என் மலர்
தேர்தல் செய்திகள்
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பாராளுமன்ற தொகுதியில் நக்சல்பாரி என்ற கிராமம் உள்ளது.
நக்சலைட் போராட்டம் இந்தியாவில் முதன் முதலாக இந்த கிராமத்தில்தான் தோன்றியது. இதன் காரணமாக இந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நக்சலைட்டுகள் என்ற பெயர் உருவானது.
நக்சல்பாரி கிராமத்தில் மொத்தம் 906 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று டார்ஜிலிங் தொகுதி தேர்தல் நடந்த போது இந்த கிராமத்தில் எந்த அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

நக்சலைட் ஊடுருவல் அதிகம் கொண்ட இந்த கிராமத்தில் கடந்த காலங்களில் பல தடவை மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். சமீப காலமாகத் தான் அந்த பகுதி மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தடவை நேற்று மொத்தம் உள்ள 906 வாக்காளர்களில் 827 பேர் தங்களது வாக்கை பதிவு செய்து இருந்தனர். இது 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு ஆகும்.
நக்சல்பாரி கிராமத்தில் இது வரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானது இல்லை. இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. #LokSabhaElections2019
தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.
இதில் 18 தொகுதிகளுக்கு நேற்று பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சேலம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

இன்றைக்கு அம்மா அரசு சிறப்பாக பணியாற்றிய காரணத்தினாலே சேலம் தொகுதியில் கூடுதலான வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.
கே:- ஓட்டுப்பதிவின் போது போதிய அளவில் பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளதே?
ப:- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டப்படிதான் நடக்க வேண்டும். ஏற்கனவே என்னென்ன வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து உள்ளதோ, அந்த வழித்தடங்களில் பஸ்கள் வழக்கம் போல் சென்று கொண்டு தான் இருக்கின்றன.
தேர்தல் நடத்தை விதி காரணமாக உடனடியாக கூடுதலாக பஸ்களை இயக்க இயலாது. இது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் அரசாங்கம் முழுவதுமே சென்று விடுகிறது. நிறைய இடங்களில் கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கும் விஷயத்தில் தேர்தல் நடத்தை விதி குறுக்கிட்டதால் இதில் அமைச்சர்களும் தலையிட முடியாது, மத்தியிலும் யாரும் தலையிட முடியாது. அதிகாரிகள் மட்டத்தில் தான் இதை செயல்படுத்த முடியும்.
தொடர்ந்து விடுமுறை தினங்கள் வந்ததால் முக்கிய நகரங்களில் இருந்து அதிகமான பேர் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டது. இந்த சூழ்நிலையில்தான் இடர்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும்.
கே:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வருகின்ற தேர்தலில் தொடருமா?
ப:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடருவதற்கு முழு வாய்ப்பு இருக்கிறது.
கே:- சேலம் மாவட்டத்தில் நேற்று வீசிய சூறைக்காற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
ப:- சூறை காற்றால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது பிறகு தான் தெரியும். கோடை மழை என்பதால் இதை பற்றி உறுதியாக பேச முடியாது.
நாளை தலைமை செயலகம் சென்றபிறகு, நான் இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்வேன். பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #Edappadipalaniswami #ADMK
மும்பை:
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி முரளி தியோரா. கடந்த 2014-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.
இவரது மகன் மிலிந்த் தியோரா. இவரும் மத்திய மந்திரியாக இருந்து உள்ளார்.
தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 42 வயதான மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
2004, 2009 தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் கடந்த தேர்தலில் சிவசேனாவிடம் தோற்றார். 4-வது முறையாக அவர் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
ரிலையன்ஸ் குழும அதிபரான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-

தெற்கு மும்பை என்றாலே தொழில் என்கிறார்கள். மும்பையின் தொழில்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளாக மிலிந்த் தியோரா மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார். தெற்கு மும்பையில் உள்ள பொருளாதாரம், சமூகம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை ஆழமாக அறிந்தவர். அவரது தலைமையில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் வளம் பெறும்.
இவ்வாறு முகேஷ் அம்பானி வீடியோவில் கூறி தியோராவுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.
