என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர்.
    • 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலுக்கு மர்மநபர்கள் கடந்த 3-ந்தேதி தீ வைத்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் விழுப்புரம் உதவி ஆணையர் திவாகர், ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.

    அதில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நல்ல நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் பிரிக்கப்பட்டது. மேலும், நாணயங்களும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்து போயிருந்தது. மேலும், நல்ல நிலையில் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கோவில் உண்டியலுக்குள் தீ வைத்து பக்தர்களின் காணிக்கைகளை எரித்த மர்மநபர்களை கிளியனூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்
    • சிறப்பு முகாம் 5.8.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து, இவ்வாண்டிற்கு ரூ.7,000/- கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம் 5.8.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். எனவே, குடும்பத் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் எண்ணில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரம் மற்றும் ஆவணங்களோடு சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்நிகழ்வில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர்வேல்முருகன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அமலாக்க அலுவலகம், சென்னை, குறளகம் 2ஆம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.
    • அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நம் நாட்டின் பார ம்பரிய கலாச்சாரத்தை பாதுகா க்கவும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தினை விவகார எல்லையாகக் கொண்டு துணை இயக்குநர், அமலாக்க அலுவலகம், சென்னை, குறளகம் 2ஆம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.

    கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீ டுகளுடன் 11 இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது. பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கிடு சட்டம் 1985-ன் படி தண்டனைக்குரிய செயலாகும். இதுகுறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டஇரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • வாதானூர், குரான்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்கள்

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 7-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், சேஷாங்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குரான்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினி யோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
    • முதல்நிலை காவலர் சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா உட்பட்ட நல்லான்பிள்ளைபெற்றால் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் சிவசங்கரன் என்பவர், வாட்சப் குழுவில் என்.எல்.சி வன்முறை தொடர்பாக வழக்கறிஞர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் முதல்நிலை காவலர் சிவசங்கரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததின்பேரில் முதல்நிலை காவலர் சிவசங்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • ரவி என்பவர் எனது சாவுக்கு காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.
    • ரவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அவரப் பாக்கம் பகுதியைச் சேர்ந்த வர் நந்தகுமார். இவர் செஞ்சி ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் திண்டிவனம் பொலகுப்பம் அருகே காலி மனை அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரோசனை போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு திண்டி வனம் அரசு பொது மருத்து வமனைக்கு பிேரத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த போலீஸ் விசாரணை செய்தனர். விசாரணையில் நந்த குமார் சட்டை பையில் ஒரு துண்டு சீட்டில் திண்டிவனம் முருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கேண்டீன் ரவி என்பவர் எனது சாவுக்கு காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.

    அவர் பாக்கெட்டில் இருந்த சீட்டை வைத்து கேண்டீன் ரவியை போலீ சார் விசாரணை செய்தனர். விசாரணையில் கேண்டீன் ரவிக்கும் நந்தகுமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இதனால் ரவி நந்த குமாருக்கு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இதனால் விரத்தி அடைந்த நந்தகுமார் தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை யடுத்து கேண்டீன் ரவிக்கு திடீரென உடல்நிலை சரி யில்லாததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்து உள்ளனர்.

