என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த னர்.
    • சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த சி.மெய்யூர் பிள்ளை யார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெமினி (வயது 33). செங்கல் சூளை தொழிலாளி. இவரது வீட்டின் எதிரில் 3 சென்ட் இடம் உள்ளது. இவரது பெரியப்பா கண்ணன் (60), இந்த 3 சென்ட் இடத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதை யடுத்து கண்ணன், அவரது மனைவி லட்சுமி (50), மகன் அய்யப்பன் (27) ஆகியோர் சேர்ந்து ஜெமினி யை தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த னர். தலையில் பலத்த காயமடைந்த ஜெமினி, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்தவ மனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜெமினியை தாக்கிய கண்ணன், லட்சுமி, அய்யப்பன் ஆகியோ ரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது.
    • உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம்

    கடலூர்:

    பனை மேம்பாட்டு இயக்க திட்டம் 2023-–24 ஆம் ஆண்டின் கீழ் விக்கிரவாண்டி பகுதிகளில் 2300 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது. அதன்படி கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரியில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம் என்று உதவி இயக்குனர் ஜெய்சன் கூறினார்.

    • யாரும் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது.
    • அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட காவல் நிலையங்களான ஒலக்கூர், வெள்ளிமேடு பேட்டை, ரோஷனை போன்ற காவல் நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் யாரும் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு மர்ம கும்பல் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது. இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று ஒலக்கூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனதராசன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் 2 பேரும் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதில் ஒருவர் வானூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 23), வானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் இவர்கள் 2 பேரும் யாரும் இல்லாத வீட்டை நோட்டமிட்டு பணம் நகையை கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் போலீசார் இவர்களிடம் இருந்த 7 பவுன் தங்க நகை, செல்போன், லேப்டாப் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்து முருகனை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை விழுப்புரம் மாவட்ட சிறுவர் சீர்திருத்த சிறார் இல்லத்தில் சேர்த்தனர்.

    • நீரில் விஷம் கலக்கப்பட்டதா ? போலீசார் விசாரணை
    • ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் வெப்பம் தங்காமல் மீன்கள் இறந்ததா,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஜூன் மாதம் மழவராயநல்லூர், பள்ளத் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 75) என்பவர் மீன் வளர்ப்பதற்கு குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் நேற்று காலை 7 மணியளவில் ஏரிக்கு சென்று பார்த்தார். அப்போது ஏரியில் ஏராளமான ஜிலேபி, கட்லா மற்றும் இதர கெண்டை வகை என சுமார் 1.5 டன் மதிப்பிலான மீன்கள் நீரில் இறந்தும், கரை ஒதுங்கியும் கிடந்தது. வேறுசில வகை மீன்கள் நல்ல நிலையில் ஏரியில் உள்ளது. இது சம்பந்தமாக ஏரியின் குத்தகைதாரர் நாராயணசாமி திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யாரேனும் நீரில் விஷம் கலந்தனரா, அல்லது ஏரியில் நீர் குறைவாக இருந்ததால் வெப்பம் தங்காமல் மீன்கள் இறந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். ஏரியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதற்காக தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதி தூக்கி வீசியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 63 ) விவசாய கூலி தொழிலாளி இவர் நேற்று சைக்கிளில் அரசூர் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை மாமந்தூர் வருவதற்காக. அரசூர் வங்கி எதிரே சைக்கிளை தள்ளி கொண்டு ரோட்டை கடக்கும் போது திருச்சியில் இருந்து சென்னை சென்ற கார் மோதி தூக்கி வீசிதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்

    • மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.
    • கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து மயக்க நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையில் எலும்பியல் துறை தலைவர் அறிவழகன் ,டாக்டர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத், விக்ரம், பொன்னப்பன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், தோசிப் சுப்பிரமணியம், மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கழுத்து எலும்பில் பிளேட் பொரு த்தினர். இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டதன் பேரில் தற்போது கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். தற்பொழுது அவர் முழுமையாக குணமாகி எவ்வித துணையும் இன்றி தனியாக நடக்கின்றார்.

    இது போன்ற மருத்துவ சிகிச்சையை வெளியே தனியார் மருத்து வமனையில் செய்தால் ரூபாய் 3.5 லட்சம் செலவாகும்.மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார். உண்டு உைறவிட டாக்டர் ரவிக்குமார், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சிங்காரம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடன் இருந்தனர்.

