search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே  விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் பலி
    X

    செஞ்சி அருகே விபத்தில் திருநங்கை உள்பட 2 பேர் பலி

    • விஜய் என்ற அனாமிக்கா தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் என்ற ஊரை சேர்ந்த பூபதி என்பவரது மகன் விஜய் என்ற அனாமிக்கா (வயது 22). திருநங்கை. இவர் பிடாகத்தில் இருந்து செஞ்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அவர் சிட்டாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அனாமிகா வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனாமிகா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சியை சேர்ந்த விஜயதாஸ் என்பவரது மகன் பாலாஜி (23), காதர் என்ப வரது மகன் சானவாஸ் (23) ஆகியோர் காயங்களுடன் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.செஞ்சியை அடுத்த ஊரணித் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). இவர் தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×