ரபெல் விவகாரத்தில் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும். அதே நேரத்தில் முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால் பா.ஜனதாவும், சிவசேனாவும் அதிர்ச்சி அடைந்து உள்ளன.
இதே போல ஆசியாவின் மிகப் பெரிய கோடீசுவரர்களில் ஒருவரான உதய் கோடக்கும் காங்கிரஸ் வேட்பாளர் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். #MukeshAmbani #Congress
சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய 6 சதவீதம் வாக்குகள் தேவை. ஆனால் தேர்தலில் அது கிடைக்காது. ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.
எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடைசி வரை குழுவாக மட்டும் செயல்படவே வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 4 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பொறுப்பாளர்களாக- துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்.
திருப்பரங்குன்றம் கிழக்கு- மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ.,
மேற்கு- தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம்.
தெற்கு- விருதுநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.,
வடக்கு- மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி.
தெற்கு பகுதி-சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ.
அவனியாபுரம் கிழக்கு பகுதி- சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்ஏ.
அவனியாபுரம் மேற்கு பகுதி- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.
மேலும் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகர், ஜெ.அன்பழகன், கே.எஸ்.மஸ்தான், ஆண்டி அம்பலம், இன்பசேகரன், ஈஸ்வரன், வசந்தம் கார்த்திகேயன், கோவி.செழியன் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன், முத்துராமலிங்கம், ஆவடி சா.மு.நாசர், நிவேதா முருகன்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, கணேசன், மனோ.தங்கராஜ், எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி, கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அப்துல் வகாப், பத்மநாபன்.
அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள்- விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.
க.பரமத்தி ஒன்றியம்- முத்துசாமி, கரூர் ஒன்றியம்- டி.எம்.செல்வகணபதி, அரவக்குறிச்சி ஒன்றியம்- சக்கரபாணி எம்.எல்.ஏ.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காந்தி, பெரியண்ணன், சுந்தர், மாதவரம் சுதர்சனம், எழிலரசன், ராமர், சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் காந்திசெல்வன், மூர்த்தி, அங்கயற்கண்ணி, பி.தியாகராஜன், சிவசங்கர்.
சூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்.
சுல்தான்பேட்டை ஒன்றியம்- தா.மோ.அன்பர சன் எம்.எல்.ஏ., சூலூர் தெற்கு ஒன்றியம்- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சூலூர் வடக்கு ஒன்றியம்- ஆ.ராசா.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கார்த்திக், தடங்கம் சுப்பிரமணி, செங்குட்டுவன், பிரகாஷ், ஜெயராமகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, கார்த்திகேயன், நல்லதம்பி, முபாரக், ராமச்சந்திரன், செல்வராஜ், நல்லசிவம் மற்றும் சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, பத்மநாபன், செல்ல பாண்டியன், சிவானந்தம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNBypolls #DMK
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம் ஷிகர்பூரை அடுத்த அப்துல்லாபூர் ஹூல சேன் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார் (25).
இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்.
நேற்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் பவன்குமாரின் ஊர் அடங்கிய புலந்த்சாகர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஓட்டு போட பவன்குமார் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.
அப்போது சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மாவின் சின்னத்தை அழுத்துவதற்கு பதிலாக பா.ஜனதாவின் தாமரை சின்னத்தை அழுத்தி விட்டார்.
பா.ஜனதா வேட்பாளரும், தற்போதைய அத்தொகுதி எம்.பி.யுமான போலாசிங்குக்கு ஓட்டு போட்டு விட்டார். தான் தவறாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டதால் பவன்குமார் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைந்தார்.
அவரது ஆத்திரம் திடீரென்று தாமரை சின்னத்தை அழுத்திய தனது கை விரல் மீது திரும்பியது.
இதனால் கைவிரலை துண்டிக்க முடிவு செய்தார். உடனே கத்தியால் கை விரலை வெட்டி தண்டித்து கொண்டார்.
அதன்பின் பவன்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, “தான் தவறுதலாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டு விட்டேன். எனது தவறுக்கு தண்டனையாக கை விரலை துண்டித்து கொண்டேன்” என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019 #BSPSupporter
தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

18 சட்டமன்றத் தொகுதிகளைப் பொருத்தவரை 75.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில் 82.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ படத்தில் தன்னுடைய ஓட்டை இன்னொருவர் போட்டு விட்டார் என்று வாதாடி ஜெயிப்பது போன்று கதை அமைக்கப்பட்டு இருந்தது.

சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், தனியார் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர். நேற்று காலை 11 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார். அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கோபிநாத், ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து சர்கார் பட பாணியில், ‘49 பி’ விதியின்படி, ‘17 பி’ படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, ‘17 ஏ’ படிவத்தில், அவரது ஓட்டை, கோபி நாத் பதிவு செய்தார்.
இதேபோல், முடிச்சூரைச் சேர்ந்த, ராஜாஜி என்பவரின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவானது. அவருக்கும், ‘49 பி’ விதியின் கீழ் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
கோபிநாத்தின் ஓட்டை, கள்ள ஓட்டாக பதிவிட்டவர், ‘பான் கார்டு’ ஆவணம் காண்பித்துள்ளார். எங்கள் ஆவணங்களில், பான் கார்டின் கடைசி மூன்று இலக்க எண்களே பதிவாகி உள்ளன. ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும், கள்ள ஓட்டு பதிவு செய்தவர் குறித்து, எந்த சந்தேகமும் எழவில்லை. கோபிநாத் வந்து விசாரித்த பின் தான், கள்ள ஓட்டு போடப்பட்டது தெரிந்தது. ‘சிசிடிவி’ கேமரா இல்லாததால், கள்ள ஓட்டு போட்டவரின் முகம் பதிவாகவில்லை. இது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதி, காட்டுமன்னார்கோவில், பருவ தராஜ குருகுல பள்ளி ஓட்டுச்சாவடியில், வினோத் வெங்கடேசன் (32), என்பவரது ஓட்டும் அதிகாலையே, கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர், டெண்டர் ஓட்டை பதிவு செய்து, சீலிட்ட கவரை, ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கொடுத்தார்.
குமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பிலாங்காலை எனுமிடத்தில் உள்ள, ஓட்டுச் சாவடியில் அஜின் மற்றும் ஷாஜி ராஜேஷ் ஆகியோரும், நேற்று, ‘49 பி’ விதியின் கீழ் வாக்களித்தனர். நெல்லை, பேட்டையில், ஆயிஷா சித்திகா, 38, என்ற பெண்ணின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கும், ‘49 பி’ ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
நெல்லை பேட்டை கே.ஓ.பி. 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஜாபர்சாதிக் இவரது மனைவி ஆயிஷா சித்திகா (வயது 33). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி 178-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.
அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் யாராவது இறந்து போனவரின் வாக்கினை செலுத்துமாறு வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறினர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஆயிஷா சித்திகா தனக்கு வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும் என வாதாடினார். அதற்காக ரூ.2 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தார். பின்னர் அவர் வாக்களித்தார். இந்த வாக்கிற்காக சுமார் 2 மணி நேரம் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணகுடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பணகுடி அஸ்ஸே உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள 48-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். அப்போது அவரது வாக்கினை ஏற்கனவே வேறுநபர் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டார்.
இதையடுத்து வாக்குப்பதிவு அலுவலர் முருகன், தாசில்தார் செல்வம் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து மணிகண்டனுக்கு சேலஞ்ச் வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். #LokSabhaElections2019
மணாலி:
இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தசிகங்க் என்ற இடம் ஆண்டு முழுவதும் பனி பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாகும்.
கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பொதுவாக மக்கள் யாரும் அதிகம் செல்வதில்லை.
தசிகங்க் பகுதியில் 48 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அங்கு மே 19-ந்தேதி இறுதி கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 48 வாக்காளர்களுக்காக அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அந்த பள்ளிக் கூடம் மிக மிக பழமையான பள்ளிக்கூடம் ஆகும். அந்த பள்ளிக்கூடம் எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்பதால் அங்கு வாக்குச் சாவடி அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.
தசிகங்க் நகரில் வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தசிகங்க் நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தசிகங்க் மற்றும் கேட் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 48 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த 48 வாக்காளர்களில் 30 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி என்ற சாதனையை படைத்துள்ளது.