    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இவர்களுக்கு 3 வருடம் முன்பு திருமணம் நடந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 3 வருடம் முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயது குழந்தை உள்ளான். இந்நிலையில் விவசாய கூலித்தொழிலாளியான அருள் 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ஜீவா அந்த துக்கத்தில் இருந்து விடுபடாமல் நாள்தோறும் சோகத்தில் இருந்து வந்தார். இதனால் சரியாக சாப்பிடாமலும், எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணவர் இறந்த துக்கம் அதிகமாகவே நேற்று மனஉளைச்சலில் இருந்த ஜீவா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்தார். கத்தியால் கழுத்தில் அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார். 

    இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கம் வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜீவாவை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி கத்தியால் கழுத்தை அறுத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மன்னார் சுவாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பாபு (35) டிங்கராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர் கிடங்கல் இரண்டு பகுதியைச் சேர்ந்த நீதி ராஜன் ஆகிய இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எம். ஆர். எஸ். கேட் டே நைட் ஹோட்டல் அருகே வரு ம்போது அதே மார்க்கமாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இந்த விபத்தில் பாபு சம்பவ இடத்திலேயே பலத்த காயங்கள் அடைந்து உயிரிழந்தார். அவருடன் வந்த நீதிராஜன் படுகாய ங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த திண்டிவனம் தனியார் சட்டக் கல்லூரியில் பயிலும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இறை தேசிகன் (20)மற்றும் தென்காசி பகுதிைய சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் படுங்காய ங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இந்த 3பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம் சாட்டி வந்தனர்.

    மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் பால மணிகண்டன் என்பவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் புரோகராக பணியாற்றி பொதுமக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.60 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் பால மணிகண்டன் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை நள்ளிரவு வரையில் நடைபெற்றது. சோதனைக்கு பின்பு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த மயிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்
    • பிள்ளைகளின் மாற்று சான்றிதழை வாங்க பள்ளி வளாகத்திற்கு வந்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாண வர்களுக்கு ஆசிரியர்கள் முறையாக பாடம் கற்பிக்கவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளி நேரத்திலேயே வெளியில் வந்து விளையாடுகின்றனர் என கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினர்.

    ஆனால், பள்ளி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளா மல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளின் மாற்று சான்றிதழை வாங்க பள்ளி வளாகத்திற்கு வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பள்ளியின் கல்வி மேலாண்மை குழு நிர்வாகி கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் பெற் றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் நாங்கள் மாணவர்களுக்கு முறையாக தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம், எங்கள் மீது என்ன தவறு உள்ளது என்றார். அப்போது அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் எங்கள் பிள்ளைகள் முறையாக படிக்க வேண்டும் என்றால் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முறையாக பாடம் கற்பிக்காத ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்கள் பிள்ளைகளின் மாற்று சான்றிதழை கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்து விடுகிறோம் என கோரிக்கை வைத்தனர்.

    இதனைக் கேட்ட பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாண வர்களின் பெற்றோர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.
    • ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வீரமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் சின்னமணி (வயது 32), சென்னையில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றார். அப்போது இரவு இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.

    அவருடன் வந்த நண்பர்கள் சிறிது நேரம் கழித்து உடன் வந்த சின்னமணியை காணவில்லை என தேடினர். இத்தகவல் உறவினர்களுக்கு தெரிந்து அவர்களும் ஏரி பகுதிக்கு வந்து தேடினர். அவர் கிடைக்காததால் இதுகுறித்து கெடார் போலிசாருக்கும். அன்னியூர்தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். கெடார் போலிசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காணாமல் போனவர் ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.

    இதில் ஏரி நீரில் மூழ்கி இறந்து கடந்த சின்னமணியின் உடலை இன்று காலை 8 மணியளவில் தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர். அதனை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துரை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார்.
    • மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெலாகுப்பம் பகுதியை சேர்ந்த துரை (வயது 70). இவர் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக வந்தார். அவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாததால் அருகே இருந்த டிப்டாப் நபர் ஒருவரை தனது ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து தர தெரிவித்துள்ளார். இதன் பெயரில் அந்த மர்ம நபர் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என கூறி உள்ளார். இந்த நிலையில் துரை அருகே இருக்கும் வேறு ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றார். இந்த நிலையில் அவரது மொபைல் எண்ணிற்கு இருபதாயிரம் பணம் எடுத்ததற்காக குறுஞ்செய்தி வந்தது.

    அந்த செய்தியை அரசு வங்கியில் காண்பித்த போது அதில் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். துரை வைத்திருந்த ஏ.டி.எம். வேறு வங்கி ஏ.டி.எம். என அதிகாரிகள் தெரிவித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த துரை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×