    • விழுப்புரம் அருகே டயர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • வெளியில் பொருட்களை வைத்துவிட்டு கடையினுள் அன்பழகன் உட்கார்ந்திருந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள சூரப்பட்டையை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவரது கடையில் வெளியில் வைக்கப்படும் பொருட்கள் அடிக்கடி திருடு போனது. கடையை திறந்து வைத்து விட்டு வெளியில் பொருட்களை வைத்துவிட்டு கடையினுள் அன்பழகன் உட்கார்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கடையில் ஆள் இல்லை என்று நினைத்து கடைக்கு வெளியில் வைத்திருந்த ஸ்கூட்டி டயரை திருடி எடுத்துச் செல்ல முயன்றாராம். அவரை கையுங்கலவுமாக பிடித்து கெடார் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி டயர் திருடியவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் விழுப்புரம் திருப்பாச்சாவடி மேட்டை சேர்ந்த பிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் கோவிந்தராஜ் வீட்டின் எதிரே வந்தனர்.
    • எதற்காக என் வீட்டின் எதிரில் இதுபோல செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே காந்தளவாடி கிராமம் உள்ளது. இங்கு கோவிந்தராஜ் (வயது 37) வசித்து வருகிறார். அதே ஊரில் வசிப்பவர்கள் தேவநாதன் (35), ரத்தினவேல், மருதபாண்டியன், அருண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கோவிந்தராஜ் வீட்டின் எதிரே வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஹாரன் அடித்தபடி, மோட்டார் சைக்கிளின் ஆக்சிலேட்டரை திருகி பலத்த சத்தத்தை எழுப்பினர். மேலும், இதனை அடிக்கடி செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், எதற்காக என் வீட்டின் எதிரில் இதுபோல செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டார். இது அரசாங்கத்தால் போடப்பட்ட சாலை, இங்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். இதற்கு தான் நாங்கள் சாலை வரி கட்டுகிறோம் என்று தேவநாதன் மற்றும் 3 பேரும் கூறினார்கள். தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதம் தகராறாக மாறியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அவரது குடும்பத்தார் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேவநாதனை கைது செய்தனர். ரத்தினவேல், மருதபாண்டியன், அருண் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரால் தேடப்படும் மருதபாண்டியனின் மனைவி சிந்துஜா அளித்த புகாரின் பேரில், கோவிந்தராஜ், கோத ண்டபாணி, ராமானுஜம், ஜோதி ஆகியோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனி அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக பணியாற்றுகிறார்.
    • படுகாயமடைந்த வசந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள எய்யில் மதுரா ஈராடி என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் பழனி (வயது 45).இவர் சென்னையில் அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக பணியாற்றுகிறார். இவரது மனைவி வசந்தி (35).   இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் செஞ்சியை அடுத்த மேற்கலவாய் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த வசந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர்.
    • இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் புகழ்பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் இக்கோவில் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது. அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் தீப்பிடித்து எரிந்து புகை வந்ததை கண்டனர். அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் கிளியனூர் போலீசார், தீயணைப்பு படையினர் கோவிலுக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருட முயற்சித்தது தெரியவந்தது. மேலும், உண்டியலை திறக்க முடியாததால், காகிதத்தில் தீ வைத்து உண்டியலுக்குள் போட்டிருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்தது. இதில் உண்டியலுக்குள் இருந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் தீயில் கருகியிருக்கலாம் எனவும், நாணயங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து இந்து அறநிலையத் துறையின் திண்டிவனம் ஆய்வாளர் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • துணை மின் நிலையத்தில் இருந்து கொத்தாம்பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
    • 6 கிராம ங்களு க்கு மின் வினி யோகம் இரு க்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்து க்கொள்கி றோ ம்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு,

    துணை மின் நிலையத்தில் இருந்து கொத்தாம்பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 5-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கொத்தா ம்பாக்கம், பள்ளிச்சேரி, கோவிந்தா புரம், பக்கமேடு, தொந்தி ரெட்டி ப்பாளையம், பெரியேரி உள்ளிட்ட 6 கிராம ங்களு க்கு மின் வினி யோகம் இரு க்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்து க்கொள்கி றோ ம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட இல்லாமல் உள்ளனர்.
    • செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்-புதுவை சாலையில் காந்தி சிலை அருகில் உள்ள திரு.வி.க. சாலையில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பபள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த ஆண்டு ராஜஸ்ரீ, நிவேதா ஆகிய 2 மாணவிகள் பிளஸ்-2 படித்தனர். அவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் எச்சரிக்கை கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி கடிகாரம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கடிகாரத்தில் குளோபல் புரொடக்ஷன் சிஸ்டம் (ஜி.பி.எஸ்.) மற்றும் சிம்கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தை கையில் அணிந்திருந்த போது யாராவது தங்களை நெருங்கி வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றாலோ அல்லது நகைகளை பறிக்க வந்தாலோ இந்த கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

    மேலும் அலாரம் அடிக்கும் வகையிலும் உருவாக்கியுள்ளனர். இந்த அலார சத்தத்தினால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து காப்பாற்றும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாணவிகள் ராஜஸ்ரீ, நிவேதா ஆகியோர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். அதன்படி நாங்களும் அறிவுப்பூர்வமாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட இல்லாமல் உள்ளனர். செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், கிராம மக்களிடம் போதிய செல்போன் வசதி இல்லாததால் நாங்கள் புதிதாக இந்த கருவியை கண்டு பிடித்துள்ளோம்.

    எங்களுடைய இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, அறிவியல் ஆசிரியை ஜோசப்பின் ஆகியோர் ஊக்கமளித்தார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தலைமை ஆசிரியை சசிகலா கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அறிவியல் கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கும்படி அறிவித்து உள்ளார். அதன்படி எங்கள் பள்ளி மாணவிகள் அறிவுபூர்வமாக கண்டு பிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் 26 ஆயிரம் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 10 புதிய கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எங்கள் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்த கைக்கடிகாரமும் இடம் பிடித்துள்ளது. இதற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலெக்டர் இந்த கேடயத்தை வழங்கினார்.

    இந்த கண்டுபிடிப்பு தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×