என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக பல்வேறு புகார்கள் வந்தன.
    • வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜரானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச், மே மாதங்களில அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி. சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக பல்வேறு புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியன் சி.வி. சண்முகம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜரானார்.

    • பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர்.
    • திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ம.க.வின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த இன்று திட்டமிடப்பட்டது. இதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார், மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அனுமதி கிடையாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர். இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    இதேபோல வானூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அக்கட்சியினர் கரசானூரில் ஒன்று திரண்டனர். அங்கு வந்த வானூர் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர். பா.ம.க. வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலான நிர்வாகிகள், எங்கள் கட்சியின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்கு திடீரென அனுமதி மறுப்பது சரியான நடைமுறையல்ல என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வினரின் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு திண்டிவனம் மற்றும் வானூரில் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், 2 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி போலீசாரிடம் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம், வானூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் செலுத்துவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
    • கந்தசாமி, சுகுமார், கால்நடை உதவி டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை நோய் ஆய்வு மற்றும் தடுப்பூசி தொழில்நுட்பக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடைகளை தாக்கும் கோமாரி அம்மை மற்றும் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோய்க்கான தடுப்பூசிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் செலுத்துவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதில் சென்னை கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் டாக்டர் சத்தியநாராயணன் விழுப்புரம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் லதா, கள்ளக்குறிச்சி துணை இயக்குநர் டாக்டர் பொன்னம்பலம், உதவி இயக்குநர்கள் டாக்டர்கள் ராஜேந்திரன், கந்தசாமி, சுகுமார், கால்நடை உதவி டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
    • டாக்டர்களின் ஆலோசனைகளை முறை யாக பின்பற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சமூகநலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செஞ்சி வட்டாரத்தின் சார்பில் சமுதாய வளை காப்பு விழா செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைகளை முறை யாக பின்பற்ற வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செய லாளர்கள் விஜயராக வன், பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் யோக பிரியா, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,செஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர செய லாளர் கார்த்திக், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையா ளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா நன்றி கூறினார்.

    • இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56), விவசாயி. இவர் கடந்த 2-ந்தேதி மாலை அரசூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார்மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கண்ணனை முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை திருவெ ண்ணை நல்லூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடமிருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தையும், 300 லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவெண்ணை நல்லூர் காந்திக்குப்பம் வள்ளுவர் தெருவை சேர்ந்த வையாபுரி (வயது 65), உளுந்தூர்பேட்டை வட்டம் கொரட்டூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் (42) என்பது தெரியவந்தது. 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது.
    • 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் உள்ள பொட்டியம், கல்படை, மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வரும் மழை நீர் இந்த அணையில் தேக்கி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பெய்து வரும் மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் முழுக் கொள்ளலவான 46 அடியில் 44 அடி நிரம்பியது. சம்பா போகத்திற்கு நெல் நடவு செய்ய உள்ள விவசாயிகளுக்காகவும், அணையின் பாதுகாப்பு கருதியும், அணை நீரை திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கோமுகி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் விநாடிக்கு 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    பழைய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 55 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிக்கம், மண்மலை, கரடிசித்தூர், சாவடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 65 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கனந்தல், கச்சிராயபாளையம், அம்மாப்பேட்டை, செம்படாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விநாடிக்கு 100 கன அடிநீர் மழைநீர் கோமுகி அணைக்கு வந்து கொண்டிருப்பதால் நடப்பு சம்பா போகத்திற்கு தேவையான பாசன நீர் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைநதுள்ளனர். இந்த நீர் திறப்பு விழாவில் சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவண்குமார் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • இன்று காலை வினோத்தை பணிக்கு அழைத்து செல்ல அவருடன் பணியா ற்றுபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.
    • கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் கலைவாணர் நகர் உள்ளது. இங்கு வினோத் (வயது 25) என்பவர் தனது பாட்டி வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வந்தார். இன்று காலை வினோத்தை பணிக்கு அழைத்து செல்ல அவருடன் பணியா ற்றுபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் வினோத்தின் செல்போனை தொடர்பு கொண்டனர். நீண்ட நேரமாக அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து வீட்டின் கதவை தட்டினார்கள். கதவையும் அவர் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் வினோத் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதல் தோல்வியால் வினோத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை மாதமான மே, ஜூன் மாதம் போல கடுமையான வெயில் சுட்டெரித்தது.
    • மழை பெய்ய தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை மாதமான மே, ஜூன் மாதம் போல கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வியர்வை மழையில் நனைந்தபடி சாலையில் நடந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்த தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மேலும் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் இரு புறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இது விழுப்புரம் நகரம் வழுதரெட்டி, சாலா மேடு, நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பழப்பட்டு, முகையூர், திருக்கோவிலூர், அரசூர், திருவெண்ணைநல்லூர், அரியூர், அகரம், விக்கிர வாண்டி, கண்டமங்கலம், உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்டங்களில் மரக்காணம், செஞ்சி, திண்டிவனம், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. நேற்று இரவு பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் என்பவர் ஓட்டிச் சென்றார் .
    • போலீசார் வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் (வயது36) என்பவர் ஓட்டிச் சென்றார் . நேற்று இரவு 7.40 மணி அளவில் முண்டியம்பாக்கம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கரும்புகள் சாலை முழுவதும் சிதறியது.