தசிகங்க் பகுதியை இணைக்கும் சாலை தற்போது மிக மிக மோசமாக உள்ளது. பனி பொழிவால் அந்த சாலை இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது.
இதையடுத்து தேர்தலுக்காக புதிய சாலை அமைக்க இமாச்சலபிரதேச பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். இது தவிர வாக்குச் சாவடி மையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சவுத்ரி தெரிவித்தார். #LokSabhaElections2019
சென்னை, ஏப். 19-
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப் படும் தேர்தலில் கடந்த 11-ந்தேதி முதல் கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடந்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இருக்கும் 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
தமிழகத்தில் 38 தொகுதி களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இரவு 9 மணி நிலவரப்படி பதிவான ஓட்டு சதவீதம் விவரம் வருமாறு:-
1. திருவள்ளூர்- 72.02
2. வடசென்னை-61.76
3. தென்சென்னை-57.43
4. மத்தியசென்னை-57.86
5. ஸ்ரீபெரும்புதூர்-60.61
6. காஞ்சீபுரம்-71.94
7. அரக்கோணம்-75.45
8. கிருஷ்ணகிரி-73.89
9. தர்மபுரி-75.92
10.திருவண்ணாமலை-71.27
11. ஆரணி-76.44
12. விழுப்புரம்-74.96
13. கள்ளக்குறிச்சி-76.36
14. சேலம்-74.94
15. நாமக்கல்-79.75
16. ஈரோடு-71.15
17. திருப்பூர்-64.56
18. நீலகிரி-70.79
19. கோவை-63.67
20. பொள்ளாச்சி-69.98
21. திண்டுக்கல்-71.13
22. கரூர்-78.96
23. திருச்சி-71.89
24. பெரம்பலூர்-76.55
25. கடலூர்-74.42
26. சிதம்பரம்-78.43
27. மயிலாடுதுறை-71.13
28. நாகப்பட்டினம்-77.28
29. தஞ்சாவூர்-70.68
30. சிவகங்கை-71.55
31. மதுரை-62.01
32. தேனி-75.28
33. விருதுநகர்-70.27
34. ராமநாதபுரம்-68.26
35. தூத்துக்குடி-69.41
36. தென்காசி-71.60
37. நெல்லை-68.09
38. கன்னியாகுமரி-62.32
17-வது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. மதுரையில் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் சித்தரை தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை இருந்ததால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீடிப்பதாக அறிவித்தது.
மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மேலும் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இந்த தொகுதிகள் தேனி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டவை ஆகும்.
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மதுரை புறநகர் பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் தேரோட்டம் நடைபெற்ற மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.
மாலை 6 மணி அளவில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு 63 சதவீதமாக இருந்தது. இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான வாக்குகள் 65.83 சதவீதமாக இருந்தது.
அதாவது நீட்டிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2.83 சதவீத வாக்குகளே அதிகரித்து இருந்தது. கடந்த (2014) பாராளுமன்ற தேர்தலின்போது மதுரை பாராளுமன்ற தொகுதியில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
அதனை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 2 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகி உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 77.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவு ஆகும். தேர்தல் வாக்குப் பதிவு குறித்து கலெக்டர் நடராஜன் கூறும்போது, கடந்த தேர்தலை விட 2 சதவீதம் குறைந்துள்ளது உண்மைதான்.
இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. திருவிழா, தேர்தல் என 2 முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் 70 சதவீதமும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 72 சதவீதமும், ராமநாதபுரத்தில் 68.21 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. #Loksabhaelections2019
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த எந்திரங்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களும் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்படும்.

இந்த 3 இடங்களிலும் ஓட்டு எண்ணும் நாள் வரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் அடுக்கு பாதுகாப்பில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் இருப்பார்கள். 2-வது அடுக்கு பாதுகாப்பில் ஆயுதப்படை போலீசார் பணியில் இருப்பார்கள். 3-வது அடுக்கு பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
3 ஓட்டு எண்ணும் மையங்களிலும் ஓட்டு எண்ணப்படும் நாள் வரை தினமும் 1,000 போலீசார் சுழற்சி முறையில் காவல் பணி செய்வார்கள். ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தேவநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். #LokSabhaElections2019 #TNElections2019






