
இந்தியா

இடைத்தேர்தலில் உமர் அப்துல்லா கட்சிக்கு வரலாற்று தோல்வி
- 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியை கண்டது கிடையாது.
- முதன்முறையாக இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலின்போது, பல்வேறு மாவட்டங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்றது. அதன்வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதி உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாகும். இங்கு 1957-ல் இருந்து தேசிய மாநாடு கட்சி தோல்வியே கண்டதில்லை. இதனால் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆகா சையத் முன்தாசிர் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Next Story