    இதனால் திருச்சி சென்னை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் -இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ் ,காத்தமுத்து மற்றும் போலீசார் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர். விக்கிரவாண்டி டோல் பிளாசா ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் லாரி மற்றும் கரும்புகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
    • முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்

    திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே இன்று காலை 7. 40 மணியளவில் வந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கொத்தனார் புஷ்பராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    உடனே சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரெயிலின் சங்கிலியை இழுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினர். ரெயில் டிரைவர் மற்றும் டி.டி.ஆர்.,ரெயில்வே ஊழியர்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஒரத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் அவர் கையில் வைத்திருந்த நெஞ்சுவலி சம்பந்தமான மாத்திரையை கொடுத்து முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ெரயில் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றது.  

    • இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் விழுப்புரம் நகர போலீசில் பாலாஜி மீது புகார் கொடுத்தார்.
    • இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீராமுக்கு வெட்டு விழுந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்ற ராம்குமார் (வயது 30). இவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதை வசூல் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர் ஸ்ரீராமிடம் ரூ.2 ஆயிரம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீராம் எந்த வேலை யும் செய்யாமல் ஊதாரித்த னமாக சுற்றிவரும் உனக்கு கடன் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீராமை திட்டி தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் விழுப்புரம் நகர போலீசில் பாலாஜி மீது புகார் கொடுத்தார்.

    பணம் தராமல் அனுப்பிய கோபத்தில் இருந்த பாலாஜிக்கு இந்த புகார் சம்பவம் கடும் ஆத்திரமடையச் செய்தது. இதனால் ஸ்ரீராமை பாலாஜி கொலை செய்ய முடிவு செய்தார். அதற்காக பாலாஜி ஸ்ரீராம் எங்கெங்கு செல்கிறார். தனியாக செல்லும் இடங்களை கண்காணித்து திட்டம் தீட்டினார். இதனையடுத்து நேற்று மாலை தனியாக தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரிக்கரை ரெயில்வே கேட் அருகில் வந்த ஸ்ரீராமை பாலாஜி மற்றும் பாலாஜியின் கூட்டாளி யான கண்டமங்கலம் பகுதி யை சேர்ந்த அய்யப்பன் (28), பிரகாஷ் (25) ஆகி யோர் வழிமறித்து வீச்சரி வாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீராமுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் ஸ்ரீராம் சாலையில் சரிந்தார். பின்னர் பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து முன்விரோதத்தில் ஸ்ரீராமை கொலை செய்த பாலாஜி மற்றும் பாலாஜி யின் கூட்டாளி களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பாலாஜி, அய்யப்பன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×